என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய மகளிர் ஆணையம்"

    • தரவரிசையில் பீகாரின் பாட்னா, ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரங்கள் கடைசி இடங்களில் உள்ளன.
    • கல்வி நிறுவனங்கள் பகலில் பாதுகாப்பாக இருப்பதாக 86 சதவீதம் பெண்கள் தெரிவித்து உள்ளனர்.

    புதுடெல்லி:

    'பெண்களுக்கான பாதுகாப்பான நகரங்கள்-2025'ன் பட்டியலை நேற்று தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டது. நாடு முழுவதும் உள்ள 31 நகரங்களில் 12 ஆயிரத்து 770 பெண்களிடம் கருத்துக் கேட்டு விவரங்கள் பதிவு செய்யப்பட்டு நகரங்களின் தரவரிசை பட்டியலிடப்பட்டது. பல்கலைக்கழக மற்றும் சட்டக்கல்லூரி நிபுணர்கள், கல்வியாளர்கள் கொண்ட குழு இந்த கருத்துக்கணிப்பில் ஈடுபட்டது. அந்த கருத்துக்கணிப்பில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    நாகாலாந்தின் தலைநகரமான கோஹிமா, பெண்களுக்கு அதிக பாதுகாப்பு உள்ள நகரமாக பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது. அங்கு பெண்களுக்கு நல்ல மரியாதையும், நிகழ்வுகளில் சரிசமமான பங்களிப்பும் கிடைப்பதாக பெண்கள் கூறி உள்ளனர். பெண்களுக்கான கட்டமைப்பு வசதிகளும் சிறப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    இந்த தரவரிசையில் பீகாரின் பாட்னா, ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரங்கள் கடைசி இடங்களில் உள்ளன, அங்கு பெண்களுக்கு நிறுவன ரீதியான மதிப்புகள், கட்டமைப்பு வசதிகள் மோசமான நிலையில் இருப்பதாகவும், ஆணாதிக்க முறைகள் அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர்.

    கோஹிமா, விசாகப்பட்டினம், புவனேஸ்வரம், ஐஸாவல், காங்டாக், இடாநகர், மும்பை ஆகியவை சிறந்த பாதுகாப்பான நகரங்களாக வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன. ராஞ்சி, ஸ்ரீநகர், கொல்கத்தா, டெல்லி, பரிதாபாத், பாட்னா, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்கள் அந்த வரிசையில் பின்தங்கிய நிலையில் உள்ளன.

    ஒட்டுமொத்தமாக கணக்கெடுக்கப்பட்டதில் 60 சதவீதம் பெண்கள், தங்கள் நகரத்தில் பாதுகாப்பாக இருப்பதாகவும், 40 சதவீத பெண்கள் பாதுகாப்பை உணரவில்லை என்றும் அல்லது பாதுகாப்பு இல்லை என்றும் தெரிவித்து உள்ளனர்.

    கல்வி நிறுவனங்கள் பகலில் பாதுகாப்பாக இருப்பதாக 86 சதவீதம் பெண்கள் தெரிவித்து உள்ளனர். ஆனால் இரவிலும், கல்வி வளாகத்திற்கு வெளியிலும் பாதுகாப்பு அப்படி உணர்வதில்லை என்று கூறி உள்ளனர்.

    இரவில் பொது போக்குவரத்து மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் அதிகம் இருப்பதாக பலரும் தெரிவித்து உள்ளனர்.

    பணியிடங்களில் பாதுகாப்பாக இருப்பதாக 91 சதவீதம் பெண்கள் தெரிவித்து உள்ளனர். 50 சதவீதம் பேர் பணியிடங்களில் பாலியல் தொல்லைக்கு எதிரான விதிகள் இருக்கிறதா என தெரியவில்லை என்று கூறி உள்ளனர்.

