என் மலர்
நீங்கள் தேடியது "young girl"
- இளம்பெண் உள்பட 3 பேர் மாயமானார்கள்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து கோபால் சாமியை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
வத்திராயிருப்பு அருகே உள்ள ரெங்கப்ப நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 30). இவர் கிருஷ்ணன் கோவிலில் உள்ள நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
சம்பவத்தன்று வேலைக்கு சென்ற செல்வம் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தாய் பார்வதி கொடுத்த புகாரின்படி கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம் அருகே உள்ள முறம்பு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் அக்சயா (வயது 22). இவர் அடிக்கடி செல்போனை பயன்படுத்தி யதால் பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்த நிலையில் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்த அக்சயா சம்பவத்தன்று வீட்டிலிருந்து மாயமானார். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் பெற்றோரை தொடர்பு கொண்ட அக்சயா தான் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும் தேட வேண்டாம் எனவும் தெரி வித்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் தளவாய்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் புளியங்குள த்தை சேர்ந்தவர் கோபால் சாமி (65). சம்பவத்தன்று வெளியூர் செல்வதாக கூறி விட்டு சென்ற இவர் அதன்பின் ஊர் திரும்ப வில்லை. செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இது குறித்து அவரது மனைவி இந்திரா கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து கோபால் சாமியை தேடி வருகின்றனர்.
- பெற்றோர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிச்சென்ற ஷபானா திடீரென்று மாயமானார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
கோபி ராஜாஜி வீதியை சேர்ந்தவர் சவுக்கத்அலி(25). இவரது மனைவி ஷபானா(23). கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணமானது.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோபி ஜெய்துர்கை நகரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிச்சென்ற ஷபானா திடீரென்று மாயமானார்.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் எவ்வித தகவலும் கிடைக்காததால் கோபி போலீசில் கணவர் சவுக்கத்அலி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோபிசெட்டிபாளையம் அருகே கொளப்பலூரில் பெற்றோர் பேசாததால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கொளப்பலூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (32). இவருக்கும் கடலூர் மாவட்டம் புவனகிரி கிராமம் கும்பிமூலை பகுதியை சேர்ந்த இந்து (24) என்பவருக்கும் திருமணம் நடந்தது.
பிரபாகரன் பெருந்து றையில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்துவுக்கு ஏற்கனவே ஒருவரிடம் திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து பெருந்துறை கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அதே கம்பெனியில் வேலை பார்த்தபோது பிரபாகரனிடம் பழக்கம் ஏற்பட்டு பின்னர் 2 பேரும் கடந்த மே மாதம் 30-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
இந்த திருமணத்திற்கு இந்துவின் பெற்றோர் விருப்பம் தெரிவிக்க வில்லை. இதனால் அவரது பெற்றோர் இந்துவிடம் பேசாமல் இருந்து வந்துள்ளனர். இதனால் இந்து கடந்த சில நாட்களாக மன வருத்தத்தில் இருந்து உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பிரபாகரன் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தார்.
அப்போது இந்து திடீரென வாந்தி எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கேட்டபோது பெற்றோர் தன்னிடம் பேசாத காரணத்தால் தற்கொலை செய்ய முடிவு எடுத்து எலி பேஸ்ட் (விஷம்) சாப்பிட்டு விட்டதாக தெரிவித்தார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரபாகரன் மனைவியை சிகிச்சை க்காக கோபி அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த இந்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 22ந்தேதி பெற்றோர் வீட்டுக்கு வந்த முத்துலட்சுமி அங்கேயே தங்கியுள்ளார்.
- முத்துலட்சுமி பெரியப்பா குப்பன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உடுமலை :
உடுமலை அருகே ஏரிப்பாளையம் சேரன் நகரை சேர்ந்தவர் தாதான். உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர் கைகால்கள் செயலற்ற நிலையில் வாய் பேச முடியாமல் வீட்டில் இருந்து வருகிறார். இவருடைய மனைவி தெய்வானை சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார். இந்த தம்பதியின் மகள் முத்துலட்சுமி( வயது 22) .இவருக்கும் உரல்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கும் கடந்த 2020 ம் ஆண்டு திருமணம் நடந்தது.
இந்தநிலையில் கடந்த 22ந்தேதி பெற்றோர் வீட்டுக்கு வந்த முத்துலட்சுமி அங்கேயே தங்கியுள்ளார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த முத்துலட்சுமி உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் முழுவதும் கருகி துடித்த முத்துலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து முத்துலட்சுமி பெரியப்பா குப்பன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆகி உள்ளதால் ஆர்டிஓ. விசாரணை நடைபெற உள்ளது.
- பிப்ரவரி மாதம் 28 ம் தேதி வீட்டில் இருந்து சிறுமி மாயமானார்.
- பலமுறை சிறுமியுடன் பாலியல் உறவு வைத்துள்ளார்.
