search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "idol theft case"

    சிலைக் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள தொழிலதிபர் ரன்வீர் ஷா மற்றும் கிரண் ராவை 15 நாட்கள் காவலில் எடுக்க முடிவு செய்த காவல்துறை, இது தொடர்பாக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். #Idoltheftcase #RanvirShah #KiranRao #HighCourt
    சென்னை:

    சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் அளித்த வாக்குமூலத்தில் பல்வேறு நபர்களிடம் சிலைகளை கொடுத்து வைத்திருப்பதாக கூறினார். அதன் அடிப்படையில் தீனதயாளனின் கூட்டாளிகளை கைது செய்யவும் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த வரிசையில் தொழில் அதிபர் ரன்வீர்ஷா, அவரது தோழியான கிரண் ராவ் ஆகியோர் போலீஸ் வலையில் சிக்கி இருக்கிறார்கள்.

    சிலை தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையை தொடர்ந்து ரன்வீர்ஷாவையும், கிரண் ராவையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இருவரும் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது உறுதியாக தெரியவில்லை. ரன்வீர்ஷா, கிரண்ராவ் இருவருக்கும் போலீஸ் தரப்பில் சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் இதனை ஏற்று ஆஜராகவில்லை. அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை.

    இந்நிலையில், ரன்வீர் ஷா மற்றும் கிரண் ராவின் முன்ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று நடைபெற்றது. அப்போது, அப்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில் ரன்வீர் ஷா, கிரண் ராவ் இருவரையும் 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து ரன்வீர்ஷா, கிரண்ராவ் இருவருக்கும் உடனடியாக முன் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்து விட்டது.

    இதனை தெரிவித்த நீதிபதி 2 பேரின் வீட்டிலும் கைப்பற்றப்பட்ட சிலைகள் பற்றிய விவரங்களை வருகிற 23-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அதுவரையில் முன் ஜாமீன் மனு மீது உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் நீதிபதி கூறினார்.

    ரன்வீர்ஷா, கிரண்ராவ் ஆகியோரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் சிலைகளை தனியார் நிறுவனத்திடம் வாங்கியதாக குறிப்பிட்டு இருந்தனர். இதனை நீதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை. புராதன சிலைகளை விற்பனை செய்ய எந்த தனியார் நிறுவனத்துக்கும், அமைப்புக்கும் அனுமதி இல்லை. அப்படி விற்றால் அது சட்ட விரோதம் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

    தீனதயாளன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே ரன்வீர்ஷா, கிரண் ராவிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருவருக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக தீனதயாளன் வாக்குமூலம் அளித்திருப்பதாகவும் போலீசார் கோர்ட்டில் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் சிலை கடத்தல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. #Idoltheftcase #RanvirShah #KiranRao  #HighCourt
    சிலை கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள தொழில் அதிபர்கள் ரன்வீர்ஷா, கிரண்ராவ் தமிழகத்தில் இருந்து தப்பி சென்றிருப்பதாகவும் அவர்கள் குறித்து துப்பு கொடுத்தால் வெகுமதி வழங்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. #Idoltheftcase
    சென்னை:

    சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் வீட்டில் கடந்த 2016-ம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஏராளமான சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் கடத்தல் சிலைகளின் பின்னணி குறித்து விசாரணை நடத்தினர்.

    தீனதயாளன் அளித்த வாக்குமூலத்தில் பல்வேறு நபர்களிடம் சிலைகளை கொடுத்து வைத்திருப்பதாக கூறினார். அதன் அடிப்படையில் தீனதயாளனின் கூட்டாளிகளை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த வரிசையில் தொழில் அதிபர் ரன்வீர்ஷா, அவரது தோழியான கிரண்ராவ் ஆகியோர் போலீஸ் வலையில் சிக்கி இருக்கிறார்கள்.

    சைதாப்பேட்டையில் உள்ள ரன்வீர்ஷாவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 200-க்கும் மேற்பட்ட கற்சிலைகள், கல் தூண்கள் உள்ளிட்டவை சிக்கின. இதனைத் தொடர்ந்து ரன்வீர்ஷாவின் பண்ணை வீடுகள், பங்களாக்களிலும் சோதனை நடைபெற்றது.

    கோப்புப்படம்

    போயஸ்கார்டனில் உள்ள கிரண்ராவின் வீட்டிலும் சோதனை நடந்தது. இதில் வீட்டினுள் புதைத்து வைக்கப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கிரண்ராவ் ராயப்பேட்டையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

    சிலை தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையை தொடர்ந்து ரன்வீர்ஷாவையும், கிரண்ராவையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து இருவரும் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது உறுதியாக தெரியவில்லை. ரன்வீர்ஷா, கிரண்ராவ் இருவருக்கும் போலீஸ் தரப்பில் சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் இதனை ஏற்று ஆஜராகவில்லை.