    பாதுகாப்பு புகார்களில் அதிகாரிகள் திறம்பட செயல்படுவார்கள் என்று நான்கில் ஒரு பங்கு பெண்கள் மட்டுமே நம்புவதாக தெரிவித்து உள்ளனர். தற்போதைய பாதுகாப்பு முயற்சிகள் ஓரளவு போதுமானவை என்று 69 சதவீதம் பேர் கூறி உள்ளனர். 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பு முயற்சிகளில் குறைபாடு இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

    பொது இடங்களில் துன்புறுத்தலை அனுபவித்து உள்ளதாக 7 சதவீதம் பெண்கள் கூறி உள்ளனர். அதே வேளையில் 24 வயதுக்கு உட்பட்ட பெண்களில் 14 சதவீதம் பேர் பாலியல் தொல்லையை அனுபவித்து உள்ளதாக கூறி உள்ளனர். அதாவது இளம்பெண்கள் 2 மடங்கு துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்களாம்.

    துன்புறுத்தலுக்கு வாய்ப்புள்ள இடமாக சுற்றுப்புறங்கள் இருப்பதாக 39 சதவீதம் பேரும், போக்குவரத்து இடங்கள் துன்புறுத்தலுக்கு வாய்ப்புள்ள இடமாக 29 சதவீதம் பேரும் தெரிவித்து உள்ளனர்.

    பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பெண் மட்டுமே புகார் அளிப்பதாகவும், 2 பங்கு துன்புறுத்தல்கள் பலவித காரணங்களால் கண்டுகொள்ளாமல் விடப்படுவதாகவும் அறிக்கை கூறுகிறது.

    • பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
    • பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தேவையான உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை விசாரிக்கக்கோரி தேசிய மகளிர் நல ஆணையத்திற்கு அ.தி.மு.க. கடிதம் எழுதி உள்ளது. அதில்,

    கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

    பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தேவையான உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    2022-2025 வரை நடந்த வன்கொடுமைகள் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதியை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

    • மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவத்தில் பீகார் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    • மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் பீகார் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் இவ்வழக்கை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை செய்கிறது.

    ஊடகங்களில் வந்த செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து விசாரிக்கும் தேசிய மகளிர் ஆணையம் சென்னை ஐஐடி மாணவி பாலியல் தொல்லை தொடர்பான வழக்கை நியாயமான முறையில் விசாரிக்க வேண்டும் என்று டிஜிபிக்கு கடிதம் எழுதி உள்ளது.

    சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர் அமைப்பினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளியான ஞானசேகரன் கைது செய்யப்பட்டு அவருக்கு தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹிமான்ஷி குறித்த சில கருத்துக்கள் மிகவும் கொச்சையானதாகவும் அமைந்துள்ளன.
    • ஒரு பெண்ணின் சித்தாந்த வெளிப்பாட்டை கேலி செய்ய கூடாது.

    பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி நர்வால், வெறுப்புப் பிரச்சாரத்திற்கு எதிராக மத ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்தார்.

    "யாரிடமும் வெறுப்பு இருக்கக்கூடாது. முஸ்லிம்கள் அல்லது காஷ்மீரிகள் மீது மக்கள் வெறுப்பைக் கக்குவதை நான் காண்கிறேன். நாங்கள் இதை விரும்பவில்லை. நாங்கள் அமைதியை மட்டுமே விரும்புகிறோம். அதேநேரம் நீதியையும் விரும்புகிறோம்" என்று ஹிமான்ஷி தெரிவித்திருந்தார்.

    இஸ்லாமியர்களுக்கு எதிராக செல்லாதீர்கள் என்ற அவரின் கருத்து சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. நாட்டின் அமைதி மற்றும் நல்லிணக்கம் நிலவுவதை பொறுத்துக்கொள்ள முடியாத இந்த மதவெறி கும்பல்களால் ஹிமான்ஷி மீது சமூக வலைத்தளங்களில் திட்டமிட்டு அவதூறு கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. ஹிமான்ஷி குறித்த சில கருத்துக்கள் மிகவும் கொச்சையானதாகவும் அமைந்துள்ளன.

    இந்நிலையில் இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.

    அதில், "ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் நாட்டின் பல குடிமக்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில், லெப்டினன்ட் வினய் நர்வாலும் கொல்லப்பட்டார். இந்த பயங்கரவாத தாக்குதலால் முழு நாடும் வேதனையும் கோபமும் அடைந்துள்ளது.

