search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "HighCourt"

    • காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு சமீபத்தில் தள்ளுபடி செய்து இருந்தது.
    • இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாகும்.

    புதுடெல்லி:

    2014 முதல் 2017 வரையிலான வரி மறுமதிப்பீட்டு நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு சமீபத்தில் தள்ளுபடி செய்து இருந்தது.

    இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு (2017-18, 2018-19, 2019-20, 2020-21) வரி மறுமதிப்பீட்டு நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் கட்சி மற்றொரு மனுவை டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது.

    நீதிபதி யஷ்வந்த் சர்மா, புருஷேந்திரகுமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வருமான வரித்துறைக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 4 மனுக்களையும் இன்று தள்ளுபடி செய்தது. இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாகும்.

    • ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்தும் பயிற்சி மற்றும் வெகுஜன ஒத்திகைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
    • அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ளி சிராயின்கீழ் சர்க்கரா தேவி கோவில். திருவிதாங்கூர் தேவசம்போர்டு நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்த கோவில் வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் ஆயுதப்பயிற்சி உள்ளிட்ட சில நிகழ்வுகள் நடத்துவதாக தெரிகிறது.

    இந்நிலையில் சிராயின்கீழ் பகுதியை சேர்ந்த வியாசன் மற்றும் விஜயகுமார் ஆகியோர் கேரள ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில் சர்க்கராதேவி கோவில் வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்தும் பயிற்சி மற்றும் வெகுஜன ஒத்திகைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்தும் பயிற்சியால் பக்தர்கள் சிரமப்படுவதாகவும், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவ டிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தனர்.

    அந்த மனு கேரள ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், சர்க்கரா தேவி கோவில் வளாகத்தில் ஆயுதப்பயிற்சி மற்றும் வெகுஜன ஒத்திகைகள் எதுவும் நடத்தக்கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டனர்.

    • அரசாணையை எதிர்த்து வக்கீல் கே.பாலு சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
    • மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ள 4 கோடியே 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்கள் பரிமாற உரிமம் வழங்க வகை செய்யும் திருத்த அரசாணையில் எந்த சட்டவிரோதமும் இல்லை எனவும் பொது நலனுக்கு எதிரானதும் இல்லை என, தமிழ்நாடு அரசு சென்னை ஐகோர்ட்டில் பதில் அளித்துள்ளது.

    திருமண மண்டபங்கள், விருந்து மண்டபங்கள், வணிக வளாகங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானங்கள் பரிமாற வசதியாக தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளில் திருத்தம் செய்து, தமிழ்நாடு அரசு சிறப்பு உரிமத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

    பின்னர், பொது இடங்களான திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் மதுபானம் பரிமாற வகை செய்யும் விதிகள் ரத்து செய்யப்பட்டு, சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மட்டும் மதுபானம் பரிமாற உரிமம் வழங்கும் வகையில் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

    இந்த அரசாணையை எதிர்த்து வக்கீல் கே.பாலு சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் பரிமாறும் வகையில் உரிமம் வழங்குவது தொடர்பான அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

    இந்த வழக்கில் உள்துறை மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை செயலாளர் சார்பில் மதுவிலக்கு துறை ஆணையர் ரத்னா பதில்மனு தாக்கல் செய்துள்ளார்.

    அதில், திருமணம் போன்ற நிகழ்வுகளில் மதுபானம் பரிமாற வகை செய்யும் பிரிவுகள் நீக்கப்பட்டு, சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மட்டும் மதுபானங்கள் பரிமாற உரிமம் வழங்க வகை செய்யும் திருத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மதுபான விற்பனை விதிகளின்படியும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படியும் தான் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்கள் பரிமாற ஒன்று அல்லது சில நாட்களுக்கு மட்டும் உரிமம் வழங்கப்படும்.

    கல்வி நிறுவனங்களுக்கு அருகில் நடக்கும் நிகழ்வுகளுக்கு இந்த உரிமம் வழங்கப்படாது என்று பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இந்த உரிமங்கள் வழங்கப்படும்.

    பொதுமக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், வருவாய் ஈட்டுவதையே நோக்கமாக கொண்டு இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்று மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு தவறானது. மேலும் மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ள 4 கோடியே 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அதனால், அரசின் உத்தரவில் எந்த சட்டவிரோதமும் இல்லை, பொதுநலனுக்கு எதிரானதும் இல்லை என்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அரசின் பதில்மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதை ஏற்றுக் கொண்டு வழக்கின் விசாரணையை ஜூலை 5-ந்தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், அது வரை ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீட்டித்தும் உத்தரவிட்டனர்.

