என் மலர்

    நீங்கள் தேடியது "young girl"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுதா வீட்டில் பீடி சுற்றும் தொழில் செய்து வந்தார்.
    • பல்வேறு இடங்களில் தேடியும் சுதா பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    களக்காடு:

    மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள சுருளையை சேர்ந்தவர் வேலாயுதம் மகள் சுதா (வயது 21). பிளஸ்-2 படித்துள்ள சுதா வீட்டில் பீடி சுற்றும் தொழில் செய்து வந்தார்.

    கடந்த 12-ந் தேதி வீட்டில் இருந்த சுதா திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் சுதா பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது தந்தை வேலாயுதம் மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான சுதாவை தேடி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஷாலினி பண்ருட்டியில் உள்ள தாத்தா வீட்டில் வசித்து வந்தார்.
    • அக்கம், பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.

    கடலுார்: 

    பண்ருட்டி- கடலுார் சாலையை சேர்ந்தவர் முருகவேல். இவர் கோயம்புத்தூரில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் ஷாலினி (வயது 19). கோயம்புத்தூரில் பி.எஸ்.சி. ரேடியோலஜி படித்து வருகிறார். இந்நிலையில் ஷாலினி கடந்த ஒரு மாதமாக பண்ருட்டி யில் உள்ள தாத்தா வீட்டில் வசித்து வந்தார். இரவு சாப்பிட்டுவிட்டு ஷாலினி தூங்க சென்றார். இன்று காலை எழுந்து பார்த்த போது ஷாலினியை காணவில்லை. அக்கம், பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து பண்ருட்டி போலீசில் ஷாலினியின் தாய் விஜயா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து ஷாலினியை தேடி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த 10-ந்தேதி காலை மணிமாறன் தனது மனைவி அனிதாவை அழைத்துக் கொண்டு சங்கரன்கோவில் ஆஸ்பத்திரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது அமுதாபுரம் விலக்கு பகுதியில் சென்றபோது அனிதாவுக்கு திடீரென தலை சுற்றல் ஏற்பட்டு மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

    நெல்லை:

    ஆலங்குளத்தை அடுத்த கீழே வீராணம் மேட்டுப் பட்டி தெருவை சேர்ந்தவர் மணிமாறன். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அனிதா (வயது 24) என்ற பெண்ணு டன் திருமணம் ஆனது.

    கடந்த 10-ந்தேதி காலை மணிமாறன் தனது மனைவி அனிதாவை அழைத்துக் கொண்டு சங்கரன்கோவில் ஆஸ்பத்திரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஆலங்குளம்-சங்கரன்கோவில் சாலையில் அமுதாபுரம் விலக்கு பகுதி யில் சென்றபோது அனிதா வுக்கு திடீரென தலை சுற்றல் ஏற்பட்டு மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனடியாக அந்த வழி யாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு அனிதா பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது தொடர்பாக ஊத்து மலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி ஒரு வருடத்திலேயே விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக சேத்தியாத்தோப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • காக்கா வலிப்பு நோய் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த குமாரகுடி வெள்ளாற்றங்கரையில் 30 வயது மதிக்கத்தக்க பெண் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக சேத்தியாத்தோப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், பாப்பாக்குடி கிராமத்தைச் சேர்ந்த ரத்தினசாமி மகள் சூர்யா (வயது 30) என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இவருக்கு காக்கா வலிப்பு நோய் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சூரியாவின் உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோகதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், சூரியாவின் உடலை அவரது பெற்றோரிடம் ஓப்படைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உணவு குழாயில் ஊக்கு சிக்கி எச்சில் கூட விழுங்க முடி யாமல், தொண்டை மற்றும் நெஞ்சு பகுதியில் அதிக வலி ஏற்பட்டது.
    • அறுவை சிகிச்சையில்லாம லேயே எண்டோஸ்கோபி கருவியை உணவுக்குழாயில் செலுத்தி அங்கு சிக்கி இருந்த ஊக்கை நோயாளிக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் அகற்றப்பட்டது.

