என் மலர்
நீங்கள் தேடியது "Delhi Police"
- காஷ்மீரில் பேசிய ராகுல் காந்தி பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர் என்றார்.
- இதுகுறித்து டெல்லி போலீசார் ராகுல் காந்திக்கு நோட்டீசு அனுப்பி உள்ளனர்.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி ஸ்ரீநகரில் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டார். அப்போது ராகுல் காந்தி, பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்று கேள்விப்பட்டேன் என குறிப்பிட்டார்.
இந்நிலையில், ராகுல் காந்தியின் வாக்குமூலம் குறித்து விளக்கம் கேட்டு அவருக்கு டெல்லி போலீசார் நோட்டீசு அனுப்பியுள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்டதாக கூறி உங்களைச் சந்தித்த பெண்கள் குறித்த விவரங்களைக் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம். அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படும் என போலீசார் நோட்டீசில் குறிப்பிட்டுள்ளனர்.
அனில் அம்பானி வழக்கு தொடர்பாக இணையதளத்தில் தவறான தகவலை பதிவிட்ட சுப்ரீம் கோர்ட் அதிகாரிகள் 2 பேரை பணிநீக்கம் செய்து, அவர்களை கைது செய்ய தலைமை நீதிபதி உத்தரவிட்டார். #AnilAmbani #SupremeCourt
புதுடெல்லி:
ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் தலைவர் அனில் அம்பானிக்கு எதிராக எரிக்சன் நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த கோர்ட் அவமதிப்பு வழக்கு, கடந்த ஜனவரி 7-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, அனில் அம்பானி, கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ஆர்.எப்.நாரிமன் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.
ஆனால், நீதிபதி உத்தரவை குறிப்பெடுத்து சுப்ரீம் கோர்ட் இணையதளத்தில் பதிவு செய்யும் அதிகாரிகள் 2 பேர், அனில் அம்பானி ஆஜராக தேவையில்லை என்று நீதிபதி உத்தரவிட்டதாக தவறான தகவலை இணையதளத்தில் பதிவிட்டனர். இத்தகவலை எரிக்சன் நிறுவன வக்கீல், நீதிபதி நாரிமன் கவனத்துக்கு கொண்டு சென்றார். இதுபற்றி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் நீதிபதி நாரிமன் புகார் செய்தார்.
அதையடுத்து, தலைமை நீதிபதி உத்தரவுப்படி, மணவ், தபன் என்ற 2 அதிகாரிகளும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. #AnilAmbani #SupremeCourt
ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் தலைவர் அனில் அம்பானிக்கு எதிராக எரிக்சன் நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த கோர்ட் அவமதிப்பு வழக்கு, கடந்த ஜனவரி 7-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, அனில் அம்பானி, கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ஆர்.எப்.நாரிமன் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.
ஆனால், நீதிபதி உத்தரவை குறிப்பெடுத்து சுப்ரீம் கோர்ட் இணையதளத்தில் பதிவு செய்யும் அதிகாரிகள் 2 பேர், அனில் அம்பானி ஆஜராக தேவையில்லை என்று நீதிபதி உத்தரவிட்டதாக தவறான தகவலை இணையதளத்தில் பதிவிட்டனர். இத்தகவலை எரிக்சன் நிறுவன வக்கீல், நீதிபதி நாரிமன் கவனத்துக்கு கொண்டு சென்றார். இதுபற்றி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் நீதிபதி நாரிமன் புகார் செய்தார்.
அதையடுத்து, தலைமை நீதிபதி உத்தரவுப்படி, மணவ், தபன் என்ற 2 அதிகாரிகளும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. #AnilAmbani #SupremeCourt
இந்திய தேர்தல்களில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஹேக்கிங் செய்ய முடியும் என்று லண்டனில் நடைபெற்ற செய்முறை விளக்கம் தொடர்பாக டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகாரளித்துள்ளது. #ECI #DelhiPolice #SyedShuja
புதுடெல்லி:
கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்ததன் மூலம் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்து, பா.ஜ.க. மத்தியில் ஆட்சி அமைத்து விட்டதாக பிரபல மின்னணு தொழில்நுட்ப நிபுணரான சையத் சுஜா என்பவர் குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தரபிரதேசம், குஜராத், டெல்லி, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களிலும் இந்த தில்லுமுல்லு தொடர்ந்ததாகவும் தெரிவித்தார்.