    ரன்வீர்ஷா தனது வக்கீலை அனுப்பி வைத்திருந்தார். அவர் 28-ந்தேதி வரையில் ரன்வீர்ஷா ஆஜராக அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனை போலீசார் ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கிடையே 2 பேரும் முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

    இதனை விசாரித்த நீதிமன்றம் சிலைகளை வைத்திருப்பதற்கான ஆவணங்கள் இருந்தால் அதனை ஆதாரமாக கோர்ட்டில் தாக்கல் செய்யுங்கள் என்று உத்தரவிட்டனர்.

    இது தொடர்பான எந்த ஆவணங்களும் இல்லாத காரணத்தாலேயே ரன்வீர்ஷாவும், கிரண்ராவும் தப்பி ஓடி விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரன்வீர்ஷா, கிரண்ராவ் இருவரையும் கைது செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர். விமான நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

    இவர்கள் பற்றி துப்பு கொடுத்தால் தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.50 ஆயிரம் பரிசு சன்மானமாக வழங்கப்படும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். ரன்வீர்ஷாவும், கிரண்ராவும் தமிழகத்தில் இருந்து தப்பி ஓடி விட்டது தெரிய வந்துள்ளது. அவர்கள் வடமாநிலங்களில் பதுங்கி இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

    இதையடுத்து வெளி மாநில போலீசாரின் துணையுடன் ரன்வீர்ஷா, கிரண்ராவ் இருவரையும் பிடிக்க நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. இருவரை பற்றியும் தகவல் தெரிந்தவர் துப்பு கொடுக்கலாம் என்றும் அவர்களது பெயர், ஊர் உள்ளிட்ட விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் சிலை தடுப்பு பிரிவு போலீசார் கூறினர்.

    ரன்வீர்ஷா, கிரண்ராவை பிடிக்க போலீசார் வேகம் காட்டி இருப்பதால் சிலை கடத்தல் வழக்கில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Idoltheftcase #RanvirShah #KiranRao
    ராஜராஜ சோழன் சிலைக்கு சொந்தம் கொண்டாடும் கிரா சாராபாய் மனுவிற்கு பதிலளிக்க சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ஐகோர்ட் மேலும் 6 வார அவகாசம் அளித்துள்ளது. #IdolTheftCase #RajaRajaCholanIdol
    சென்னை:

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து ராஜ ராஜசோழன் மற்றும் லோகமாதேவி சிலைகள் மீட்கப்பட்டன. இதனை தொடர்ந்து சிலைகளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக சாராபாய் அறக்கட்டளை நிர்வாகி கிரா சாராபாய் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கிரா சாராபாய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.



    தங்களிடம் இருந்த சிலைகளை தமிழக சிலை கடத்தல்  தடுப்புபிரிவு எடுத்துச் சென்றுவிட்டதாகவும், அவை 1960ஆம் ஆண்டு காணாமல்போன சிலைகள் தான் என்பதை நிரூபித்து விட்டால், அவற்றை வழங்கி விட தயாராக இருப்பதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவிற்கு 6 வாரத்திற்குள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

    இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிலைக் கடத்தல் தடுப்புபிரிவு பதில் மனு தாக்கல் செய்யவில்லை. மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு பதிலளிக்க மேலும் 6 வாரம் அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். #IdolTheftCase #RajaRajaCholanIdol #GiraSarabhai #MadrasHC
    வத்தலக்குண்டுவில் சிலை திருட்டு வழக்கில் கேரள வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திண்டுக்கல்:

    வத்தலக்குண்டுவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 2017-ம் ஆண்டு 9 கிலோ எடையுள்ள புத்தர் சிலை மற்றும் 15 கிலோ எடை கொண்ட கிருஷ்ணன் சிலை ஆகியவை திருடு போனது. இது குறித்து ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    அந்த புகாரில் ஆஸ்பத்திரியில் டிரைவராக பணிபரிந்த கேரளாவைச் சேர்ந்த ஜோதீஸ் (வயது 31) என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரும் தனிப்படை அமைத்து ஜோதீசை தேடி வந்தனர். வத்தலக்குண்டு அருகே சுற்றித் திரிந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் சிலை கடத்தலில் தேடப்பட்டு வந்த ஜோதீஸ் என தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து நிலக்கோட்டை சிறையில் அடைத்தனர். வேறு ஏதேனும் சிலை கடத்தல் சம்பவத்தில் அவர் ஈடுபட்டுள்ளாரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மைலாப்பூர் சிலை கடத்தல் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நீதிபதிகள் அர்ச்சகர்கள் தெய்வீகமாக பணியாற்றவில்லை என தெரிவித்துள்ளனர். #ChennaiHC
    சென்னை:

    சென்னை மைலாப்பூரில் உள்ள கோவிலில் இருந்து சிலை காணாமல் போனது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து காணாமல் போன மயில் சிலைக்கு பதிலாக புதிய சிலை வைத்து குடமுழுக்கு நடத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, கோவிலில் சிலைகளை பாதுகாப்பதில் அர்ச்சகர்களுக்கு பொறுப்பு உண்டு என தெரிவித்துள்ளனர்.

