ஏ.டி.எம்.-ல் பணம் நிரப்ப சென்ற ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு- பணப்பெட்டியை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்

ஊழியர்கள் பணம் நிரப்புவதற்காக வேனில் இருந்து பணப்பெட்டியை இறக்கினர்.பைக்கில் வந்த கொள்ளையவர்கள் அவர்களை துப்பாக்கியால் சுட்டனர்.
ஏ.டி.எம்.-ல் பணம் நிரப்ப சென்ற ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு- பணப்பெட்டியை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்
Published on

கர்நாடக மாநிலம் பிதர் நகரில் உள்ள எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.-ல் பணம் நிரப்ப ஊழியர்கள் வேனில் வந்தனர். அவர்கள் பணம் நிரப்புவதற்காக வேனில் இருந்து பணப்பெட்டியை இறக்கினர்.

அப்போது அந்த இடத்திற்கு பைக்கில் வந்த கொள்ளையவர்கள் அவர்களை துப்பாக்கியால் சுட்டனர். இதில் வங்கி ஊழியர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார்.

இதையடுத்து கொள்ளையர்கள் பணப்பெட்டியை கொள்ளையடித்துச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொள்ளையர்கள் பணப்பெட்டியை பைக்கில் வைத்து தூக்கிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com