    லெப்டினன்ட் வினய் நர்வாலின் மரணத்திற்குப் பிறகு, அவரது மனைவி திருமதி ஹிமான்ஷி நர்வாலின் ஒரு அறிக்கை தொடர்பாக சமூக ஊடகங்களில் அவர் குறிவைக்கப்படும் விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் துரதிர்ஷ்டவசமானது. ஒரு பெண்ணின் சித்தாந்த வெளிப்பாடு அல்லது தனிப்பட்ட வாழ்க்கையின் அடிப்படையில் அவரை கேலி செய்வது எந்த வடிவத்திலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.

    எந்தவொரு உடன்பாடு அல்லது கருத்து வேறுபாடும் எப்போதும் கண்ணியத்துடனும் அரசியலமைப்பு வரம்புகளுக்குள்ளும் வெளிப்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு பெண்ணின் கண்ணியத்தையும் கௌரவத்தையும் பாதுகாக்க தேசிய மகளிர் ஆணையம் உறுதி பூண்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது. 

    • 2022-ம் ஆண்டில் தேசிய மகளிர் ஆணையத்தில் 31,000 புகார்கள் வந்துள்ளன.
    • 8 ஆண்டில் இல்லாத வகையில் 2022-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகளவாக வந்துள்ளன.

    புதுடெல்லி:

    தேசிய மகளிர் ஆணையத்திற்கு கடந்த 2022-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி 30, 957 புகார்கள் வந்துள்ளன. இந்த 30,957 புகார்களில் 9,710 புகார்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை என்ற அடிப்படையிலான பெண்களுக்கு எதிரான உணர்வுப்பூர்வ புகார்களுடன் தொடர்புடையவை.

    மேலும் 6,970 குடும்ப வன்முறை புகார்கள், 4,600 வரதட்சணை கொடுமை புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்களில் அதிக அளவாக 54.5 சதவீதம் அளவுக்கு (16,872) உத்தர பிரதேசத்தில் இருந்து வந்துள்ளன. அடுத்து டெல்லி (3,004), மகாராஷ்டிரா (1,381), பீகார் (1,368) மற்றும் அரியானா (1,362) ஆகியவை உள்ளன.

    தேசிய மகளிர் ஆணையத்திற்கு கடந்த 2014-ம் ஆண்டில் 33,906 புகார்கள் வந்துள்ளன. 8 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகளவாக 2022-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய புகார்கள் இங்கு வந்துள்ளன.

    பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் 2,523 புகார்களும், பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் வன்கொடுமை முயற்சி தொடர்புடைய 1,701 புகார்களும், பெண்கள் புகார் அளிக்க வரும்போது அதனை போலீசார் அலட்சியம் செய்வது தொடர்புடைய 1,623 புகார்களும், சைபர் குற்றங்கள் தொடர்புடைய 924 புகார்களும் வந்துள்ளன என தகவல் தெரிவிக்கின்றது.

    கடந்த 2021-ம் ஆண்டில் தேசிய மகளிர் ஆணையத்திற்கு 30, 864 புகார்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.

    • அரசியல் ஆதாயத்துக்காக பெண்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.
    • 18 வயது பெண்கள் காணாமல் போவதற்கு இவர்களை போன்றவர்கள் நடித்த படங்கள் தான் காரணம்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ஏலூரில் ஜனசேனா கட்சித் தலைவர் நடிகர் பவன் கல்யாண் யாத்திரை சென்றார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில்:-

    ஆந்திராவில் கடந்த 4 ஆண்டுகளில் 30 ஆயிரம் பெண்கள் காணாமல் போய் உள்ளனர். அவர்களில் 12 ஆயிரம் பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 18000 பெண்களின் நிலைமை என்னவென்று தெரியவில்லை.

    இது குறித்து முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஏன் ஆய்வு கூட்டம் நடத்தவில்லை. வீட்டில் உள்ள பெண்கள் காதலித்து வருகிறார்களா அல்லது விதவைப் பெண்களா என்ற விவரங்கள் சமூக விரோதிகளின் கைகளுக்கு வழங்கப்படுகிறது .

