search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Advocate General"

    நீதித்துறை குறித்து அவதூறாக பேசிய எச்.ராஜா அக்டோபர் 3-ம் தேதி ஆஜராக வேண்டும், இல்லை என்றால் வழக்கறிஞர் மூலம் விளக்கமளிக்க வேண்டும் என அரசு தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணன் உத்தரவிட்டுள்ளார். #HRaja #TNGovt
    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்ஹ்டு கொண்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நீதித்துறை மற்றும் காவல்துறை குறித்து கீழ்தரமாக பேசினார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலகா பரவிய நிலையில், அவர் மீது 8 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    அவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதற்கிடையே, அவர் மீது தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் சி.டி செல்வம் அமர்வு, 4 வாரங்களில் எச்.ராஜா நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.

    இந்நிலையில், எச்.ராஜா வரும் அக்டோபர் 3-ம் தேதி மாலை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய நராயணன் உத்தரவிட்டுள்ளார். நேரில் வரமுடியவில்லை என்றால், வழக்கறிஞர் மூலமாக விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
    ×