தூத்துக்குடியில் இளம் பெண் மாயம்

சித்ரா தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். திருமணத்தில் சித்ராவுக்கு விருப்பம் இல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
தூத்துக்குடியில் இளம் பெண் மாயம்
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி தாளமுத்து நகர் ஜோதிபாசு நகரை சேர்ந்தவர் சந்தோஷ், பஞ்சவர்ணம். இவர்களது மகள் சித்ரா(வயது27). தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் முடிப்பதற்காக மாப்பிள்ளை பார்ப்பது உள்ளிட்ட முன்னேற்பாடு வேலைகளை பெற்றோர்கள் பார்த்து வந்ததை அறிந்த சித்ரா, ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.

திருமணத்திற்கு விருப்பம் இல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெற்றோர் வேலைக்கு சென்ற பின் கடந்த 1-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சித்ரா எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று தெரியவில்லை.இதனை யடுத்து உறவினர்கள் வீடுகள் உட்பட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் சித்ராவின் அம்மா பஞ்சவர்ணம் தாளமுத்து நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்கு பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com