search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tamilnadu police"

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூடு நடைபெற்றது தொடர்பான வழக்கில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக போலீசார் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. #SterliteProtest #ThoothukudiFiring #CBI
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இறுதிக்கட்டமாக பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். அப்போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் பொதுமக்கள் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. ஒரு வழக்கில் யாருடைய உத்தரவு பேரில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டிருந்தது.


    இந்நிலையில் சிபிஐ தமிழக போலீசார் மற்றும் தமிழக வருவாய்த்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. #SterliteProtest #ThoothukudiFiring #CBI
    தமிழ்நாடு முழுவதும் 22 போலீஸ் டி.எஸ்.பி.க்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். இதற்கான உத்தரவை போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன் பிறப்பித்துள்ளார். #TNPolice
    சென்னை:

    சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டி.எஸ்.பி. விசுவநாத் ஜெயன் தரமணி சரக உதவி கமி‌ஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    தரமணி சரக உதவி கமி‌ஷனர் சுப்பராயன் ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு உதவி கமி‌ஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    பெண்களுக்கு எதிரான குற்றப்புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி. பன்னீர்செல்வம் மாதவரம் போக்குவரத்து குற்ற புலனாய்வுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    தலைமையிடத்து துணை போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ் பரங்கிமலை சரக உதவி கமி‌ஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    மதுரை மாவட்ட பெண்கள் குற்றப்புலனாய்வு பிரிவின் டி.எஸ்.பி. மகேந்திரன் மதுராந்தகம் சரக டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

    தர்மபுரி மாவட்ட குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி. சுப்பையா சத்தியமங்கலம் சரக டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

    காஞ்சீபுரம் மாவட்ட குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி. கண்ணன் ராயபுரம் சரக உதவி கமி‌ஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    சிவகங்கை மாவட்ட நில மோசடி விசாரணை பிரிவு டி.எஸ்.பி. இளங்கோவன் நாங்குநேரி டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். #TNPolice
    கருணாநிதி அஞ்சலி நிகழ்ச்சியில் திரண்ட கூட்டத்தை போலீசார் கட்டுப்படுத்த முடியாமல் திணறியதற்கு உயர் அதிகாரிகளின் சரியான திட்டமிடல் இல்லாததே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. #KarunanidiFuneral
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் அஞ்சலிக்காக, ராஜாஜி ஹாலில் நேற்று வைக்கப்பட்டிருந்தபோது லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

    பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தனி வழியும், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்த ஒரு வழியும் போலீசாரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    காலை 11 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி வந்து அஞ்சலி செலுத்தும் வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தது.

    அவர் சென்றதும் முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழியை பொதுமக்களும், கட்சித் தொண்டர்களும் ஆக்கிரமிக்க தொடங்கினர்.

    மேலும் பன்னோக்கு மருத்துவமனை வழியாகவும் ராஜாஜி அரங்குக்குள் ஏராளமான தொண்டர்கள் தடுப்புகளை தாண்டி குதித்து உள்ளே புகுந்தனர்.

    இப்படி அத்துமீறி வந்தவர்களை போலீசாரால் தடுக்க முடியவில்லை.

    முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியன் கூட்டத்தை ஒழுங்குப்படுத்த மைக்கில் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கூட்டத்தினர் கட்டுக்கடங்காமல் முன்னேறி வந்தனர்.


    அங்கிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் மீது சிலர் ஏறி நின்று கொண்டனர். அவர்களையும் மா.சுப்பிரமணியன் எச்சரித்து கீழே இறங்க வைத்தார்.

    அத்துமீறி வந்தவர்களை பார்த்து வரிசையில் வந்து கொண்டிருந்தவர்களும் தங்கள் இஷ்டத்தக்கு செல்ல ஆரம்பித்தனர். இப்படி நுழைந்தவர்களை சமாளிக்க ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்தாலும் அவர்களால் கட்சி தொண்டர்களிடம் கடுமையாக நடந்து கொள்ள முடியவில்லை. மேலும் அத்துமீறி நுழைந்தவர்கள் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருந்த இடம் வரை சென்று சூழ்ந்து நின்று கொண்டனர்.

    நுழைவுவாயில் படிகள் அனைத்திலும் ஆக்கிரமித்து உட்கார்ந்து கொண்டனர். இவர்களை அகற்ற முடியாமல் போலீசார் திணறினார்கள்.

    நிலைமை மோசமான பின்புதான் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த நெரிசலில் பலர் சிக்கிக் கொண்டனர்.