    மேலும், அர்ச்சகர்கள் தெய்வீக உணர்வுடன் பணியாற்றவில்லை என குற்றம்சாட்டிய நீதிபதிகள், இயந்திரத்தன்மையுடன் செயல்படுவதாக கருத்து தெரிவித்துள்ளனர். #ChennaiHC
    சிலைக்கடத்தல் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும் கேட்பதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. #IdolTheftCase #CBI #TNGovt #HC
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள பழமையான கோவில்களில் இருந்து, புராதான சாமி சிலைகள் பல கொள்ளை அடிக்கப்பட்டது. சர்வதேச சிலைக் கடத்தல் கும்பல்களுடன் கை கோர்த்து, இந்த கொள்ளை சம்பவத்தில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் செயல்பட்டிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி மகா தேவன், இந்த சிலைக் கடத்தல் வழக்குகளை எல்லாம் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரிக்க உத்தரவிட்டார்.

    இந்த சிலை கடத்தல் வழக்கில், அரசு தலைமை ஸ்தபதி முத்தையா, இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா உள்பட பல முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் பலரை கைது செய்ய பொன்.மாணிக்கவேல் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், தமிழக அரசு திடீரென அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

    ‘இந்த சிலைக் கடத்தல் வழக்குகள் அனைத்தையும் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவதாக கூறி, அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர், அரசாணைக்கு தடை விதித்தனர். இந்த வழக்கிற்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன், ‘சி.பி.ஐ. விசாரணைக்கு அனைத்து வழக்குகளையும் தமிழக அரசு மாற்றியுள்ளது தொடர்பான சில ஆவணங்களை மத்திய அரசு கேட்டுள்ளது’ என்றார்.

    சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வக்கீல் சீனிவாசன், ‘தமிழக அரசு பிறப்பித்த அரசாணை சி.பி.ஐ. இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவையெல்லாம் பரிசீலனையில் உள்ளன’ என்றார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘ஒருவேளை சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்க சி.பி.ஐ. மறுத்து விட்டால், என்ன செய்வீர்கள்?’ என்று கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அரவிந்த் பாண்டியன், ‘சி.பி.ஐ. மறுக்கவில்லை. முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) உள்ளிட்ட சில ஆவணங்களை கேட்டு தான் கடிதம் அனுப்பியுள்ளது. இந்த கடிதம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் நாளை (புதன்கிழமை) தாக்கல் செய்கிறேன்’ என்றார்.

    இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 24-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். #IdolTheftCase #CBI #TNGovt #HC
    சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றும் அரசின் உத்தரவுக்கு ஐகோர்ட் தடை விதித்துள்ள நிலையில், ஏன் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது? என தமிழக அரசு இன்று விளக்கமளித்துள்ளது. #IdolTheftCase #CBI
    சென்னை:

    சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஐஜி பொன் மாணிக்க வேல் தலைமையில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவை அமைத்து, 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. பொன் மாணிக்க வேல் தனது விசாரணையை தொடர்ந்து வந்த நிலையில், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.

    தமிழக அரசின் உத்தரவுக்கு எதிரான சென்னை ஐகோர்ட்டில் முறையிடப்பட்டதை அடுத்து, ஐகோர்ட் தமிழக அரசின் முடிவுக்கு தடை விதித்தது. இந்நிலையில், சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடப்பட்டது என்பது தொடர்பாக தமிழக அரசு விரிவான பதிலை ஐகோர்ட்டில் இன்று தாக்கல் செய்துள்ளது.

    அதில், பொன் மாணிக்கவேல் கடந்த ஓராண்டாக வழக்கு தொடர்பாக எந்த அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை. டிஜிபி நடத்தும் ஆய்வுக் கூட்டங்களுக்கும் வருவது இல்லை. சிலை கடத்தல் முறைகேடில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் சிக்கியுள்ளதால், நியாமான விசாரணை நடக்கவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

    குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிர்பந்தத்தால் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. சிலை கடத்தல் தடுப்பு பிரிவை கலைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது; குற்றவாளிகளை தண்டிக்கவே சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கும்பகோணம் கோர்ட்டில் ஏற்கனவே நடந்து வரும் சிலை கடத்தல் வழக்கை சிபிஐம் விசாரிக்காது, மற்ற வழக்குகளை விசாரிக்கும் என சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. #IdolTheft #CBI
    சென்னை:

    தமிழக கோவில்களில் காணாமல் போன சிலைகள் தொடர்பான வழக்குகளை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்க வேல் விசாரித்து வந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணையில் அவரது விசாரணையில் திருப்தி இல்லை என சென்னை ஐகோர்ட்டில் கூறிய தமிழக அரசு அனைத்து வழக்குகளையும் சிபிஐ வசம் ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்தது.

    இதற்கான அரசாணையும் இன்று பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், கும்பகோணம் கோர்ட்டில் ஏற்கனவே நடந்து வரும் சிலை கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்காது என தமிழக அரசு இன்று ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது. மற்ற சிலை கடத்தல் வழக்குகள் அனைத்தும் சிபிஐ வசம் விரைவில் ஒப்படைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
    ×