search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hillside"

    • மலைப்பகுதியில் உள்ள தலமலையில் இருந்து தாளவாடி நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
    • திடீரென வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒரு காட்டுயானை ஆக்ரோசத்துடன் பிளறியபடி அரசு பஸ்சை துரத்தியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் யானைகள் உணவு, தண்ணீரை தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலை மற்றும் கிராமங்களில் உலா வருவது தொடர் கதையாகி வருகிறது.

    சாலையில் சுற்றித்திரியும் யானை அந்த வழியாக வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி உணவு இருக்கிறதா என தேடியும் அலைகிறது. இதனால் வாகன ஓட்டிகள் வனப்பகுதியில் செல்லும் போது கவனத்துடன் சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தலமலையில் இருந்து தாளவாடி நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.

    முதியனூர் மற்றும் நெய்தாலபுரம் கிராமங்களுக்கிடையே உள்ள வனப்பகுதி சாலையில் பஸ் சென்று கொண்டிருந்த போது திடீரென வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒரு காட்டுயானை ஆக்ரோசத்துடன் பிளறியபடி அரசு பஸ்சை துரத்தியது.

    பஸ் டிரைவர் யானை துரத்தி வந்ததால் பஸ்சை பின்னோக்கி இயக்கினார். சிறிது தூரம் துரத்தி வந்த யானை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதனையடுத்து நிம்மதி பெறும் மூச்சு விட்ட அரசு பஸ் டிரைவர் பஸ்சை இயக்கினார்.

    • சென்னிமலை முருகன் கோவில் மலைப்பாதையில் அழுகிய நிலையில் தூக்கில் பிணமாக தொங்கிய முதியவர்.
    • உடலை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்,

    சென்னிமலை, ஜூன். 13

    சென்னிமலை முருகன் கோவிலுக்கு செல்லும் வனப்பகுதி ரோடு பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர்.

    அப்போது மலைப்பாதை ரோடு முதல் வளைவு பகுதியில் 65 வயது மதிக்க த்தக்க ஒரு முதியவர் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் இது குறித்து சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த முதிய வர் பிணத்தை கைப்பற்றி பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவரது உடல் அழுகிய நிலையில் காணப்படுகிறது. எனவே அவர் இறந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கலாம் எனவும் தெரியவந்தது.

    ஆனால் அவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற விபரம் தெரிய வில்லை.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×