என் மலர்
நீங்கள் தேடியது "woman molested"
- தான் வழக்கமாக சூதாடும் இடத்திற்கு சென்ற அவரிடம் அன்று பணம் இல்லை.
- பணயமாக வைத்த மனைவியை கொண்டு சென்று தோற்றவர்களிடம் ஒப்படைத்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்தவர் டேனிஷ். இவருக்கும் பாக்தாத் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.
டேனிஷ் குடிப்பழக்கத்திற்கும் சூதாட்டத்திற்கும் அடிமையாகி இருந்தார். எப்போதும் சூதாட்டம் ஆடிக் கொண்டுதான் இருப்பார். சூதாட்டத்தில் பணம், பொருட்களை நிறைய இழந்துள்ளார்.
இந்த நிலையில் தன் மனைவியிடம் அவரது வீட்டிற்கு சென்று நகை, பணம் வாங்கி வரச்சொல்லி கட்டாயப்படுத்தினார். அவர் வாங்கி வரவில்லை. தான் கேட்டும் நகை, பணம் வாங்கி வராததால் மனைவி மீது டேனிஷ் ஆத்திரத்தில் இருந்தார்.
தான் வழக்கமாக சூதாடும் இடத்திற்கு சென்ற அவரிடம் அன்று பணம் இல்லை. ஆனால் சூதாடாமல் அவரால் இருக்க முடியவில்லை. அப்போது என்ன செய்யலாம் என்று யோசித்த அவர் பணத்திற்கு பதிலாக தனது மனைவியை பணயமாக வைத்து சூதாடினார். துரதிர்ஷ்டவசமாக அன்று அவர் சூதாட்டத்தில் தோற்று போனார். இதனால் அவர் தனது மனைவியை இழக்க நேரிட்டது. பணயமாக வைத்த மனைவியை கொண்டு சென்று தோற்றவர்களிடம் ஒப்படைத்தார்.
சூதாட்டத்தில் வெற்றி பெற்ற 8 பேர் கும்பல் அவரது மனைவியை பாலியல் ரீதியாக துன்புறுத்த தொடங்கினர். இதனை கணவரிடம் கூறியும் அவர் செவி சாய்க்கவில்லை. இதையடுத்து அந்த 8 பேர் கும்பலும் அவரது மனைவியை கட்டாயப்படுத்தி மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்தனர். இதில் அந்த பெண் பலவீனம் அடைந்தாள்.
அந்த 8 பேர் கும்பலுடன் சேர்ந்து டேனிசும் அவரது மனைவியை துன்புறுத்தி அவரை ஆற்றில் தூக்கி வீசினார். நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பெண்ணை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டனர்.
இதையடுத்து அவர் தனக்கு நடந்த கொடுமை குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அந்த புகாரில் தனது மாமனார் மற்றும் மேலும் 2 பேரும் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். மேலும் வரதட்சணை கேட்டு மாமியார் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன், தப்பி ஓடிய வாலிபர்களை தேடி வந்தனர்.
- சுந்தரவேல் தாக்கியதில் காயமடைந்த 2 காவலர்கள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பண்ருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவர் நேற்று மதியம் 3 மணி அளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக அதே பகுதியில் உள்ள சவுக்கு தோப்புக்கு சென்றார். அப்போது அங்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க 4 பேர் கொண்ட கும்பல் திடீரென அந்த மூதாட்டியை தாக்கினர். பின்னர் அவர்கள் மூதாட்டியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதில் மூதாட்டியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மூதாட்டி அணிந்திருந்த ¾ பவுன் நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து அந்த கும்பல் தப்பி சென்றது.
இதற்கிடையே அந்த வழியாக சென்ற பொதுமக்கள், மூதாட்டி காயமடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவர்கள், மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன், தப்பி ஓடிய வாலிபர்களை தேடி வந்தனர்.
இந்தநிலையில் வழக்கில் தொடர்புடைய சுந்தரவேல் என்பவரை போலீசார் சுட்டுப்பிடித்தனர். காடாம்புலியூரில் பதுங்கியிருந்த சுந்தரவேல் தப்ப முயன்றபோது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி அவரை பிடித்தனர்.
