search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police custody"

    • பா.ஜக அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கடந்த மாதம் 22-ந் தேதி பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன.
    • இன்று கைதானவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

    கோவை:

    கோவையில் பா.ஜ.க, இந்து முன்னணி நிர்வாகிகள் வீடுகள் மற்றும் கடைகள் சித்தாபுதூரில் உள்ள பா.ஜக அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கடந்த மாதம் 22-ந் தேதி பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன.

    தொடர்ந்து குனியமுத்தூர் மற்றும் டவுன்ஹால் பகுதியில் அரசு பஸ் கண்ணாடி கல் வீசி உடைக்கப்பட்டது. அடுத்தடுத்து நடைபெற்ற இந்த சம்பவங்கள் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியதோடு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    மேலும் சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் கைப்பற்றப்பட்ட சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் அரசு பஸ் கண்ணாடி உடைத்த வழக்கில் கோவை குனியமுத்தூர், ரத்தினபுரி மற்றும் வெரைட்டிஹால் ரோடு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கைதானவர்கள் எஸ்டிபிஐ மற்றும் பி எப் ஐ அமைப்பை சேர்ந்தவர்கள் என கூறப்பட்டது. கைதானவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்நிலையில் கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். எனவே இன்று கைதானவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கும் பட்சத்தில் இந்த பெட்ரோல் குண்டு வீச்சில் மேலும் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது தெரியவரும்.

    • போலீஸ் காவலில் இருந்த வாலிபர் மர்மமாக இறந்தார்.
    • அருப்புக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்ைடயை அடுத்த செம்பட்டியை சேர்ந்த வாலிபர் தங்க பாண்டியன். இவர் ஒரு வழக்கு தொடர்பாக கடந்த 13-ந்தேதி போலீசாரால் அழைத்து செல்லப்பட்டார்.

    அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட தால் அவரை ஆஸ்பத்திரி யில் அனுமதித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் தங்க பாண்டியன் இறந்து விட்டார். அவரை போலீ சார் அடித்து கொன்று விட்டதாக தெரிவித்து அவரது உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி அறிந்த மதுரை டி.ஐ.ஜி. பொன்னி, மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு மனோகரன் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம்ட பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து தங்கபாண்டியன் உடல் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரி சோதனை செய்யப்பட்டது.

    அதன் பின்னர் உற வினர்கள் தங்கபாண்டியன் உடலை வாங்க மறுத்து அவரது உடல் பாகங்களை மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    அதனை ஏற்று அவ ரது உடல் பாகங்கள் எடுக்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக ராமநாதபுரத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் அருப்புக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட மணிவண்ணன் போலீஸ் காவல் முடிந்து இன்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். #PollachiCase #CBCID
    கோவை:

    பொள்ளாச்சியில் மாணவிகள், இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    பாலியல் புகார் அளித்த மாணவியின் அண்ணனை தாக்கிய வழக்கில் பார் நாகராஜ், செந்தில், மற்றொரு வசந்த குமார், பாபு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மணிவண்ணன் (25) கடந்த 25-ந் தேதி கோர்ட்டில் சரண் அடைந்தார்.

    அவரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். பின்னர் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் பல்வேறு தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது.

    மாணவிகள், இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததில் மணிவண்ணனுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்தனர்.

    இந்த வழக்கு தொடர்பாக மணிவண்ணனை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அவரை 3 நாட்கள் விசாரிக்க நீதிபதி நாகராஜன் அனுமதி அளித்தார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மணிவண்ணனை ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவரிடம் மாணவிகள், இளம்பெண்கள் புகார் தொடர்பாக துருவி, துருவி விசாரணை நடத்தினார்கள். விசாரணையின்போது மணிவண்ணன் பயன்படுத்திய செல்போன் கைப்பற்றப்படவில்லை. அந்த செல்போன் தொலைந்து விட்டதாக மணிவண்ணன் கூறி உள்ளார். அதில் மாணவிகள், இளம்பெண்கள் ஆபாச படம் இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மணிவண்ணன் கொடுத்த தகவலின் பேரில் வாலிபர் ஒருவரிடமும் விசாரணை நடத்தி உள்ளனர். மாணவியின் அண்ணனை தாக்கிய வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர். அவர்களுக்கும் பாலியல் விவகாரத்திற்கும் தொடர்பு உள்ளதா? எனவும் மணிவண்ணனிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் போலீசாருக்கு பல்வேறு தகவல்கள் கிடைத்து உள்ளதாக கூறப்படுகிறது.

