search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hotel Employee Arrested"

    • கவுண்டம்பாளையத்தை சேர்ந்த 27 வயது வாலிபருடன் திருமணம் செய்வது என முடிவு செய்தனர்.
    • புகாரின் பேரில் போலீசார் 3 பேர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,:

    கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவர் கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    நான் கோவையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் உதவி மேலாளராக வேலை பார்த்து வருகிறேன். எனக்கு திருமணம் செய்து வைப்பதற்கு எனது பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி கவுண்டம்பாளையத்தை சேர்ந்த 27 வயது வாலிபருடன் திருமணம் செய்வது என முடிவு செய்தனர். அவர் மாலத்தீவில் உள்ள ஒரு ஓட்டலில் செப் ஆக வேலை பார்த்து வருகிறார். எங்களுக்கு இந்த ஆண்டு நவம்பர் 13-ந் தேதி நிச்சயம் செய்வது என முடிவு செய்தனர். அதன் பின்னர் நாங்கள் செல்போன் மூலமாக பேசி பழகி வந்தோம்.

    இந்தநிலையில் எனது வருங்கால கணவர் என்னை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11-ந் தேதி ஆனைக்கட்டிக்கு அழைத்து சென்றார். அங்குள்ள தங்கும் விடுதிக்கு நாங்கள் சென்றோம். அங்கு வைத்து அவர் மது குடித்தார். அப்போது என்னையும் மது குடிக்க வற்புறுத்தினார். ஆனால் நான் மது குடிக்க மறுத்து விட்டேன்.

    அப்போது எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அவர் என்னை சமாதானம் செய்தார். இதனை தொடர்ந்து நாங்கள் வீட்டிற்கு காரில் புறப்பட்டோம். அப்போது வரும் வழியில் அவர் காரை நிறுத்தினார். பின்னர் என்னை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இதன் விளைவாக நான் கர்ப்பமானேன். இதுகுறித்து நான் செல்போன் மூலமாக அவரிடம் தெரிவித்தேன். உடனடியாக என்னை திருமணம் செய்யும்படியும் கேட்டுக்கொண்டேன். அதற்கு அவர் இப்போது என்னால் உன்னை திருமணம் செய்ய முடியாது. எனவே நீ பப்பாளி, அன்னாச்சி பழங்களை சாப்பிட்டு கருவை கலைத்து விடு என கூறினார். இதனை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டு அவர் சொன்னபடி கருவை கலைத்தேன்.

    அதன்பிறகு அவர் ரூ.5 லட்சம் பணம் மற்றும் 10 பவுன் நகைகள் வரதட்சணையாக கொடுத்தால் தான் உன்னை திருமணம் செய்வேன் என கூறி விட்டார். இதற்கு அவரது தாய், தந்தை ஆகியோரும் உடந்தையாக இருந்தனர். எனவே என்னை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுக்கும் அவர் மீதும், அவரது பெற்றோர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அளித்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் போலீசார் 3 பேர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சப்-இன்ஸ்பெக்டர் ராதா உள்பட 5 போலீசார் அடங்கிய குழு அங்குள்ள ஒரு விடுதியில் பதுங்கி இருந்த சுரேசை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
    • போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் பணத் தேவைக்காக இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.

    அம்பத்தூர்:

    செங்குன்றம் அடுத்த சோழவரம் பகுதியை சேர்ந்தவர் டெய்சி(42).

    இவர் அப்பகுதியில் உள்ள மகளிர் குழுக்களுக்கு கடன் வாங்கித் தருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். கணவனை இழந்த டெய்சி அருகில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் பணியாற்றி வந்தார்.

    அதே ஓட்டலில் வேலை செய்த நபரின் மூலம் மதுராந்தகம் பகுதியை சேர்ந்த ஓட்டல் ஊழியர் சுரேஷ் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது.

    அவரும் அந்த குழுவில் இணைந்ததால் டெய்சி அவருக்கு கடன் கொடுத்து உள்ளார். சில தவணைகளை கட்டிய அவர் மீதமுள்ள தவணையை செலுத்தாமல் இருந்துள்ளார்.

    இதனையடுத்து அவரிடம் தவணையை கட்டுமாறு பல முறை டெய்சி கூறியுள்ளார். இந்நிலையில் 3 மாதங்களுக்கு முன்பு சுரேஷ் மொத்த தவணையையும் கட்டுவதாகவும் சோழவரம் பெரியார் நகரில் தான் தங்கியுள்ள அறைக்கு வந்து வாங்கி கொள்ளுமாறும் அழைத்துள்ளார்.

    இதனை நம்பி அங்கு வந்த டெய்சிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தார். இதனை அவரின் செல்போனில் வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார்.

    பின்னர் அதனை காட்டி பலமுறை டெய்சியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். அவரிடம் அடிக்கடி பணம் கேட்டும் மிரட்டியுள்ளார்.

    இதற்கு டெய்சி மறுக்கவே அந்த வீடியோவை டெய்சியின் மகனுக்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து டெய்சி கடந்த 5-ந்தேதி அம்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி லட்சுமி, தலைமறைவான சுரேசை தேடிவந்தார். நேற்று காலை செல்போன் டவர் மூலம் அவர் ரெட்டேரி பகுதியில் பதுங்கி இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் ராதா உள்பட 5 போலீசார் அடங்கிய குழு அங்குள்ள ஒரு விடுதியில் பதுங்கி இருந்த சுரேசை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    பின்னர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் அவர் பணத் தேவைக்காக இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.

    மேலும் அவர் வீடியோ எடுத்த செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 14 வயது சிறுமிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது.
    • சிறுமியை அவரது பெற்றோர் புதுவை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    சேதராப்பட்டு:

    புதுவை லாஸ்பேட்டை கருவடிக்குப்பத்தில் நரிக்குறவர்கள், பழங்குடியினர் வசித்து வருகின்றனர்.

    இவர்களில் ஒரு சிலர் கூலி வேலைக்காகவும், தாங்கள் தயாரித்த கைவினைப் பொருட்களை விற்பனை செய்வதற்காகவும் வெளியூருக்கு சென்று அங்கேயே பல நாட்கள் தங்கி வருவது வழக்கம்.

    இந்த நிலையில் கருவடிப்குப்பம் நரிக்குறவர் காலனியை சேர்ந்த விஜயகுமார் மகன் முத்தழகன் (வயது 23) மற்றும் அவரது உறவினர்கள் ஆரோவில் அடுத்த குயிலாப்பாளையத்தில் சாலையோரத்தில் தங்கி அங்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு இவர்கள் தயாரித்த கழுத்தில் அணியும் மணி, பொம்மைகள் மற்றும் கைவினைப் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். முத்தழகன் அங்குள்ள தனியார் ஓட்டலில் வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் அங்கு இருந்த 14 வயது சிறுமிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. சிறுமியை அவரது பெற்றோர் புதுவை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அந்த சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர்.

    இதுகுறித்து புதுவை குழந்தைகள் நல ஆணையம் மூலம் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது ஓட்டல் ஊழியர் முத்தழகன் என்பது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ×