search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police custody"

    • கொலைக்கான திட்டத்தை வகுத்துக் கொடுத்தது யார்?
    • கொலையின் பின்னணியில் யார் இருப்பது?

    பெரம்பூரைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை கடந்த 5ம் தேதி இரவு ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில் இதுவரை 11 நபர்களை செம்பியம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்தாண்டு ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலு வாக்கு மூலம் அளித்துள்ளார்.

    இந்த வழக்கில் யார் யார் பின்னணியில் உள்ளனர்? என்பது தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும், கைது செய்யப்பட்ட நபர்களை மீண்டும் காவலில் எடுத்து விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக கொலையாளிகளை காணொலி மூலம் போலீசார் ஆஜர் படுத்தினர்.

    இந்நிலையில் ஆம்ஸ்ட்ராவ் வழக்கு: 11 பேருக்கு 5 நாள் போலீஸ் காவல் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதை தொடர்ந்து 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியிருந்த நிலையில் 5 நாள் காவல் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

    கொலை சம்பவத்தை நேரில் பார்த்த உறவினர்களை அழைத்து கொலையாளிகளை நிற்க வைத்து அடையாள அணிவகுப்பு நடத்தவும், கொலையாளிகளுக்கு நிதி உதவி, சட்ட உதவி அளித்தது, கொலையின் பின்னணியில் யார் இருப்பது? என்பது குறித்து விசாக்க திட்டமிட்டுருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பொன்னை பாலுவுக்கும், கொலைக்கான திட்டத்தை வகுத்துக் கொடுத்தது யார் என்பது தொடர்பாகவும் விசாரிக்க முடிவு எடுத்துள்ளனர்.

    • கொலைக்கு பயன்படுத்திய புனித்தின் கார் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
    • அன்னபூர்ணேஸ்வரி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்தவர் ரேணுகாசாமி. இவர், நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகர் ஆவார். கடந்த 8-ந் தேதி நடிகர் தர்ஷனை பார்க்க அழைத்து செல்வதாக கூறி ரேணுகாசாமியை பெங்களூருவுக்கு காரில் கடத்தி வந்தனர். பின்னர், அவரை பெங்களூரு அன்னபூர்ணேஸ்வரி நகர் அருகே பட்டணகெரேயில் உள்ள ஒரு கார் ஷெட்டில் அடைத்து வைத்து கொடூரமாக தாக்கி கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை அதே பகுதியில் உள்ள பாலத்தின் அருகே வீசி சென்றனர்.

    இந்த கொலை தொடர்பாக நடிகர் தர்ஷன், அவரது தோழியான நடிகை பவித்ரா உள்பட 19 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் அன்னபூர்ணேஸ்வரி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரேணுகாசாமி கொலை வழக்கில் பெங்களூருவை சேர்ந்த நடிகர் தர்ஷனின் ஆதரவாளர்கள் 2 பேர் ரேணுகாசாமியின் உடலை எடுத்து சென்றதும் இதற்காக புனித் என்பவரின் காரை பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து புனித்திடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கொலைக்கு பயன்படுத்திய புனித்தின் கார் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில், புனித் நேற்று கைது செய்யப்பட்டார். அதுபோல், ரேணுகாசாமி கொலை வழக்கில் ஆதாரங்களை அழிக்க முயன்றதாக ஹேமந்த் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.


    இதற்கிடையே இந்த கொலையில் தனது பெயர் வெளியே தெரியாமல் இருக்க நடிகர் தர்ஷன் தனது கூட்டாளிகள் 4 பேருக்கு ரூ.30 லட்சம் பணம் கொடுத்து போலீசில் சரணடைய செய்தார். ஆனால் போலீசாரின் விசாரணையில் அவர்களுக்கு இந்த கொலையில் தொடர்பு இல்லை என்று தெரியவந்தது. மேலும் ரூ. 30 லட்சம் பணத்துக்காக நடிகர் தர்ஷனை காப்பாற்ற இவர்கள் போலீசில் சரணடைந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேர் மீதும் தனியாக வேறு வழக்கு பதிவு செய்தனர்.

