என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "missing girls"

    • காவல்துறை தரவுகளின்படி, 2026 ஜனவரி மாதத்தில் 1,777 பேர் காணாமல் போனதாகப் பதிவாகியுள்ளது.
    • இதுபோன்ற பல வழக்குகள் விரைவாகக் கண்டுபிடிக்கப்படுகின்றன.

    தேசிய தலைநகர் டெல்லியில் கடந்த ஜனவரி மட்டும் 807 பேர் மாயமானதாக தகவல்கள் வெளியாகின. இது பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த தகவல்கள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவை என்றும், பணத்திற்காக விளம்பரப்படுத்தப்பட்டவை என்றும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

    பண ஆதாயத்திற்காக இது போன்ற தகவல்களை பரப்பி, பீதியை ஏற்படுத்துவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    "சில தடயங்களைப் பின்தொடர்ந்து விசாரணை நடத்தியதில், டெல்லியில் சிறுமிகள் மாயமாவது அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள், பணம் செலுத்திய விளம்பரங்கள் (Paid promotions) மூலம் திட்டமிட்டு பரப்பப்படுவதைக் கண்டறிந்துள்ளோம். பண ஆதாயத்திற்காக இது போன்ற பீதியை உருவாக்குவது சகித்துக்கொள்ளப்படாது; அத்தகைய நபர்கள் மீது நாங்கள் கடும் நடவடிக்கை எடுப்போம்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காவல்துறை தரவுகளின்படி, 2026 ஜனவரி மாதத்தில் 1,777 பேர் காணாமல் போனதாகப் பதிவாகியுள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டுகளின் மாதாந்திர சராசரியை விடக் குறைவான எண்ணிக்கையாகும். ஒப்பிட்டு அளவில், டெல்லியில் 2024-ல் 24,893 பேரும், 2025-ல் 24,508 பேரும் காணாமல் போயுள்ளனர் என்று காவல்துறை தரவுகள் தெரிவிக்கின்றன. இது நகரின் சராசரி மாதாந்திர எண்ணிக்கையான 2,000-ஐ விடக் குறைவு என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

    ஜனவரியில் மாயமானவர்களில் 509 பேர் பெண்கள் மற்றும் சிறுமிகள் என தகவல்கள் வெளியான நிலையில் இந்த செய்தி காட்டூத்தீயாக பரவியது. இதனைத்தொடர்ந்து காவல்துறையின் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது. மேலும் தலைநகரில் காணாமல் போனவர்கள் குறித்த புகார்களைப் பதிவு செய்ய ஆன்லைன் ஆப் அடிப்படையிலான நடைமுறையை பின்பற்றப்படுவதாகவும், அதில் தற்காலிகமாக காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகளும் அடங்கும் என்றும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

    அதாவது பள்ளி முடிந்து குழந்தைகள் வீடு திரும்பத் தாமதமாகும் போதோ அல்லது நபர்களைத் தொலைபேசி வாயிலாகத் தற்காலிகமாகத் தொடர்பு கொள்ள முடியாத சூழலிலோ, ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே குடிமக்கள் பெரும்பாலும் இது போன்ற புகார்களைப் பதிவு செய்கிறார்கள் என்று காவல்துறை கூறியுள்ளது. 

    மேலும் "இதுபோன்ற பல வழக்குகள் விரைவாகக் கண்டுபிடிக்கப்படுகின்றன. இருப்பினும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் அல்லது நபர்கள் கண்டுபிடிக்கப்பட்ட தகவலைத் தெரிவிப்பதில்லை என்பதால், அவை இன்னும் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களிலேயே நீடிக்கின்றன, என்றும் தெரிவித்துள்ளனர். 

    மேலும் உலக நாடுகளோடு, அதாவது அமெரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம் போன்றவற்றோடு ஒப்பிடுகையில் காணாமல் போகிறவர்களின் எண்ணிக்கை டெல்லியில் குறைவே என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.  

    • தோழிகளான இவர்கள் இருவரும் கடந்த 23-ந் தேதி வங்கிக்கு செல்வதாக கூறிசென்றனர்.பின்னர் அவர்கள் வீடு திரும்பவில்லை
    • கார்த்திகாவின் பெற்றோர் இன்று நெல்லை டி.ஐ.ஜி.அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர்.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பண்டாரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அச்சுதன். இவரது மனைவி லதா.

    இவர்களது மகள் கார்த்திகா (வயது 19).இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். சாத்தான்குளம் அருகே உள்ள கொழுந்தட்டு கிராமத்தை சேர்ந்தவர் எப்சிபா செல்வகுமாரி (வயது 21). இவரும் அதே கல்லூரியில் படித்து வருகிறார். தோழிகளான இவர்கள் இருவரும் கடந்த 23-ந் தேதி வங்கிக்கு செல்வதாக கூறிசென்றனர்.பின்னர் அவர்கள் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவர்கள் கிடைக்கவில்லை.

    டி.ஐ.ஜி. அலுவலகத்தில் புகார்

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகளின் பெற்றோர் சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தனர்.

    இந்நிலையில் மாணவி கார்த்திகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று நெல்லை டி.ஐ.ஜி.அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர்.

    அதில், சாத்தான்குளம் போலீசில் மாணவிகள் மாயம் குறித்து புகார் செய்யப்பட்டது. ஆனால் அவர்கள் சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாணவிகளை உடனடியாக மீட்டுதர வேண்டும் என கூறியிருந்தனர்.

    தொடர்ந்து மாணவியின் சகோதரர் நிருபர்களிடம் கூறுகையில், கல்லூரியில் தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது. சம்பவத்தன்று மாணவிகள் இருவரும் மாயமாகி உள்ளனர். இதுதொடர்பாக சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தோம். ஆனால் மாயமாகி ஒருவாரம் ஆன நிலையிலும் போலீசார் சரிவர விசாரிக்காமலும் காலதாமதம் செய்கின்றனர். மாயமான மாணவிகளை உடனடியாக மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது பொதுத் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றுள்ளார்
    • போலீசார் தொடர்ந்து மாணவியை தேடி வருகின்றனர்.காணாமல் போன போது, பச்சை நிற சுடிதார், பேன்ட் அணிந்திருந்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் அடுத்த அவிநாசி, பச்சம்பாளையம், காந்திநகர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி இருந்தார். இந்த நிலையில் நேற்று தேர்வு முடிவுகள் வந்தது. அதில் அந்த மாணவி தேர்ச்சியும் பெற்றார்.

    இந்நிலையில் வீட்டிலிருந்த சிறுமி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தனர். ஆனால் சிறுமியை எங்கும் காணவில்லை. பின்னர் இது குறித்து அவிநாசி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது பொதுத் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றுள்ளார் .இதனை பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது.

    இதனால் தான் மாணவி வீட்டை விட்டு வெளியேறி சென்று இருப்பது தெரியவந்தது .போலீசார் தொடர்ந்து மாணவியை தேடி வருகின்றனர்.காணாமல் போன போது, பச்சை நிற சுடிதார், பேன்ட் அணிந்திருந்தார். அவரை கண்டவர்கள் 94981 01328 என்ற செல்போன் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    ×