என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூதாட்டம்"

    • தான் வழக்கமாக சூதாடும் இடத்திற்கு சென்ற அவரிடம் அன்று பணம் இல்லை.
    • பணயமாக வைத்த மனைவியை கொண்டு சென்று தோற்றவர்களிடம் ஒப்படைத்தார்.

    உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்தவர் டேனிஷ். இவருக்கும் பாக்தாத் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

    டேனிஷ் குடிப்பழக்கத்திற்கும் சூதாட்டத்திற்கும் அடிமையாகி இருந்தார். எப்போதும் சூதாட்டம் ஆடிக் கொண்டுதான் இருப்பார். சூதாட்டத்தில் பணம், பொருட்களை நிறைய இழந்துள்ளார்.

    இந்த நிலையில் தன் மனைவியிடம் அவரது வீட்டிற்கு சென்று நகை, பணம் வாங்கி வரச்சொல்லி கட்டாயப்படுத்தினார். அவர் வாங்கி வரவில்லை. தான் கேட்டும் நகை, பணம் வாங்கி வராததால் மனைவி மீது டேனிஷ் ஆத்திரத்தில் இருந்தார்.

    தான் வழக்கமாக சூதாடும் இடத்திற்கு சென்ற அவரிடம் அன்று பணம் இல்லை. ஆனால் சூதாடாமல் அவரால் இருக்க முடியவில்லை. அப்போது என்ன செய்யலாம் என்று யோசித்த அவர் பணத்திற்கு பதிலாக தனது மனைவியை பணயமாக வைத்து சூதாடினார். துரதிர்ஷ்டவசமாக அன்று அவர் சூதாட்டத்தில் தோற்று போனார். இதனால் அவர் தனது மனைவியை இழக்க நேரிட்டது. பணயமாக வைத்த மனைவியை கொண்டு சென்று தோற்றவர்களிடம் ஒப்படைத்தார்.

    சூதாட்டத்தில் வெற்றி பெற்ற 8 பேர் கும்பல் அவரது மனைவியை பாலியல் ரீதியாக துன்புறுத்த தொடங்கினர். இதனை கணவரிடம் கூறியும் அவர் செவி சாய்க்கவில்லை. இதையடுத்து அந்த 8 பேர் கும்பலும் அவரது மனைவியை கட்டாயப்படுத்தி மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்தனர். இதில் அந்த பெண் பலவீனம் அடைந்தாள்.

    அந்த 8 பேர் கும்பலுடன் சேர்ந்து டேனிசும் அவரது மனைவியை துன்புறுத்தி அவரை ஆற்றில் தூக்கி வீசினார். நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பெண்ணை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டனர்.

    இதையடுத்து அவர் தனக்கு நடந்த கொடுமை குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அந்த புகாரில் தனது மாமனார் மற்றும் மேலும் 2 பேரும் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். மேலும் வரதட்சணை கேட்டு மாமியார் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொழும்பு கிங்ஸ் அணிக்காக விளையாடிக் கொண்டிருந்த இருவருடன் சூதாட்டத்தில் ஈடுபடுவது குறித்து சச்சித்திர சேனநாயக்கா பேசியுள்ளார்.
    • சச்சித்திர சேனநாயக்கா 2023-ல் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    கொழும்பு:

    இலங்கையைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சித்திர சேனநாயக்கா. சுழற்பந்து வீச்சாளரான இவர் இலங்கையில் கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கிய லங்கா பிரீமியர் லீக் தொடரில் கொழும்பு கிங்ஸ் அணிக்காக விளையாடிக் கொண்டிருந்த இருவருடன் சூதாட்டத்தில் ஈடுபடுவது குறித்து பேசியுள்ளார்.

    அவர் துபாயில் இருந்து தொலைபேசி மூலம் சூதாட்டத்தில் ஈடுப்பட்டதாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இதற்காக அவர் 2023-ல் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    இந்நிலையில் சச்சித்ர, லங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டியின் போது சக வீரரை மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடுத்த முயன்றதாக இவர் மீது ஹம்பாந்தோட்டை உயர் நீதிமன்றம் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், மேட்ச் பிக்சிங்கிற்காக தேசிய அளவிலான கிரிக்கெட் வீரர் ஒருவர் மீது சுமத்தப்பட்ட முதல் குற்றச்சாட்டு இதுவாகும்.

    சச்சித்ர சேனநாயக் 2012 முதல் 2016 வரை இலங்கை அணிக்காக ஒரு டெஸ்ட், 49 ஒருநாள் மற்றும் 24 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் 2014-ம் ஆண்டு இலங்கை அணியுடன் டி20 உலகக் கோப்பையை வென்ற குழுவில் முக்கிய வீரராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பண்ருட்டியில் சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடமிருந்து பணம், சீட்டு கட்டுஉள்ளிட்டவைகளை பறிமுதல்செய்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே வீரபெருமாநல்லூரில் காசு வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக கடலூர்மாவட்டபோலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா மேற்பார்வையில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும்போலீசார் வீரபெருமாநல்லூருக்கு விரைந்து சென்றுஅங்கு சூதாடியஅதே ஊரை சேர்ந்த விநாயக மூர்த்தி (வயது23),விஜய் (41), முத்துவேல் (55),தனவேல் (40), ஜானகிராமன் (50)வெங்கடேசன் (38) அகியோரை கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து பணம், சீட்டு கட்டுஉள்ளிட்டவைகளை பறிமுதல்செய்தனர்.