2009-2014 ஆண்டுகளுக்கிடையில் ‘இ.சி.ஐ.எல்.’ எனப்படும் இந்திய மின்னணு கழகத்தில் (எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா) பணியாற்றியவர் சையத் சுஜா.

இந்த தில்லுமுல்லு தொடர்பாக விரிவாக ஆராய்ந்து கட்டுரை எழுத முயன்றதால்தான் கர்நாடக மாநிலத்தில் பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தை தெரிந்து வைத்திருந்த மத்திய மந்திரி கோபிநாத் முன்டேவும் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு கட்சி வேட்பாளருக்கு விழும் வாக்குகளை வேறொருவருக்கு விழுந்ததுபோல் பதிவாகச் செய்வது எப்படி? என்று இந்தியாவில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தி லண்டனில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் செயல்முறை விளக்கத்தையும் சையத் சுஜா நேற்று செய்து காட்டினார்.
இந்த செயல்முறை விளக்கத்தின்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் கபில் சிபல் அருகில் இருந்ததால் இந்த விவகாரம் தற்போது இந்திய அரசியல் அரங்கில் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், இந்திய தேர்தல்களில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியும் என்று லண்டனில் நடைபெற்ற செய்முறை விளக்கம் தொடர்பாக டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் இன்று புகாரளித்துள்ளது.
இந்த புகாரின்மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சரியான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அந்த புகார் மனுவில் தேர்தல் கமிஷன் வலியுறுத்தியுள்ளது. #ECI #DelhiPolice #SyedShuja
கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்ததன் மூலம் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்து, பா.ஜ.க. மத்தியில் ஆட்சி அமைத்து விட்டதாக பிரபல மின்னணு தொழில்நுட்ப நிபுணரான சையத் சுஜா என்பவர் குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தரபிரதேசம், குஜராத், டெல்லி, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களிலும் இந்த தில்லுமுல்லு தொடர்ந்ததாகவும் தெரிவித்தார்.
2009-2014 ஆண்டுகளுக்கிடையில் ‘இ.சி.ஐ.எல்.’ எனப்படும் இந்திய மின்னணு கழகத்தில் (எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா) பணியாற்றியவர் சையத் சுஜா.
வாக்குப்பதிவு இயந்திரங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டவர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான நான் இந்த மோசடியை அம்பலப்படுத்தியதால் என்மீது தாக்குதல் நடத்தி பா.ஜ.கவினர் கொல்ல முயன்றனர் என்னும் ஒரு ‘பகீர்’ தகவலை சையத் சுஜா வெளியிட்டுள்ளார்.

ஒரு கட்சி வேட்பாளருக்கு விழும் வாக்குகளை வேறொருவருக்கு விழுந்ததுபோல் பதிவாகச் செய்வது எப்படி? என்று இந்தியாவில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தி லண்டனில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் செயல்முறை விளக்கத்தையும் சையத் சுஜா நேற்று செய்து காட்டினார்.
இந்த செயல்முறை விளக்கத்தின்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் கபில் சிபல் அருகில் இருந்ததால் இந்த விவகாரம் தற்போது இந்திய அரசியல் அரங்கில் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், இந்திய தேர்தல்களில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியும் என்று லண்டனில் நடைபெற்ற செய்முறை விளக்கம் தொடர்பாக டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் இன்று புகாரளித்துள்ளது.
