search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "summons"

    • கடந்த 6-ந்தேதி இரவு தாம்பரம் ரெயில் நிலையத்தில் பறக்கும் படையினரால் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது
    • இந்த பணத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார்

    கடந்த 6-ந்தேதி இரவு தாம்பரம் ரெயில் நிலையத்தில் பறக்கும் படையினரால் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. நெல்லை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என தகவல் பரவியது. இது தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டல் மேலாளர் சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    விருகம்பாக்கத்தைச் சேர்ந்த முருகன், ஜெய்சங்கர், ஆசைத்தம்பி ஆகியோர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான கீழ்ப்பாக்கம் ஓட்டலில் பணத்தை வைத்து விட்டு சென்றதாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    இந்த பணத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார். இதையடுத்து, ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரத்தில் திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேரில் விசாரணைக்கு ஆஜராக தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

    இதுதொடர்பாக நெல்லை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அதில், "தாம்பரம் ரெயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பிடிபட்டது தொடர்பாக பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத்துறையிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், அந்த மனு மீது அமலாக்கத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மேலும், வாக்களர்களுக்கு அளிப்பதற்காக பணம் பதுக்கி வைத்திருந்ததால் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென தமிழக தேர்தல் ஆணையரிடம் மனு அளித்தும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும். அவரை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இம்மானுவேல் முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், நாளை விசாரிப்பதாக தெரிவித்தது.

    • கடந்த 6-ந்தேதி இரவு தாம்பரம் ரெயில் நிலையத்தில் பறக்கும் படையினரால் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது
    • நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் சோதனையும் நடந்தது

    கடந்த 6-ந்தேதி இரவு தாம்பரம் ரெயில் நிலையத்தில் பறக்கும் படையினரால் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. நெல்லை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என தகவல் பரவியது. இது தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டல் மேலாளர் சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    விருகம்பாக்கத்தைச் சேர்ந்த முருகன், ஜெய்சங்கர், ஆசைத்தம்பி ஆகியோர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான கீழ்ப்பாக்கம் ஓட்டலில் பணத்தை வைத்து விட்டு சென்றதாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    இதையடுத்து நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் சோதனையும் நடந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக வருமானவரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தாம்பரம் போலீசாரும் இந்த பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரத்தில் திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேரில் விசாரணைக்கு ஆஜராக தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

    • நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் சோதனையும் நடந்தது.
    • ஓட்டலில் தேர்தல் நடக்கும் படையினர் மற்றும் தாம்பரம் போலீசார் அதிரடி சோதனை நடத்தி இந்த பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

    தாம்பரம்:

    கடந்த 6-ந்தேதி இரவு தாம்பரம் ரெயில் நிலையத்தில் பறக்கும் படையினரால் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. நெல்லை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என தகவல் பரவியது. இது தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டல் மேலாளர் சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். 

    விருகம்பாக்கத்தைச் சேர்ந்த முருகன், ஜெய்சங்கர், ஆசைத்தம்பி ஆகியோர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான கீழ்ப்பாக்கம் ஓட்டலில் பணத்தை வைத்து விட்டு சென்றதாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    இதையடுத்து நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் சோதனையும் நடந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக வருமானவரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தாம்பரம் போலீசாரும் இந்த பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பா.ஜ.க. தொழில்துறை மாநில துணைத்தலைவர் கோவர்தனன், கிரீன்வேஸ் சாலையில் நடத்திவரும் ஓட்டலிலும் ரூ. ஒரு கோடி பணம் கைப்பற்றப்பட்டது.

    நேற்று முன்தினம் இரவு பா.ஜ.க. தொழில்துறை மாநில துணைத்தலைவர் கோவர்தனன் நடத்திவரும் ஓட்டலில் தேர்தல் நடக்கும் படையினர் மற்றும் தாம்பரம் போலீசார் அதிரடி சோதனை நடத்தி இந்த பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

    இதனையடுத்து பாஜக தொழில்துறை மாநில துணைத்தலைவர் கோவர்தனன் நேரில் விசாரணைக்கு ஆஜராக தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

    அவர் தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவரது மகன் கிஷோர் இன்று ஆஜராக வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • 5 சம்மனுக்கும் கெஜ்ரிவால் ஆஜராகாமால் புறக்கணித்தார்.
    • அமலாக்கத்துறை டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக முன்னாள் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா, உள்ளிட்டோர் கைதாகி ஜெயிலில் உள்ளனர். அவர்களுக்கு இதுவரை ஜாமின் கிடைக்கவில்லை.

    இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5 சம்மன் அனுப்பப்பட்டது.

    நவம்பர் 2, டிசம்பர் 21, ஜனவரி 3, 19, பிப்ரவரி 2 ஆகிய தேதிகளில் ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. பண மோசடி தொடர்பான விசாரணைக்காக இந்த சம்மனை அனுப்பி இருந்தது. ஆனால் 5 சம்மனுக்கும் கெஜ்ரிவால் ஆஜராகாமால் புறக்கணித்தார்.

    இந்நிலையில் 5 முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது.

    ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் பண மோசடி தடுப்பு சட்டத்தின் பிரிவு 63 (4)-ன் கீழ் வழக்கு தொடரப் பட்டுள்ளது. இந்த வழக்கு வருகிற 7-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.

    • சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையை வைத்து பாராளுமன்ற தேர்தலில் ஜெயிக்க பா.ஜ.க. நினைக்கிறது.
    • பா.ஜ.க. செய்த சாதனைகளை முன்வைத்து அவர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றார் கெஜ்ரிவால்.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் முறைகேடு நடைபெற்றதாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்று இருப்பதாக அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்த வழக்கில் டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த இதுவரை 4 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனாலும் கெஜ்ரிவால் இதுவரை அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவில்லை.

    இந்நிலையில், என்னை கைது செய்யவேண்டும் என்பதற்காகவே சம்மன் அனுப்பப்பட்டு வருகிறது. என்னை கைது செய்வதே பா.ஜ.க.வின் நோக்கம் என டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார்.

    இதுதொடர்பாக கெஜ்ரிவால் கூறுகையில், சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையை வைத்து பாராளுமன்ற தேர்தலில் ஜெயிக்க பா.ஜ.க. நினைக்கிறது.

    சம்மன் அனுப்பும்படி அமலாக்கத்துறைக்கு பா.ஜ.க. அறிவுறுத்துகிறது. இரு ஆண்டுகளாக விசாரணை நடத்தியும் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் எனக்கு சம்மன் அனுப்பப்படுகிறது.

    தேர்தலுக்கு முன் என்னை கைது செய்வதே பா.ஜ.க.வின் நோக்கம். இதன்மூலம் எனது பிரசாரத்தை தடுத்து விடலாம் என பா.ஜ.க. நினைக்கிறது. பா.ஜ.க. செய்த சாதனைகளை முன்வைத்து அவர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என தெரிவித்தார்.

    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி பார் நாகராஜன் மற்றும் திமுக பிரமுகர் மகன் ஆகியோருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது. #PollachiAbuseCase #BarNagaraj
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியில் சமூக வலைத்தளம் மூலம் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை தங்கள் வலையில் வீழ்த்திய ஒரு கும்பல் ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இளம்பெண் ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, இந்த கொடூர சம்பவம் வெளியுலகிற்கு தெரியவந்தது.

    இதுகுறித்து திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் இளம்பெண்களை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்த ஏராளமான வீடியோக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    மணிவண்ணன்

    இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்கிய வழக்கில் தேடப்பட்டு வந்த மணி என்ற மணிவண்ணன் நேற்று கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை ஏப்ரல் 8ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், இன்று திமுக பிரமுகர் தென்றல் செல்வராஜின் மகன் மணிமாறனுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். வரும் 28-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அந்த சம்மனில் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல், பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்கிய வழக்கில், 28-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி பார் நாகராஜுக்கும் சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது.

    புகார் கொடுத்ததற்காக பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்கியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட  செந்தில், பாபு, வசந்தகுமார், பார் நாகராஜ் ஆகியோர் தற்போது ஜாமீனில் வெளியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. #PollachiAbuseCase #BarNagaraj

    துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வரும் 28-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. #ArumugasamyCommission #opanneerselvam
    சென்னை:

    துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வரும் 28-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, ஆறுமுகசாமி ஆணையம்  சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், வரும் 27-ஆம் தேதி அப்பலோ மருத்துவமனை மருத்துவர்கள் ஏழு பேரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்யவும் அனுமதி அளித்துள்ளது.

    ஜெ.மரணம் குறித்து விசாரிக்க மேலும் 4 மாதம் அவகாசம் தந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 5-வது முறையாக சம்மன் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. #ArumugasamyCommission #opanneerselvam
    குட்கா ஊழல் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் அவரது உதவியாளருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. #Gutkhascam #CBI #MinisterVijayabaskar
    சென்னை:

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. செங்குன்றம் குட்கா குடோனில் வருமான வரி துறையினர் நடத்திய சோதனையின் எதிரொலியாக அங்கு கைப்பற்றபட்ட டைரியே குட்கா விவகாரத்தின் பின்னணியில் இருந்தவர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.



