search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth congress"

    • இளமையும், சுறுசுறுப்பும் கொண்டவர் உதயநிதி.
    • பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை எளிதில் எதிர்கொள்ளும் அளவுக்கு உதயநிதியின் பேச்சு அமைந்து உள்ளதாக தெரிவித்தார்.

    தி.மு.க. இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலத்தில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது.

    இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சி பொறுப்புக்கு வந்த பிறகு நடத்திய மாநாடு என்பதால் இந்த மாநாடு கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    சுமார் 5 லட்சம் பேர் திரண்ட இந்த மாநாடு அமைச்சர் உதயநிதியின் திறமையை வெளிப்படுத்தும் மாநாடாக அமைந்தது. இந்த மாநாட்டுக்கு பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது வதந்தி என்று மாநாட்டுக்கு முன்பே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெளிவுப்படுத்தி இருந்தார்.

    ஆனாலும் இளைஞரணி மாநாட்டில் பங்கேற்றவர்கள் அனைவரும் அமைச்சர் உதயநிதியின் பேச்சையும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சையும் கூர்ந்து கவனித்தனர். மாநாட்டின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த தலைவர்களது கட்அவுட்டுகளில் பெரியார், அண்ணா, கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரிசையில் உதயநிதி ஸ்டாலின் படமும் இடம்பெற்றிருந்தது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்ற இளைஞரணியினர் மட்டுமின்றி கட்சியின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த படியாக அடுத்த தலைவராக உதயநிதியை புகழ்ந்தனர். இளமையும், சுறுசுறுப்பும் கொண்டவர் உதயநிதி ஸ்டாலின், இந்துத்துவா அரசியலை எதிர்கொள்ள துணிவுமிக்க தலைவராக உதயநிதி ஸ்டாலின் செயல்படுகிறார். இப்படிப்பட்ட தலைவர்தான் தேவை என்று புகழ்ந்தனர். சேலம் மாவட்ட இளைஞரணி உறுப்பினர் ஆர்.செல்வராஜ் கூறுகையில், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி விரைவில் கிடைக்கும் என்று நம்புவதாக தனது ஆசையை வெளிப்படுத்தினார்.

    இதேபோல் பெரும்பாக்கத்தை சேர்ந்த டி.ஆர்.முருகேசன் என்பவரும் உதயநிதியின் அரசியல் திறமையை வெளிப்படுத்தி புகழ்ந்தார். பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை எளிதில் எதிர்கொள்ளும் அளவுக்கு உதயநிதியின் பேச்சு அமைந்து உள்ளதாக தெரிவித்தார்.

    தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி பேசுகையில், அரசியலில் மறைந்த தலைவர் கலைஞர் காட்டிய வழியில் நடந்தோம். அதனை தொடர்ந்து தளபதி மு.க. ஸ்டாலினை ஏற்றுக் கொண் டோம். இப்போது உதய நிதியை துணை முதல்வராக்க விரும்புகிறோம்.

    உதயநிதியின் வருகையால் தி.மு.க. இளைஞரணி புத்துணர்ச்சி பெற்றுள்ளது என்றும் கருத்து தெரிவித்தார்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது உதயநிதி பிரசாரம் செய்ததை விட இப்போது அவரது பிரசாரம் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்றும் அவரது உழைப்புக்கு கண்டிப்பாக அங்கீகாரம் கிடைக்கும் என்றும் நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர்.

    மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த மாநாடு தி.மு.க.வுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது. அவ்வளவு சிறப்பாக மாநாட்டை நடத்தி காட்டியிருக்கிறீர்கள். உங்கள் உழைப்புக்கு உரிய பலன் வந்து சேரும் என்று பெருமையுடன் கூறினார்.

    மாநாட்டில் அமைச்சர் உதயநிதியை போல் அவரது மகனான இன்பநிதியும் வெள்ளை நிற டிசர்ட் அணிந்து பங்கேற்றிருந்தார். அவரது வருகையும் மாநாட்டில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது.