    3 நாட்கள் விசாரணை இன்று மாலையுடன் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து இன்று மாலை மணிவண்ணனை கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்படுகிறார். #PollachiCase #CBCID

    கர்நாடக மாநிலத்தில் குடும்ப தகராறில் மனைவியை கொன்றதாக கைதான ஓய்வுபெற்ற ராணுவ வீரர் போலீஸ் காவலில் இன்று மரணம் அடைந்தார். #RetiredSoldier #Murderaccused #policecustody
    பெங்களூரு:

    கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு புறநகர் பகுதியான கல்காரே என்ற இடத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் கிருஷ்ணமூர்த்தி(53). ராணுவத்தில் இருந்து விருப்ப ஓய்வுபெற்ற இவர் தனியார் நிறுவனத்தில் மின்தூக்கி இயக்குனராக (லிப்ட் ஆபரேட்டர்) பணியாற்றி வந்தார்.

    குடும்ப தகராறில் தனது மனைவி மேகலா தேவி என்பவரை கடந்த மாதம் 20-ம் தேதி இவர் கத்தியால் குத்திக் கொன்றார். இதையடுத்து, போலீசார் கிருஷ்ண மூர்த்தியை கைது செய்து விசாரித்து வந்தனர்.

    மேகலாவை கொன்றதாக ஒப்புக்கொண்ட கிருஷ்ண மூர்த்தி கொலைக்காக பயன்படுத்திய கத்தியை தூக்கி வீசிய இடத்துக்கு போலீசார் இன்று அவரை அழைத்துச் சென்றனர். அப்போது திடீரென்று மயங்கி விழுந்தார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றபோது போகும் வழியில் கிருஷ்ண மூர்த்தி மரணம் அடைந்தார்.

    போலீஸ் காவலில் அவர் இறந்ததால் இச்சம்பவம் தொடர்பாக கர்நாடக மாநில சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. #RetiredSoldier  #Murderaccused #policecustody
    போலீஸ் காவலில் பலியான மத்திய படை வீரர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டுள்ளது. #humanrightscommission
    சென்னை:

    வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்தவர் கோபால். 43 வயதாகும் இவர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் கவில்தாராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.

    அதன் பிறகு சொந்த ஊரில் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வந்தார். கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டையைச் சேர்ந்த ஆசிரியர் சுகுமார் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலை தொடர்பாக கோபாலிடம் விசாரணை நடத்துவதற்காக குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த 2 போலீஸ்காரர்கள் இரவில் வந்து அவரை பிடித்துச் சென்றனர். மறுநாள் மாலையில் கோபால் இறந்து விட்டதாக அவரது மனைவி சுமலதாவுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சுமலதா, தனது கணவர் கைது செய்யப்பட்ட போது நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்தார். கணவர் எப்படி இறந்தார் என்பதற்கான காரணத்தை தன்னிடம் தெரிவிக்காமல் உடலை வேலூர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்துவிட்டனர் என்று உயர் அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தார்.

    இது தொடர்பாக குடியாத்தம் டி.எஸ்.பி. கே.சுந்தரம், இன்ஸ்பெக்டர் கே.இன்பரசன், உதவி சப்- இன்ஸ்பெக்டர் உமா சந்திரன், போலீஸ் ஏட்டு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

    மேலும் தமிழ்நாடு மாநில மனித உரிமை கமி‌ஷனிலும் சுமலதா புகார் மனு கொடுத்து இழப்பீடு கேட்டார். அதன் மீது விசாரணை நடத்திய மனித உரிமை கமி‌ஷன் போலீஸ் காவலில் இருந்த கோபால் மரணம் அடைந்ததால் அதற்கு போலீசார் தான் பொறுப்பு ஏற்கவேண்டும். எனவே போலீஸ் டி.எஸ்.பி. உள்பட 4 பேரும் இறந்த கோபாலின் மனைவி சுமலதாவுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. #humanrightscommission
    டெல்லியில் உள்ள ஆடம்பர ஹோட்டலுக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து அட்டகாசம் செய்த பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.பி.யின் மகனை ஒருநாள் போலீஸ் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #AshishPandey #DelhiCourt #PoliceCustody
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள பிரபல பைவ் ஸ்டார் ஓட்டலுக்கு சென்ற ஆஷிஷ் பாண்டே என்பவர் துப்பாக்கியுடன் சென்று, அங்கு இருந்தவர்களை மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து இந்த வழக்கு குறித்து டெல்லி ஆர்.கே புரம் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

    இதையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்டது பகுஜன் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. ராகேஷ் பாண்டேவின்  மகன் ஆஷிஷ் பாண்டே என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனால் தலைமறைவாக இருந்த் ஆஷிஷ் பாண்டே டெல்லி நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.



