search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளகோவில் தற்காலிக வாரச்சந்தையில் குவியும் வடமாநில தொழிலாளர்கள்
    X

    வெள்ளகோவில் தற்காலிக வாரச்சந்தை.

    வெள்ளகோவில் தற்காலிக வாரச்சந்தையில் குவியும் வடமாநில தொழிலாளர்கள்

    • பொதுமக்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் ஒரு வாரத்திற்கான மளிகை மற்றும் காய்கறிகளை வாங்கி பயன் பெற்று வந்தனர்.
    • வார சந்தைக்கு உண்டான ஏற்பாடுகளை வெள்ளகோவில் நகராட்சி நிர்வாகம் செய்திருந்தது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் நகராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தையை வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்களது விளை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றன்றனர். இங்கு வெள்ளகோவில் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வடமாநிலத்தில் இருந்து வந்து வெள்ளகோவில் பகுதியில் தங்கி வேலை செய்து வரும் மில் தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான ஒரு வாரத்திற்கான மளிகை மற்றும் காய்கறிகளை வாங்கி பயன் பெற்று வந்தனர்.

    இந்நிலையில் வாரச்சந்தை வளாகத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தினசரி மார்க்கெட் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் தற்காலிகமாக வெள்ளகோவில் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 4ம் வாரமாக நேற்று வாரச்சந்தை செயல்பட்டது. இதில் வழக்கம்போல் விவசாயிகள், பொதுமக்கள் ,வியாபாரிகள் வந்திருந்தனர். வட மாநில மில் தொழிலாளர்கள் பொதுமக்கள் சந்தைக்கு வந்து ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வாங்கி சென்றனர்.வார சந்தைக்கு உண்டான ஏற்பாடுகளை வெள்ளகோவில் நகராட்சி நிர்வாகம் செய்திருந்தது.

    Next Story
    ×