    • பாளை லூர்து நாதன் சிலை அருகில் மத்திய அரசை கண்டித்து தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.பி. ராமசுப்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக மத்திய அரசை கண்டித்து தெருமுனை பிரசார கூட்டம் பாளை லூர்து நாதன் சிலை அருகில் நடைபெற்றது.

    மாநகர் மாவட்ட இளை ஞர் காங்கிரஸ் தலைவர் ரில்வான் தலைமை தாங்கி னார். இளைஞர் காங்கிரஸ் மானூர் வட்டார தலைவர் சாம் வில்லியம்ஸ், பாளை சட்டமன்ற துணை தலைவர் ராஜகுரு, நெல்லை மாநகர் மாவட்ட துணைத் தலைவர் ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில ஜவகர் பால் மன்ச் ஒருங்கிணைப்பாளர் வடிவேல் குமரன் வர வேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.பி. ராமசுப்பு, முன்னாள் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் யோபு, நெல்லை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் மரிய குழந்தை ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக காங்கிரஸ் மூத்த வழக்கறிஞர் ராம்குமார், நெ ல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலை வர்கள் அருள்ராஜ், அழகை மாரி யப்பன், சிவன் பெருமாள், நெல்லை மாநகர சக்தி சூப்பர் சீ ஒருங்கிணைப்பாளர் அனீஸ் பாத்திமா, நெல்லை புறநகர் மாவட்ட ஜவகர் பால் மஞ்ச் தலைமை ஒருங்கி ணைப்பாளர் சுரேஷ், நெல்லை மாநகர் மாவட்ட ஜவகர் பால் மஞ்ச் தலைமை ஒருங்கிணைப்பாளர் சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மேலும் நெல்லை சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் பொதுச் செய லாளர் ராஜாமெர்சி, நெல்லை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் வாசிக் அலி, நெல்லை சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் லாரன்ஸ் கிறிஸ்டோபர், நெல்லை சட்டமன்ற இளை ஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பெரோஸ்கான், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி திருமலை குமார், மோசஸ், காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் பக்தவச்சலம் அறக்கட்டளை அறங்கா வலர் பைபாஸ் மெடிக்கல் சண்முக வேலன், முன்னாள் பாளை மண்டல தலைவர் கார்த்தி, வரகுணன், விவசாய பிரிவு அருமை செல்வன், மருதையா பாண்டியன், ஷேக் செய்யது அலி, சிந்தாமதார், அவுலியா மொய்தீன், அபூ பக்கர் சித்திக் உட்பட கா ங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நெ ல்லை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைமை ஒருங்கிணைப்பாளர் ரியாஸ் நன்றி கூறினார்.

    • இளைஞர் காங்கிரசார் ஊர்வலமாக சென்று அண்ணா சாலையில் இளைஞர் காங்கிரஸ் கொடியேற்றி கொண்டாடினார்கள்.
    • தேசிய செயலாளர் ஜோஸ்வா ஜெராட் முன்னிலை வகித்தார்.

    புதுச்சேரி:

    இந்திய இளைஞர் காங்கிரஸ் 63-வது தொடக்க நாளை முன்னிட்டு புதுவை காங்கிரஸ் அலுவலகத்தில் கொடியேற்றப்பட்டது.

    தொடர்ந்து இளைஞர் காங்கிரசார் ஊர்வலமாக சென்று அண்ணா சாலையில் இளைஞர் காங்கிரஸ் கொடியேற்றி கொண்டாடினார்கள்.

    நிகழ்ச்சிக்கு புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமை வகித்தார். தேசிய செயலாளர் ஜோஸ்வா ஜெராட் முன்னிலை வகித்தார்.

    முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ, மாநில ஒரு ங்கிணைப்பாளர் தேவதாஸ், முன்னாள் துணை சபாநாயகர் பாலன், வக்கீல் பிரிவு தலைவர் மருது பாண்டியன், மாநில பொதுச் செயலா ளர்கள் திருமுருகன், இளைய ராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் பாபு லால், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் செயல் தலைவர் வேல்முருகன், துணைத் தலைவர் ரகுபதி மற்றும் இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் கோவலன் மாநில பொதுச் செய லாளர்கள் பெருமாள், சதீஷ்குமார், குருமூர்த்தி, விக் னேஷ்,சையத், சத்யநாராயணன், பிரியா, சுந்தரம், பிரதீப், சித்திக், மாவட்ட தலைவர் பிரகாஷ், ஐயப்பன் ஊடகப்பிரிவு ஒரு ங்கி ணை ப்பாளர்கள் தமிழரசன், மனோஜ்குமார், கென்னடி, ஜனாஅரவிந்தம், தொகுதி தலைவர்கள், சரண்குமார், சுரேஷ் ராஜ், ராஜேஷ், பிரசன்னா, வீரமணிகண்டன். மாவட்ட நிர்வாகிகள், அன்பரசன், பாலா, மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் திருமுருகன், மதன், நவ்பல், மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ராகுல்காந்தியின் சிறை தண்டனையை சுப்ரீம்கோர்ட்டு நிறுத்தி வைத்துள்ளது.
    • புதுவை மாநில இளைஞர் காங்கிரசார் தலைவர் .ஆனந்தபாபு நடராஜன் தலைமையில் கொக்கு பார்க் அருகில் கொட்டும் மழையில் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்

    புதுச்சேரி:

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல்காந்தியின் சிறை தண்டனையை சுப்ரீம்கோர்ட்டு நிறுத்தி வைத்துள்ளது.

    இதனை நாடு முழுவதும் வரவேற்று காங்கிரசார் கொண்டாடி வருகின்றனர். புதுவை மாநில இளைஞர் காங்கிரசார் தலைவர் .ஆனந்தபாபு நடராஜன் தலைமையில் கொக்கு பார்க் அருகில் கொட்டும் மழையில் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்

    கொண்டாட்டத்தில் காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் வைத்திய நாதன் எம்.எல்.ஏ. மாநில பொதுச்செயலாளர் இளையராஜா, மாநில செயலாளர் செந்தில் குமார், ராஜா, ஜம்புலிங்கம், வெங்கட், முத்துராமன், குருசாமி மன்னநாதன், முகுந்தன்,

    இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் கோவலன், மாநில பொதுச் செயலாளர் சத்ய நாராய ணன், பிரியா ஊடகத்துறை பொறுப்பாளர்கள் தமிழரசன், ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர்கள் கென்னடி, ஜனா அரவிந்தம், மாவட்ட தலைவர் கார்த்தி கேயன், துணை தலைவர் அஷ்ரப் அலி, அன்பரசன்,

    பொது செயலாளர் லோகநாதன், தொகுதி தலைவர் கண்ணன், இளை ஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் வினோத், சண்முகம்,சுனில், கீர்த்தி, மாறன், மதன், ஹரிஷ், சஞ்சய், குணால், ஜீவரத்தினம், அபி மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மாநில துணைத்தலைவர்கள் பொதுச் செயலாளர், மாவட்ட நிர்வாகிகள் தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
    • துவை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் பி. கே. தேவதாஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    புதுச்சேரி:

    ராகுல் காந்திக்கு நாளை திங்கட்கிழமை 53-வது பிறந்தநாள்.

    ராகுலின் பிறந்தநாளை முன்னிட்டு புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பாக ரத்ததான முகாம் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

    புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமை தாங்கினார். முகாமை புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் பி. கே. தேவதாஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    முகாமில் இளைஞர் காங்கிரஸை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்ததானம் வழங்கினர்.முகாமில்

    காங்கிரஸ் வழக்கறிஞர்கள் பிரிவு தலைவர் மருது பாண்டியன், வட்டார தலைவர் ஆறுமுகம், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் செயல் தலைவர் வேல்முருகன், முன்னாள் துணைத் தலைவர் ரகுபதி, இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர்கள் பொதுச் செயலாளர், மாவட்ட நிர்வாகிகள் தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

    • மாநிலத் தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமையில் நடக்கிறது.
    • தேசிய ஒருங்கிணைப்பாளர் சைத்தன்யா ரெட்டி மற்றும் இளைஞர் காங்கிரஸ் மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் 2 நாட்கள் பயிற்சி முகாம் லே ராயல் பார்க் ஓட்டலில் இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமையில் நடக்கிறது.

