என் மலர்
நீங்கள் தேடியது "பாலியல் வன்புணர்வு"
- கடந்த மூன்று ஆண்டுகளாக இவரிடம் அந்த மாணவன் டியூஷன் பயின்று வந்துள்ளார்.
- மருத்துவப் பரிசோதனையில் அந்தப் பெண் ஐந்து மாத கர்ப்பிணி என்பது தெரியவந்துள்ளது.
குஜராத் மாநிலம் சூரத்தில், 14 வயது மாணவனால் 23 வயது டியூஷன் ஆசிரியை கர்ப்பமாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் 25 ஆம் தேதி டியூஷன் ஆசிரியையும் மாணவரும் வீட்டை விட்டு ஓடியுள்ளனர். நான்கு நாள் தேடுதலுக்குப் பிறகு செல்போன் சிக்னல் மூலம் குஜராத்-ராஜஸ்தான் எல்லைக்கு அருகே இருவரையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
டியூஷன் ஆசிரியை சூரத்தில் உள்ள அவரது வீட்டிலும், கைது செய்யப்படுவதற்கு முன்பு அவர்கள் சென்ற இடங்களிலும், சிறுவனுடன் பலமுறை உடல் உறவில் ஈடுபட்டுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
கடந்த மூன்று ஆண்டுகளாக இவரிடம் அந்த மாணவன் டியூஷன் பயின்று வந்துள்ளார். கடந்த ஓராண்டாக இவர்கள் மிக நெருக்கமாக இருந்ததாகவும் இருவரும் பல மாதங்களாக உடல் ரீதியான உறவில் ஈடுபட்டதாக அப்பெண் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், மருத்துவப் பரிசோதனையில் அந்தப் பெண் ஐந்து மாத கர்ப்பிணி என்பது தெரியவந்துள்ளது. 14 வயது சிறுவன் தான் அந்த குழந்தையின் தந்தை என்று அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய போலீசார், "தனக்கும் அந்த சிறுவனுக்கும் சிறந்த வாழ்க்கை அமைய, கருவை கலைக்க அப்பெண் விருப்பம் தெரிவித்துள்ளார். நீதிமன்றம் அனுமதி அளித்தவுடன் கருவை கலைக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம். கருக்கலைப்புக்குப் பிறகு டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்படும்" என்று தெரிவித்தனர்.
- போரில் இதுவரை சுமார் 150,000 மக்கள் இறந்துள்ளனர். போரில் ஏற்பட்ட பஞ்சத்தால் 11 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
- மறுத்ததால் தன்னை ராணுவ வீரர்கள் சித்திரவதை செய்து தனது கால்களை எரித்ததாக பெண் ஒருவர் கூறுகிறார்.
உள்நாட்டுப் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடான சூடானில் தினமும் பெண்கள் ராணுவ வீரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட வரிசையில் நிற்கின்றனர். அவ்வாறு செய்தால் மட்டுமே தங்களது குடும்பத்துக்கு தேவையான உணவும் அத்தியாவசிய பொருட்களும் அவர்களுக்கு கிடைக்கிறது .
இதுகுறித்து கார்டியன் இதழ் வெளியிட்டுள்ள செய்தியில், பஞ்சத்தை சமாளிக்க நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் பதப்படுத்தப்பட்டு இருப்பு வைக்கபட்டுள்ள நிலையில் அங்கு தங்களின் குடும்பத்துக்கு தேவையான உணவை பெற்றுக்கொள்ள வரும் பெண்கள் ராணுவ வீரர்காளால் இந்த வன்கொடுமைகளுக்கு ஆளாக்கி வருகின்றனர்.