இந்த புகாரின்மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சரியான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அந்த புகார் மனுவில் தேர்தல் கமிஷன் வலியுறுத்தியுள்ளது. #ECI #DelhiPolice #SyedShuja
தென்னிந்தியாவில் சமூகம் சார்ந்த மத அமைப்பின் தலைவர்களை கொல்ல சதி செய்ததாக, டெல்லியில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #DelhiPolice #PlottersHeld
புதுடெல்லி:
குடியரசு தின விழாவிற்கான ஏற்பாடுகள் நாடு முழுவதும் செய்யப்பட்டு வரும் நிலையில், அசம்பாவித சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக காவல்துறை உஷார்படுத்தப்பட்டுள்ளது. குடியரசு தின விழாக்கள் மற்றும் அணிவகுப்பு நடைபெறும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் வகையில், தென்னிந்தியாவில் சமூகம் சார்ந்த மத அமைப்புகளின் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த ஒரு கும்பல் சதி செய்திருப்பதாக டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு படை போலீசார், 3 பேரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர்களில் ஒருவன் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த வாலி முகமது என்பது தெரியவந்தது. மற்றவர்கள் டெல்லி மதாங்கிர் பகுதியைச் சேர்ந்த ஷேக் ரியாஜுதீன், கேரளாவின் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த முத்தாசிம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர்கள் மூவரும் சேர்ந்து தென்னிந்தியாவில் உள்ள ஒரு சமூகம் சார்ந்த மத அமைப்பின் தலைவர்களை கொல்ல திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #DelhiPolice #PlottersHeld
குடியரசு தின விழாவிற்கான ஏற்பாடுகள் நாடு முழுவதும் செய்யப்பட்டு வரும் நிலையில், அசம்பாவித சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக காவல்துறை உஷார்படுத்தப்பட்டுள்ளது. குடியரசு தின விழாக்கள் மற்றும் அணிவகுப்பு நடைபெறும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் வகையில், தென்னிந்தியாவில் சமூகம் சார்ந்த மத அமைப்புகளின் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த ஒரு கும்பல் சதி செய்திருப்பதாக டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு படை போலீசார், 3 பேரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர்களில் ஒருவன் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த வாலி முகமது என்பது தெரியவந்தது. மற்றவர்கள் டெல்லி மதாங்கிர் பகுதியைச் சேர்ந்த ஷேக் ரியாஜுதீன், கேரளாவின் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த முத்தாசிம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர்கள் மூவரும் சேர்ந்து தென்னிந்தியாவில் உள்ள ஒரு சமூகம் சார்ந்த மத அமைப்பின் தலைவர்களை கொல்ல திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #DelhiPolice #PlottersHeld
கேரளா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிவாரணத்துக்கு டெல்லி போலீசார் ஒரு கோடி ரூபாய் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund #DelhiPolice
புதுடெல்லி:
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது.
மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் இதுவரை 350க்கு மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.
கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது.
இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

இந்நிலையில், கேரளா வெள்ள நிவாரணத்துக்கு டெல்லி போலீசார் ஒரு கோடி ரூபாய் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், கேரளா மாநிலத்தின் வெள்ள பாதிப்புக்கு டெல்லி போலீசார் ஒரு கோடி ரூபாய் அளிக்க உள்ளோம். டெல்லி போலீசில் பணிபுரிந்து வரும் ஊழியர்களிடம் இருந்து இந்த தொகை பெறப்பட்டு பிரதம மந்திரி நிவாரண நிதியில் இந்த தொகை சேர்க்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund #DelhiPolice
பிரபல எலக்ட்ரானிக் நிறுவனமான வீடியோகான் நிறுவனத்தின் அதிபர் வேணுகோபால் தூத் மீது பங்கு மோசடி வழக்கில் டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். #Vediocon #DelhiPolice
