search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிற மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு
    X

    அயோத்தியாப்பட்டணத்தில் பிற மாநில தொழிலாளர்களை போலீசார் சந்தித்து பேசிய காட்சி.

    பிற மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு

    • பிற மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரவியதால், இந்த தொழி லாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வகையில் ஆய்வு நடத்திட காவல்துறை யினருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    • அயோத்தியாப்பட்டணம் மற்றும் காரிப்பட்டி பகுதி யில் பிற மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் தனியார் தொழிற்சாலைகள், அரிசி ஆலைகளில் வாழப்பாடி போலீசார் நேற்று ஆய்வு செய்தனர்.

    வாழப்பாடி:

    தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரவியதால், இந்த தொழி லாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வகையில் ஆய்வு நடத்திட காவல்துறை யினருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, அயோத்தியாப்பட்டணம் மற்றும் காரிப்பட்டி பகுதி யில் பிற மாநில தொழிலா ளர்கள் பணிபுரியும் தனியார் தொழிற்சாலைகள், அரிசி ஆலைகளில் வாழப்பாடி போலீஸ் டி.எஸ்.பி. ஹரிசங்கரி தலை மையில், இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் உள்ளிட்ட போலீசார் நேற்று ஆய்வு செய்தனர்.

    பிற மாநில தொழிலா ளர்களின் பாதுகாப்பை உறுதி செய்த போலீஸார், சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். எவ்வித அச்சுறுத்தலும் பயமுமின்றி பணிபுரிந்து வருவதாக தொழிலாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    Next Story
    ×