    இந்த வழக்கில் அவரை 4 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்த நிலையில், அதற்கு அவசியம் இல்லை என ஆஷிஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களையும் முழுமையாக விசாரித்த நீதிமன்றம், ஆஷிஷ் பாண்டேவை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. #AshishPandey #DelhiCourt #PoliceCustody
    நடிகர் கருணாசை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி காவல்துறை அளித்த மனு எழும்பூர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. #Karunas #KarunasCustody
    சென்னை:

    தமிழக முதல்வர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாக நடிகரும் எம்எல்ஏவுமான கருணாசை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். யூடியூப்பில் வெளியான வீடியோவை ஆதாரமாக கொண்டு 8 பிரிவுகளின் கீழ் கருணாஸ் மீது வழக்குகள் பதியப்பட்டு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.


     
    இதையடுத்து அவருக்கு ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கருணாஸ் செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு  ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு 26ம் தேதி (நாளை) விசாரணைக்கு வரும் என ஏற்கனவே தகவல் வெளியானது.

    இந்நிலையில், கருணாசை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி காவல்துறை தரப்பில் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை பரிசீலித்த நீதிபதி, கருணாசின் ஜாமீன் மனுவுடன் சேர்த்து நாளை இந்த மனுவையும் விசாரிப்பதாக தெரிவித்தனர்.  #Karunas #KarunasCustody
     
    தனது ஆதரவாளர்கள் அருந்தும் மதுவுக்கு மட்டும் தினமும் ரூ.1 லட்சம் செலவு செய்வதாக கருணாஸ் கூறியிருப்பதால் அவரது பின்னணியில் இருப்பவர்கள் குறித்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். #Karunas
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, போலீஸ் துணை கமி‌ஷனர் அரவிந்தன் ஆகியோரை மிரட்டும் வகையில் பேசிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை நடத்தி வரும் கருணாஸ், கடந்த 16-ந்தேதி நுங்கம்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பேச்சுக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின.

    இது தொடர்பான வீடியோ பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. துணை கமி‌ஷனர் அரவிந்தன் தனது சட்டையை கழற்றி விட்டு என்னோடு நேருக்கு நேர் மோதுவதற்கு தயாரா? என்று கேள்வி எழுப்பிய கருணாஸ், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியே என்னை பார்த்து பயப்படுகிறார் என்றும் கூறினார்.

    நாடார் சமுதாயத்தை அவமதிக்கும் வகையிலும் அவரது பேச்சுக்கள் அமைந்திருந்தன. முக்குலத்தோர் புலிப்படையை சேர்ந்தவர்கள் கொலை செய்யவும் தயங்கக்கூடாது. பிக்னிக் செல்வது போல ஜெயிலுக்கு சென்று வாருங்கள். வழக்கு செலவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன். மதுவுக்காக மட்டுமே ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் செலவாகிறது என்றும் பேசினார்.

    இதனை தொடர்ந்தே நேற்று முன்தினம் அதிகாலையில் கருணாஸ் கைது செய்யப்பட்டார்.

    முதலில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட கருணாஸ், அடுத்த சில மணி நேரங்களிலேயே வேலூர் சிறைக்கு அதிரடியாக மாற்றப்பட்டார். பாதுகாப்பு காரணங்களால் அவர் இடமாற்றம் செய்யபட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் கருணாசை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.

    இதன்படி எழும்பூர் கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீது இன்று விசாரணை நடத்தப்படுகிறது. அப்போது கருணாசை கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிடுவார். இதன் பின்னர் குறிப்பிட்ட நாளில் கோர்ட்டில் ஆஜராகும் அவரை போலீசார் காவலில் எடுக்க உள்ளனர்.


    கருணாஸ் பேசிய பேச்சுக்களை அடிப்படையாக வைத்தே போலீஸ் காவலில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட உள்ளது. கருணாஸ் தனது பேச்சில் தினமும் மதுவுக்காக ரூ.1 லட்சம் செலவு செய்வதாக கூறியுள்ளார். இந்த பணம் எப்படி வருகிறது? எந்த அடிப்படையில் யாருக்கெல்லாம் செலவு செய்கிறீர்கள் என்பது போன்ற கேள்விகளை போலீசார் கேட்க உள்ளனர்.