சுந்தரவேல் தாக்கியதில் காயமடைந்த 2 காவலர்கள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- நாளுக்குநாள் 2 வாலிபர்களின் தொல்லை அதிகரிக்கவே பெண் கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்தார்.
- புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து எழில்பரதன் மற்றும் அவரது நண்பரை தேடிவந்தனர்.
வானூர்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து, தனது 3 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார்.
அந்த பெண் கோட்டக்குப்பம் அருகே சின்னமுதலியார் சாவடியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும், புதுச்சேரி காலாப்பட்டு பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
சம்பவத்தன்று கள்ளக்காதல் ஜோடி மரக்காணம் அருகே உள்ள தைலமர தோப்பில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு மரக்காணம் பகுதியை சேர்ந்த எழில் பரதன் மற்றும் அவரது நண்பரும் அங்கு வந்தனர்.
பின்னர் அந்த வாலிபர்கள் 2 பேரும் அந்த பெண்ணை மிரட்டி கூட்டுபாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அதனை செல்போனில் வீடியோவும் பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தை வெளியே கூறினால் உன்னையும், உனது குடும்பத்தையும் கொலை செய்து விடுவோம் என அந்த பெண்ணை மிரட்டினர். இதனால் பயந்துபோன அந்த பெண், தனக்கு நடந்த கொடுமையை யாரிடமும் சொல்லவில்லை.
இதை சாதகமாக பயன்படுத்திய, எழில் பரதன் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விடுவதாக மிரட்டி, அந்த பெண்ணை தனியாக வரவழைத்து அடிக்கடி பாலியல் பாலாத்காரம் செய்து, பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அந்த பெண் பணம் கொடுக்காததால் ஆபாச வீடியோவை எழில்பரதன் வாட்ஸ்-அப்பில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.
நாளுக்குநாள் அவர்களின் தொல்லை அதிகரிக்கவே அந்த பெண் கோட்டக்குப்பம் போலீசில் இது தொடர்பாக புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து எழில்பரதன் மற்றும் அவரது நண்பரை தேடிவந்தனர்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை சந்தேகத்தின் அப்படையில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெண் அளித்த புகாரின் பேரில் திருவனந்தபுரம் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- பெண்ணின் ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் பரப்பியதாக மேலும் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-
திருவனந்தபுரத்தை அடுத்த அருவிக்கரை பகுதியை சேர்ந்த லஞ்ச ஒழிப்பு துறையில் போலீஸ்காரராக பணிபுரியும் சாபு பணிக்கர் (48) என்பவருடன் தனக்கு பழக்கம் ஏற்பட்டது.
அப்போது அவர் வீட்டில் நான் தனியாக இருந்த போது என்னை ஆபாச படம் எடுத்தார். அதனை காட்டி என்னை அடிக்கடி மிரட்டி வந்தார்.
பின்னர் ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் பரப்பி விடுவேன் என மிரட்டி வெளியூர்களுக்கு அழைத்து சென்றார். அங்கு லாட்ஜில் தங்க வைத்து என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.
கடந்த 7 ஆண்டுகளாக அவர் தொடர்ந்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். தற்போது நான் அவரின் பேச்சுக்கு உடன்படவில்லை. இதனால் அவர் எனது ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என புகாரில் கூறியிருந்தார்.
இதையடுத்து திருவனந்தபுரம் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீஸ்காரர் சாபு பணிக்கர் கைது செய்யப்பட்டார்.
மேலும் பெண்ணின் ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் பரப்பியதாக மேலும் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
- கணவர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால், இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிக்க கடந்த மே மாதம் இன்ஸ்பெக்டர் சுனுவை சந்தித்தேன்.
- இன்ஸ்பெக்டர் வீட்டில் வைத்தும் கடவந்திரா என்ற இடத்தில் வைத்தும் சுனு உள்பட 6 பேர் சேர்ந்து பலாத்காரம் செய்தனர்.
