search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தேடப்பட்டு வந்த ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி டெல்லியில் கைது
    X

    தேடப்பட்டு வந்த ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி டெல்லியில் கைது

    • டெல்லியில் பதுங்கி இருந்த ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதியை டெல்லி போலீசார் இன்று கைது செய்தனர்.
    • குடியரசு தினம் நெருங்கி வரும் நிலையில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி சிக்கியதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீரின் சோபோர் பகுதியைச் சேர்ந்தவர் ஜாவித் மட்டூ. ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ள அவர் காஷ்மீரில் பல்வேறு பயங்கரவாத செயல்களை நடத்தியுள்ளார். அவரை பாதுகாப்பு படையினர் தேடி வந்தனர்.

    இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் ஜாவித் மட்டூ பதுங்கி இருப்பதாக டெல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இந்நிலையில், டெல்லியில் பதுங்கி இருந்த ஜாவித் மட்டூவை டெல்லி போலீசார் இன்று கைது செய்தனர். விசாரணையில், அவர் தேசிய புலனாய்வு அமைப்பினரால் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி என்பதும் தெரிய வந்தது.

    குடியரசு தினம் நெருங்கி வரும் நிலையில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி சிக்கியதால் தலைநகரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×