சூடான் ராணுவத்தின் இருவேறு பிரிவுகளான SAF மற்றும் RSF ஆகிய படைகளுக்கிடையே கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட மோதல் உள்நாட்டுப் போராக வெடித்தது. இந்த போரில் இதுவரை சுமார் 150,000 மக்கள் இறந்துள்ளனர். போரில் ஏற்பட்ட பஞ்சத்தால் 11 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
RSF ராணுவ வீரர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள பெண்கள் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிவருவதாக அப்பெண்கள் பலர் கார்டியன் இதழ் கள செய்தியாளர் குழுவிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
தங்களின் குழந்தைகளுக்கு உணவளிப்பதற்கு வேறு வழி தங்களுக்கு தெரியவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். போரினால் கைவிடப்பட்ட வீடுகளில் முகாமிட்டுள்ள ராணுவ வீரர்கள் பெண்களை வரிசையில் நிறுத்தி பாலியல் வன்புணர்வு செய்கின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறுகையில், தான் அதற்கு மறுத்ததால் தன்னை ராணுவ வீரர்கள் சித்திரவதை செய்து தனது கால்களை எரித்ததாக கூறுகிறார். கைவிடப்பட்ட வீடுகளில் உள்ள பொருட்களை எடுத்துச் சென்று விற்று அதன்மூலம் உணவு வாங்க வேண்டும் என்றால் ராணுவ வீரர்களின் நிர்பந்தத்துக்கு அடிபணித்த பிறகே அனுமதி கிடைக்கும் என்ற நிலை உள்ளது.
- ஓஷோ ஆசிரமத்தில் உள்ளவர்கள் உடலுறவு வைத்து கொள்வதை குழந்தைகள் தவறாமல் பார்க்க வேண்டும்.
- எனது 7 முதல் 11 வயதுவரை ஆசிரமத்தில் உள்ள வயது வந்த ஆண்களுடன் பாலியல் செயல்களைச் செய்ய நிர்பந்திக்கப்பட்டேன்.
இந்தியாவில் பிறந்து, தனது ஆன்மீக சொற்பொழிவுகளால் உலகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான மக்களை ஈர்த்தவர் ஓஷோ.
இந்தியாவில் ஆசிரமம் தொடங்கி பின்னர் அமெரிக்காவில் உள்ள ஓரேகானில் குடியேறி அங்கேயே ஒரு ஆசிரமத்தையும் அமைத்தார். பாலியல் சுதந்திரம் குறித்து ஓஷோவின் சொற்பொழிவுகள் மிக புகழ்பெற்றவை.
இந்நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த 54 வயதான பிரேம் சர்கம் என்ற பெண் ஓஷோவின் ஆசிரமத்தில் 50க்கும் மேற்பட்ட முறை பலாத்தகாரம் செய்யப்பட்டேன் என்று பரபரப்பு குற்றசாட்டை கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய பிரேம் சர்கம், 6 வயதில் எனது தந்தையுடன் இங்கிலாந்தில் இருந்து புனேவில் உள்ள ஓஷோவின் ஆசிரமத்தில் சேர்ந்தேன்
ஆசிரமத்தில் உள்ளவர்கள் உடலுறவு வைத்து கொள்வதை குழந்தைகள் தவறாமல் பார்க்க வேண்டும் என்றும் பெண்கள், பருவமடைந்தவுடன் பாலியல் வழிகாட்டுதலுக்காக வயது வந்த ஆண்களைத் தேட வேண்டும் என்று கற்பிக்கப்பட்டது.
தன்னுடைய 7 வயதில் முதல்முறையாக பாலியல் தொல்லைகளுக்கு ஆளானேன். எனது 7 முதல் 11 வயதுவரை ஆசிரமத்தில் உள்ள வயது வந்த ஆண்களுடன் பாலியல் செயல்களைச் செய்ய நிர்பந்திக்கப்பட்டேன். 12 வயதில் பலாத்காரம் செய்யப்பட்டேன்.
பின்னர் புனேவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்று ஒரேகானில் உள்ள ஒரு ஆசிரமத்தில் தாயுடன் சேர்ந்தேன். அங்கு குறைந்தது 50 முறைக்கு மேல் பலாத்காரம் செய்யப்பட்டேன். 16 வயதில் தான் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து எனக்கு புரிந்தது
ஓஷோ ஆசிரமத்தில் பாலியல் ரீதியாக சுரண்டப்பட்ட 2 பிரிட்டிஷ் பெண்களின் கதையுடன் என்னுடைய கதையையும் சேர்த்து எடுக்கப்பட்டுள்ள சில்ட்ரன் ஆஃப் தி கல்ட் ஆவணப் படம் விரைவில் வெளியாகவுள்ளது. எனக்கும், என்னைப் போன்றவர்களுக்கும் என்ன நடந்தது என்பதை உலகம் அறிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த தம்பதி காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானியிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17-ந் தேதி எங்கள் பகுதியைச் சேர்ந்த வேளாங்கண்ணி மற்றும் அவரது நண்பரான அற்புதராஜ் ஆகியோர் எங்கள் வீட்டிற்கு வந்து எங்களின் 16 வயது மகளை சென்னையில் உள்ள தங்களது வீட்டுக்கு வேலை செய்ய அனுப்பி வைக்குமாறு கேட்டனர்.
ஆனால் நாங்கள் வீட்டு வேலைக்கு அனுப்ப முடியாது எனக் கூறி விட்டோம். மீண்டும் சில நாட்கள் கழித்து வந்த அவர்கள் வீட்டு வேலைக்கு மகளை அனுப்புமாறும் வேலை பிடிக்கவில்லை என்றால் அவளை திருப்பி அனுப்பி விடுவதாகவும் கூறினர்.
இதனை நம்பி நாங்கள் எங்களது மகளை அவர்களுடன் அனுப்பி வைத்தோம்.
இந்நிலையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட எங்கள் மகளை ஊருக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டோம். அப்போது வேண்டும் என்றால் நீயே வந்து அழைத்துச் செல் என்று வேளாங்கண்ணியும், அற்புத ராஜூம் அலட்சியமாகக் கூறினர்.
தொடர்ந்து வற்புறுத்தியதால் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி எங்களது மகளை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர். பின்னர் 2 நாட்கள் கழித்து மீண்டும் மகளை அழைத்துச் செல்ல அவர்கள் வந்தனர். ஆனால் எங்கள் மகள் அவர்களுடன் செல்ல மாட்டேன் என்று அழுதபடி கூறினார்.
இதுபற்றி மகளிடம் கேட்ட போது, வேளாங்கண்ணி மற்றும் அற்புதராஜ் ஆகியோர் தன்னை சென்னை, செங்கல்பட்டு, வடபழனி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று மிரட்டி பலர் மூலம் பாலியல் வன்கொடுமை செய்தனர். அதனை செல்போனிலும் படம் பிடித்து மிரட்டினர்.
இதுபற்றி பெற்றோரிடம் கூறினால் ஆபாச வீடியோவை வெளியிடுவதோடு பெற்றோரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினர் என்று தெரிவித்தாள்.
மகளுக்கு அற்புதராஜ் போதை மருந்து கொடுத்து சுய நினைவு இழக்கச் செய்து இரவு பகல் பாராமல் பலரால் பாலியல் பலாத்காரம் செய்ய வைத்துள்ளார். மகளுக்கு நடந்த கொடுமைக்கு காரணமாக இருந்த அற்புதராஜ் மற்றும் வேளாங்கண்ணி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
சிறுமியை அற்புதராஜும், வேளாங்கண்ணியும் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்று பலருக்கு பாலியல் விருந்து படைத்துள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்புகளில் பல நாட்கள் தங்க வைத்து சிறுமிக்கு பாலியல் கொடுமை நடந்துள்ளது.
சுமார் 100-க்கும் மேற்பட்டோருடன் அவர்கள் சிறுமியை நெருக்கமாக இருக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த காட்சிகள் அனைத்தையும் அவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து உள்ளனர்.

எந்தெந்த இடங்களுக்கு அழைத்து சென்றனர் என்பது குறித்து சிறுமியிடம் கேட்டறிந்து வருகின்றனர். இதில் வடபழனியை சேர்ந்த 65 வயது முதியவர் உள்பட பலர் உள்ளனர்.
சிறுமியின் புகார் பற்றி அறிந்ததும், அற்புதராஜும், வேளாங்கண்ணியும் தலைமறைவாகி விட்டனர். வேளாங்கண்ணிக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. அவரது கணவர் தற்போது அவருடன் இல்லை. இதையடுத்து வேளாங்கண்ணி காதலனான அற்புதராஜுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.
தப்பிஓடிய அவர்கள் 2 பேரும் சிக்கினால்தான் அவர்களுடன் தொடர்புடையவர்கள் யார் என்ற விவரம் தெரிய வரும்.
காஞ்சிபுரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி ஒருவர் ஆட்டோ டிரைவர்களால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு 8 வயது சிறுமி ஓட்டல் தொழிலாளியால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.