உடுமலை :
உடுமலை அடுத்த போடிப்பட்டி சேர்ந்தவர் 16 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் 28 ம் தேதி வீட்டில் இருந்து மாயமானார். இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் போடிபட்டியை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகன் லோகேஷ்( வயது 22) . தொழிலாளி யான இவர் சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றுள்ளார். உடுமலையில் உள்ள கோவிலின் முன்பு வைத்து சிறுமிக்குக்கு தாலி கட்டியுள்ளார் . பின்னர் கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை சென்று கணவன் மனைவி என்று சொல்லி வீடு எடுத்து தங்கி உள்ளனர். மேலும் பலமுறை சிறுமியுடன்பாலியல் உறவு வைத்துள்ளார். இதில் சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து உடுமலை மகளிர் போலீசார் விசாரணை நடத்தி லோகேசை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
- இளம்பெண் எரித்து ெகாலை செய்யப்பட்டார்.
- அந்த பெண் ெகாலை செய்யப்பட்டி ருக்கலாம் என ேபாலீசார் கருதுகின்றனர்.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலை ஆத்தங்கரைபட்டி சுடுகாட்டில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் உடல் பாதி எரிந்த நிலையில் கிடந்தது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.
இதுபற்றி பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில் எழுமலை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று பாதி எரிந்த நிலையில் கிடந்த இளம்பெண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அவரது அருகில் ரூ.40 ஆயிரம் பணம் எரிந்த நிலையில் கிடந்தது. அந்த பெண் கொலை செய்யப்பட்டி ருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
மேலும் எதற்காக அந்த பெண் கொலை செய்யப்பட்டார். எரிந்த கிடந்த பணம் யாருக்கு சொந்தமானது? பாலியல் பலாத்காரம் செய்து அந்த பெண் கொலை செய்யப்பட்டாரா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இளம்பெண் திடீரென எல்லம்மாள் பணம் வைத்திருந்த பேக்கை திருடி கொண்டு தப்பிக்க முயன்றார்.
- இதையடுத்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து நந்தினியை கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மதுரைக்கு பஸ் கிளம்ப தயாரானது. பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது ஈரோட்டை சேர்ந்த எல்லம்மாள் என்ற பெண் பஸ்சில் ஏறி அமர்ந்து இருந்தார்.
அவர் அருகே மற்றொரு இளம்பெண் அமர்ந்திருந்தார். பஸ் கிளம்ப தயாரான போது எல்லம்மாள் அருகே அமர்ந்திருந்த இளம்பெண் திடீரென எல்லம்மாள் பணம் வைத்திருந்த பேக்கை திருடி கொண்டு தப்பிக்க முயன்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடி, திருடி என கூச்சலிட்டார். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அந்த இளம்பெண்ணை ஓடி சென்று மடக்கிப் பிடித்தனர்.
அந்த பெண் திருடிய பையில் ரூ.2000 ரொக்கப் பணம் இருந்தது. இது குறித்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்தப் பெண்ணை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
விசாரணையில் அந்தப் பெண் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த நந்தினி (28) என தெரிய வந்தது. இவர் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் திருடுவதை வாடிக்கையாக வைத்திருந்தது பெரிய வந்தது.
மேலும் இவர் மீது சென்னை, காஞ்சிபுரம் பகுதிகளில் 6 திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து நந்தினியை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
- மோட்டார் சைக்கிளில் சென்ற இளம்பெண் பஸ் மோதி பலியானார்.
- நிற்காமல் சென்ற அரசு பஸ் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த முத்து முனியாண்டி மகள் அமிர்தம் (26). இவர் நேற்று இரவு தோழியுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். திண்டுக்கல் மெயின் ரோட்டில் சென்றபோது புது விளாங்குடி அருகே, வேகமாக வந்த அரசு பஸ் மோதியது. இதில் அமிர்தம் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அரசு பஸ் சக்கரத்தில் சிக்கியவர், பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார். இருந்தபோதிலும் அரசு பஸ் நிற்காமல் சென்று விட்டது. அமிர்தத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, நிற்காமல் சென்ற அரசு பஸ் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வயிற்றுவலி காரணமாக லாவண்யா தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்
- குண்டடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
தாராபுரம் :
தாராபுரத்தை அடுத்த குள்ளாகிபாளையத்தை சேர்ந்தவர் சுகுமார். இவர் கோழிப்பண்ணையும், விவசாயமும் செய்து வருகிறார்.
இவரது மனைவி லாவண்யா( வயது 27). இவர்களுக்கு 4 மாத ஆண் குழந்தை உள்ளது. வயிற்றுவலி காரணமாக லாவண்யா தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து குண்டடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.மேலும் லாவண்யா உடல் பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தநிலையில் லாவண்யா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி லாவண்யா உறவினர்கள் அவரது கணவர் சுகுமாரின் உறவினர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.