    தி.நகர் துணை கமி‌ஷனராக இருக்கும் அரவிந்தன் பற்றி கருணாஸ் பேசியதும் கடும் விவாதப் பொருளானது. எதற்காக கருணாஸ் அப்படி பேசினார்? அவருடன் அப்படி என்ன பிரச்சனை? என்பது போன்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

    இது தொடர்பாகவும் போலீஸ் காவலில் கருணாசிடம் கேள்வி எழுப்பப்படுகிறது. அதே நேரத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாகவும் விளக்கம் கேட்கப்படுகிறது.

    கருணாஸ் பேசிய பேச்சுக்கள், அவராகவே பேசியதா? என்கிற சந்தேகமும் போலீசுக்கு ஏற்பட்டுள்ளது.

    இதன் பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

    கருணாசின் அமைப்பான முக்குலத்தோர் புலிப்படையில் முக்கிய நிர்வாகியாக இருக்கும் தாமோதர கிருஷ்ணன் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். அவர் எங்கு இருக்கிறார்? என்பது பற்றியும் கருணாசிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. கருணாசை காவலில் எடுக்கும் போது, தாமோதர கிருஷ்ணன் இருக்கும் இடத்தை கண்டு பிடிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். #Karunas

    கேரளாவில் கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைதான பிராங்கோ முல்லக்கல்லின் ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிமன்றம், அவரை 3 நாள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. #KeralaNun #FrancoMulakkal #Kerala
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பிஷப்பாக இருந்த பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கூறினார்.

    கன்னியாஸ்திரியின் பாலியல் புகார் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கோட்டயம் போலீசார் முன்னிலையில், 19-ம் தேதி ஆஜராகினார். வைக்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் போலீஸ் உயரதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் தான் எந்த தவறும் செய்யவில்லை என பிராங்கோ கூறியதாக தகவல்கள் வெளியானது.

    பாலியல் புகாரில் சிக்கியது தொடர்பாக பிராங்கோ முல்லக்கல் பிஷப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என வாடிகன் சபை அறிவித்திருந்து.

    தொடர்ந்து மூன்று நாளாக பிராங்கோ முல்லக்கலிடம் போலீசார் விசாரணை நடத்திய பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். எர்னாகுளாத்தில் கைது செய்யப்பட்ட அவர், கோட்டயம் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட போது பிராங்கோ முல்லக்கல் தனக்கு திடீரென நெஞ்சு வலிப்பதாக போலீசாரிம் கூறினார்.



    இதைத்தொடர்ந்து, சில மணி நேர சிகிச்சைக்கு பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு கோட்டயம் அழைத்துச் செல்லப்பட்டு, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    நீதிமன்ற விசாரணையின்போது, பிரான்கோ முல்லக்கல்லின் ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிபதி, அவரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.. #KeralaNun #FrancoMulakkal #Kerala
    மும்பை பரேல் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போய்வாடா போலீசார் கட்டுமான அதிபர் அப்துல் ரசாக் இஸ்மாயில் சுபாரிவாலாவை அதிரடியாக கைது செய்தனர். #MumbaiFire #CrystalTowerFire
    மும்பை:

    மும்பை பரேலில் உள்ள கிறிஸ்டல் டவர், அடுக்குமாடி குடியிருப்பின் 12-வது மாடியில் நேற்று முன்தினம் காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், ஒரு பெண் உள்பட 4 பேர் பலியானார்கள். கட்டிடத்தில் இருந்து மீட்கப்பட்ட 21 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



    17 மாடிகளை கொண்ட அந்த கட்டிடத்திற்கு மாநகராட்சியிடம் இருந்து பெற வேண்டிய அனுமதி சான்றிதழ்களை பெறாமல் கட்டுமான அதிபர் அப்துல் ரசாக் இஸ்மாயில் சுபாரிவாலா என்பவர் வீடு வாங்கிய 58 குடும்பத்தினரை குடியமர்த்தி இருக்கிறார்.

    இதுபற்றி அறிந்த மாநகராட்சி நிர்வாகம் 2016-ம் ஆண்டே குடியிருப்புவாசிகளை வெளியேற்றகோரி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. ஆனால் குடியிருப்புவாசிகள் கட்டிடத்தில் இருந்து காலி செய்யப்படவில்லை. இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

    இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் அந்த கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு 4 பேரின் உயிரை பலி வாங்கி விட்டது. தீ விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போய்வாடா போலீசார் கட்டுமான அதிபர் அப்துல் ரசாக் இஸ்மாயில் சுபாரிவாலாவை அதிரடியாக கைது செய்தனர்.