    பயிற்சி முகாமை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், புதுவை மாநில முன்னாள் முதல அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சியின் எம்பி வைத்தியலிங்கம், எம்எல்ஏ வைத்தியநாதன், பிரதேச, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

    சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய செயலாளர், புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் ஜோஸ்வா, இளைஞர் காங்கிரஸ் பயிற்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சைத்தன்யா ரெட்டி மற்றும் இளைஞர் காங்கிரஸ் மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த்பாபு நடராஜனிடம் கொடுத்தனர்.
    • கார்த்திகேயன், முகிலன், வேல்முருகன், மனோஜ், அன்பரசன், பாலன், அஷ்ரப் அலி, கண்ணன், ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் ராஜீவ் நினைவு ஜோதி காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டது.

    இந்த ஜோதியை மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம், காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் ஆகியோர் புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த்பாபு நடராஜனிடம் கொடுத்தனர்.

    ஜோதியை இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு அண்ணாசாலை, காமராஜர் சாலை வழியாக ராஜீவ் காந்தி சிலைக்கு பாதயாத்திரையாக கொண்டு சென்றார். பின்னர் காங்கிரஸ் தலைவர்களுடன் ராஜீவ் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் வழக்கறிஞர் பிரிவு தலைவர் மருதுபாண்டியன், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் செயல் தலைவர் வேல்முருகன், பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் தியாகராஜன், ராஜ்குமார், மாநில பொதுச் செயலாளர்கள் ரகுமான், தனுசு

    வட்டார காங்கிரஸ் தலைவர்கள் ஆறுமுகம், விநாயகம், வீரமுத்து, மோகன், கிருஷ்ணராஜ் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கோவலன், பெருமாள், குருமூர்த்தி, சையத், சத்யநாராயணன், சுந்தரம், பிரதீப், சித்திக், ராகுல், அய்யப்பன், கார்த்திகேயன், முகிலன், வேல்முருகன், மனோஜ், அன்பரசன், பாலன், அஷ்ரப் அலி, கண்ணன், ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உக்கடம் சப்-இன்ஸ்பெக்டர் ரேணுகா தேவி உக்கடம் போலீசில் புகார் செய்தார்.
    • மத மோதல்களை தூண்டு வகையில் பேசுதல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கோவை:

    சென்னையை சேர்ந்தவர் இடும்பாவனம் கார்த்திக்(வயது 32). இவர் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை செயலாளராக உள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் உக்கடத்தில் பொதுக்கூட்டம் நடந்தது.

    இதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து உக்கடம் சப்-இன்ஸ்பெக்டர் ரேணுகா தேவி உக்கடம் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் மீது உக்கடம் போலீசார் மத மோதல்களை தூண்டும் வகையில் பேசுதல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நள்ளிரவு நடன பார் எனப்படும் நடனமேடையுடன் கூடிய மதுபார்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
    • நடன பார் மூலம்தான் அரசுக்கு வருமானம் என்ற எண்ணத்தில் நாள்தோறும் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபுநடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    நள்ளிரவு நடன பார் எனப்படும் நடனமேடையுடன் கூடிய மதுபார்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

    இந்நிலையில் மண்ணாடிப்பட்டு தொகுதியில் நடந்த அரசு விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவே நடன பார்களை அரசு திறக்கிறது என பேசியுள்ளார்.

    நடன பார் மூலம்தான் அரசுக்கு வருமானம் என்ற எண்ணத்தில் நாள்தோறும் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல், பயந்து மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். புதுவை அரசு பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    ஆயிரக்கணக்கான அரசு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் தரவில்லை. தன் தொகுதி மருத்துவமனை ஊழியர்களுக்கு மட்டும் பணி நிரந்தர ஆணை வழங்கியுள்ளார். இது நியாயம்தானா? அரசின் அனைத்து நிறுவன ஊழியர்களுக்கும் நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • காரில் சென்ற பினராயி விஜயனுக்கு கருப்பு கொடி காட்டி இளைஞர் காங்கிரசார் போராட்டம்.
    • பினராயி விஜயன் பதவி விலக கோரி விமானத்திற்குள் போராட்டம்