    சேலம்:

    தர்மபுரி மாவட்டம் பாப்பி ரெட்டிபட்டியை சேர்ந்தவர் கலா (வயது 32). இவர் தனது பல்லை சுத்தம் செய்வதற்காக ஊக்கை பயன்படுத்தியுள்ளார். அப்போது ஊக்கை தவறுதலாக விழுங்கி விட்டார். உணவு குழாயில் ஊக்கு சிக்கி எச்சில் கூட விழுங்க முடி யாமல், தொண்டை மற்றும் நெஞ்சு பகுதியில் அதிக வலி ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது பற்றி உறவினர்களிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து கலா சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனும திக்கப்பட்டார். அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்ததில் நெஞ்சு பகுதி உணவு குழாயின் மேல் பகு தியில் அந்த ஊக்கு சிக்கி யிருப்பது கண்டறியப்பட்டது.

    டாக்டர்கள் உடனடியாக அவருக்கு எண்டோஸ்கோபி சிகிச்சைக்காக மயக்க மருந்து கொடுத்து ஊக்கை அகற்றுவதற்கு ஏற்பாடு செய்தனர். இதையடுத்து அறுவை சிகிச்சையில்லாம லேயே எண்டோஸ்கோபி கருவியை உணவுக்குழாயில் செலுத்தி அங்கு சிக்கி இருந்த ஊக்கை நோயாளிக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் அகற்றப்பட்டது. இதனால் கலா மகிழ்ச்சி அடைந்தார்.

    இந்த சிக்கலான எண் டோஸ்கோபி சிகிச்சையை மருத்துவமனையில் நோயா ளியை அனுமதித்த 3 மணி நேரத்திற்குள்ளாகவே குடல் அறுவை சிகிச்சை துறைத்தலை வர் டாக்டர். சிவசங்கர், டாக்டர். கார்த்திகேயன், டாக்டர். சிவசுப்ர மணியம் ஆகியோர் கொண்ட குழுவினர் வெற்றிகரமாக செய்தனர். இந்த குழுவினரை மருத்துவமனை டீன் டாக்டர். மணி மற்றும் கண்காணிப்பாளர் டாக்டர். தனபால் ஆகியோர் பாராட்டினர்.

    மேலும் அவரும், அவரது குடும்பத்தி னரும் டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காலை சேகரும், இவரது மனைவி திலகம் வேலைக்கு சென்றுவிட்டனர்.
    • சேகர் மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ந்து வளவனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வளவனூர் குடுமியான்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சேகர். தொழிலாளி இவருக்கு திருமணமாகி ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இவரது முதல் மகள் ஜெயலட்சுமி (வயது 22) பி.எஸ்.சி பட்டதாரி. நேற்று காலை சேகரும், இவரது மனைவி திலகம் வேலைக்கு சென்றுவிட்டனர். 

    வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜெயலட்சுமி வீட்டில் உள்ள மின்விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் மாலை வீட்டிற்கு வந்த சேகர் மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ந்து வளவனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தூக்கில் பிணமாக தொங்கிய ஜெயலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குபதிவு செய்து ஜெயலட்சுமியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கார்த்திக்கின் டி.பி.யில் இருந்த அவரது மனைவி மற்றும் தங்கையின் புகைப்படங்களை ஆபாச புகைப்படங்களாக சித்தரித்துள்ளார்.
    • உங்களது செல்போன்களில் உங்கள் குழந்தைகளின் புகைப்படமோ அல்லது மனைவி மற்றும் உறவுக்கார பெண்களின் புகைப்படமும் இருந்தால் இப்போதே எச்சரிக்கையாகி விடுங்கள்.

    சென்னை:

    ஆண்ட்ராய்டு செல்போன்களின் ஆதிக்கம் அதிகமான பிறகு சைபர் கிரைம் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் நாம் செல்போனில் வாட்ஸ் அப் டிபியாக வைக்கும் நமது குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் புகைப்படங்களை திருடி அதனை ஆபாசமாக சித்தரித்த வக்கிர வாலிபர் சிக்கி உள்ளார்.

    இவர் இதுவரை 926 பேரை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் சுருட்டி இருப்பது தெரியவந்தது. சேலம் சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக அவரை கைது செய்து உள்ளனர்.

    இதற்காக போலீசார் தங்கள் பாணியில் செயல்பட்டு முதலில் அவரது வங்கி கணக்கில் இருந்த சுமார் 3 லட்சம் ரூபாயை முடக்கி அவரை நேரில் வர வழைத்து பிடித்திருக்கிறார்கள்.

    இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவர் கார்த்திக் இவரது செல்போனுக்கு அறிமுகம் இல்லாத நபர் ஒருவரின் செல்போனில் இருந்து ஹாய் என்று மெசேஜ் வந்துள்ளது.