    இதற்கிடையே தனது கூட்டாளிகள் 4 பேருக்கு தர்ஷன் கொடுத்த ரூ. 30 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    இந்த நிலையில் நடிகர் தர்ஷனுக்கு ஆதரவாக கர்நாடக மந்திரி ஒருவர் செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அம்மாநில போலீஸ் மந்திரி பரமேஸ்வரா மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    ரசிகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் தர்ஷன் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு போலீசார் எந்த சலுகையும் அளிக்கவில்லை. மற்றவர்களை போலவே தர்ஷனும் போலீஸ் நிலையத்தில் நடத்தப்படுகிறார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு போலீசார் பிரியாணி கொடுத்ததாக கூறுவது தவறு. தர்ஷனை காப்பாற்ற யாரும் முயற்சி மேற்கொள்ளவில்லை. இந்த வழக்கில் வெளிப்படையான விசாரணை நடந்து வருகிறது. எனவே ஆதாரம் இல்லாமல் வெளியாகும் தகவல்கள் பொய்யானது. நடிகர் தர்ஷனுக்கு எந்த ராஜ உபச்சாரமும் நடைபெற வில்லை. திட்டமிட்டே இது பரபரப்ப படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரேணுகாசாமியை சித்ரதுர்காவில் இருந்து கடத்தி வந்து பெங்களூருவில் வைத்து கொலை செய்து உடலை சாக்கடை கால்வாயில் வீசியதும் தெரிந்தது.
    • நடிகர் தர்ஷன், விஜயலட்சுமியை திருமணம் செய்த நிலையில், நடிகை பவித்ரா கவுடாவுடன் நெருக்கமாக இருந்து வருகிறார்.

    பெங்களூரு:

    கன்னட திரை உலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தர்ஷன் (வயது 47). இவர் கன்னடத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'காடீரா' திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்று வசூலை குவித்தது.

    இவரது திரைப்படங்கள் வசூலை குவித்து வரும் நிலையில், இவர் கடந்த சில மாதங்களாக பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். தற்போது கொலை வழக்கு ஒன்றில் நடிகர் தர்ஷன் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

    பெங்களூரு காமாட்சிபாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சாக்கடை கால்வாய் உள்ளது. அதன் அருகே கடந்த 9-ந் தேதி அன்று ஆண் பிணம் ஒன்று உடலில் காயங்களுடன் கிடந்தது. இதுபற்றி அருகில் உள்ள கட்டிடத்தின் காவலாளி காமாட்சிபாளையா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்தவரின் உடலை மீட்டனர்.

    மேலும் இதுபற்றி விசாரணை நடத்தினர். இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சந்தேகத்தின்பேரில் போலீசார் 11 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தன. அதாவது பிணமாக கிடந்தவர் சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி ( 33) என்பதும், அவர் படுகொலை செய்யப்பட்டதும் தெரிந்தது.

    அதாவது கைதானவர்கள் வினய், மைசூருவை சேர்ந்த நாகராஜு, ஆர்.பி.சி. லே-அவுட்டை சேர்ந்த லட்சுமண், கிரிநகரை சேர்ந்த பிரதோஷ், கார்த்திக், கேசவ் மூர்த்தி, ஆர்.ஆர். நகரில் வசித்து வரும் ராமநகர் மாவட்டம் சன்னப்பட்டணாவை சேர்ந்த பவன், தீபக் குமார், மண்டியாவை சேர்ந்த நந்தேஷ், பெங்களூரு புறநகர் மாவட்டம் பன்னரகட்டாவை சேர்ந்த நிகில் நாயக், சித்ரதுர்கா டவுனை சேர்ந்த ராகவேந்திரா ஆகிய 11 பேர் என்பது தெரிந்தது.

    மேலும் அவர்கள் தான் ரேணுகாசாமியை சித்ரதுர்காவில் இருந்து கடத்தி வந்து பெங்களூருவில் வைத்து கொலை செய்து உடலை சாக்கடை கால்வாயில் வீசியதும் தெரிந்தது.

    அவர்கள் 11 பேரையும் நடிகர் தர்ஷன் தான் கூலிப்படையாக ஏவி கொலை சம்பவத்தை அரங்கேற்றியதும் அம்பலமாகி உள்ளது. அதாவது நடிகர் தர்ஷனின் தோழி பவித்ரா கவுடா(36) ஆவார். பவித்ரா கவுடாவும் நடிகை ஆவார். நடிகர் தர்ஷன், விஜயலட்சுமியை திருமணம் செய்த நிலையில், நடிகை பவித்ரா கவுடாவுடன் நெருக்கமாக இருந்து வருகிறார்.

