search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பிய டெல்லி போலீசார்
    X

    ராகுல் காந்தி

    ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பிய டெல்லி போலீசார்

    • காஷ்மீரில் பேசிய ராகுல் காந்தி பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர் என்றார்.
    • இதுகுறித்து டெல்லி போலீசார் ராகுல் காந்திக்கு நோட்டீசு அனுப்பி உள்ளனர்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி ஸ்ரீநகரில் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டார். அப்போது ராகுல் காந்தி, பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்று கேள்விப்பட்டேன் என குறிப்பிட்டார்.

    இந்நிலையில், ராகுல் காந்தியின் வாக்குமூலம் குறித்து விளக்கம் கேட்டு அவருக்கு டெல்லி போலீசார் நோட்டீசு அனுப்பியுள்ளனர்.

    மேலும், பாதிக்கப்பட்டதாக கூறி உங்களைச் சந்தித்த பெண்கள் குறித்த விவரங்களைக் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம். அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படும் என போலீசார் நோட்டீசில் குறிப்பிட்டுள்ளனர்.

    Next Story
    ×