search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young girl"

    • ஆதார் கார்டு இல்லாவிட்டால் 10 ரூபாய்க்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்றார்.
    • அவரையும் தலைமுடியை கெட்டியாக பிடித்து இழுத்து, பஸ் கம்பியில் அடித்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் எல்.பி. நகரில், அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. கண்டக்டர் கங்காதரன் பயணிகளிடம் டிக்கெட் கொடுத்து கொண்டிருந்தார்.

    தில்சுக் நகர் செல்வதற்காக, அந்த பஸ்சில் இளம் பெண் ஒருவர் ஏறினார்.

    கண்டக்டர் கங்காதரனிடம், அந்த பெண் இலவச பயண டிக்கெட் கேட்டார்.

    உடனே கண்டக்டர், ஆதார் அட்டையை காண்பிக்கும்படி கேட்டார்.

    இதைக் கேட்டதுமே அந்த பெண்ணுக்கு கோபம் வந்துவிட்டது. யாரை பார்த்து ஆதார் அட்டை கேட்கிறாய்? என்று கேள்வி கேட்டு, கண்டக்டரை சரமாரியாக திட்டினார்.

    இதனால், திடுக்கிட்ட கண்டக்டர், அடையாள அட்டை இல்லாமல், பஸ்சில் பயணிக்க முடியாது, ஆதார் கார்டு இல்லாவிட்டால் 10 ரூபாய்க்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்றார். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் கண்டக்டரை எட்டி உதைத்து தாக்க தொடங்கினார். அப்போதுதான் அந்த பெண், குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.

    பிறகு, அந்த பெண், திடீரென ரூ.500 நோட்டை கண்டக்டரிடம் தந்து டிக்கெட் கேட்டார்.

    500 ரூபாய்க்கு சில்லறை இல்லை என்று கண்டக்டர் கூறினார்.

    இதைக் கேட்டதும், அந்த பெண்ணுக்கு மீண்டும் கோபம் அதிகமாகிவிட்டது. அதனால், கண்டக்டரை எட்டி காலால் உதைத்தார். பிறகு, அவரது முகத்திலேயே எச்சிலை துப்பினார்.

    சினிமாவில் வரும் சண்டை காட்சி போல கண்டக்டரை காலால் உதைத்து புரட்டி எடுத்தார்.

    இதனை பார்த்து, பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ந்து போனார்கள் யாருமே அந்த பெண்ணிடம் நெருங்கவில்லை. ஒரு பெண் இதனை தடுக்க அருகில் வந்தார்.

    அவரையும் தலைமுடியை கெட்டியாக பிடித்து இழுத்து, பஸ் கம்பியில் அடித்தார்.

    பஸ்சை அருகில் உள்ள போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். இது குறித்து கண்டக்டர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் போதையில் கண்டக்டர் மற்றும் பெண்ணை தாக்கியது தொடர்பாக இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேண்ட் சட்டை அணிந்து இளம்பெண் பஸ்சில் கண்டக்டரை தாக்கும் காட்சிகளை பயணிகள் வீடியோ எடுத்துள்ளனர் .

    அது தெலுங்கானாவில் தற்போது வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • வீட்டைவிட்டு வெளியே சென்ற இளம்பெண் வீடு திரும்பவில்லை.
    • புகாரின்பேரில் போலீசார் மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள பங்காளபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் பாண்டி. இவருக்கு ராஜேஸ்வரி (வயது27) என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.

    சம்பவத்தன்று ராஜேஸ்வரி வீட்டை விட்டு வெளியேறி பழனியில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் அதன்பிறகு மாயமானார்.

    இது குறித்து அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில் பெரியகுளம் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    • வனிதா பி.காம் பட்டப்படிப்பை முடித்து விட்டு 3 ஆண்டுகளாக வீட்டில் இருந்து வந்துள்ளார்.
    • மாலை 4.30 மணிக்கு வீட்டில் யாரும் இல்லாதபோது சமையல் அறையில் தேனீர் வைக்க வனிதா சென்றபோது திடீரென சத்தமிட்டுள்ளார்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சின்னாக்கவுண்டனூர் கிராமம் கோபாலனூர் கருவறையான் காட்டை சேர்ந்தவர் சீனிவாசன், விவசாயி. இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், பிரபு (27) என்ற மகனும், வனிதா (23) என்ற மகளும் உள்ளனர்.