    இதேபோல் இறுதி ஊர்வலத்தின் போதும் அண்ணாசாலையில் இருந்து கடற்கரை சாலை வரை உள்ள பகுதிகளில் ரோடுகளில் நின்று கொண்டிருந்த தொண்டர்களை ஒழுங்குப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்காமல் ஊர்வலத்தை தொடங்கி விட்டனர். இதனால் வழி நெடுகிலும் கடும் சிரமத்துக்கு இடையே ஊர்வலம் சென்றது.

    போலீஸ் உயர் அதிகாரிகளின் சரியான திட்டமிடல் இல்லாததால் அஞ்சலி செலுத்த வந்த பலரும் சிரமம் அடைந்தனர்.

    இதுகுறித்து கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “இந்த விசயத்தில் போலீசாரை குறை கூறக்கூடாது. அவர்கள் கால் கடுக்க நின்று பாதுகாப்பு கொடுத்தார்கள். தூக்கம் இன்றி, சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் 2 நாட்களாக கஷ்டப்பட்டார்கள். பெண் போலீசாரின் நிலைமை மிகவும் பரிதாபமானது.

    ஆனால் உயர் போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தை ஒழுங்குப்படுத்த தகுந்த உத்தரவை பிறப்பிக்கவில்லை என்றுதான் கூற வேண்டும்.

    ராஜாஜி ஹாலில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டும், எதிர்க்கட்சி நடத்தும் கூட்டத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள் எப்படி நடந்து கொள்வார்களோ அதே போல்தான் காலை 11 மணி வரை நடந்து கொண்டனர்.

    நிலைமை மோசமான பிறகுதான் உயர் போலீஸ் அதிகாரிகள் நேரடியாக வந்து தகுந்த உத்தரவுகளை பிறப்பித்தனர். இந்த அலட்சியமும் உயிரிழப்புக்கு ஒரு காரணமாகும் என்றார். #DMK #Karunanidhi #KarunanidiFuneral
    கும்பகோணம் கோர்ட்டில் ஏற்கனவே நடந்து வரும் சிலை கடத்தல் வழக்கை சிபிஐம் விசாரிக்காது, மற்ற வழக்குகளை விசாரிக்கும் என சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. #IdolTheft #CBI
    சென்னை:

    தமிழக கோவில்களில் காணாமல் போன சிலைகள் தொடர்பான வழக்குகளை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்க வேல் விசாரித்து வந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணையில் அவரது விசாரணையில் திருப்தி இல்லை என சென்னை ஐகோர்ட்டில் கூறிய தமிழக அரசு அனைத்து வழக்குகளையும் சிபிஐ வசம் ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்தது.

    இதற்கான அரசாணையும் இன்று பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், கும்பகோணம் கோர்ட்டில் ஏற்கனவே நடந்து வரும் சிலை கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்காது என தமிழக அரசு இன்று ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது. மற்ற சிலை கடத்தல் வழக்குகள் அனைத்தும் சிபிஐ வசம் விரைவில் ஒப்படைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
    தமிழக காவல்துறையில் ஆர்டலி முறை ஒழிக்கப்பட்டுவிட்டதாக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #OrderlySystem
    சென்னை:

    சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேசும்போது கூறியதாவது:-

    உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு அளிக்கின்ற அரசு தான் நல் அரசு. அமைதியான ஆட்சியை வழங்கும் அரசுதான் நல்லரசு என்று திருவள்ளுவர் கூறி இருக்கிறார்.

    தற்போது தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள குறிப்பில், “தமிழ்நாட்டில் பல்வேறு குற்றங்கள் அதிகரித்து விட்டதாக” குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது காவல் துறையினர் மிகவும் மன அழுத்தத்துடன் இருக்கிறார்கள்.

    ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாக கூறப்பட்ட தமிழக போலீசார் இப்போது மன அழுத்தத்துடன் இருப்பதால்தான் குற்றங்கள் அதிகரித்துள்ளன. கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் 200 போலீசார் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

    போலீசார் மன அழுத்தத்துடன் இருக்க முக்கிய காரணம் ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்தது போல உயர் அதிகாரிகளிடம் பணிபுரியும் போலீசார் கொத்தடிமை போல நடத்தப்படுகிறார்கள்.

    பெரிய அதிகாரிகளிடம் போலீசார் வீட்டு வேலை செய்யும் ‘ஆர்டர்லி’ முறை இன்னும் தொடர்கிறது.

    இதுபோன்ற முறை இந்த ஆட்சியில் மட்டுமல்ல கடந்த தி.மு.க. ஆட்சியிலும் இருந்தது. இதை தவிர்க்க வேண்டும் என்று ஏற்கனவே போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ஆர்டர்லி முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது.

    இதற்கு பதிலாக அலுவலக உதவியாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #OrderlySystem
    ×