    நேற்று அவரை போய்வாடா மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அவரை வருகிற 27-ந் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.  #MumbaiFire #CrystalTowerFire
    சிதம்பரம் அருகே வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்த ஷோபியாவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    விழுப்புரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சிலுவைபுரம் பகுதியை சேர்ந்தவர் ஷோபியா (வயது 32) பி.ஏ. பட்டதாரி. இவர் இந்திய உணவு கழகத்தில் கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றி வருவதாக கூறினார். பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக சிதம்பரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 74 பேரிடம் ரூ. 3 கோடிக்கு மேல் வசூலித்தார். ஆனால் அவர்களுக்கு வேலை வாங்கி கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டார். இவருக்கு உடந்தையாக இவரது தாய் ஆரோக்கியசெல்வி மற்றும் கடலூரில் கம்யூட்டர் சென்டர் நடத்தி வரும் ரவிச்சந்திரன் ஆகியோர் இருந்தனர்.

    இது குறித்து சிதம்பரம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கடலூர் செம்மண்டலத்தில் தலைமறைவாக இருந்த ஷோபியாவை கைது செய்தனர். மேலும் ஆரோக்கியசெல்வி, ரவிச்சந்திரனும் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஷோபியா மீது சின்னசேலம் அருகே உள்ள அக்கராயப்பாளையத்தை சேர்ந்த லூர்துமேரி (வயது 50) என்பவர் ஒரு புகார் மனு அளித்தார்.

    அதில் எனது மகள், உறவினர் மற்றும் நண்பர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என 4 பேருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி எங்களிடம் ரூ.25 லட்சத்தை ஷோபியா வாங்கினார். அதற்கு போலி உத்தரவு நகலை கொடுத்தார். அப்போது நாங்கள் பணம் கொடுத்து ஏமாந்தது தெரியவந்தது. நாங்கள் கொடுத்த பணத்தை ஷோபியாவிடம் கேட்டபோது எங்களை ரவுடிகளை வைத்து மிரட்டினார். ஷோபியாவிடம் இருந்து நாங்கள் கொடுத்த பணத்தை மீட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    அதன்பேரில் ஷோபியா மீது நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து ஷோபியா மீது பல்வேறு புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

    இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் வேறு யாரிடமாவது இது போன்று அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஷோபியா பண மோசடியில் ஈடுபட்டாரா என்பதை கண்டறிய அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    சென்னையில் சிறுமி பாலியல் கொடுமை வழக்கில் கைதான 17 குற்றவாளிகளை இன்று முதல் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. #chennaigirlharassment
    சென்னை:

    சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 11 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக, அந்த குடியிருப்பில் லிப்ட் ஆபரேட்டராக பணிபுரிந்த ரவிகுமார், காவலாளிகள் அபிஷேக், சுகுமாறன் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். போலீஸ் விசாரணையில் இவர்கள் 6 மாதங்களுக்கும் மேலாக அந்த சிறுமியை மிரட்டி கற்பழித்து வந்தது தெரிய வந்தது.

    கைதான 17 பேரும் சென்னை மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அனைவரும் புழல் சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டனர். வருகிற 31-ந்தேதி வரை இவர்களை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    குற்றவாளிகளை உறுதி செய்வதற்கான அடையாள அணிவகுப்பு புழல் சிறையில் நேற்று நடந்தது. எழும்பூர் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டுகள் ரோகித்துரை, கலைபொன்னி ஆகியோர் முன்னிலையில் இது நடைபெற்றது.

    கற்பழிப்பு குற்றவாளிகளுடன் அதே வயதுடைய வேறு குற்றவாளிகள் 10 பேரும் நிறுத்தப்பட்டனர். இதில் குற்றவாளிகள் 17 பேரையும் சிறுமி அடையாளம் காட்டினாள்.

    இந்த நிலையில், குற்றவாளிகள் 17 பேரையும், காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, மகளிர் நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதை ஏற்ற மகளிர் நீதிமன்றம், கற்பழிப்பு குற்றவாளிகளை 5 நாட்கள் போலீஸ்காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது.

    இதையடுத்து, குற்றவாளிகள் 17 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கிறார்கள். அவர்களிடம் இன்று முதல் 5 நாட்கள் விசாரணை நடத்துகிறார்கள். #chennaigirlharassment
    ×