    வனிதா பி.காம் பட்டப்படிப்பை முடித்து விட்டு 3 ஆண்டுகளாக வீட்டில் இருந்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்நிலையில் நேற்று மாலை 4.30 மணிக்கு வீட்டில் யாரும் இல்லாதபோது சமையல் அறையில் தேனீர் வைக்க வனிதா சென்றபோது திடீரென சத்தமிட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் பெற்றோர்கள் ஓடி வந்து பார்த்துள்ளனர். அப்போது உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்த நிலையில் வனிதா உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சங்ககிரி போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் சேலம் மாவட்ட தீயணைப்பு அலுவலர் வேலு, நிலைய அலுவலர் அருள்மணி மற்றும் மீட்பு படையினர் சமையல் அறையில் தண்ணீர் அடித்து கருகிய நிலையில் இருந்த வனிதாவின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வனிதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து சங்ககிரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் வனிதா சமைத்தபோது கியாஸ் கசிவினால் இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தாரமங்கலம் வெள்ளாளர் தெரு பகுதியை சேர்ந்தவர் முருகன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி தேவி
    • அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தேவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது பற்றி பெத்தநாயக்கன் பாளையத்தில் உள்ள தேவியின் தாய் சரோஜா தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் வெள்ளாளர் தெரு பகுதியை சேர்ந்தவர் முருகன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி தேவி (25). இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    குடிப்பழக்கம் உள்ள முருகன் வீட்டில் தேவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு தேவி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தேவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது பற்றி பெத்தநாயக்கன் பாளையத்தில் உள்ள தேவியின் தாய் சரோஜா (50) தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தேவிக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால் மேட்டூர் ஆர்.டி.ஓ. தணிகாசலம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.Salem District News, இளம்பெண், தற்கொலை, ஆர்.டி.ஓ., விசாரணை, Young girl, suicide, RDO, Investigation

    உறவினர் மற்றும் நண்பர்க ளின் வீடுகளில் அபர்ணா வை தேடினர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கீழ் கவரப் பட்டை சேர்ந்த வர் சுப்பிர மணி யன். இவரது மகள் அபர்ணா (வயது 22). இவர் கடந்த 14-ந் தேதி இரவு 7.30 மணி அளவில் வீட்டிலிருந்து தோட் டத்திற்கு சென்றவர் வெகு நேரமாகி யும் வீடு திரும்ப வில்லை.

    அவரது பெற் றோர் உறவினர் மற்றும் நண்பர்க ளின் வீடுகளில் அபர்ணா வை தேடினர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை.இது குறித்து அபர்ணா வின் பெற்றோர் பண்ருட்டி போலீசில் புகார் செய்த னர். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், காணாமல் போன இளம் பெண்ணை தேடிவருகின்றனர்.

    • வடிவேல்-மதிஷாவுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
    • மதிஷாவை வடிவேல் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் குறித்து தகவல் எதுவும் கிடைக்க வில்லை.

    களக்காடு:

    ஏர்வாடி அருகே உள்ள சேசையாபுரம், வடக்குத்தெருவை சேர்ந்தவர் வடிவேல். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மதிஷா (23). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.

    இந்நிலையில் மதிஷா கடந்த 11-ந் தேதி வள்ளியூர் செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார். அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த வடிவேல் பல்வேறு இடங்களில் தேடியும் மதிஷா குறித்து தகவல் எதுவும் கிடைக்க வில்லை. இதையடுத்து அவர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தர்ம ராஜ் வழக்குபதிவு செய்து விசா ரணை நடத்தி மாயமான மதிஷாவை தேடி வரு கின்றனர்.

    • தீபா அடிக்கடி வரும் தலைவலியால் அவதிபட்டு வந்தார்.
    • எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் குழந்தையம்மாள் வீதியை சேர்ந்த செந்தில் மகள் தீபா (21). இவரது பெற்றோர் இறந்து விட்டதால் தாத்தா மருதமுத்து, பாட்டி அங்கம்மாளுடன் வசித்து வந்தார். தீபா அடிக்கடி வரும் தலைவலியால் அவதிபட்டு வந்தார்.

    இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பார்த்து ம் குணமாகததால் சம்பவத்தன்று இரவு எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையறிந்த தீபாவின் குடும்பத்தினர் அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்து வமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சை க்காக ஈரோடு அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப்ப ட்டார். அப்போது டாக்டர்கள் பரிசோதித்து விட்டு தீபா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீபாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • குடும்ப பிரச்சினையில் மனமுடைந்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • கம்பம் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கம்பம்:

    கம்பம் சுப்பிரமணியர் கோவில் தெரு தாத்தப்பன்குளத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 25). டிரைவர் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் தனது அத்தை மகளான சிவக்கனி (23) என்பவரை கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை.

    இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுைடந்த சிவக்கனி தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கம்பம் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுதா வீட்டில் பீடி சுற்றும் தொழில் செய்து வந்தார்.
    • பல்வேறு இடங்களில் தேடியும் சுதா பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    களக்காடு:

    மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள சுருளையை சேர்ந்தவர் வேலாயுதம் மகள் சுதா (வயது 21). பிளஸ்-2 படித்துள்ள சுதா வீட்டில் பீடி சுற்றும் தொழில் செய்து வந்தார்.

    கடந்த 12-ந் தேதி வீட்டில் இருந்த சுதா திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் சுதா பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது தந்தை வேலாயுதம் மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான சுதாவை தேடி வருகின்றனர்.

    • ஷாலினி பண்ருட்டியில் உள்ள தாத்தா வீட்டில் வசித்து வந்தார்.
    • அக்கம், பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.

    கடலுார்: 

    பண்ருட்டி- கடலுார் சாலையை சேர்ந்தவர் முருகவேல். இவர் கோயம்புத்தூரில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் ஷாலினி (வயது 19). கோயம்புத்தூரில் பி.எஸ்.சி. ரேடியோலஜி படித்து வருகிறார். இந்நிலையில் ஷாலினி கடந்த ஒரு மாதமாக பண்ருட்டி யில் உள்ள தாத்தா வீட்டில் வசித்து வந்தார். இரவு சாப்பிட்டுவிட்டு ஷாலினி தூங்க சென்றார். இன்று காலை எழுந்து பார்த்த போது ஷாலினியை காணவில்லை. அக்கம், பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து பண்ருட்டி போலீசில் ஷாலினியின் தாய் விஜயா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து ஷாலினியை தேடி வருகின்றனர்.

    • கடந்த 10-ந்தேதி காலை மணிமாறன் தனது மனைவி அனிதாவை அழைத்துக் கொண்டு சங்கரன்கோவில் ஆஸ்பத்திரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது அமுதாபுரம் விலக்கு பகுதியில் சென்றபோது அனிதாவுக்கு திடீரென தலை சுற்றல் ஏற்பட்டு மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

    நெல்லை:

    ஆலங்குளத்தை அடுத்த கீழே வீராணம் மேட்டுப் பட்டி தெருவை சேர்ந்தவர் மணிமாறன். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அனிதா (வயது 24) என்ற பெண்ணு டன் திருமணம் ஆனது.

    கடந்த 10-ந்தேதி காலை மணிமாறன் தனது மனைவி அனிதாவை அழைத்துக் கொண்டு சங்கரன்கோவில் ஆஸ்பத்திரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஆலங்குளம்-சங்கரன்கோவில் சாலையில் அமுதாபுரம் விலக்கு பகுதி யில் சென்றபோது அனிதா வுக்கு திடீரென தலை சுற்றல் ஏற்பட்டு மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனடியாக அந்த வழி யாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு அனிதா பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது தொடர்பாக ஊத்து மலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி ஒரு வருடத்திலேயே விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக சேத்தியாத்தோப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • காக்கா வலிப்பு நோய் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த குமாரகுடி வெள்ளாற்றங்கரையில் 30 வயது மதிக்கத்தக்க பெண் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக சேத்தியாத்தோப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், பாப்பாக்குடி கிராமத்தைச் சேர்ந்த ரத்தினசாமி மகள் சூர்யா (வயது 30) என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இவருக்கு காக்கா வலிப்பு நோய் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சூரியாவின் உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோகதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், சூரியாவின் உடலை அவரது பெற்றோரிடம் ஓப்படைத்தனர்.

    ×