    விவரங்கள் சேகரிக்கப்பட்ட பிறகு பெண்களை காதல் வலையில் விழ வைத்து கடத்திச் செல்வது போன்ற பெண்களுக்கு எதிரான செயல்கள் நடக்கிறது என குற்றம் சாட்டினார்.

    இது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பவன் கல்யாண் பேச்சுக்கு விளக்கம் கேட்டு மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    இதுகுறித்து மாநில மகளிர் ஆணைய தலைவி வாசி ரெட்டி பத்மா கூறியதாவது:-

    ஆந்திராவில் 30 ஆயிரம் பெண்கள் காணாமல் போனதாக ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் பேசி உள்ளார். அவருக்கு யார் இந்த புள்ளி விவரங்களை வழங்கியது. எந்த மத்திய புலனாய்வு அதிகாரி இவருக்கு சொன்னார்.

    நடிகர் பவன் கல்யாண் போன்றவர்கள் பள்ளி காதல், கல்லூரி காதல் என சினிமாவில் நடிக்கிறார்கள்.

    அதனால்தான் கலாச்சார சீரழிவு ஏற்படுகிறது. 18 வயது பெண்கள் காணாமல் போவதற்கு இவர்களை போன்றவர்கள் நடித்த படங்கள் தான் காரணம்.

    பவுன் கல்யாண் பேசிய புள்ளி விவரத்திற்கு ஆதாரங்களை வழங்க வேண்டும். இல்லை என்றால் பெண்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    அரசியல் ஆதாயத்துக்காக பெண்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். 10 நாட்களுக்குள் ஆதாரம் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வன்முறை சம்பவங்கள் தொடர்வதால் 2 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பவில்லை.
    • மணிப்பூர் வீடியோவை நீக்கக்கோரி டுவிட்டர் நிறுவனத்திற்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.

    புதுடெல்லி:

    மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே கடந்த மே மாதம் 3-ம் தேதி மோதல் ஏற்பட்டது. பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் தொடர்வதால், 2 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பவில்லை.

    இதற்கிடையே, மணிப்பூரில் 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ சமூகவலை தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்திய சட்டத்தின் கீழ் இதுபோன்ற வீடியோக்களை டுவிட்டர் நிறுவனம் வெளியிடக்கூடாது என்றும், சட்டம் ஒழுங்கில் சிக்கல்களை ஏற்படுத்தும் வீடியோக்களை காட்டுவதால், டுவிட்டருக்கு எதிராக இந்திய அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ பரவாமல் இருக்க தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் செல்லப்படும் வீடியோவை நீக்கவேண்டும் எனக் கோரி டுவிட்டர் நிறுவனத்திற்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

    • தேவேகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா பெண்களுடன் இருக்கும் ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
    • கர்நாடகா போலீசார் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.

    இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், ரேவண்ணாவும் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா பெண்களுடன் இருக்கும் ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக கர்நாடகா மாநில காவல்துறையின் எஸ்ஐடி (சிறப்பு விசாரணைக்குழு) விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு சென்று விட்டார். எஸ்ஐடி சம்மன் அனுப்பியும் பிரஜ்வல் ரேவண்ணா நேரில் ஆஜராக வில்லை.

    இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோவால் பாதிக்கப்பட்ட 700 பெண்கள் தேசிய மகளிர் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் 700 பெண்கள் புகார் அளித்துள்ளனர் என வெளியான தகவல் தவறானது. ஆபாச வீடியோ தொடர்பாக எந்த பெண்களும் புகார் அளிக்கவில்லை என தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

    பிரஜ்வலின் தந்தை ரேவண்ணா வீட்டில் வேலைப்பார்த்து வந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தை ரேவண்ணா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ரேவண்ணா வீட்டில் வேலைப்பார்த்த பெண் கடத்தப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில், ரேவண்ணா மீது ஆட்கடத்தல் வழக்கு போடப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புகார் அளிக்கும்படி சீருடை அணியாமல், சாதாரண உடையுடன் வந்த போலீசார் 3 பெண்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.
    • இந்த விவகாரம் பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் புதிய திருப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி.யாக இருந்து வருபவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள், பென் டிரைவ் வெளியானது. இந்த விவகாரம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். பிரஜ்வல் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கலாம் என்றும், அவர்கள் பெயர் பாதுகாக்கப்படும் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

    இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 9 பெண்கள் புகார் அளித்துள்ளனர். அவர்களில் 2 பெண் அரசு அதிகாரிகள் உள்பட 6 பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர். மற்ற பெண்கள் புகார் அளிக்க தயங்குவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புகார் அளிக்கும்படி கட்டாயப்படுத்தி போலீஸ் பெயரில் 3 பெண்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பதாக தேசிய மகளிர் ஆணையம் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளது.

    இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புகார் அளிக்கும்படி சீருடை அணியாமல், சாதாரண உடையுடன் வந்த போலீசார் 3 பெண்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக பொய் புகார் அளிக்கும்படி கூறியுள்ளனர். செல்போனில் போலீசார் எனக்கூறி புகார் அளிக்கும்படி தொல்லை கொடுத்துள்ளனர்.

    இதுபற்றி 3 பெண்களும் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்து, தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுள்ளனர், என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் புதிய திருப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவர் குமாரசாமி கூறியதாவது:-

    பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கே சென்று விசாரணை அதிகாரிகள் மிரட்டுகிறார்கள். அவர்களை பொய் புகார் செய்ய கட்டாயப்ப டுத்துகிறார்கள். கடத்தி செல்லப்பட்டு மீட்கப்பட்ட பெண்ணை நீங்கள் எங்கே வைத்திருந்தீர்கள். ஏன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. எல்லோரும் சட்டத்தை மதிக்க வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அதை விட்டுவிட்டு புகார் செய்ய மறுக்கும் பெண்கள் மீது விபச்சார வழக்குகள் போடுவதாக மிரட்டப்படுகின்றனர். இதனால் அச்சுறுத்தலுக்கு பயந்து பெண்கள் போலீசில் பொய் புகார் அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேசிய மகளிர் ஆணையம் இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரித்து உடனடியான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று டெல்லி காவல்துறையை வலியுறுத்தியிருந்தது.
    • இந்த விவகாரத்தில் ஸ்வாதி மலிவாலின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகள் இல்லத்துக்கு விரைந்துள்ளனர்.

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் வைத்து அவரது தனிச் செயலாளர் பிபவ் குமார் தன்னைத் தாக்கியதாக ஆம் ஆத்மி காட்சியைச் சேர்ந்த மாநிலங்களைவை பெண் எம்.பி ஸ்வாதி மலிவால் கடந்த மே 13 ஆம் தேதி காலை டெல்லி போலீசிடம் போன் மூலம் முறையிட்டார். இதனையடுத்து டெல்லி காவல்துறையினர் இந்த குற்றச்சாட்டு குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    இதுகுறித்து தொடக்கத்தில் மௌனம் காத்துவந்த ஆம் ஆத்மி கட்சி பின்னர் ஸ்வாதி தாக்கப்பட்டது உணமைதான் எனவும், இந்த விவகாரத்தில் குறித்து கெஜ்ரிவால் கடுமையான நடவடிக்கை எடுப்பார் எனவும் விளக்கமளித்திருந்தது. .மேலும் பிபவ் குமார் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே டெல்லி பாஜகவினர் இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி அரசியல் ரீதியாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

    தேசிய மகளிர் ஆணையம் இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரித்து உடனடியான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று டெல்லி காவல்துறையை வலியுறுத்தியிருந்தது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட பிபவ் குமார் நாளை (மே 17) வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் மகளிர் ஆணையத்தின் முன் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

     

    மேலும் பிபவ் குமார் ஆஜராக தவறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஸ்வாதி மலிவாலின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகள் அவரது இல்லத்துக்கு விரைந்துள்ளனர்.  

