search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வட மாநில வாலிபரை தாக்கி பணம், செல்போன் வழிப்பறி
    X

    கோப்புபடம்.

    வட மாநில வாலிபரை தாக்கி பணம், செல்போன் வழிப்பறி

    • தவுபிக் தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
    • பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    பல்லடம் :

    உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தை சேர்ந்தவர் தவுபிக்(வயது 37). இவர் பல்லடம் பனப் பாளையம் பகுதியில் உள்ள, தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று கடைக்குச் செல்வதற்காக மில்லில் இருந்து வெளியே வந்துள்ளார்.

    அப்போது அவரை வழிமறித்த 3 வாலிபர்கள், பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். அவர் தர மறுக்கவே அருகில் இருந்த கல்லை எடுத்து தலையில் தாக்கியுள்ளனர். பின்னர் அவர் வைத்திருந்த சுமார் ரூ. 10,000 மதிப்புள்ள செல்போன், ரொக்கம் ரூ.10,000 ஆகியவற்றை பறித்து சென்றனர். இதையடுத்து காயத்துடன் தொழிற்சாலைக்குச் சென்று அதன் உரிமையாளரிடம் கூறியுள்ளார். பின்னர் இது பற்றி பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×