    இதை பார்த்ததும் நீங்கள் யார் என்று கார்த்திக் கேட்டுள்ளார். தற்போது எதிர்மறையில் இருந்த நபர் யு.பி.ஐ.டி. ஒன்றை அனுப்பி பணம் அனுப்புமாறு மிரட்டி உள்ளார். ஆனால் கார்த்திக் பணம் தர முடியாது என்று கூறியதால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் கார்த்திக்கின் டி.பி.யில் இருந்த அவரது மனைவி மற்றும் தங்கையின் புகைப்படங்களை ஆபாச புகைப்படங்களாக சித்தரித்துள்ளார்.

    இதன் பிறகு கார்த்திக்கின் செல்போன் என்னுடன் அந்த ஆபாச புகைப்படங்களை முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்து பலர் கார்த்திக்கின் செல்போன் எண்ணுக்கு போன் செய்து மனைவி மற்றும் தங்கையை தவறான உறவுக்கு அழைத்திருக்கிறார்கள்.

    இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான கார்த்திக் இது பற்றி சேலம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதோடு கார்த்திக் தனது மனைவியையும் தங்கையையும் ஆபாசமாக சித்தரித்த நபரை தொடர்பு கொண்டு உங்களது வங்கிக் கணக்கை அனுப்புங்கள். நான் பணம் அனுப்புகிறேன் என்றும் கூறியிருக்கிறார். வங்கி கணக்குத் தெரிந்தால் உடனடியாக அவர் யார் என்பதை கண்டு பிடித்து விடலாம் என்கிற எண்ணத்தில் கார்த்திக் செயல்பட்டு உள்ளார்.

    இதை அறியாத மர்ம நபர் தனது வங்கி கணக்கை கார்த்திக்கின் செல்போனிற்கு அனுப்பி இருக்கிறார். இதை வைத்து தான் சேலம் சைபர் கிரைம் போலீசார் ஆபாசமாக சித்தரித்த நபரை கண்டுபிடித்தனர்.

    அவரது பெயர் சரத்கு மார் என்பதும் தூத்துக்குடியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. அவரது வங்கி கணக்கில் இருந்த மூன்று லட்சம் ரூபாய் பணத்தை உடனடியாக முடக்கினர் சைபர் கிரைம் போலீசார் இதனால் அவர் அலறி அடித்துக் கொண்டு தூத்துக்குடியில் இருந்து சேலத்துக்கு ஓடினார். அப்போது தான் போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    சரத்குமாரிடம் நடத்திய விசாரணையில் அவர் இது போன்று 900க்கும் அதிகமான பெண்களின் புகைப்ப டங்களை வாட்ஸ் அப் டி.பி.யில் இருந்து திருடி ஏமாற்றி இருப்பது தெரிய வந்தது.

    சரத்குமாரை கைது செய்து சிறையில் அடைத்து உள்ள போலீசார் வாட்ஸ் அப் டி.பி.யில் இருக்கும் புகைப்படங்களை யாரும் திருட முடியாத வகையில் எப்படி செயல்படுவது என்பதையும் விளக்கி இருக்கிறார்கள்.

    வாட்ஸ் அப் மற்றும் முக நூல் பக்கங்களில் பிரைவசி என்ற பகுதி இருக்கும் அதன் உள்ளே நுழைந்தால் உங்கள் வாட்ஸ் அப் டி.பி. யில் உள்ள புகைப்படங்களை யார் யார் பார்க்க வேண்டும், யார் யார் பார்க்க கூடாது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.

    இனி செல்போன் டிபியில் தங்களது குடும்பத்தினரின் புகைப்படங்களை வைக்கும் அனைவரும் இதனை பின்பற்றி சரத்குமார் போன்ற நபர்களின் பிடியில் இருந்து தங்களது குடும்பத்தினரை பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    உங்களது செல்போன்களில் உங்கள் குழந்தைகளின் புகைப்படமோ அல்லது மனைவி மற்றும் உறவுக்கார பெண்களின் புகைப்படமும் இருந்தால் இப்போதே எச்சரிக்கையாகி விடுங்கள். இல்லை என்றால் நீங்களும் சேலம் கார்த்திக் போல நிச்சயம் பாதிப்புக்குள்ளாகலாம் உஷார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சம்பவத்தன்று வீட்டில் திடீரென பவித்ரா வாந்தி எடுத்துள்ளார்.
    • சிகிச்சை பலனின்றி பவித்ரா பரிதாபமாக இறந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி. இவருக்கு ஒரு மகனும், பவித்ரா (26) என்ற மகளும் உள்ளனர்.