    • ஸ்வாதி மலிவாலின் இல்லத்துக்கு சென்ற காவல்துறை உயர் அதிகாரிகள் குழு அவரிடம் இந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் பெற்றனர்.
    • நாளை (ஏப்ரல் 17) காலை 11 மணிக்கு பிபவ் குமார் தேசிய மகளிர் ஆணையம் முன் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளது

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பிபவ் குமார் தன் மீது தாக்குதல் நடத்தியதாக கெஜ்ரிவாலின் இல்லத்தில் இருந்து ஆம் ஆத்மி மாநிலங்களவை பெண் எம்.பி ஸ்வாதி மலிவால் போன் மூலம் டெல்லி போலீசிடம் கடந்த மே 13 அன்று காலை முறையிட்டார். ஆனால் கெஜ்ரிவாலின் இல்லத்துக்கு போலீஸ் விரைந்த போது அங்கு ஸ்வாதி மலிவால் காணப்படவில்லை. அவரின் குற்றச்சாட்டு குறித்து போலீஸ் தீவிரமாக விசாரித்து வருகிறது.

    ஸ்வாதி தாக்கப்பட்டது உண்மைதான் என ஆம் ஆத்மி கட்சி எம்.பி சஞ்சய் ராவத் ஊடகங்களுக்கு விளக்கமளித்தார். மேலும் பிபவ் குமார் மீது கெஜ்ரிவால் கடும் நடவடிக்கை எடுப்பார் எனவும் உறுதியளித்தார். இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் இந்திய மகளிர் ஆணையம், உடனே விசாரணை  அறிக்கை சமர்ப்பிக்க டெல்லி காவல் துறையை வலியுறுத்தியிருந்தது.

    ஆனால் இதுவரை டெல்லி காவத்துறைக்கு இந்த சம்பவம் குறித்த எழுத்துபூர்வமான புகார் அளிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் இன்று (மே 16) ஸ்வாதி மலிவாலின் இல்லத்துக்கு சென்ற காவல்துறை உயர் அதிகாரிகள் குழு அவரிடம் இந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் பெற்றனர். சுமார் 4 மணி நேரம் அவரிடம் வாக்குமூலம் பெற்ற பின் பேசிய அதிகாரிகள், இந்த குற்றச்சாட்டின் மீது விரைவில் எப்ஐஆர் பதியப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

     

    இதனிடையே நாளை (ஏப்ரல் 17) காலை 11 மணிக்கு பிபவ் குமார் தேசிய மகளிர் ஆணையம் முன் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது  

    • ஸ்வாதி மலிவால் குற்றம் சாட்டியுள்ள விவகாரம் டெல்லி அரசியல் களத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
    • நேற்று முன்தினம் (மே 16) ஸ்வாதி மலிவால் போலீசாரிடம் எழுத்துபூர்வமாக புகார் அளித்தார்.

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக ஆம் ஆத்மி மாநிலங்களவை பெண் எம்.பி ஸ்வாதி மலிவால் குற்றம் சாட்டியுள்ள விவகாரம் டெல்லி அரசியல் களத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.நேற்று முன்தினம் (மே 16) ஸ்வாதி மலிவால் போலீசாரிடம் எழுத்துபூர்வமாக புகார் அளித்தார். அவரிடம் டெல்லி போலீஸ் உயர் அதிகாரிகள் குழு 4 மணி நேர வாக்குமூலம் பெற்றது.

    இதனைத் தொடர்ந்து பிபவ் குமார் தனது வயிற்றில் காலால் எட்டி உதைத்து கடுமையாக தாக்கினார் என்று சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார். கெஜ்ரிவாலின் இல்லத்தில் ஸ்வாதி மலிவால் அனுமதியின்றி நுழைந்து அதிகாரிகளை மிரட்டும் வீடியோவை வெளியிட்டு, இது தேர்தல் சமயத்தில் கெஜ்ரிவாலின் பெயருக்கு களங்கம் விளைவிக்க பாஜக செய்த சதியே இது என்று ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் அன்றைய தினம் கெஜ்ரிவாலின் இல்லத்தில் இருந்து ஸ்வாதியை பாதுகாப்பு அதிகாரிகள் வெளியில் அழைத்துச் செல்லும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

    இந்த மொத்த விவகாரத்திலும் அவிழ்க்க முடியாத பல முடுச்சுகள் உள்ள நிலையில் டெல்லி காவல்துறை அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதும், இந்த விவகாரம் டெல்லி தேர்தல் களத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதுமே தற்போது அனைவரின் கேள்வியாகவும் உள்ளது. 

    ×