    • 54 துறைகளில் குரூப்-4 மூலம் பணியில் சேர்ந்த பலர் அதிக பலன் அடைந்து வந்தனர்.
    • அரசுத் துறையிலும் பணி மூப்பு அடிப்படையில் சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கும் பணி வேகப்படுத்தப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழக அரசு பணிகளில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.

    இதில் ஒவ்வொரு ஜாதியினரும் வேலையில் சேர்ந்த பிறகு அவர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தாலும் இட ஒதுக்கீடு அடிப்படையிலும் பதவி உயர் வழங்கப்பட்டது.

    இந்த நடைமுறை 1990-ல் இருந்து பின்பற்றப்பட்டு வந்தது.

    சுழற்சி அடிப்படையிலான பதவி உயர்வில் (ரோஸ்டர் சிஸ்டம்) காலியிடங்கள் பதவி மூப்பு அடிப்படையில் நிரப்பப்படாமல் ஜாதி அடிப்படையில் சில பதவிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.

    இதன் மூலம் வருவாய்த் துறை, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்து துறை, கணக்கு கருவூலம், வணிக வரித்துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட 54 துறைகளில் குரூப்-4 மூலம் பணியில் சேர்ந்த பலர் அதிக பலன் அடைந்து வந்தனர்.

    இதன் பிறகு இந்த நடைமுறையை அதிக அளவில் செயல்படுத்தி வந்துள்ளனர். இதன் மூலம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 31 இடங்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 இடங்கள், தாழ்த்தப்பட்டோருக்கு 18 இடங்கள், பழங்குடியினருக்கு 1 இடம் மீதம் உள்ள இடங்களுக்கு பொது பிரிவு மூலம் பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது.

    இந்த நடைமுறையால் பணி மூப்பு அடிப்படையில் சீனியாரிட்டி இருந்தும் பல பேருக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட அரசு ஊழி யர்கள் அரசின் முடிவை எதிர்த்து 2004-ம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த ஐகோர்ட் ஜாதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவது சட்ட விரோதம், தமிழ்நாடு அரசு தேர்வாணைய விதிகளின்படி தான் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று 2015-ம் ஆண்டு தீர்ப்பு கூறியது. சுப்ரீம் கோர்ட்டும் இதை உறுதி செய்தது.

    ஆனாலும் கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தாமல் பழைய நடைமுறைப்படியே (ரோஸ்டர்சிஸ்டத் தில்) பதவி உயர்வுகள் நிரப்பப்பட்டு வந்தது.

    இதனால் சுப்ரீம் கோர்ட்டில் 2021-ம் ஆண்டு மீண்டும் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதில் ஜாதி அடிப்படையில் பதவி உயர்வு நிரப்ப கூடாது என்றும் பணி மூப்பு அடிப்படையில் தமிழ்நாடு அரசு தேர்வாணைய விதிகளை பின்பற்றி அரசுப் பணிகளில் பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும், அனைத்து நிலைகளிலும் சினியாரிட்டி லிஸ்டை சரியாக பின்பற்ற வேண்டும் என்றும் கோர்ட்டு இப்போது தெளிவுபடுத்தியது.

    இதன் அடிப்படையில் ரோஸ்டர் சிஸ்டத்தில் பதவி உயர்வு பெற்றவர்கள் இப் போது பதவி இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

    அதிலும் குறிப்பாக வட்டார போக்குவரத்து துறை, ஊரக வளர்ச்சித் துறை, கணக்கு கருவூலத்துறை, வணிக வரித்துறை, காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை, வருவாய் உள்ளிட்ட 54 துறைகளில் பணியாற்றும் சுமார் 5 லட்சம் அரசு ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

    ஒவ்வொரு அரசுத் துறையிலும் பணி மூப்பு அடிப்படையில் சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கும் பணி வேகப்படுத்தப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் பாதிக்கப்படுபவர்கள் ஒருபுறம் இருக்க மறுபுறம் சீனியாரிட்டியில் பணி மூப்பு மூலம் பதவி உயர்வு கிடைக்கும் நம்பிக்கையில் பல அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.