    பவித்ராவுக்கு வீட்டில் திருமணத்திற்காக வரம் பார்த்து வந்துள்ளனர். ஆனால் தற்போது தனக்கு திருமணம் வேண்டாம் என்று பவித்ரா கூறி வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் திடீரென பவித்ரா வாந்தி எடுத்துள்ளார். இது குறித்த அவர் பெற்றோர் கேட்கும் போது தான் பூச்சிகொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டதாக பவித்ரா கூறியுள்ளார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மகளை மீட்டு சிகிச்சைக்காக கோபியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவில் உள்ள தனியார் மருத்துவ மனையில் பவித்ரா அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவரது நிலைமை மோசம் அடைந்ததால் கோவை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார்.

    எனினும் சிகிச்சை பலனின்றி பவித்ரா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • சம்பவம் பெண்ணின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை கோப்பகரையை அடுத்த கக்கன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் பூங்காவனம் (வயது44). இவரது மகள் முத்துலட்சுமி (23). இவருக்கும், கக்கதாசம் பகுதியைச் சேர்ந்த மணி என்பவருக்கும் கடந்த 3½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    இந்நிலையில் அடிக்கடி கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 8-ந் தேதி முத்துலட்சுமி திடீரென்று தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் தீ அவரது உடல் முழுவதும் பரவியதால், வலியால் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் ஓடிவந்து தீயை அணைத்து முத்துலட்சுமியை மீட்டனர். உடனே அவரை சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து முத்துலட்சுமியின் தந்தை பூங்காவனம் தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில புகார் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முத்துலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமாகி 3½ வருடங்கள் ஆனநிலையில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை கொண்ட சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. முரளி, பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பெண்ணின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காரில் இருந்து இறங்கிய 2 பெண்கள் உள்பட 4 பேர் பஸ்சுக்குள் சென்றனர்.
    • வாகன சோதனையின்போது காரில் இளம்பெண் கடத்தி கொண்டுவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது

    களக்காடு:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியை சேர்ந்த ஒரு 20 வயது இளம்பெண் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கன்னியாகுமரி பஸ்சில் ஏறி சென்று கொண்டிருந்தார்.

    காரில் ஏற்றி

    நாங்குநேரி அருகே அரசு பஸ் சென்றபோது, அதன் குறுக்காக ஒரு கார் நிறுத்தப்பட்டு, அதில் இருந்து இறங்கிய 2 பெண்கள் உள்பட 4 பேர் பஸ்சுக்குள் சென்றனர்.

    அவர்கள் வழுக்கட்டாயமாக கயத்தாறு இளம்பெண்ணை பிடித்து இழுத்து காரில் ஏற்றி கடத்தி சென்றனர். இதுதொடர்பாக அப்பகுதியில் நின்றவர்கள் நாங்குநேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் விரைந்து சென்றனர். கார் குறித்து நெல்லை மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே, வாகன சோதனை நடத்தப்பட்டது.

    கடத்தியது ஏன்?

    கங்கைகொண்டான் சோதனை சாவடி அருகே நடந்த சோதனையின்போது காரில் இளம்பெண் கடத்தி கொண்டுவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அந்த காரை நிறுத்தி, அதில் இருந்தவர்களை நாங்குநேரி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் இளம்பெண்ணை கடத்தியது ஏன்? என்பது குறித்து விசாரித்தபோது, கயத்தாறு பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவருடன் திருமணம் ஆகி ஒரு குழந்தை இருப்பதும், கணவர் இறந்து விட்ட நிலையில் திடீரென உடல் நலக்குறைவுக்குள்ளான குழந்தையை திருவனந்தபுரம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்ததும் தெரியவந்தது.

    4 பேரிடம் விசாரணை

    அப்போது அங்கிருந்த வாலிபருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டதும், அவரை பார்க்கவே தற்போது இளம்பெண் பஸ்சில் குமரிக்கு சென்றதும் விசா ரணையில் தெரிய வந்தது.

    அந்த வாலிபரை பார்க்க கூடாது என்பதற்காகவே, அந்த இளம்பெண்ணை அவரது உறவினர்கள் இழுத்து சென்றுள்ளனர் என்பதை போலீசார் அறிந்த னர். இதுகுறித்து போலீசார் இளம் பெண்ணின் உறவி னர்கள் 4 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print