search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sukhdev Singh Gokamedi"

    • ராஜபுத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
    • குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் டெல்லிக்கு அழைத்து வரப்படுவதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஸ்ரீ ராஷ்ட்ரிய ராஜபுத் கர்னி சேனா அமைப்பின் தலைவராக பதவி வகித்தவர் சுக்தேவ் சிங் கோகமெடி.

    கடந்த 5-ம் தேதி சுக்தேவ் சிங் ஜெய்ப்பூரில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது மர்ம நபர்கள் 3 பேர் அவரது வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் சுக்தேவ் சிங் கோகமெடியும், அவருடன் இருந்த நவீன் சிங் ஷெகாவத் என்பவரும் பலியாகினர்.

    துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 3 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இச்சம்பவம் அங்கு ராஜபுத்திர சமூகத்தினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    சுக்தேவ் சிங் கோகமெடியின் கொலையைக் கண்டித்து ராஜஸ்தான் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் போராட்டம் நடந்தது.

    போராட்டக்காரர்கள் சாலைகளில் திரண்டு டயர்களை எரித்தும், கோஷங்களை எழுப்பியும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்தப் போராட்டத்தால் ராஜஸ்தானில் பதற்றம் நிலவியது.

    இதையடுத்து, சுக்தேவ் சிங் கொலையில் தொடர்புடைய நபர்களை தேடிவந்தனர்.

    இந்நிலையில் சுக்தேவ் சிங் கோகமெடியின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேரை போலீசார் சண்டிகரில் கைது செய்தனர்.

    ராஜஸ்தான் போலீசாரின் கூட்டு நடவடிக்கை காரணமாக ரோகித் ரத்தோர், நிதின் பவுஜி உள்பட 3 குற்றவாளிகளை சண்டிகரில் இருந்து டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, டெல்லிக்கு அழைத்து வரப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

    ×