search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளையில் வாகனம் மோதியதில் மருந்து கடை பெண் ஊழியர் பலி
    X

    பாளையில் வாகனம் மோதியதில் மருந்து கடை பெண் ஊழியர் பலி

    • பாளை வி.எம்.சத்திரம் மேற்குத்தெருவை சேர்ந்தவர் ஜெயலட்சுமி மருந்து கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்
    • பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ஜெயலட்சுமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது

    நெல்லை:

    பாளை வி.எம்.சத்திரம் மேற்குத்தெருவை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 56). இவர் மருந்து கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

    வாகனம் மோதியது

    இந்நிலையில் நேற்று மாலை அங்குள்ள ஒரு கோவிலுக்கு சென்ற ஜெயலட்சுமி வி.எம்.சித்திரம் பஜார் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ஜெயலட்சுமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயலட்சுமி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு சப் -இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் தனலட்சுமி விசாரணை நடத்தி வருகிறார். ஜெயலட்சுமி மீது மோதிய வாகனம் எது? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×