    கன்னூர்:

    கேரள மாநிலத்தில் தங்க கடத்தல் வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே உள்ள ஸ்வப்னா சுரேஷ், கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ,இதில் தொடர்பு இருப்பதாக புகார் தெரிவித்தார். இது குறித்து நீதிமன்றத்தில் அளித்த ரகசிய வாக்குமூலத்திலும் தெரிவித்து உள்ளதாக அவர் கூறினார்

    ஸ்வப்னாவின் இந்த குற்றச்சாட்டு காரணமாக பினராய் விஜயன் முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என அம்மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ், பாஜக மற்றும் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் பினராயி விஜயன், தனது சொந்த ஊரான கண்ணூரிலிருந்து நேற்று திருவனந்தபுரத்துத்திற்கு விமானம் மூலம் பயணம் செய்தார். இதற்காக கார் மூலம் அவர் விமான நிலையத்திற்கு சென்ற போது வழி நெடுகிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

    அப்போது திடீரென ஒரு தெருவுக்குள் இருந்து ஓடி வந்த இளைஞர் காங்கிரசார் பினராயி விஜயனுக்கு கருப்புக் கொடி காட்டி கோஷமிட்டனர். உடனடியாக விரைந்து வந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். 

    இதை அடுத்து விமானத்திற்குள் சென்று பினராயி விஜயன் அமர்ந்திருந்த நிலையில், உள்ளே இருந்த இளைஞர் காங்கிரஸ் மாவட்டச் செயலர் நவீன்குமார், தொகுதித் தலைவர் பர்தீன் மஜீத் ஆகியோர் அவரை ராஜினாமா செய்யக் கோரி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அப்போது அங்கு வந்த பினராயி விஜயன் ஆதரவாளர் அவர்களை கீழே தள்ளி விட்டார். இது குறித்து வீடியோ சமூக வளைதளங்களில் வைரலானது. பின்னர் இருவரையும் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

    மேலும் பினராயி விஜயன் விமான நிலையத்திலிருந்து வெளியேறியபோது, அங்கு காத்திருந்த காங்கிரஸ் மற்றும் பாஜக இளைஞரணித் தொண்டர்கள் கருப்புக் கொடிக் காட்டினர். பினராயி விஜயன் செல்லும் இடமெல்லாம் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்துவது கேரளா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    விஜயவேணி எம்எல்ஏ கார் கண்ணாடிகளை உடைத்து கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய காலம் கடத்தி வரும் போலீசாரை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #CongressMLA #CarAttack

    சேதராப்பட்டு:

    விஜயவேணி எம்.எல்.ஏ. கார் டிரைவர் மீது தாக்குதல் நடத்தி கார் கண்ணாடிகளை உடைத்து, எம்.எல்.ஏ.வுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய காலம் கடத்தி வரும் போலீசாரை கண்டித்து கரையாம்புத்தூர் பஸ் நிலையம் அருகில் தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சக்திவேல் மற்றும் தற்போதைய தலைவர் பிரகாஷ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    பொங்கல் பண்டிகையின் போது கோவிலுக்கு சென்ற எம்.எல்.ஏ.வின் காரை திட்டமிட்டு வழிமறித்து எம்.எல்.ஏ. கார் என்று தெரிந்தும் அதை சூறையாடிய நபர்கள் யார் என்று தெரிந்தும் அவர்களை கைது செய்யாமல் போலீசார் காலம் கடத்துவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். எம்.எல்.ஏ.வுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகி உள்ளதால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்தில் தொகுதி பொதுச்செயலாளர்கள் பழனிவேல், சுகுமார், வினோத்,ஸ்ரீராம், ஸ்ரீதர், அப்பு மற்றும் மாநில இளைஞர் காங்கிரஸ் துணைதலைவர்கள் வேல்முருகன், காளிமுத்து, பொதுச்செயலாளர்கள் பரணிதரன், ஜோசப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தொகுதி இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளரும், மாநில செயலாளருமான உதயகுமார் மற்றும் சுப்பிரமணி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

    இறுதியாக மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ் நன்றி கூறினார். #CongressMLA #CarAttack

    ×