- சென்னை மாதவரத்தை சேர்ந்த தங்கமுத்து என்பவரை காளீஸ்வரி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
- கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக காளீஸ்வரி தூத்துக்குடியில் உள்ள தாய் வீட்டிற்கு வந்துவிட்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி முத்தையா புரம் தோப்புத்தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் தெர்மல் அனல்மின்நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி காளியம்மாள். இவர்களுக்கு காளீஸ்வரி (வயது 21) என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில் சென்னை மாதவரத்தை சேர்ந்த தங்கமுத்து என்பவரை காளீஸ்வரி காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின்னர் அவர் கணவருடன் சென்னையில் வசித்து வந்தார்.
கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கணவரை பிரிந்து காளீஸ்வரி தூத்துக்குடியில் உள்ள தாய் வீட்டிற்கு வந்துவிட்டார்.
இந்தநிலையில் கடந்த மாதம் 14-ந் தேதி வீட்டில் இருந்த காளீஸ்வரி திடீரென மாயமானார். அக்கம், பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் காளியம்மாள் முத்தையாபுரம் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன், சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து காளீஸ்வரி எங்கு சென்றார்? யாரும் கடத்தி சென்றார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணும், 17 வயது சிறுமியும் குடும்பத்தினரிடம் சண்டை போட்டு விட்டு வீட்டில் இருந்து வெளியேறினர். இருவரும் கடலூரில் இருந்து சென்னைக்கு பஸ்சில் ஏறி சென்றனர்.
அந்த பஸ்சில் திருவள்ளூர் அடுத்த மேலானூரை சேர்ந்த ராஜா என்பவர் பயணம் செய்தார். அப்போது சிறுமிகள் பேசிக் கொண்டிருப்பதை ராஜா கவனித்தார். சிறுமிகள் வீட்டில் கோபித்துக் கொண்டு வெளியேறியதை அறிந்து கொண்ட ராஜா அவர்களிடம் பேச்சு கொடுத்தார்.
தனக்கு கம்பெனிகளில் வேலை செய்யும் நண்பர்கள் நிறைய பேரை தெரியும். அவர்களிடம் சொல்லி உங்களுக்கு வேலை வாங்கி தருகிறேன் என்று கூறினார். அவரது பேச்சை சிறுமிகள் நம்பினர். இதையடுத்து சிறுமிகளை பஸ்சில் இருந்து இறக்கி தனது வீட்டுக்கு அழைத்து சென்றார்.
அப்போது ராஜா தனது நண்பர்களிடம் வேலை தொடர்பாக பேசினார். அவரது பேச்சில் சந்தேகம் அடைந்த சிறுமிகள் இருவரும் தாங்கள் ஊருக்கே செல்வதாக கூறினர். தங்களை திருவள்ளூர் பஸ் நிலையத்தில் கொண்டு சென்று விடும்படி ராஜாவிடம் கூறினார்கள்.
இதையடுத்து இளம்பெண் ஒருவரை முதலில் பஸ்நிலையத்துக்கு அழைத்து சென்றுவிட்டுள்ளார். பின்னர் மற்றொரு பெண்ணை பஸ்நிலையத்துக்கு அழைத்து சென்றார்.
அப்போது வெயில் அதிகமாக இருப்பதாக கூறி ஈக்காடு கண்டிகை அருகே உள்ள சவுக்கு தோப்பில் சிறிது ஓய்வு எடுக்கலாம் என்று அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து அந்த பெண்ணை ராஜா பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
இதனால் பதறிய அந்த பெண் அழுது கொண்டே சவுக்கு தோப்பில் இருந்து வெளியே ஓடிவந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ராஜாவை மடக்கி பிடித்தனர்.
அந்த பெண்ணிடம் விசாரித்த போது பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக தெரிவித்தார்.
இதையடுத்து ராஜாவை புல்லரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து ராஜாவை கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இளம்பெண்கள் இருவரையும் போலீசார் மீட்டனர். அவர்களது பெற்றோரை வரவழைத்து ஒப்படைத்தனர்.
நாகர்கோவில் கோட்டார் பூங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ்போஸ். இவரது மகள் சோனியா சுபாஷ்(வயது20). இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்து கல்லூரிக்குச் செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு சென்றார். ஆனால் கல்லூரி முடிந்து நீண்ட நேரமாகியும் அவர் வீடுதிரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை தேடி கல்லூரிக்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை. இதையடுத்து மாணவியை உறவினர்கள் வீடு, தோழிகள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். எங்கும் அவர் இல்லை.
இதையடுத்து கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாசம் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றார்.
களியக்காவிளை பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள் நிஷா(23). இவர் பி.ஏ. முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். பின்னர் வீடு திரும்பிய போது வீட்டில் இருந்த நிஷா மாயமாகி இருந்தார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை அக்கம் பக்கத்தில் விசாரித்தனர்.
மேலும் உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடி பார்த்தனர். எங்கும் அவர் இல்லாததால் இது குறித்து களியக்காவிளை போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சொர்ணலதா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.