பிரபல எலெக்ட்ரானிக் பொருட்கள் நிறுவனமான வீடியோகானின் அதிபராக வேணுகோபால் தூத் இருந்து வருகிறார். இவர் திருபாதி செராமிக்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வந்தார். அந்த நிறுவனத்தின் சுமார் 30 லட்ச ரூபாய் மதிப்பிலான பங்குகளை சமீபத்தில் இந்த நிறுவனம் விற்பனை செய்தது. ஆனால், அவை ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட பங்குகள் என்பதும், மறுவிற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டதும் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக புகாரின் அடிப்படையில், டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் குற்றவாளியாக வேணுகோபால் சேர்க்கப்பட்டிருந்தார். இரண்டு ஆண்டுகளாக இதன் விசாரணை நடந்து வந்த நிலையில் இப்போது இந்த வழக்கு மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை முடிந்து அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டால் அவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
மேலும், வீடியோகான் நிறுவன அதிபர் வேணுகோபால் தூத், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியுடன் இணைந்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக எழுந்த குற்றசாட்டை சி.பி.ஐ., அமலாக்க பிரிவு, மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. #Vediocon #DelhiPolice
இதுதொடர்பாக புகாரின் அடிப்படையில், டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் குற்றவாளியாக வேணுகோபால் சேர்க்கப்பட்டிருந்தார். இரண்டு ஆண்டுகளாக இதன் விசாரணை நடந்து வந்த நிலையில் இப்போது இந்த வழக்கு மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை முடிந்து அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டால் அவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
மேலும், வீடியோகான் நிறுவன அதிபர் வேணுகோபால் தூத், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியுடன் இணைந்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக எழுந்த குற்றசாட்டை சி.பி.ஐ., அமலாக்க பிரிவு, மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. #Vediocon #DelhiPolice
டெல்லி காவல்துறையில் பணியாற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சீருடையுடன் பெண் சாமியாரிடம் ஆசி வாங்கிய காரணத்துக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். #DelhiPolice
புதுடெல்லி:
டெல்லி ஜனக்புரி காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் இந்திரபால் சிங். உத்தம் நகர் பகுதியில் பெண் சாமியார் நமிதா ஆச்சாரியா என்பவரிடம் இவர் ஆசி வாங்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் உலா வந்தன. போலீஸ் சீருடையுடன் அவர் தோன்றியதால் பல்வேறு எதிர் விமர்சனங்களும் எழுந்தன.
இதுதொடர்பான தகவல் கிடைத்ததும் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸ் துணை கமிஷனர் விஜய் குமார் இன்று தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #DelhiPolice
தொழில் அதிபரிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டியது தொடர்பாக ரூ.251-க்கு ஸ்மார்ட்போன் வழங்குவதாக அறிவித்த மொகித் கோயல் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். #RingingBells #MohitGoel
புதுடெல்லி:
நொய்டாவை சேர்ந்த ‘ரிங்கிங் பெல்ஸ்’ நிறுவனம் ரூ.251-க்கு ஸ்மார்ட்போன் வழங்குவதாக 2016-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. 7 கோடிக்கும் அதிகமானோர் இதில் முன்பதிவு செய்தனர். இந்நிறுவனம் வருமான வரித்துறையினர் சோதனைக்கும் ஆளானது. இந்த கம்பெனியின் நிறுவனர் மொகித் கோயல் வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் ஒரு பெண், 5 தொழில் அதிபர்கள் தன்னை கற்பழித்துவிட்டதாக கடந்த மார்ச் மாதம் புகார் செய்திருந்தார். இந்த வழக்கில் அந்த 5 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த கற்பழிப்பு வழக்கை தீர்த்துவைப்பதாக மொகித் கோயல் உள்பட 3 பேர் டெல்லியில் ஒரு தொழில் அதிபரிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டினர். இதுபற்றி அவர் நேதாஜி சுபாஷ் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த பணத்தை பெற்றுக்கொள்ள மொகித் கோயல், கற்பழிப்பு புகார் கூறிய பெண் உள்பட 3 பேரும் ஓட்டலுக்கு வந்தபோது போலீசார் அவர்களை கைது செய்தனர். #RingingBells #MohitGoel