தற்போது காஞ்சிபுரம் அருகே 16 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்காளம் மாநிலம், ஹூக்லி மாவட்டத்தை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க பெண், தான் மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் போது ஒரு கும்பல் தவறான வார்த்தைகளில் தன்னிடம் பேசி தகாத முறையில் நடந்துகொண்டதாக அளித்த புகாரின் அடிப்படையில் 10 பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண் பயணித்த மெட்ரோ ரெயில் பெட்டியில் யாரும் இல்லாத நிலையில் எஸ்ப்லாண்ட் ரயில் நிலையத்தில் 10 பேர் கொண்ட கும்பல் ரெயிலில் ஏறியுள்ளனர். யாரும் இல்லாததை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கும்பல் அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தது மட்டுமல்லாமல் உடல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.
பின்னர் மகானாயக் ரெயில் நிலையத்தில் அந்த பெண் ரெயிலை விட்டு இறங்கிய பின்னரும் அவர்கள் பின் தொடர்ந்துள்ளனர். இதனால் அங்கிருந்த ரெயில்வே போலீசாரிடம் அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் அவர்கள் 10 பேரும் கைது செய்யப்பட்டனர் என போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து ரெயில்வே போலீசார் அவர்களை மாநில போலீசாரிடம் ஒப்படைத்தனர், அந்த 10 பேர் மீதும் ஐ.பி.சி பிரிவு 354, 354பி, 509-ன் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். #Womanmolested
அரியானா மாநிலம், கைதால் மாவட்டத்தில் உள்ள சர்பஞ் எனும் கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி மற்றும் அவரது தாயாரை 7 போலீசார் உள்பட 18 பேர் சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்ததாக சிறுமி புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி(16) காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் அவர்கள் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
துணை காவல் ஆய்வாளர் ஒருவருடன் சேர்ந்து தலைமை காவலர் மற்றும் காவலர் அந்தஸ்தில் உள்ள 7 போலீஸ் அதிகாரிகள் கடந்த மாதம், தாயை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். மேலும், அவரது மகளையும் சீரழித்துள்ளனர். பின்னர் இன்னும் 9 பேர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டனர் என சிறுமியின் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க டிஎஸ்பி தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் அரியானா மாநிலத்தில், சி.பி.எஸ்.சி. தேர்வில் முதலிடம் பிடித்து ஜனாதிபதியிடம் விருது பெற்ற 19 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் தாயையும் மகளையும் போலீஸ் அதிகாரிகளே வன்புணர்வு செய்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #POCSO
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 23 வயது இளம் பெண்ணை அவரது தந்தைக்கு ஆபத்து எனக்கூறி, காரில் இருவர் கடத்திச் சென்றுள்ளனர். ஹரித்வாரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த பெண் இருவராலும் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக பெண் அளித்த புகாரில், பாரதீய கிசான் யூனியன் இளைஞர் அமைப்பின் தலைவர் வினோத் நிர்வால் மற்றும் அவரது நண்பர் ஜஹித் ஹசா ஆகியோர் இணைந்து தம்மை பாலியல் வன்புணர்வு செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் இருவரையும் தேடி வருகின்றனர். #UttarPradesh
இந்தியாவில் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு வழிகளை கையாண்டாலும் கட்டுக்கடங்காமல் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.
அதன்படி, இந்தியாவின் தலைநகர் டெல்லியின் கோலே மார்க்கெட் பகுதியில் இயங்கிவரும் மாநகராட்சி பள்ளியில் பயின்று வரும் 6 வயது சிறுமி, அந்த பள்ளியின் கடைநிலை ஊழியர் ஒருவரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக நடந்தவற்றை தனது பெற்றோரிடம் அந்த சிறுமி தெரிவிக்க அவர்கள் உடனடியாக சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதும், உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து பள்ளிக்கு வெளியே திரண்ட பெற்றோர்கள் குற்றவாளியை கைது செய்யுமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த புகாரின் அடிப்படையில் அந்த நபரை கைது செய்த போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
6 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனையை 6 மாதத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் என இந்த சம்பவம் குறித்து டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மலிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இதுதொடர்பாக தலைமை செயலாளர், டெல்லி அரசு மற்றும் டெல்லி போலீஸ் கமிஷ்னர் ஆகியோர் 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #Delhi #NationalHumanRightsCommission






