search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் விபத்து: ஆம்னி பஸ் மோதியதில் டிராவல்ஸ் நிறுவன ஊழியர் பலி
    X

    தூத்துக்குடியில் விபத்து: ஆம்னி பஸ் மோதியதில் டிராவல்ஸ் நிறுவன ஊழியர் பலி

    • மாரிராஜ் நேற்று இரவு வேலையை முடிந்து வீட்டுக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
    • அண்ணா நகர் மெயின் ரோடு 4-வது தெரு அருகே சென்றபோது களியக்காவிளையில் இருந்து புதுச்சேரிக்கு சென்ற ஆம்னி பஸ் இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ராஜகோபால் நகரை சேர்ந்தவர் மாரிராஜ். (வயது 45). இவர் தனியார் ஆம்னி பஸ் டிராவல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இவர் நேற்று இரவு வேலையை முடிந்து வீட்டுக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அண்ணா நகர் மெயின் ரோடு 4-வது தெரு அருகே சென்றபோது களியக்காவிளையில் இருந்து புதுச்சேரிக்கு சென்ற ஆம்னி பஸ் இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட மாரிராஜ் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு உடனடியாக சென்று மாரிராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து ஆம்னி பஸ் டிரைவரான நாகர்கோவிலை சேர்ந்த நம்பிராஜன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×