search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hangs"

    • கடந்த 2 நாட்களாக ஜெயபிரகாஷ் மீண்டும் மது குடிக்க தொடங்கினார். இதனை அவரது மனைவி பிரியா கண்டித்தார்.
    • வேலை முடிந்து வீட்டுக்கு வந்த போது கணவரை காணாமல் பிரியா அதிர்ச்சியடைந்தார்.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால் பேட்டை பாரதிதாசன் வீதியை சேர்ந்தவர் ஜெய பிரகாஷ் (வயது41). இவருக்கு பிரியா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். ஜெயபிரகாஷ் ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை வேலைக்கு அமர்த்தும் ெதாழில் செய்து வந்தார்.

     கடந்த 2 ஆண்டுகளாக மது பழக்கத்துக்கு ெஜயபிர காஷ் ஆளானார். இதனால் அவர் தொழிலை சரியாக கவனிக்கவில்லை. இதை யடுத்து குடும்பத்தை நடத்த பிரியா தனது கணவரின் அண்ணன் நடத்தும் ஓட்டலில் கேஷியராக வேலை வருகிறார்.

    இதற்கிடையே மதுவை மறப்பதற்காக ஜெயபிரகா சுக்கு கடந்த 3 மாதங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ஜெயபிரகாஷ் மீண்டும் மது குடிக்க தொடங்கினார். இதனை அவரது மனைவி பிரியா கண்டித்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் வீட்டில் சமையில் வேலை களை முடித்து விட்டு பிரியா ஓட்டலுக்கு வேலைக்கு சென்று விட்டார். வேலை முடிந்து வீட்டுக்கு வந்த போது கணவரை காணாமல் பிரியா அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் வீட்டு மாடிக்கு சென்று பார்த்தார். அங்குள்ள அறையில் ஜெய பிரகாஷ் மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு பிணமாக தொங்குவதை கண்டு பிரியா அதிர்ச்சியடைந்தார்.

    மது பழக்கத்தை மறக்க முடியாத வேதனையில் ஜெயபிரகாஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

    இதுகுறித்து அவரது மனைவி பிரியா கொடுத்த புகாரின் பேரில் முத்தி யால்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • அடிக்கடி வீட்டில் தகராறு செய்து விட்டு இரவு நேரத்தில் விவசாய நிலத்தில் தூங்க செல்வது வழக்கம்.
    • நோய் குணமாகாததால் அவர் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராமராஜ் வீட்டு வாசலில் உள்ள கிரில் கேட்டில் வேட்டியால் தூக்கு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது57). இவர் புதுவை பொதுப்பணித்துறையில் ஊழி யராக பணிபுரிந்துவந்தார்.

    மேலும் அப்பகுதியில் கோவில் நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வந்தார். இவருக்கு ஆகாசவாணி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இவருக்கு குடி பழக்கம் இருந்து வந்ததால் கடந்த சில நாட்களாக ரத்த அழுத்த நோய் மற்றும் நீரழிவு நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இவர் அடிக்கடி வீட்டில் தகராறு செய்து விட்டு இரவு நேரத்தில் விவசாய நிலத்தில் தூங்க செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நேற்று முன்தினம் இரவு விவசாய நிலத்துக்கு நீர்பாய்ச்ச செல்வதாக சிவலிங்கம் குடும்பத்தினரிடம் கூறி சென்றார். ஆனால் நேற்று காலை வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் விவசாய நிலத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்குள்ள பூவசரன் மரத்தில் சிவலிங்கம் துண்டால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து அவரது சகோதரர் எழிலரசன் கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோரிமேடு அருகே குண்டுபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமராஜ் (73). இவருக்கு கடந்த 6 வருடங்களாக நீரழிவு நோய் இருந்து வந்தது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் நோய் குணமாகாததால் அவர் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராமராஜ்  வீட்டு வாசலில் உள்ள கிரில் கேட்டில் வேட்டியால் தூக்கு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது மகன் பன்னீர்செல்வம் கொடுத்தபுகாரின் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பணிமுடிந்து வீடு திரும்பிய தனசெல்வி மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • ஐ.டி.ஐ. மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    திருபுவனை அருகே திருவண்டார் கோவில் புதுவை-விழுப்புரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் வசிப்பவர் தன செல்வி.

    இவருடைய கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். தன செல்வி அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.

    மகள் அதே பகுதியில் உள்ள செல்போன் கடையில் வேலை செய்து வருகிறார். மகன் தரணிதரன் (17). எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்று நெட்டப்பாக்கம் அரசு ஐ.டி.ஐ. பள்ளியில் முதலாம் ஆண்டு சேர விண்ணப்பித் துள்ளார். இந்த நிலையில் தரணி தரன் செல்போனில் எப்போதும் விளையாடிக்கொ ண்டிருந்தார். இதனை அவரது தாயார்  கண்டித்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த தரணிதரன் அந்த செல்போனை தரையில் வீசி உடைத்து விட்டார். தன செல்வியும் அவரது மகளும் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டனர்.

    அப்போது வீட்டில் தனியாக இருந்த தரணிதரன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து மின் விசிறியில் சேலையால் தூக்கிட்டு தொங்கினார்.