    அதுதொடர்பான விவகாரம் அவ்வப்போது வெடித்து வருகிறது. இந்த நிலையில் கொலையான ரேணுகாசாமி நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகர் ஆவார். அவர், நடிகர் தர்ஷனுடன் நடிகை பவித்ரா கவுடா நெருங்கி பழகுவது தர்ஷனின் பெயருக்கு களங்கம் ஏற்படும் எனவும், தர்ஷன் - அவருடைய மனைவி விஜயலட்சுமி இடையே பிரச்சினை ஏற்பட்டு பிரிவு ஏற்படும் எனவும் நினைத்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் அவர், நடிகை பவித்ரா கவுடாவை பற்றி சரமாரியாக தகாத வார்த்தைகளால் திட்டி அவருடைய வாட்ஸ்-அப் எண்ணுக்கு ஆபாசமாக குறுந்தகவல்களை அனுப்பி வந்துள்ளார்.

    இதுபற்றி நடிகை பவித்ரா கவுடா, நடிகர் தர்ஷனிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த நடிகர் தர்ஷன், சித்ரதுர்கா மாவட்ட தர்ஷன் ரசிகர் மன்ற தலைவர் ராகவேந்திராவை அழைத்து பேசி உள்ளார்.

    அப்போது ரேணுகாசாமியை பெங்களூருவுக்கு அழைத்து வரும்படி தர்ஷன் கூறி உள்ளார். அதன்படி ராகவேந்திரா, சித்ரதுர்காவில் உள்ள வீட்டில் இருந்த ரேணுகாசாமியை பெங்களூருவுக்கு கடந்த 8-ந் தேதி இரவு காரில் அழைத்து வந்துள்ளார்.

    பின்னர் ராஜராஜேஸ்வரி நகர் பட்டனகெரே பகுதியில் உள்ள வினய் என்பவருக்கு சொந்தமான பழைய கார் குடோன் பகுதிக்கு ரேணுகாசாமியை அழைத்து வந்துள்ளனர். அங்கு வைத்து ரேணுகாசாமியை ராகவேந்திரா உள்பட 11 பேரும் சரமாரியாக தாக்கி உள்ளனர்.

    அவரது உடலில் ஆங்காங்கே சிகரெட்டால் சூடு வைத்தும், வாய் மற்றும் முகம் உள்பட உடலின் 15 இடங்களில் இரும்பு கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கியும் உள்ளனர். இதில் ரேணுகாசாமி ரத்த வெள்ளத்தில் துடி துடித்து உயிரிழந்தது தெரிந்தது. அவரை துடிக்க துடிக்க அவர்கள் சரமாரியாக அடித்தே கொன்றுள்ளனர்.

    இதையடுத்து கைதானவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் நடிகர் தர்ஷனை, மைசூருவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வைத்து காமாட்சிபாளையா போலீசார் நேற்று முன்தினம் காலையில் கைது செய்தனர். பின்னர் அவரை உடனடியாக பெங்களூருவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே நடிகை பவித்ரா கவுடாவையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து கைது எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது. பின்னர் கைதான நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்ட 13 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் நடிகர் தர்ஷன் உள்ளிட்டோர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த அன்னபூர்ணேஸ்வரி நகர் காவல் நிலையத்தின் 200 மீட்டர் எல்லைக்குள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • காதலிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன்.
    • காதலி குறித்து வேறு எந்த தகவலையும் வெளியிட போலீசார் மறுத்து விட்டனர்.

    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலம் ஹாசன் தொகுதியின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியானதை யடுத்து அவர் ஜெர்மனிக்கு தப்பி சென்றார்.

    இதையடுத்து அவரை சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் தேடிவந்த நிலையில் கடந்த 31-ந் தேதி அதிகாலை ஜெர்மனியில் இருந்து பெங்களூரு வந்த போது பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டார்.

    இதையடுத்து போலீசார் பிரஜ்வல் ரேவண்ணாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். கடந்த 6-ந் தேதியுடன் அவரது காவல் முடிவடைந்தது.

    இதையடுத்து போலீசார் மீண்டும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது மேலும் 5 நாட்கள் போலீசார் விசாரணை நடத்த அனுமதி கேட்டனர். இதையடுத்து மீண்டும் 5 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    இதைதொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ஆனால் அவர் பெரும்பாலான கேள்விகளுக்கு எந்த பதிலும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதற்கிடையே பிரஜ்வல் பிறந்து வளர்ந்த ஹோலே நரசிப்பூர் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் நேற்று அழைத்து சென்று சோதனை நடத்தினர்.

    கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் நாயுடு தலைமையில் இந்த சோதனை நடந்தது. சுமார் 4 மணி நேரம் அவரது வீட்டில் இந்த சோதனை நடந்தது. அப்போது பிரஜ்வலை பார்த்து அவரது தந்தை ரேவண்ணா கண்ணீர் விட்டு அழுதார். இதைப்பார்த்த பிரஜ்வலும் அழுதார். பின்னர் போலீசார் பிரஜ்வலை அங்கிருந்து மீண்டும் விசாரணை அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.

    பிரஜ்வல் ஜெர்மனியில் பதுங்கி இருந்த போது அவர் தொடர்பில் இருந்தவர்கள் பற்றி நடத்திய விசாரணையின் அடிப்படையில் பிரஜ்வல் தங்க மற்றும் அவருக்கு தேவையான பண உதவிகளை அவரது காதலி செய்து இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் அவரது காதலிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளனர். மேலும் பிரஜ்வல் காதலி குறித்து வேறு எந்த தகவலையும் வெளியிட போலீசார் மறுத்து விட்டனர்.

    இதே போல் பிரஜ்வல் ரேவண்ணாவின் காவல் நாளையுடன் முடிவடைகிறது. எனவே அவரை மீண்டும் நாளை மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 3-வது முறையாகவும் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    • சவுக்கு சங்கர் கைதாகி கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • சவுக்குசங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

    பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைதாகி கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    சவுக்குசங்கர் மீது சென்னையில் அடுத்தடுத்து பல வழக்குகள் பதிவானதால் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய்ரத்தோர் உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து நேற்று சவுக்குசங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவை கோவை ஜெயிலில் இருந்த சவுக்கு சங்கரிடம் சென்னை போலீசார் வழங்கினர்.

    இந்நிலையில், யூடியூபர் சவுக்கு சங்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை 4வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

    நாளை மாலை 5 மணி வரை சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என சைப் கிரைம் போலீசர் மனு அளித்து இருந்தனர்.

    இந்நிலையில், வழக்கை விசாரித்த கோவை 4வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு ஒரு நாள் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பா.ஜக அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கடந்த மாதம் 22-ந் தேதி பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன.
    • இன்று கைதானவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

    கோவை:

    கோவையில் பா.ஜ.க, இந்து முன்னணி நிர்வாகிகள் வீடுகள் மற்றும் கடைகள் சித்தாபுதூரில் உள்ள பா.ஜக அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கடந்த மாதம் 22-ந் தேதி பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன.

    தொடர்ந்து குனியமுத்தூர் மற்றும் டவுன்ஹால் பகுதியில் அரசு பஸ் கண்ணாடி கல் வீசி உடைக்கப்பட்டது. அடுத்தடுத்து நடைபெற்ற இந்த சம்பவங்கள் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியதோடு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    மேலும் சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் கைப்பற்றப்பட்ட சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் அரசு பஸ் கண்ணாடி உடைத்த வழக்கில் கோவை குனியமுத்தூர், ரத்தினபுரி மற்றும் வெரைட்டிஹால் ரோடு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கைதானவர்கள் எஸ்டிபிஐ மற்றும் பி எப் ஐ அமைப்பை சேர்ந்தவர்கள் என கூறப்பட்டது. கைதானவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்நிலையில் கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். எனவே இன்று கைதானவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கும் பட்சத்தில் இந்த பெட்ரோல் குண்டு வீச்சில் மேலும் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது தெரியவரும்.

    • போலீஸ் காவலில் இருந்த வாலிபர் மர்மமாக இறந்தார்.
    • அருப்புக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்ைடயை அடுத்த செம்பட்டியை சேர்ந்த வாலிபர் தங்க பாண்டியன். இவர் ஒரு வழக்கு தொடர்பாக கடந்த 13-ந்தேதி போலீசாரால் அழைத்து செல்லப்பட்டார்.

    அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட தால் அவரை ஆஸ்பத்திரி யில் அனுமதித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் தங்க பாண்டியன் இறந்து விட்டார். அவரை போலீ சார் அடித்து கொன்று விட்டதாக தெரிவித்து அவரது உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி அறிந்த மதுரை டி.ஐ.ஜி. பொன்னி, மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு மனோகரன் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம்ட பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து தங்கபாண்டியன் உடல் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரி சோதனை செய்யப்பட்டது.

    அதன் பின்னர் உற வினர்கள் தங்கபாண்டியன் உடலை வாங்க மறுத்து அவரது உடல் பாகங்களை மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    அதனை ஏற்று அவ ரது உடல் பாகங்கள் எடுக்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக ராமநாதபுரத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் அருப்புக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட மணிவண்ணன் போலீஸ் காவல் முடிந்து இன்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். #PollachiCase #CBCID
    கோவை:

    பொள்ளாச்சியில் மாணவிகள், இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    பாலியல் புகார் அளித்த மாணவியின் அண்ணனை தாக்கிய வழக்கில் பார் நாகராஜ், செந்தில், மற்றொரு வசந்த குமார், பாபு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மணிவண்ணன் (25) கடந்த 25-ந் தேதி கோர்ட்டில் சரண் அடைந்தார்.

    அவரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். பின்னர் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் பல்வேறு தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது.

    மாணவிகள், இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததில் மணிவண்ணனுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்தனர்.

    இந்த வழக்கு தொடர்பாக மணிவண்ணனை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அவரை 3 நாட்கள் விசாரிக்க நீதிபதி நாகராஜன் அனுமதி அளித்தார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மணிவண்ணனை ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவரிடம் மாணவிகள், இளம்பெண்கள் புகார் தொடர்பாக துருவி, துருவி விசாரணை நடத்தினார்கள். விசாரணையின்போது மணிவண்ணன் பயன்படுத்திய செல்போன் கைப்பற்றப்படவில்லை. அந்த செல்போன் தொலைந்து விட்டதாக மணிவண்ணன் கூறி உள்ளார். அதில் மாணவிகள், இளம்பெண்கள் ஆபாச படம் இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மணிவண்ணன் கொடுத்த தகவலின் பேரில் வாலிபர் ஒருவரிடமும் விசாரணை நடத்தி உள்ளனர். மாணவியின் அண்ணனை தாக்கிய வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர். அவர்களுக்கும் பாலியல் விவகாரத்திற்கும் தொடர்பு உள்ளதா? எனவும் மணிவண்ணனிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் போலீசாருக்கு பல்வேறு தகவல்கள் கிடைத்து உள்ளதாக கூறப்படுகிறது.

    3 நாட்கள் விசாரணை இன்று மாலையுடன் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து இன்று மாலை மணிவண்ணனை கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்படுகிறார். #PollachiCase #CBCID

    கர்நாடக மாநிலத்தில் குடும்ப தகராறில் மனைவியை கொன்றதாக கைதான ஓய்வுபெற்ற ராணுவ வீரர் போலீஸ் காவலில் இன்று மரணம் அடைந்தார். #RetiredSoldier #Murderaccused #policecustody
    பெங்களூரு:

    கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு புறநகர் பகுதியான கல்காரே என்ற இடத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் கிருஷ்ணமூர்த்தி(53). ராணுவத்தில் இருந்து விருப்ப ஓய்வுபெற்ற இவர் தனியார் நிறுவனத்தில் மின்தூக்கி இயக்குனராக (லிப்ட் ஆபரேட்டர்) பணியாற்றி வந்தார்.

    குடும்ப தகராறில் தனது மனைவி மேகலா தேவி என்பவரை கடந்த மாதம் 20-ம் தேதி இவர் கத்தியால் குத்திக் கொன்றார். இதையடுத்து, போலீசார் கிருஷ்ண மூர்த்தியை கைது செய்து விசாரித்து வந்தனர்.

    மேகலாவை கொன்றதாக ஒப்புக்கொண்ட கிருஷ்ண மூர்த்தி கொலைக்காக பயன்படுத்திய கத்தியை தூக்கி வீசிய இடத்துக்கு போலீசார் இன்று அவரை அழைத்துச் சென்றனர். அப்போது திடீரென்று மயங்கி விழுந்தார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றபோது போகும் வழியில் கிருஷ்ண மூர்த்தி மரணம் அடைந்தார்.