திருவனந்தபுரம்:
ஊட்டிக்கு சிறுமியை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போது அவளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கேரளா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், பாலியல் வழக்கில் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
கேரள மாநிலம் கொச்சிமரடு பகுதியைச் சேர்ந்தவர் சுனு. கோழிக்கோடு கடலோர போலீஸ் இன்ஸ்பெக்டராக உள்ள இவர் மீது தான் பாலியல் பலாத்கார புகார் எழுந்துள்ளது. கொச்சி திருகாக்கரை பகுதியைச் சேர்ந்த பெண் இந்த புகாரை கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். புகாரில் அந்தப் பெண் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால், இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிக்க கடந்த மே மாதம் இன்ஸ்பெக்டர் சுனுவை சந்தித்தேன். அப்போது அவர் தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என மிரட்டினார்.
தொடர்ந்து அவரது வீட்டில் வைத்தும் கடவந்திரா என்ற இடத்தில் வைத்தும் சுனு உள்பட 6 பேர் சேர்ந்து பலாத்காரம் செய்தனர். அவரது மிரட்டலுக்கு பயந்து அப்போது புகார் செய்யவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
இதுகுறித்து திருகாக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அவர்கள் நேற்று, கோழிக்கோடு சென்று இன்ஸ்பெக்டர் சுனுவை கைது செய்தனர். இளம்பெண்ணின் கணவரது நண்பர், கோவில் ஊழியர் உள்பட 3 பேரை வழக்கு தொடர்பாக போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைதான இன்ஸ்பெக்டர் சுனு, எர்ணா குளம் முளவு காடு இன்ஸ்பெக்டராக இருந்த போது, பி.டெக் மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சப்-இன்ஸ்பெக்டர் ராதா உள்பட 5 போலீசார் அடங்கிய குழு அங்குள்ள ஒரு விடுதியில் பதுங்கி இருந்த சுரேசை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
- போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் பணத் தேவைக்காக இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.
அம்பத்தூர்:
செங்குன்றம் அடுத்த சோழவரம் பகுதியை சேர்ந்தவர் டெய்சி(42).
இவர் அப்பகுதியில் உள்ள மகளிர் குழுக்களுக்கு கடன் வாங்கித் தருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். கணவனை இழந்த டெய்சி அருகில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் பணியாற்றி வந்தார்.
அதே ஓட்டலில் வேலை செய்த நபரின் மூலம் மதுராந்தகம் பகுதியை சேர்ந்த ஓட்டல் ஊழியர் சுரேஷ் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது.
அவரும் அந்த குழுவில் இணைந்ததால் டெய்சி அவருக்கு கடன் கொடுத்து உள்ளார். சில தவணைகளை கட்டிய அவர் மீதமுள்ள தவணையை செலுத்தாமல் இருந்துள்ளார்.
இதனையடுத்து அவரிடம் தவணையை கட்டுமாறு பல முறை டெய்சி கூறியுள்ளார். இந்நிலையில் 3 மாதங்களுக்கு முன்பு சுரேஷ் மொத்த தவணையையும் கட்டுவதாகவும் சோழவரம் பெரியார் நகரில் தான் தங்கியுள்ள அறைக்கு வந்து வாங்கி கொள்ளுமாறும் அழைத்துள்ளார்.
இதனை நம்பி அங்கு வந்த டெய்சிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தார். இதனை அவரின் செல்போனில் வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார்.
பின்னர் அதனை காட்டி பலமுறை டெய்சியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். அவரிடம் அடிக்கடி பணம் கேட்டும் மிரட்டியுள்ளார்.
இதற்கு டெய்சி மறுக்கவே அந்த வீடியோவை டெய்சியின் மகனுக்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து டெய்சி கடந்த 5-ந்தேதி அம்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி லட்சுமி, தலைமறைவான சுரேசை தேடிவந்தார். நேற்று காலை செல்போன் டவர் மூலம் அவர் ரெட்டேரி பகுதியில் பதுங்கி இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் ராதா உள்பட 5 போலீசார் அடங்கிய குழு அங்குள்ள ஒரு விடுதியில் பதுங்கி இருந்த சுரேசை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பின்னர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் அவர் பணத் தேவைக்காக இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.