    பணிமுடிந்து வீடு திரும்பிய தனசெல்வி மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகனை தூக்கில் இருந்து மீட்டு அரியூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே தரணிதரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தன செல்வி கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செல்போ னில் விளையா டியதை தாய் கண்டித்ததால் ஐ.டி.ஐ. மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மயிலானந்துவின் அம்மா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • ஈரோடு சூரம்பட்டி போலீசில் மயிலானந் சகோதரி ரூபி ஸ்ரீ அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு சாஸ்திரிநகர் திருவள்ளுவர் 2-வது வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் மயிலானந் (23). இவர் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு முடித்துவிட்டு ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மயிலானந்துவின் அம்மா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதனால் மயிலானந் மனஉளைச்ச–லுடன் இருந்து வந்தார். அவரும் தற்கொலை செய்து கொள்வதாக அடிக்கடி கூறி வந்ததால் மயிலானந்த்திற்கு அவரது தந்தை மற்றும் சகோதரி ஆறுதல் கூறி வந்தனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மயிலானந் அவரது சகோதரியை போனில் தொடர்பு கொண்டு வீட்டில் தனியாக இருப்பதால் மன உளைச்சல் ஏற்படுவதாகவும், அடிக்கடி அம்மா நியாபகம் வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து வைக்கும்படியும் கூறி உள்ளார். அதற்கு அவர் ஐதராபாத்துக்கு சென்றுள்ள தந்தை வீட்டுக்கு திரும்பியதும் பேசிக்கலாம் என்று கூறினார்.

    இந்நிலையில், அன்றைய தினம் மாலையே வீட்டின் படுக்கை அறையில் துப்பட்டாவினால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் மயிலானந்தை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு மயிலானந் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசில் மயிலானந் சகோதரி ரூபி ஸ்ரீ அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • துர்கா மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
    • துர்காவுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடக்கிறது.

    கோவை,

    கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் சசிமோகன். இவரது மனைவி துர்கா (வயது 25). இவர்கள் 2 பேரும் ஐ.டி. ஊழியர்களாக பணியாற்றி வந்தனர்.

    இவர்களுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது. தற்போது துர்கா 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். கர்ப்பகாலம் என்பதால் சசிமோகன், துர்காவை அவரது தாயார் வீட்டில் விட்டு வந்தார். இந்நிலையில் அவர் சில நாட்களாக வேலைப்பளு மற்றும் கர்ப்ப காலத்தில் கணவர் தன்னுடன் இல்லாதது ஆகிய காரணங்களால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று அவரது தாயார் அரிசி மண்டிக்கு சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த துர்கா வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த அவரது தாயார் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் அவர் இதுகுறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    துர்காவுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது. 3 மாத கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • முத்தியால்பேட்டையில் மதுகுடித்ததை மனைவி கண்டித்ததால் பூக்கடை தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இந்த நிலையில் கண்ணன் வீட்டிலேயே மது வாங்கி வந்து குடித்தார்.

    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டையில் மதுகுடித்ததை மனைவி கண்டித்ததால் பூக்கடை தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுவை முத்தி யால்பேட்டை வசந்தம் நகர் நிலா தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் கண்ணன். இவர் புதுவை பெரியமார்கெட்டில் ஒரு பூக்கடையில் தொழிலா ளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    கண்ணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. கடந்த சில நாட்களாக இவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்து வந்தார். 2 மகன்கள் உள்ள நிலையில் இப்படி குடித்து செலவு செய்தால் எப்படி குடும்பம் நடத்த முடியும் என்று ஜெயந்தி கணவரை திட்டினார்.

    இந்த நிலையில் கண்ணன் வீட்டிலேயே மது வாங்கி வந்து குடித்தார். இதனை அவரது மனைவி ஜெயந்தி கண்டித்து விட்டு தனது இளையமகன் படித்த பள்ளிக்கு அழைத்து சென்றார். பின்னர் ஜெயந்தி வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த ஜெயந்தி கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது சமையல் அறையில் உள்ள ஜன்னலில் கணவர் கண்ணன் சேலையால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு தாமரைசெல்வி அவரது அம்மா வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்று விட்டார்.
    • இதனால் மனவேதனை அடைந்த நவீன்குமார் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் கணபதி நகரை சேர்ந்தவர் நவீன் என்ற நவீன்குமார்(30). கூலி தொழிலாளி. இவருக்கு தாமரைசெல்வி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனா்.

    நவீன்குமாருக்கு மதுப்பழக்கம் இருப்பதால் கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு தாமரைசெல்வி அவரது அம்மா வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்று விட்டார். இந்நிலையில் நவீன்குமார் தாமரை செல்வியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார்.

    அதற்கு அவர் எப்போது குடிப்பழக்கத்தை கைவிடு வீர்களோ அப்போதுதான் வருவேன் என்று கூறினார். இதனால் மனவேதனை அடைந்த நவீன்குமார் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • மனமுடைந்த நிலையில் ஒபர்னாசிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி விசாரணை நடத்தி வருகின்றார்.