நொய்டாவை சேர்ந்த ‘ரிங்கிங் பெல்ஸ்’ நிறுவனம் ரூ.251-க்கு ஸ்மார்ட்போன் வழங்குவதாக 2016-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. 7 கோடிக்கும் அதிகமானோர் இதில் முன்பதிவு செய்தனர். இந்நிறுவனம் வருமான வரித்துறையினர் சோதனைக்கும் ஆளானது. இந்த கம்பெனியின் நிறுவனர் மொகித் கோயல் வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் ஒரு பெண், 5 தொழில் அதிபர்கள் தன்னை கற்பழித்துவிட்டதாக கடந்த மார்ச் மாதம் புகார் செய்திருந்தார். இந்த வழக்கில் அந்த 5 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த கற்பழிப்பு வழக்கை தீர்த்துவைப்பதாக மொகித் கோயல் உள்பட 3 பேர் டெல்லியில் ஒரு தொழில் அதிபரிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டினர். இதுபற்றி அவர் நேதாஜி சுபாஷ் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த பணத்தை பெற்றுக்கொள்ள மொகித் கோயல், கற்பழிப்பு புகார் கூறிய பெண் உள்பட 3 பேரும் ஓட்டலுக்கு வந்தபோது போலீசார் அவர்களை கைது செய்தனர். #RingingBells #MohitGoel
டெல்லியில், முதல்வர் அரவிந்த் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் அரசு தலைமைச்செயலாளர் தாக்கப்பட்டது தொடர்பாக போலீசார் நேற்று கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தினர்.
புதுடெல்லி:
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி இரவு நடந்த ஆலோசனை கூட்டத்தில் அரசு தலைமைச்செயலாளர் அன்ஷூ பிரகாஷ் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் ஆளும் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் அத்துமீறி தவறாக நடந்து கொண்டதுடன், தாக்கினர் என புகார் எழுந்தது.
இது தொடர்பாக கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. அமனத்துல்லா உள்ளிட்டவர்கள் மீது அன்ஷூ பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து டெல்லி (வடக்கு) கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் ஹரேந்திர சிங் தலைமையில் 6 பேரை கொண்டு குழுவினர், கெஜ்ரிவால் வீட்டுக்கு நேற்று மாலை சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். அவர் தன்னிடம் நடத்துகிற விசாரணையை வீடியோவாக பதிவு செய்து, தனக்கும் ஒரு சி.டி. தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த வழக்கில் கெஜ்ரிவாலின் தனிச்செயலாளர் பிபவ் குமாரும் கடந்த மாதம் டெல்லி போலீசாரால் விசாரிக்கப்பட்டார் என்பது நினைவுகூரத்தக்கது. #DelhiCM #Kejriwal
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி இரவு நடந்த ஆலோசனை கூட்டத்தில் அரசு தலைமைச்செயலாளர் அன்ஷூ பிரகாஷ் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் ஆளும் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் அத்துமீறி தவறாக நடந்து கொண்டதுடன், தாக்கினர் என புகார் எழுந்தது.
இது தொடர்பாக கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. அமனத்துல்லா உள்ளிட்டவர்கள் மீது அன்ஷூ பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து டெல்லி (வடக்கு) கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் ஹரேந்திர சிங் தலைமையில் 6 பேரை கொண்டு குழுவினர், கெஜ்ரிவால் வீட்டுக்கு நேற்று மாலை சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். அவர் தன்னிடம் நடத்துகிற விசாரணையை வீடியோவாக பதிவு செய்து, தனக்கும் ஒரு சி.டி. தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த வழக்கில் கெஜ்ரிவாலின் தனிச்செயலாளர் பிபவ் குமாரும் கடந்த மாதம் டெல்லி போலீசாரால் விசாரிக்கப்பட்டார் என்பது நினைவுகூரத்தக்கது. #DelhiCM #Kejriwal
சுனந்தாவை தற்கொலைக்கு தூண்டியதாக டெல்லி போலீசார் கூறுவதை எதிர்த்து நான் கோர்ட்டில் எனது வாதத்தை பதிவு செய்வேன் என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கூறினார். #ShashiTharoor #SunandaPushkarDeath #SunandaPushkar
திருவனந்தபுரம்:
முன்னாள் மத்திய மந்திரியும், திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான சசிதரூர் கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி சுனந்தா புஷ்கரை திருமணம் செய்தார்.