மேலும் அவர் வீடியோ எடுத்த செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- செந்தில்குமார் அந்த பெண்ணிடம் உன்னை நேரில் பார்க்க ஆசையாக இருக்கிறது, கோவை எப்போது வருவீர்கள் என்று கேட்டு உள்ளார்.
- செந்தில்குமார் தனது பிறந்தநாளுக்கு காதலியை கோவைக்கு வருமாறு கூறினார்.
கோவை:
கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 24). இவருக்கும், மும்பையை சேர்ந்த 27 வயதான பெண்ணுக்கும் முகநூல் மூலம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நட்பு ஏற்பட்டது. இதனால் 2 பேரும் தங்கள் செல்போன் எண்களை பறிமாறிக்கொண்டு அடிக்கடி பேசினார்கள்.
இதனால் அவர்களுக்குள் இருந்த நட்பு காதலாக மாறியது. இதையடுத்து 2 பேரும் செல்போன் மூலம் தினமும் பேசிக்கொண்டனர். அத்துடன் வீடியோ கால் மூலமாகவும் அடிக்கடி பேசி வந்தனர். இதற்கிடையே செந்தில்குமார் அந்த பெண்ணிடம் உன்னை நேரில் பார்க்க ஆசையாக இருக்கிறது, கோவை எப்போது வருவீர்கள் என்று கேட்டு உள்ளார்.
அதற்கு அந்த பெண், முக்கியமான நிகழ்ச்சி என்றால் சொல்லுங்கள் நான் வருகிறேன் என்று கூறியதாக தெரிகிறது. இந்தநிலையில் செந்தில்குமாரின் பிறந்தநாள் வந்தது. இதற்காக அவர் தனது காதலியை கோவைக்கு வருமாறு கூறினார். இதையடுத்து பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக அந்த பெண் விமானம் மூலம் கோவை வந்தார்.
பின்னர் 2 பேரும் பல இடங்களுக்கு சுற்றி பேசி மகிழ்ச்சியாக இருந்தனர். இரவில் அந்த பெண்ணை செந்தில்குமார், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்க வைத்தார். அப்போது அவர் அந்த பெண்ணிடம் நான் உன்னைதான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஆசைவார்த்தை கூறி அவரை பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
அத்துடன் அவர் அந்த பெண்ணிடம் இருந்து பல்வேறு கட்டங்களாக ரூ.70 ஆயிரத்தையும் பெற்றார். பின்னர் அவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவில்லை. அத்துடன் அவர் அந்த பெண்ணிடம் பேசுவதையும் தவிர்த்து வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் வேறு செல்போன் எண்ணில் இருந்து செந்தில்குமாருக்கு தொடர்பு கொண்டு பேசினாலும் அவர் பேசவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கோவை மாநகர் மேற்கு பகுதி மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் செந்தில்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இளம்பெண்ணும், மலையூரை சேர்ந்த வாலிபர் ஒருவரும் நண்பர்களாக பழகி உள்ளனர்.
- வாலிபரும், இளம்பெண்ணும் நேற்று இரவு செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து மாம்பாக்கம் பகுதிக்கு தனியாக சென்றதாக தெரிகிறது.
செங்கல்பட்டு:
சென்னை சைதாப்பேட்டையில் தங்கி 21 வயது இளம்பெண் வேலை பார்த்து வருகிறார். இவரது சொந்த ஊர் பெரம்பலூர் மாவட்டம் ஆகும்.
இந்த நிலையில் நேற்று இரவு அவர் செங்கல்பட்டு அருகே உள்ள சாலவாக்கம் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் தன்னை 4 பேர் கும்பல் கற்பழித்துவிட்டதாக அங்கிருந்த பொதுமக்களிடம் தெரிவித்தார்.
மேலும் இதுபற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் புகார் தெரிவித்தார். இதுபற்றி அறிந்ததும் சாலவாக்கம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது இளம்பெண் போலீசாரிடம் கூறும்போது, செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து சைதாப்பேட்டை செல்வதற்காக காத்திருந்தேன். அப்போது அங்குவந்த 4 பேர் என்னை மிரட்டி வலுக்கட்டாயமாக கடத்தி சென்றனர். பின்னர் அவர்கள் கூட்டு பலாத்காரம் செய்து தப்பி ஓடிவிட்டனர் என்று கூறினார்.