    அந்தியூர்:

    மேற்கு வங்காளம் நடியா மாவட்டம் சோனக்கூர் பகுதியை சேர்ந்தவர் ஒபர்னாசிங் (வயது 36). இவரது முதல் கணவர் திலிப் சிங் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுடைய 3 மகள்கள் மேற்கு வங்கத்தில் உள்ளனர். இதேபோல் ஜெந்துசிங் (26) என்பவரின் மனைவி 3 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கும் 3 மகன்கள் உள்ளனர்.

    இதனையடுத்து ஒபர்னாசிங்கும், ஜெந்துசிங்கும் கடந்த 3 ஆண்டுகளாக ஒன்றாக இருந்து வருகின்றனர். பின்னர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே புதுமேட்டூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் 2 பேரும் வேலை செய்து வந்தனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று ஒபர்னாசிங் முதல் கணவரின் மகள்களுக்கு ரூ.15 ஆயிரம் அனுப்ப பணம் கேட்டு உள்ளனர். ஜெந்துசிங் இப்போது பணம் இல்லை என கூறியதாக தெரிகிறது.

    இதனால் மனமுடைந்த நிலையில் ஒபர்னாசிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவலறிந்து வந்த அந்தியூர் போலீசார் உடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி விசாரணை நடத்தி வருகின்றார்.

    • குடும்பத்த–கராறு காரணமாகவே தங்கராசு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
    • தற்கொலை செய்து கொண்ட ெதாழிலாளி உடலை போலீசாருக்கு தெரியாமல் எரிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கோபி:

    கோபி செட்டிபாளையம் அருகே உள்ள எல்லமடை பாரதிநகரை சேர்ந்தவர் தங்கராஜ்(43). கூலி தொழிலாளி. இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், ரகுபதி, அஸ்விந்த் என்ற 2 மகன்களும் உள்ளனர்.

    தங்கராஜூக்கும் அவரது மனைவிக்குமிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் தங்கராஜூவிற்கும் அவரது மனைவி ஈஸ்வரிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து ஈஸ்வரி வேலைக்கு சென்று விட்டார். ரகுபதி, அஸ்விந்த் பள்ளிக்கு சென்று விட்டனர்.

    பின்னர் மாலை பள்ளியில் இருந்து ரகுபதியும், அஸ்விந்தும் வீட்டிற்கு வந்த போது வீட்டில் தங்கராஜ் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சிய–டைந்தனர்.

    அதைத்தொடர்ந்து தங்கராசுவின் உடலை கோபி போலீசாருக்கு தெரியாமல் எரித்துவிட அவரது உறவினர்கள் முயற்சி செய்து தங்கராசு–வின் உடலை மயானத்திற்கு எடுத்து சென்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கோபிசெட்டி–பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தங்கராசுவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    அதில் குடும்பத்த–கராறு காரணமாகவே தங்கராசு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    அதைத்தொடர்ந்து தங்கராசுவின் உடலை போலீசார் பிரேத பரிசோதனை–க்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தற்கொலை செய்து கொண்ட ெதாழிலாளி உடலை போலீசாருக்கு தெரியாமல் எரிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வாலாஜா அருகே மகளை திருமணம் செய்து கொடுக்க வற்புறுத்தியதால் கள்ளக்காதலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வாலாஜா:

    வேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த மேல்புதுப்பேட்டை பஜனை தெருவை சேர்ந்தவர் கல்பனா (வயது 36). கணவர் ரமேஷ்குமாரை பிரிந்த இவர், 2 மகள்களுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில், சென்னை ஆவடியில் போலீஸ் காரராக பணியாற்றிவரும் காவேரிப்பாக்கத்தை சேர்ந்த ஒருவருக்கும் கல்பனாவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

    சென்னையில் இருந்து போலீஸ்காரர் அடிக்கடி கல்பனா வீட்டிற்கு வந்து சென்றார். அப்போது, கல்பனாவின் 18 வயது நிரம்பிய மூத்த மகளை அடைய அவர் விரும்பினார்.

    மகளை தனக்கு திருமணம் செய்து வைக்கும் படி கேட்டு கள்ளக்காதலியை வற்புறுத்தினார். கல்பனா ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    மகள் மீதான மோகத்தில் இருந்த கள்ளக்காதலனை இனிமேல் தன்னை சந்திக்க வீட்டிற்கு வர வேண்டாம் என்று கல்பனா எச்சரித்தார்.

    ஆனால், அவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்றிரவு வீட்டில் கல்பனா தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதைபார்த்து அதிர்ச்சியடைந்த மகள்கள் கதறி அழுதனர். வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக, கல்பனாவின் மூத்த மகள் போலீசில் புகார் அளித்தார். புகார் மனுவில், தன்னுடைய தாய்க்கும், போலீஸ்காரர் ஒருவருக்கும் பழக்கம் இருந்தது. இந்த பழக்கத்தால் தன்னை திருமணம் செய்து வைக்க குமரேசன் சண்டை போட்டார்.

    தாய் மறுத்தார். இந்த ஆத்திரத்தில் என்னுடைய தாயை போலீஸ்காரர் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டிருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக கூறியுள்ளார்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×