2014-ம் ஆண்டு ஜனவரி 17-ந்தேதி சுனந்தா புஷ்கர் டெல்லியில் உள்ள பிரபல ஓட்டல் அறையில் பிணமாக கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் இது தொடர்பாக சசிதரூரிடம் விசாரணை நடத்தினார்.
முதலில் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி இதனை கொலை வழக்காக பதிவு செய்தனர்.
இந்த நிலையில் டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் சசிதரூர் மீது மனைவியை கொடுமைப்படுத்துதல், தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய சட்டப்பிரிவுகள் 498(ஏ), 306 ஆகிய பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது ஜாமீனில் வர முடியாத வழக்குகள் ஆகும். இதனை வருகிற 24-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் அறிவித்துள்ளார்.
டெல்லி போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகை குறித்து சசிதரூர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
சுனந்தா புஷ்கர் மரணத்தில் டெல்லி போலீசார் என் மீது குற்றம் சாட்டி உள்ளது அபத்தமானது. இதற்கு தகுந்த பதிலை தெரிவிப்பேன். சுனந்தாவின் தற்கொலைக்கு நான் காரணமில்லை என்பது அனைவருக்கும் தெரியும்.
சுனந்தா வழக்கில் எவரையும் சந்தேகிக்கும் வகையில் எந்த ஒரு முகாந்திரமும் இல்லையென்று டெல்லி ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி டெல்லி போலீஸ் அதிகாரி தெரிவித்திருந்தார்.
6 மாதத்தில் இந்த கருத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சுனந்தாவை நான், தற்கொலைக்கு தூண்டியதாக அதே போலீஸ் துறை கூறுகிறது. இது நம்பும்படியாக இல்லை. இதனை எதிர்த்து நான், கோர்ட்டில் எனது வாதத்தை பதிவு செய்வேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். #ShashiTharoor #SunandaPushkarDeath #SunandaPushkar
முன்னாள் மத்திய மந்திரியும், திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான சசிதரூர் கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி சுனந்தா புஷ்கரை திருமணம் செய்தார்.
2014-ம் ஆண்டு ஜனவரி 17-ந்தேதி சுனந்தா புஷ்கர் டெல்லியில் உள்ள பிரபல ஓட்டல் அறையில் பிணமாக கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் இது தொடர்பாக சசிதரூரிடம் விசாரணை நடத்தினார்.
முதலில் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி இதனை கொலை வழக்காக பதிவு செய்தனர்.
இந்த நிலையில் டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் சசிதரூர் மீது மனைவியை கொடுமைப்படுத்துதல், தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய சட்டப்பிரிவுகள் 498(ஏ), 306 ஆகிய பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது ஜாமீனில் வர முடியாத வழக்குகள் ஆகும். இதனை வருகிற 24-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் அறிவித்துள்ளார்.
டெல்லி போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகை குறித்து சசிதரூர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
சுனந்தா புஷ்கர் மரணத்தில் டெல்லி போலீசார் என் மீது குற்றம் சாட்டி உள்ளது அபத்தமானது. இதற்கு தகுந்த பதிலை தெரிவிப்பேன். சுனந்தாவின் தற்கொலைக்கு நான் காரணமில்லை என்பது அனைவருக்கும் தெரியும்.
சுனந்தா வழக்கில் எவரையும் சந்தேகிக்கும் வகையில் எந்த ஒரு முகாந்திரமும் இல்லையென்று டெல்லி ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி டெல்லி போலீஸ் அதிகாரி தெரிவித்திருந்தார்.
6 மாதத்தில் இந்த கருத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சுனந்தாவை நான், தற்கொலைக்கு தூண்டியதாக அதே போலீஸ் துறை கூறுகிறது. இது நம்பும்படியாக இல்லை. இதனை எதிர்த்து நான், கோர்ட்டில் எனது வாதத்தை பதிவு செய்வேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். #ShashiTharoor #SunandaPushkarDeath #SunandaPushkar