என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "national commission for women"
- புதுமணத்தம்பதிகள் தலையை சேர்த்து வைத்து முட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- வீடியோவை பார்த்த பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.
திருவனந்தபுரம் :
திருமணத்தின் போதும் திருமணம் முடிந்த பிறகும் வித, விதமான நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது. மணமகனின் வீட்டில் கால் வைப்பதற்கு முன் மணமகளுக்கு ஆரத்தி எடுப்பது, அரிசி நிரப்பப்பட்ட நாழியை காலால் தட்டி விடுவது உள்பட பல்வேறு சடங்குகள், சம்பிரதாயங்கள் நடைபெறுவது வழக்கம். இதுபோன்ற சடங்குகள் தவிர மணமக்களை மனதளவிலும், உடல் ரீதியாகவும் வேதனைப்படுத்தும் சில சம்பவங்களும் பல இடங்களில் நடந்து வருகிறது.
இந்தநிலையில் கேரள மாநிலம் பாலக்காட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் முடிந்து மணமகனின் வீட்டுக்குள் செல்வதற்கு முன் புதுமணத்தம்பதிகள் தலையை சேர்த்து வைத்து முட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
பாலக்காடு அருகே உள்ள கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த சச்சினுக்கும், கோழிக்கோடு முக்கம் பகுதியைச் சேர்ந்த சஜ்லாவுக்கும் திருமணம் நடந்தது. மணமகனின் வீட்டின் முன்பு வைத்து புதுமண தம்பதிக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது. அதன் பிறகு சஜ்லா வீட்டுக்குள் நுழைய முயன்றார். அப்போது திடீரென மணமக்களின் பின்னால் இருந்த ஒரு நபர் 2 பேரின் தலையையும் பிடித்து பலமாக முட்ட வைத்தார். இதில் 2 பேருக்கும் கடும் வேதனை ஏற்பட்டது. சஜ்லாவின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. அதை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் சஜ்லாவுக்கு ஆறுதல் கூறி மணமகனின் தாய் உள்பட உறவினர்கள் அவரை வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. வீடியோவை பார்த்த பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.
மணமகள் சஜ்லா கூறும்போது, 'திடீரென நடந்த இந்த சம்பவத்தால் தலையில் கடும் வலி ஏற்பட்டது. சிறிது நேரம் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை' என்று கூறினார்.
மணமகன் சச்சின் கூறும்போது, 'இப்படி ஒரு சம்பிரதாயம் குறித்து கேள்விப்பட்டதே இல்லை' என்றார். இதுபோன்ற சம்பிரதாயம் பாலக்காட்டில் இருக்கிறது என்று வேறு சிலரும் கூறினர்.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக கேரள மகளிர் ஆணையம் தாமாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி கேரளாவில் உள்ள கொல்லங்கோடு போலீசுக்கு மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
- 2022-ம் ஆண்டில் தேசிய மகளிர் ஆணையத்தில் 31,000 புகார்கள் வந்துள்ளன.
- 8 ஆண்டில் இல்லாத வகையில் 2022-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகளவாக வந்துள்ளன.
புதுடெல்லி:
தேசிய மகளிர் ஆணையத்திற்கு கடந்த 2022-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி 30, 957 புகார்கள் வந்துள்ளன. இந்த 30,957 புகார்களில் 9,710 புகார்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை என்ற அடிப்படையிலான பெண்களுக்கு எதிரான உணர்வுப்பூர்வ புகார்களுடன் தொடர்புடையவை.
மேலும் 6,970 குடும்ப வன்முறை புகார்கள், 4,600 வரதட்சணை கொடுமை புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்களில் அதிக அளவாக 54.5 சதவீதம் அளவுக்கு (16,872) உத்தர பிரதேசத்தில் இருந்து வந்துள்ளன. அடுத்து டெல்லி (3,004), மகாராஷ்டிரா (1,381), பீகார் (1,368) மற்றும் அரியானா (1,362) ஆகியவை உள்ளன.
தேசிய மகளிர் ஆணையத்திற்கு கடந்த 2014-ம் ஆண்டில் 33,906 புகார்கள் வந்துள்ளன. 8 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகளவாக 2022-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய புகார்கள் இங்கு வந்துள்ளன.
பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் 2,523 புகார்களும், பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் வன்கொடுமை முயற்சி தொடர்புடைய 1,701 புகார்களும், பெண்கள் புகார் அளிக்க வரும்போது அதனை போலீசார் அலட்சியம் செய்வது தொடர்புடைய 1,623 புகார்களும், சைபர் குற்றங்கள் தொடர்புடைய 924 புகார்களும் வந்துள்ளன என தகவல் தெரிவிக்கின்றது.
கடந்த 2021-ம் ஆண்டில் தேசிய மகளிர் ஆணையத்திற்கு 30, 864 புகார்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்தில் உள்ள பெண் அதிகாரி ஒருவர் தனது மேல் அதிகாரியான போலீஸ் ஐ.ஜி. மீது பாலியல் புகார் கூறிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒரே துறையில் இருவரும் பணியாற்றிய போது வழக்கு விசாரணை தொடர்பாக ஆலோசனை நடத்த பெண் அதிகாரியை வரவழைத்துள்ள போலீஸ் ஐ.ஜி. செல்போனில் ஆபாச படங்களை காட்டி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.
பெண் சூப்பிரண்டின் செல்போனுக்கும் ஆபாச படங்களையும், குறுஞ்செய்திகளையும் ஐ.ஜி. அனுப்பியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதல் டி.ஜி.பி. அருணாச்சலம், போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழி மற்றும் அதிகாரிகள் அதில் இடம் பெற்றுள்ளனர். இந்த கமிட்டியின் முதல் கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜா அண்ணா மலைபுரத்தில் உள்ள மாநில குற்ற ஆவண காப்பக அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் பெண் போலீஸ் சூப்பிரண்டு அளித்த புகார் தொடர்பாக ஐ.ஜி. மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பெண் அதிகாரியையும், ஐ.ஜி.யையும் தனித்தனியாக அழைத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக இருவருக்கும் சம்மன் அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.
விசாகா கமிட்டி தொடர்ந்து இந்த விவகாரம் பற்றிய விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.
இந்த நிலையில் பெண் அதிகாரியின் பாலியல் புகார் குறித்து தேசிய மகளிர் ஆணைம் தாமாகவே முன் வந்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. பெண் போலீஸ் சூப்பிரண்டு கொடுத்த பாலியல் புகார் பற்றி நாளிதழ்களில் வந்த தகவல்களை அடிப்படையாக கொண்டு தாமாகவே இந்த விசாரணையை நடத்த தேசிய மகளிர் ஆணையம் தீர்மானித்துள்ளது.
இதுபற்றி மகளிர் ஆணைய நிர்வாகிகள் விரைவில் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.
குறிப்பிட்ட குற்றச்சாட்டு குறித்து மகளிர் ஆணையம் உடனடியாக புகாருக்குள்ளான நபருக்கு சம்மன் அனுப்ப முடியாது. ஆணையத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் கூடி விவாதித்த பிறகே ஆணையம் உரிய முடிவை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி மகளிர் ஆணையத்தின் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. அதில் ஆலோசனை நடத்தி போலீஸ் ஐ.ஜி.க்கு சம்மன் அனுப்பவும் மகளிர் ஆணையம் முடிவு செய்து இருக்கிறது.
பெண் சூப்பிரண்டின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரிடம் தகவல்களை திரட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. #VishakaCommittee #NationalCommissionForWomen
உலக அளவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், பாலியல் ரீதியாக பெண்களுக்கு ஆபத்தான நாடுகள் குறித்து 550 பேரை உள்ளடக்கிய உலகளாவிய வல்லுநர்கள் குழு கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது.
இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இதில் உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக இந்தியா பட்டியலிடப்பட்டுள்ளது. பெண்களுக்கு மிகவும் ஆபத்தான முதல் 10 நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் இரண்டாம் இடத்தில் உள்ளது. சிரியாவும் அமெரிக்காவும் மூன்றாமிடத்தில் உள்ளன. சோமாலியா, சவுதி அரேபியா அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இந்த கருத்துக்கணிப்பின் முடிவு பலரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஊடகங்களில் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. #NationalCommissionforWomen
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்