இதையடுத்து போலீசார் இளம்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரிடம் மேலும் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக கூறிவருகிறார். இதனால் போலீசார் கற்பழிப்பு குற்றம் நடந்ததா? என்ற முடிவுக்கு வரமுடியாமல் குழப்பத்தில் உள்ளனர்.
அந்த இளம்பெண்ணும், மலையூரை சேர்ந்த வாலிபர் ஒருவரும் நண்பர்களாக பழகி உள்ளனர். நேற்று இரவு அவர்கள் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து மாம்பாக்கம் பகுதிக்கு தனியாக சென்றதாக தெரிகிறது. அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இளம்பெண் தனது நண்பர் உள்ளிட்ட 4 பேர் கற்பழித்ததாக குற்றம் சாட்டி உள்ளார்.
இதுதொடர்பாக சாலவாக்கம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செங்கல்பட்டு ரெயில் நிலையம் மற்றும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.
மேலும் இளம்பெண்ணும் தொடர்பில் இருந்த வாலிபர் மற்றும் அவரது நண்பர்கள் குறித்தும் தகவல்களை சேகரித்து வருகிறார்கள். இளம்பெண் எதற்காக செங்கல்பட்டு வந்தார் என்றும் விசாரணை நடக்கிறது.
பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னைக்கு செல்வதற்காக செங்கல்பட்டு ரெயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த இளம்பெண், 4 பேர் கொண்ட கும்பலால் மகிழுந்தில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
ரெயில் நிலையத்தில் இளம்பெண்ணை கடத்தி, பல கிலோமீட்டர் தொலைவுக்கு கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறது என்றால், அதற்கு பாதுகாப்பு குறைபாடுகள் தான் காரணம். இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.
பாலியல் வன்கொடுமை செய்தால், மிகக்குறைந்த காலத்தில் மிகக் கடுமையாக தண்டிக்கப்படுவோம் என்ற அச்சம் குற்றவாளிகளுக்கு இல்லாதது தான் இத்தகைய குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணம் ஆகும். பாலியல் குற்ற வழக்குகளில் விரைவாக தீர்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். பொது இடங்களிலும், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளிலும் காவல்துறை பாதுகாப்பை வலுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- திருமணம் செய்து கொள்வதாக தன்னை ஏமாற்றி வாலிபர் மணியரசு கற்பழித்ததாக தனது குற்றச்சாட்டில் பெண் கூறியுள்ளார்.
- தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சட்ட பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வரும் 27 வயது பெண் அங்கு பணிபுரியும் வாலிபர் மீது கற்பழிப்பு புகார் அளித்துள்ளார்.
திருமணம் செய்து கொள்வதாக தன்னை ஏமாற்றி வாலிபர் மணியரசு கற்பழித்ததாக தனது குற்றச்சாட்டில் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட லைலாவின் உடல் நிலை மேலும் மோசமடைந்தது.
- லைலாவை டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.
திருவட்டார்:
திருவட்டாரை அடுத்த மூவாற்று முகம் பகுதியை சேர்ந்தவர் எட்வின் (வயது 28). டிப்ளமோ என்ஜினீயர்.
எட்வினின் தந்தை இறந்து விட்டார். அதன்பின்பு எட்வின் தாயாருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இவர்களின் பக்கத்து வீட்டில் உறவினர் கமலதாஸ் வசித்து வருகிறார்.
கமலதாசின் மனைவி லைலா( 47). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி விட்டது. இதனால் அவர்கள் கணவர் வீட்டில் வசித்து வருகிறார்கள். இவர்களின் மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் வீட்டில் கமலதாசும், அவரது மனைவி லைலாவும் மட்டுமே இருந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் லைலா தலையில் காயங்களுடன் மயங்கி கிடந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.
