search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாயமான இளம்பெண் காதலருடன் மீட்பு: மணக்கோலத்தில் போலீஸ் நிலையத்தில் தஞ்சம்- பெற்றோர் அதிர்ச்சி
    X

    மாயமான இளம்பெண் காதலருடன் மீட்பு: மணக்கோலத்தில் போலீஸ் நிலையத்தில் தஞ்சம்- பெற்றோர் அதிர்ச்சி

    • காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டைவிட்டு வெளியேறினார்.
    • 2 பேரும் மேஜர் என்பதால் சேர்ந்து வாழ எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என இரு வீட்டாரிடமும் எழுதி வாங்கிக்கொண்டனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை அருகே உள்ள தென்னம்பட்டியை சேர்ந்தவர் பிரியா (வயது 23). கணிதவியல் பட்டதாரி. இவரை கடந்த 16ஆம் தேதி முதல் காணவில்லை என்று அவரது தந்தை வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து பிரியா எங்கு சென்றார் என்பது குறித்து வடமதுரை போலீசார் விசாரணை செய்து வந்தனர்.

    இந்நிலையில் பிரியா வேடசந்தூர் ஆத்துமேட்டில் பூக்கடை வைத்திருக்கும் பி.ஏ. தமிழ் பட்டதாரியான மனோபாலாஜி (வயது 23) என்பவரை கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டைவிட்டு வெளியேறினார். பின்னர் தனது காதலனை மணப்பாறை அருகில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.

    பின்னர் தங்கள் வீட்டிற்கு சென்றால் எப்படியும் பிரச்சினை செய்து பிரித்து விடுவார்கள் என நினைத்து மணக்கோலத்தில் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். வடமதுரை போலீசார் இருதரப்பு பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 2 பேரும் மேஜர் என்பதால் அவர்கள் சேர்ந்து வாழ எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என இரு வீட்டாரிடமும் எழுதி வாங்கிக்கொண்டனர்.

    பிரியாவின் குடும்பத்தினர் தங்களுடன் வருமாறு அழைத்தபோதும் தான் கணவருடன் தான் செல்வேன் என அவர் உறுதியாக கூறினார். இதனையடுத்து காதல் ஜோடிகளை போலீசார் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×