search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RSS Organisation"

    • ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்தும் பயிற்சி மற்றும் வெகுஜன ஒத்திகைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
    • அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ளி சிராயின்கீழ் சர்க்கரா தேவி கோவில். திருவிதாங்கூர் தேவசம்போர்டு நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்த கோவில் வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் ஆயுதப்பயிற்சி உள்ளிட்ட சில நிகழ்வுகள் நடத்துவதாக தெரிகிறது.

    இந்நிலையில் சிராயின்கீழ் பகுதியை சேர்ந்த வியாசன் மற்றும் விஜயகுமார் ஆகியோர் கேரள ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில் சர்க்கராதேவி கோவில் வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்தும் பயிற்சி மற்றும் வெகுஜன ஒத்திகைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்தும் பயிற்சியால் பக்தர்கள் சிரமப்படுவதாகவும், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவ டிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தனர்.

    அந்த மனு கேரள ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், சர்க்கரா தேவி கோவில் வளாகத்தில் ஆயுதப்பயிற்சி மற்றும் வெகுஜன ஒத்திகைகள் எதுவும் நடத்தக்கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டனர்.

    ×