    அந்த டைரியில் அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றிருந்தன. அதோடு போலீஸ் அதிகாரிகள், சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, கலால் துறை அதிகாரிகளின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.

    அதன்பின்னர் சிபிஐ தீவிர விசாரணை நடத்தி குட்கா வியாபாரி மாதவராவ், அவரது பங்குதாரர்கள், அரசு அதிகாரிகள் என 6 பேர் கைது செய்யப்பட்டனர்.  அதன்பின்னர் சிபிஐ தனது முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் இடம்பெறவில்லை. டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் கமி‌ஷனர் ஜார்ஜ், உதவி கமி‌ஷனர் மன்னர் மன்னன், இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோரது பெயர்களும் சேர்க்கப்படவில்லை.

    இந்த நிலையில், குட்கா ஊழல் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட மற்ற நபர்களுக்கு எதிராகவும் சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. விசாரணைக்கு ஆஜராகும்படி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உதவியாளர் சரவணன் ஆகியோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

    அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனுக்கு சிபிஐ 2 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து மீண்டும் சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. அதில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நாளை காலை 10 மணிக்கு ஆஜராகும்படி கூறப்பட்டுள்ளது.

    இந்த முறையும் அமைச்சரின் உதவியாளர் ஆஜராகவில்லை என்றால், அடுத்தகட்ட நடவடிக்கையை சிபிஐ அதிகாரிகள் மேற்கொள்வார்கள் என தெரிகிறது. #Gutkhascam #CBI #MinisterVijayabaskar
    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் ஜாமீன் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு அடுத்த மாதம் விசாரிக்கிறது. #NawazSharif #Summon #SupremeCourt
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஊழல் வழக்குகளில் சிக்கி தவிக்கிறார். அவரும் அவரது மகள் மரியம், மருமகன் கேப்டன் சப்தார், மகன்கள் ஹசன், உசேன் ஆகியோரும் ஊழல் செய்து குவித்த பணத்தில் லண்டன் அவென்பீல்டு பகுதியில் சொகுசு வீடுகள் வாங்கி குவித்ததாக ஊழல் தடுப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கலானது.



    இந்த வழக்கில் நவாஸ் ஷெரீப் மகன்கள் ஹசன், உசேன் ஆகியோர் விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜர் ஆகாத நிலையில் அவர்கள் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

    நவாஸ் ஷெரீப், மரியம், கேப்டன் சப்தார் ஆகியோர் மீதான வழக்கை இஸ்லாமாபாத் ஊழல் தடுப்பு கோர்ட்டு விசாரித்து, நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு, மரியத்துக்கு 7 ஆண்டு, கேப்டன் சப்தாருக்கு 1 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கடந்த ஜூலை மாதம் 6-ந் தேதி பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

    அதையடுத்து அவர்கள் ராவல்பிண்டி அடியலா சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இருப்பினும், நவாஸ் ஷெரீப், மரியம், கேப்டன் சப்தார் ஆகியோர் தரப்பில் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களும், ஜாமீன் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.அவற்றை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் அத்தார் மினல்லா, மியான்குல் ஹசன் அவுரங்கசீப், அவர்கள் 3 பேரின் மேல்முறையீட்டு மனுக்களையும் விசாரணைக்கு ஏற்றனர். அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்தனர். அவர்களுக்கு ஜாமீனும் வழங்கினர். அதைத் தொடர்ந்து அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

    ஆனால் அவர்களை ஐகோர்ட்டு ஜாமீனில் விடுதலை செய்ததை எதிர்த்து ஊழல் தடுப்பு அமைப்பு சார்பில், பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர்.

    அந்த மேல் முறையீட்டு மனு தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார் அமர்வின் முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது அதை அவர்கள் விசாரணைக்கு ஏற்றனர்.

    மேலும் அவர்களது தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமீனில் விடுவித்தது செல்லுமா என்பதுபற்றிய விசாரணையை அடுத்த மாதம் 12-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர். முன்னதாக நடந்த முதற்கட்ட விசாரணையின்போது, நீதிபதிகளிடம் நவாஸ் ஷெரீப் தரப்பு வக்கீல் ஹாரிஸ், “நான் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள், மருமகன் மீதான மேலும் இரு ஊழல் வழக்குகளின் விசாரணைக்கு முழுவீச்சில் தயாராகி வருகிறேன். எனவே இந்த மனுக்கள் மீதான விசாரணையை ஒத்தி போட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

    அதையடுத்துதான் விசாரணை அடுத்த மாதம் 12-ந் தேதிக்கு ஒத்தி போடப்பட்டது.