இந்த சம்பவம் குறித்து கமலதாஸ் திருவட்டார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கமலதாஸ், வீட்டில் இல்லாத போது அவரது உறவினர் எட்வின், லைலா வீட்டிற்கு சென்று வந்தது தெரியவந்தது. எட்வினை தேடிய போது அவர் தலைமறைவாகி இருந்தார்.
இதற்கிடையே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட லைலாவின் உடல் நிலை மேலும் மோசமடைந்தது. அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.
அப்போது ஏற்பட்ட தகராறில் லைலா தலையில் தாக்கப்பட்டு மயக்கம் அடைந்துள்ளார் என்று டாக்டர்கள் கூறினர். லைலாவை பாலியல் பலாத்காரம் செய்து, தாக்கியது யார்? என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் லைலாவின் பக்கத்து வீட்டில் வசித்த உறவுக்கார வாலிபர் எட்வின் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் எட்வினை ஆற்றூர் கழுவன்திட்டை பகுதியில் வைத்து பிடித்தனர்.
பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் லைலாவை தாக்கி, பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார்.
லைலாவின் கணவர் வீட்டில் இல்லாத போது அவர் படுக்கை அறையை எட்டிப்பார்ப்பேன். அங்கு அவர் தூங்கும் அழகை ரசிப்பேன். இதனை ஒருநாள் லைலா பார்த்து விட்டார். இதுபற்றி அவர் எனது தாயாரிடம் கூறி என்னை அவமானப்படுத்தினார்.
இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை தாக்கி, பாலியல் பலாத்காரம் செய்தேன், என்றார்.
போலீசார் எட்வினை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இதற்கிடையே ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த லைலா, சிகிச்சை பலன் இன்றி நேற்று நள்ளிரவு பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இது தொடர்பாக எட்வினை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
- சுரேந்தர் இளம்பெண்ணை தனியாக சந்தித்து அவரது திருமணத்தின்போது வசூலான ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மற்றும் 11 பவுன் நகை ஆகியவற்றை தர வேண்டும்.
- இல்லையென்றால் தன்னுடன் இருந்த வீடியோவை வலைதளங்களில் பரப்பி விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
அருப்புக்கோட்டை:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ரெட்டியார்பட்டி லட்சுமியாபுரத்தை சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் கல்லூரியில் பி.எட்., 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
அப்போது அவருக்கும், அதே பகுதியில் மரக்கடை நடத்தி வரும் சுரேந்தர் (வயது27) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சுரேந்தர், கம்ப்யூட்டர் தொடர்பான சில தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறி இளம்பெண்ணை தனது கடைக்கு அழைத்துள்ளார்.
அதனை நம்பி கடைக்கு சென்ற இளம்பெண்ணுக்கு குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். அதனை குடித்து மயக்கமடைந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதனை வீடியோவாக எடுத்து வைத்து கொண்டு இளம்பெண்ணை மிரட்டி அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இதுபற்றி இளம்பெண் தனது தாயிடம் தெரிவித்ததால் அவர் தாய்மாமனுக்கு மகளை திருமணம் செய்து வைத்துள்ளார். இதைத்தொடர்ந்து சுரேந்தர் இளம்பெண்ணை தனியாக சந்தித்து அவரது திருமணத்தின்போது வசூலான ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மற்றும் 11 பவுன் நகை ஆகியவற்றை தர வேண்டும். இல்லையென்றால் தன்னுடன் இருந்த வீடியோவை வலைதளங்களில் பரப்பி விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் பயந்து போன அந்த பெண் நகை மற்றும் பணத்தை கொடுத்துள்ளார். அப்போது சுரேந்தர் அந்த பெண்ணிடம் ரூ. 20 பத்திரத்தில் சில உறுதி மொழிகளை எழுதி வாங்கியுள்ளார். மேலும் இளம்பெண்ணை தர்மபுரி மற்றும் கரூர் மாவட்டங்களுக்கு அழைத்துச்சென்று அங்கும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது தொடர்பாக மாயமான இளம்பெண்ணின் தாய் ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதிகள் இதுகுறித்து எம்.ரெட்டியாபட்டி போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட்டனர். இந்தநிலையில் கடத்தப்பட்ட இளம்பெண், சுரேந்தர் பிடியில் இருந்து தப்பி தனது தாய் வீட்டிற்கு திரும்பி வந்துவிட்டார்.
