search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தாம்பரம் ரெயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல்: பா.ஜ.க. பிரமுகருக்கு சம்மன்
    X

    தாம்பரம் ரெயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல்: பா.ஜ.க. பிரமுகருக்கு சம்மன்

    • நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் சோதனையும் நடந்தது.
    • ஓட்டலில் தேர்தல் நடக்கும் படையினர் மற்றும் தாம்பரம் போலீசார் அதிரடி சோதனை நடத்தி இந்த பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

    தாம்பரம்:

    கடந்த 6-ந்தேதி இரவு தாம்பரம் ரெயில் நிலையத்தில் பறக்கும் படையினரால் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. நெல்லை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என தகவல் பரவியது. இது தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டல் மேலாளர் சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    விருகம்பாக்கத்தைச் சேர்ந்த முருகன், ஜெய்சங்கர், ஆசைத்தம்பி ஆகியோர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான கீழ்ப்பாக்கம் ஓட்டலில் பணத்தை வைத்து விட்டு சென்றதாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    இதையடுத்து நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் சோதனையும் நடந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக வருமானவரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தாம்பரம் போலீசாரும் இந்த பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பா.ஜ.க. தொழில்துறை மாநில துணைத்தலைவர் கோவர்தனன், கிரீன்வேஸ் சாலையில் நடத்திவரும் ஓட்டலிலும் ரூ. ஒரு கோடி பணம் கைப்பற்றப்பட்டது.

    நேற்று முன்தினம் இரவு பா.ஜ.க. தொழில்துறை மாநில துணைத்தலைவர் கோவர்தனன் நடத்திவரும் ஓட்டலில் தேர்தல் நடக்கும் படையினர் மற்றும் தாம்பரம் போலீசார் அதிரடி சோதனை நடத்தி இந்த பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

    இதனையடுத்து பாஜக தொழில்துறை மாநில துணைத்தலைவர் கோவர்தனன் நேரில் விசாரணைக்கு ஆஜராக தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

    அவர் தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவரது மகன் கிஷோர் இன்று ஆஜராக வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×