    • கருத்தடை அறுவை சிகிச்சையில் அலட்சியமாக செயல்பட்டதாக தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் மீது வழக்கு.
    • தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனை தலைமை மருத்துவருக்கு நோட்டீஸ்.

    உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் மனுதாரர், தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டோம் என்றும், அறுவை சிகிச்சை செய்த பின்னரும், 5.8.2019ல் கருவுற்றதாகவும், 26.2.2020ல் பெண் குழந்தை பிறந்தது என்றும் இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது.

    இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், கருத்தடை அறுவை சிகிச்சையில் அலட்சியமாக செயல்பட்டதாக தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனை தலைமை மருத்துவருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

    கூவத்தூர் சொகுசு பங்களாவில் எம்.எல்.ஏ.க்களுக்கு பணம், தங்கம் கொடுக்கப்பட்டது குறித்து சிபிஐ விசாரிக்க கோரி பாமக தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. #MadrasHC #PMK #ADMKMLAs #KoovathurResort
    சென்னை:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு தமிழக சட்டசபையில் தன் அரசின் மீதான நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார்.

    இதற்கு முன்பாக, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், சென்னை அடுத்துள்ள கூவத்தூரில் உள்ள சொகுசு பங்களாவில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

    இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-


    கூவத்தூர் சொசுகு பங்களாவில் இருந்து தப்பி வந்த எம்.எல்.ஏ., சரவணன், நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக ஓட்டுப்போட எம்.எல்.ஏ.க்களுக்கு, எடப்பாடி பழனிசாமி பணம், தங்கம் ஆகியவை கொடுப்பதாக கூறினார். எனவே, இது குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

    இந்த வழக்கு பல மாதங்களாக நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, அரசு தரப்பில் ஆஜராகி, ஏற்கனவே இதே கோரிக்கையுடன் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது’ என்றார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். #MadrasHC #PMK #ADMKMLAs #KoovathurResort
    நீதித்துறை குறித்து அவதூறாக பேசிய எச்.ராஜா அக்டோபர் 3-ம் தேதி ஆஜராக வேண்டும், இல்லை என்றால் வழக்கறிஞர் மூலம் விளக்கமளிக்க வேண்டும் என அரசு தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணன் உத்தரவிட்டுள்ளார். #HRaja #TNGovt
    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்ஹ்டு கொண்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நீதித்துறை மற்றும் காவல்துறை குறித்து கீழ்தரமாக பேசினார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலகா பரவிய நிலையில், அவர் மீது 8 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    அவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதற்கிடையே, அவர் மீது தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் சி.டி செல்வம் அமர்வு, 4 வாரங்களில் எச்.ராஜா நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.

    இந்நிலையில், எச்.ராஜா வரும் அக்டோபர் 3-ம் தேதி மாலை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய நராயணன் உத்தரவிட்டுள்ளார். நேரில் வரமுடியவில்லை என்றால், வழக்கறிஞர் மூலமாக விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
    சிலைக்கடத்தல் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும் கேட்பதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. #IdolTheftCase #CBI #TNGovt #HC
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள பழமையான கோவில்களில் இருந்து, புராதான சாமி சிலைகள் பல கொள்ளை அடிக்கப்பட்டது. சர்வதேச சிலைக் கடத்தல் கும்பல்களுடன் கை கோர்த்து, இந்த கொள்ளை சம்பவத்தில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் செயல்பட்டிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி மகா தேவன், இந்த சிலைக் கடத்தல் வழக்குகளை எல்லாம் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரிக்க உத்தரவிட்டார்.

    இந்த சிலை கடத்தல் வழக்கில், அரசு தலைமை ஸ்தபதி முத்தையா, இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா உள்பட பல முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் பலரை கைது செய்ய பொன்.மாணிக்கவேல் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், தமிழக அரசு திடீரென அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

    ‘இந்த சிலைக் கடத்தல் வழக்குகள் அனைத்தையும் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவதாக கூறி, அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர், அரசாணைக்கு தடை விதித்தனர். இந்த வழக்கிற்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன், ‘சி.பி.ஐ. விசாரணைக்கு அனைத்து வழக்குகளையும் தமிழக அரசு மாற்றியுள்ளது தொடர்பான சில ஆவணங்களை மத்திய அரசு கேட்டுள்ளது’ என்றார்.

    சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வக்கீல் சீனிவாசன், ‘தமிழக அரசு பிறப்பித்த அரசாணை சி.பி.ஐ. இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவையெல்லாம் பரிசீலனையில் உள்ளன’ என்றார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘ஒருவேளை சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்க சி.பி.ஐ. மறுத்து விட்டால், என்ன செய்வீர்கள்?’ என்று கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அரவிந்த் பாண்டியன், ‘சி.பி.ஐ. மறுக்கவில்லை. முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) உள்ளிட்ட சில ஆவணங்களை கேட்டு தான் கடிதம் அனுப்பியுள்ளது. இந்த கடிதம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் நாளை (புதன்கிழமை) தாக்கல் செய்கிறேன்’ என்றார்.

    இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 24-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். #IdolTheftCase #CBI #TNGovt #HC
    மோட்டார் வாகன விபத்து வழக்கில் போலி காப்பீட்டு சான்றிதழ் மூலம் இழப்பீடு பெற முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.#highcourt

    சென்னை:

    தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் காவிய அரசன். இவர், கடந்த 2009-ம் ஆண்டு பள்ளிக் கூடத்துக்கு சைக்கிளில் சென்றார்.

    அப்போது நீலமேகம் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து, காவிய அரசனின் சைக்கிள் மீது மோதினார். இதில், படுகாயமடைந்த காவிய அரசன், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    அதிகவேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த நீலமேகத்திடம் இருந்தும், அந்த மோட்டார் சைக்கிள் காப்பீடு செய்யப்பட்ட எச்.டி.எப்.சி. ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்தும் ரூ.5 லட்சம் இழப்பீடு கேட்டு காவிய அரசன், தன் தந்தை மூலம் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த அரூர் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயம், ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்து 500 இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் இன்சூரன்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அதில், விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளை எங்கள் நிறுவனத்தில் காப்பீடு செய்ய வில்லை. இதை விசாரணையின்போது எங்கள் அதிகாரி கூறியும், தீர்ப்பாயம் அதை கண்டு கொள்ளாமல், இழப்பீடு வழங்க எங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், மோட்டார் சைக்கிளின் இன்சூரன்ஸ் சான்றிதழ் என்று போலியான ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். எனவே, தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதி முரளிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரூர் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்ட காப்பீட்டு சான்றிதழும், இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கும் சான்றிதழும் தாக்கல் செய்யப்பட்டது.

    இதை இரண்டையும் ஆய்வு செய்த நீதிபதி, அரூர் தீர்ப்பாயத்தில் போலி சான்றிதழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தார்.

    பின்னர் நீதிபதி முரளி தரன் பிறப்பித்த உத்தரவில், ‘போலி காப்பீட்டு சான்றிதழ் குறித்து தர்மபுரி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப் பதிவு செய்யவேண்டும். பின்னர், விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள், அதன் காப்பீட்டு சான்றிதழ் உள்ளிட்டவை குறித்து புலன் விசாரணை செய்து, வருகிற செப்டம்பர் 25-ந் தேதிக்கு முன்பாக சம்பந்தப்பட்ட கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவேண்டும்’ என்று கூறியுள்ளார்.

    2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கும் பள்ளிக்கூடங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பத்திரிகைகளில் விளம்பரம் செய்யவேண்டும் என சி.பி.எஸ்.இ.க்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Homework #HighCourt
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் எம்.புருஷோத்தமன் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.,) பாடத்திட்ட விதிகளை மீறி தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகள், 1 முதல் 3-ம் வகுப்பு வரை 8 பாடங்களைப் போதிக்கின்றன. 2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்ற விதிகளை மீறுகின்றனர்.



    தனியார் நிறுவனங்கள் வெளியிடும் புத்தகங்களை வாங்கவேண்டும் என்று நிர்பந்திக்கின்றனர். இதனால் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே சி.பி.எஸ்.இ., பள்ளிகள் என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டத்தை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன், ‘சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மட்டுமல்லாமல், நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் 2-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது. இதுதொடர்பான உத்தரவை மத்திய அரசு பிறப்பிக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டார். இதனடிப்படையில், மத்திய அரசும் உத்தரவிட்டது.

    இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன், ‘2-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

    அதை படித்து பார்த்த நீதிபதி, ‘இந்த உத்தரவை காகித வடிவில் வைத்திருக்காமல், தீவிரமாக அமல்படுத்த வேண்டும்’ என்று கருத்து தெரிவித்தார். மேலும், ‘மராட்டியம், தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களில் புத்தக சுமையை குறைப்பது தொடர்பான மாதிரி திட்டத்தை உருவாக்கியுள்ளதை போல, தமிழகத்தில் அதுபோன்ற திட்டத்தை ஏன் உருவாக்கக்கூடாது?’ என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    பின்னர், ‘2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கும் பள்ளிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து, 3 வாரங்களுக்குள் தேசிய மற்றும் மாநில மொழி பத்திரிகைகளில் சி.பி.எஸ்.இ. விளம்பரம் செய்யவேண்டும்’ என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    அப்போது மனுதாரர் புருஷோத்தமன், ‘சி.பி.எஸ்.இ. 2-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பொதுஅறிவு பாடத்தில் ரஜினிகாந்த், ஜாக்கிசான், அமீர்கான், ஷாருக்கான், ஐஸ்வர்யாராய், கத்ரீனா கைப் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. குழந்தைகள் இவர்களை ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்?. இதில் என்ன பொதுஅறிவு உள்ளது?’ என்று சி.பி.எஸ்.இ. மீது குற்றம் சுமத்தி வாதிட்டார்.

    அதற்கு நீதிபதி என்.கிருபாகரன், நாட்டிலேயே முதன்மையான கல்வி வாரியமாக விளங்கும் சி.பி.எஸ்.இ.யின் தரம் என்ன ஆனது?’ என்று கேள்வி எழுப்பினார். பின்னர், இந்த வழக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.  #Homework #HighCourt 
    போலி வங்கி கணக்குகள் தொடங்கிய ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரியை கைது செய்யும் உத்தரவுக்கு எதிராக இஸ்லாமாபாத் ஐகோர்ட் பாதுகாப்பு ஜாமின் அளித்துள்ளது. #Zardariarrestwarrant
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைத் தலைவரும் அந்நாட்டின் முன்னாள் அதிபருமான ஆசிப் அலி சர்தாரி மற்றும் அவரது சகோதரி ஃபர்யால் தல்புர், பாகிஸ்தான் பங்குச்சந்தை முன்னாள் தலைவர் ஹுசைன் லவாய் உள்பட மொத்தம் 19 பேர் வங்கிகளில் பினாமி பெயரில் 29 கணக்குகளை தொடங்கி, அவற்றின் மூலமாக சுமார் 3500 கோடி ரூபாய் பணத்தை கள்ளத்தனமாக இடம்மாற்றியதாக கடந்த 2015-ம் ஆண்டு அந்நாட்டின் மத்திய புலனாய்வுதுறை கண்டுபிடித்தது.

    இதன் அடிப்படையில், இவர்கள் மீது வங்கியியல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, இடைக்கால குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் தலைமறைவாக இருந்து வருவதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது குற்றம்சாட்டப்பட்டுள்ள அதிபர் ஆசிப் அலி சர்தாரியை கைது செய்து வரும் செப்டம்பர் மாதம் 8-ம் தேதி ஆஜர்படுத்துமாறு கோர்ட் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவுக்கு எதிராகவும் முன் ஜாமின் கோரியும் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் ஆசிப் அலி சர்தாரி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவரை கைது செய்ய முடியாதவாறு பாதுகாப்பு ஜாமின் வழங்கி நீதிபதி மியான்குல் ஹசன் அவுரங்கசிப் நேற்று உத்தரவிட்டார். #IslamabadHighCourt  #Zardariarrestwarrant #Fakeaccountscase
    டி.என்.பி.எஸ்.சி. குருப் 1 தேர்வு முறைகேடு பயிற்சி மைய இயக்குனர் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்தனர். #TNPSC

    சென்னை:

    டி.என்.பி.எஸ்.சி. குருப் 1 தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாக தனியார் டி.வி. சேனல் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டது. இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் மதுரையை சேர்ந்த திருநங்கை சுவப்னா வழக்கு தொடர்ந்தார்.

    இந்த தேர்வு முறைகேடு குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்பல்லோ பயிற்சி மையத்தின் இயக்குனர் சாம்ராஜேஸ்வரன், சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து, முன்ஜாமீன் பெற்றார்.

    இவருக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் சாம் ராஜேஸ்வரன் முறைகேடாக மாணவர்கள் பலரை தேர்ச்சி பெற வைத்துள்ளார். இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. கீழ் கோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியுள்ளதால், விசாரணை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று வாதிட்டார்.

    இதையடுத்து, அந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய சாம் ராஜேஸ்வரனுக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தர விட்டார்.

    ×