    போலீஸ் காவலில் அவர் இறந்ததால் இச்சம்பவம் தொடர்பாக கர்நாடக மாநில சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. #RetiredSoldier  #Murderaccused #policecustody
    போலீஸ் காவலில் பலியான மத்திய படை வீரர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டுள்ளது. #humanrightscommission
    சென்னை:

    வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்தவர் கோபால். 43 வயதாகும் இவர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் கவில்தாராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.

    அதன் பிறகு சொந்த ஊரில் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வந்தார். கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டையைச் சேர்ந்த ஆசிரியர் சுகுமார் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலை தொடர்பாக கோபாலிடம் விசாரணை நடத்துவதற்காக குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த 2 போலீஸ்காரர்கள் இரவில் வந்து அவரை பிடித்துச் சென்றனர். மறுநாள் மாலையில் கோபால் இறந்து விட்டதாக அவரது மனைவி சுமலதாவுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சுமலதா, தனது கணவர் கைது செய்யப்பட்ட போது நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்தார். கணவர் எப்படி இறந்தார் என்பதற்கான காரணத்தை தன்னிடம் தெரிவிக்காமல் உடலை வேலூர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்துவிட்டனர் என்று உயர் அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தார்.

    இது தொடர்பாக குடியாத்தம் டி.எஸ்.பி. கே.சுந்தரம், இன்ஸ்பெக்டர் கே.இன்பரசன், உதவி சப்- இன்ஸ்பெக்டர் உமா சந்திரன், போலீஸ் ஏட்டு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

    மேலும் தமிழ்நாடு மாநில மனித உரிமை கமி‌ஷனிலும் சுமலதா புகார் மனு கொடுத்து இழப்பீடு கேட்டார். அதன் மீது விசாரணை நடத்திய மனித உரிமை கமி‌ஷன் போலீஸ் காவலில் இருந்த கோபால் மரணம் அடைந்ததால் அதற்கு போலீசார் தான் பொறுப்பு ஏற்கவேண்டும். எனவே போலீஸ் டி.எஸ்.பி. உள்பட 4 பேரும் இறந்த கோபாலின் மனைவி சுமலதாவுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. #humanrightscommission
    டெல்லியில் உள்ள ஆடம்பர ஹோட்டலுக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து அட்டகாசம் செய்த பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.பி.யின் மகனை ஒருநாள் போலீஸ் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #AshishPandey #DelhiCourt #PoliceCustody
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள பிரபல பைவ் ஸ்டார் ஓட்டலுக்கு சென்ற ஆஷிஷ் பாண்டே என்பவர் துப்பாக்கியுடன் சென்று, அங்கு இருந்தவர்களை மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து இந்த வழக்கு குறித்து டெல்லி ஆர்.கே புரம் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

    இதையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்டது பகுஜன் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. ராகேஷ் பாண்டேவின்  மகன் ஆஷிஷ் பாண்டே என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனால் தலைமறைவாக இருந்த் ஆஷிஷ் பாண்டே டெல்லி நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.



    இந்த வழக்கில் அவரை 4 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்த நிலையில், அதற்கு அவசியம் இல்லை என ஆஷிஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களையும் முழுமையாக விசாரித்த நீதிமன்றம், ஆஷிஷ் பாண்டேவை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. #AshishPandey #DelhiCourt #PoliceCustody
    நடிகர் கருணாசை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி காவல்துறை அளித்த மனு எழும்பூர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. #Karunas #KarunasCustody
    சென்னை:

    தமிழக முதல்வர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாக நடிகரும் எம்எல்ஏவுமான கருணாசை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். யூடியூப்பில் வெளியான வீடியோவை ஆதாரமாக கொண்டு 8 பிரிவுகளின் கீழ் கருணாஸ் மீது வழக்குகள் பதியப்பட்டு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.


     
    இதையடுத்து அவருக்கு ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கருணாஸ் செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு  ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு 26ம் தேதி (நாளை) விசாரணைக்கு வரும் என ஏற்கனவே தகவல் வெளியானது.

    இந்நிலையில், கருணாசை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி காவல்துறை தரப்பில் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை பரிசீலித்த நீதிபதி, கருணாசின் ஜாமீன் மனுவுடன் சேர்த்து நாளை இந்த மனுவையும் விசாரிப்பதாக தெரிவித்தனர்.  #Karunas #KarunasCustody
     
    ×