இந்த நிலையில் சுரேந்தர் மாயமாகி விட்டதாக அவரது தந்தை எம்.ரெட்டியாபட்டி போலீசில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேந்தரை தேடி வருகின்றனர்.
- நெல்லூர் நகரப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
- தனியாக செல்லும் பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் நெல்லூரில் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு இளம்பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் ஆந்திரா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண். இவரது சகோதரிக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது.
இதற்காக நெல்லூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இளம்பெண்ணின் சகோதரியை சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு துணையாக இளம்பெண் ஆஸ்பத்திரியிலேயே தங்கி இருந்து கவனித்து வந்தார். நேற்று சகோதரிக்கு மருந்து வாங்கி வரும்படி தெரிவித்தனர்.
மருந்து கடைக்கு செல்வதாக கூறிவிட்டு இளம்பெண் ஆஸ்பத்திரியில் இருந்து புறப்பட்டார். அவர் நெல்லூர் காந்தி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பொதுமக்கள் நடமாட்டம் மிக குறைவாக இருந்தது.
இளம்பெண்ணை பின்தொடர்ந்து ஆட்டோவில் 4 பேர் கொண்ட கும்பல் வந்தனர்.
அவர்கள் இளம்பெண்ணின் அருகில் சென்று வழி கேட்பது போல பேச்சு கொடுத்தனர். அப்போது இளம்பெண் ஆட்டோவிற்கு அருகில் சென்று அவர்களிடம் பேசினார்.
அந்த நேரத்தில் ரோட்டில் மக்கள் நடமாட்டம் இல்லை. திடீரென ஆட்டோவில் இருந்த கும்பல் இளம்பெண்ணை இழுத்து ஆட்டோவில் தூக்கி போட்டனர்.
மேலும் அவர் சத்தம் போடாமல் இருக்க கைகளால் வாயை பொத்திக்கொண்டனர். கண்ணிமைக்கும் நேரத்தில் ஆட்டோ அங்கிருந்து புறப்பட்டது. நெல்லூர் அடுத்த கோலக சாலையில் இளம்பெண்ணை கடத்திச் சென்றனர்.
அங்குள்ள தனியார் பள்ளி அருகே பெரிய புதர் பகுதி உள்ளது. அந்த பகுதிக்கு இளம்பெண்ணை கொண்டு சென்றனர். அங்கு வைத்து 4 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை மாறி மாறி கற்பழித்தனர். அவர்கள் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது.
மேலும் இளம்பெண்ணை அவர்களது நண்பர்களுக்கும் விருந்தாக்க முடிவு செய்தனர்.
இளம்பெண்ணை கடத்தி வைத்திருப்பது குறித்து அவர்களது நண்பர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து அவரது நண்பர்கள் 5 பேர் காரில் அங்கு விரைந்து வந்தனர். அவர்களும் சேர்ந்து இளம்பெண்ணை கற்பழித்தனர்.
இதனால் வலி தாங்க முடியாமல் இளம்பெண் கதறி அழுதார்.
சத்தம் கேட்டு அந்தப்பகுதி வழியாக சென்ற சிலர் அங்கு வந்தனர். அவர்களை 9 பேர் கொண்ட கும்பல் மிரட்டி விரட்டி அடித்தனர்.
அவர்களிடம் இருந்து தப்பிய பொதுமக்கள் இதுகுறித்து வேட்டையப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அதற்குள் இளம்பெண்ணை அங்கேயே போட்டுவிட்டு கும்பல் ஆட்டோ மற்றும் கார்களில் தப்பி சென்று விட்டனர். போலீசார் புதர் பகுதியில் இருந்து இளம்பெண்ணை மீட்டனர். அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் கும்பலைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. நெல்லூர் நகரப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதில் ஆட்டோ மற்றும் கார்களின் பதிவு எண் கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது. அதனை வைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனியாக செல்லும் பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.