    அப்போது தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார் வேடிக்கையாக, “எனக்கு உடல் நலம் சரியில்லை. இந்த மனுக்கள் மீதான விசாரணைக்கு நீங்கள் (ஹாரிஸ்) ஆஜராவதால்தான் எனக்கு படபடப்பு அதிகமாக இருக்கிறது என்று எனது டாக்டர்கள் சொல்கிறார்கள்”என குறிப்பிட்டார்.

    அதைத் தொடர்ந்து கோர்ட்டில் எல்லோரும் சிரித்து விட்டனர். எனவே, நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள், மருமகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்தாகுமா என்பது அடுத்த மாதம் 12-ந் தேதி தெரிய வரலாம்.
    நீதித்துறை குறித்து அவதூறாக பேசிய எச்.ராஜா அக்டோபர் 3-ம் தேதி ஆஜராக வேண்டும், இல்லை என்றால் வழக்கறிஞர் மூலம் விளக்கமளிக்க வேண்டும் என அரசு தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணன் உத்தரவிட்டுள்ளார். #HRaja #TNGovt
    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்ஹ்டு கொண்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நீதித்துறை மற்றும் காவல்துறை குறித்து கீழ்தரமாக பேசினார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலகா பரவிய நிலையில், அவர் மீது 8 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    அவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதற்கிடையே, அவர் மீது தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் சி.டி செல்வம் அமர்வு, 4 வாரங்களில் எச்.ராஜா நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.

    இந்நிலையில், எச்.ராஜா வரும் அக்டோபர் 3-ம் தேதி மாலை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய நராயணன் உத்தரவிட்டுள்ளார். நேரில் வரமுடியவில்லை என்றால், வழக்கறிஞர் மூலமாக விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
    காதலை ஏற்க மறுக்கும் பெண்களை கடத்துவேன் என்ற ராம் கதமின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு 8 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு மாநில மகளிர் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #BJP #RamKadam
    மும்பை:

    மும்பை காட்கோபரில் நடந்த உறியடி நிகழ்ச்சியில் இளைஞர்கள் மத்தியில் பேசிய பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதம், உங்கள் காதலை ஏற்க மறுக்கும் பெண்களை உங்களுக்காக கடத்தி வருவேன் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

    இதற்காக தனது செல்போன் எண்ணை குறித்து வைத்து கொள்ளுங்கள் என்று கூறி அதை கொடுத்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, ராம்கதம் எம்.எல்.ஏ. தனது கருத்துக்காக வருத்தம் தெரிவித்தார்.

    ஆனாலும் அவருக்கு எதிராக நேற்று 2-வது நாளாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன. இந்த நிலையில், ராம் கதமின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு 8 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு மாநில மகளிர் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    இந்த நிலையில், ராம் கதம் வகித்து வந்த பா.ஜனதாவின் மாநில செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளார். பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவுடன் கலந்து பேசி முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

    மேலும் ராம் கதமை அவர் சில காலங்களுக்கு பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருக்கும்படியும் அறிவுறுத்தி உள்ளார். #BJP #RamKadam 
    சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை செய்வதற்காக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன் ஆகியோருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. #JayaDeathProbe #Deepa #Madhavan
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

    ஏற்கனவே ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை செய்வதற்காக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன் ஆகியோருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.

    இருவரும் வருகிற 4-ந்தேதி ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணை செய்வார்கள்.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீபா விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்து இருந்தார்.

    இதேபோல டாக்டர்களிடம் 4,5 மற்றும் 6-ந்தேதிகளில் குறுக்கு விசாரணை நடத்தப்படுகிறது.

    முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் எஸ்.ஜார்ஜிடம் சசிகலா தரப்பு வக்கீல் வருகிற 6-ந்தேதி குறுக்கு விசாரணை செய்கிறார். அவர் கடந்த ஜூன் மாதம் விசாரணை கமி‌ஷன் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்து இருந்தார்.

    மேலும் சசிகலாவின் சகோதரர் திவாகரன் மகள் ராஜமாதங்கி, அவரது கணவர் பி.எஸ்.ஜெ.விக்ரம் ஆகியோரிடம் 6-ந்தேதி குறுக்கு விசாரணை நடத்தப்படுகிறது. #JayaDeathProbe #Deepa #Madhavan
    ×