    • திருநாவலூர் அருகே பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடம் இருந்து சூதாட்ட பணம் ரூ. 5000 பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்காதிருநாவலூர் சராகத்துக்குட்பட்ட திருநாவலூர் இன்ஸ்பெ க்டர் அசோகன் தலைமை யில் சப்- இன்ஸ்பெ க்டர்கள் பிரபாகரன் மணிமேகலை தனிப்பிரிவு போலீசார் மனோகரன் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கொரட்ட ங்குறிச்சி கிராமத்தில் சிலர் பணம் வைத்து சூதாடினர்.

    அங்கு விரைந்த போலீ சார் மடக்கி பிடித்து அனை வரையும் கைதுசெய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சாரங்கன், மணிகண்டன், செல்வம், முருகன், ராஜா, சிவனேசன் சிவராமன், குணா, பாபு, ஏழுமலை என தெரிய வந்தது. அவர்க ளிடம் இருந்து சூதாட்ட பணம் ரூ. 5000 பறிமுதல் செய்தனர். அவர்கள் 11 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது.
    • தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்.

    மன்னார்குடி:

    மன்னார்குடியில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தல்களில் பிரதமரை தேர்ந்தெடுப்பதில் எங்கள் கட்சி முக்கிய பங்கு வகிக்கும்.

    அதில் நாங்கள் அணில் போல் செயல்பட்டு வருகிறோம்.

    தேசிய கட்சி ஒன்றுடன் அ.ம.மு.க. கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை சந்திப்போம்.

    எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்து செயல்பட மாட்டோம் என்று பலமுறை கூறி வருகிறோம்.

    ஜெயலலிதாவை நேசிக்கிறவர்கள் ஒன்றிணைந்து, இதர கட்சியுடன் கைகோர்த்து தேர்தலை சந்தித்தால் தான் தி.மு.க.வை வீழ்த்த முடியும்‌.

    தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகின்றது.

    இதனால் மக்கள் அதிருப்தியுடனும், வேதனையுடனும் உள்ளனர்.

    இது வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்.

    தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்.

    அதற்கான முயற்சியில் ஆளுநர் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வரும் நிலையில் இதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது துணை பொதுச்செயலாளர் ெரங்கசாமி, திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ், தஞ்சாவூர் மாவட்ட செயலாளர்

    மா. சேகர், மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வேலு.கார்த்திகேயன், தேர்தல் பிரிவு இணைச்செயலாளர் மலர்வேந்தன், அம்மா தொழிற்சங்க பேரவை மாநில இணைச் செயலாளர் சத்தியமூர்த்தி, நகரக் செயலாளர், ஒன்றிய செயலாளர், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பி னர்கள் உடன் இருந்தனர்.

    • தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த சூதாட்ட மாபியா கும்பல்கள் தமிழகத்துக்குள் மீண்டும் புகுந்து சூதாட்ட விடுதிகளை நடத்தி வருகிறார்கள்.
    • முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு சூதாட்ட கிளப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாடு தெலுகு யுவசக்தி தலைவர் கே. ஜெகதீஸ்வர ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது ஆந்திராவை சேர்ந்த ஒருவர் சென்னையில் உள்ள ஒரு சூதாட்ட விடுதியில் மர்மமான முறையில் இறந்தார். தகவலறிந்த அன்றைய முதல்வர் ஜெயலலிதா அதிரடி நடவடிக்கை எடுத்து சென்னை மற்றும் தமிழகத்தில் செயல்பட்டு வந்த சூதாட்ட விடுதிகளுக்கு தடைவிதித்தார்.

    தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னர் மீண்டும் சென்னையில் சூதாட்ட விடுதிகள் செயல்பட தொடங்கின. இது குறித்து நான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தேன். அதன் பேரில் முதல்வர் உடனடியாக அதிரடி நடவடிக்கை எடுத்து சென்னை தி. நகர், அண்ணாசாலை பகுதிகளில் செயல்பட்டு வந்த சூதாட்ட விடுதிகளுக்கு தடை விதித்தார். முதலமைச்சரின் அதிரடி நடவடிக்கைக்கு நான் கடிதம் எழுதி நன்றியும் பாராட்டும் தெரிவித்தேன்.

    தற்போது தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் சூதாட்ட விடுதிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் அந்த மாநிலங்களைச் சேர்ந்த சூதாட்ட மாபியா கும்பல்கள் தமிழகத்துக்குள் மீண்டும் புகுந்து சூதாட்ட விடுதிகளை நடத்தி வருகிறார்கள்.

    தமிழக - ஆந்திர எல்லையான சூலூர்பேட்டை பகுதியில் உள்ள ஆரம்பாக்கம், கும்மிடிப்பூண்டி பகுதிகளில் சூதாட்ட கிளப்புகளை இந்த கும்பல் நடத்தி வருகிறது. ஆந்திராவின் நெல்லூர், கடப்பா, திருப்பதி, பிரகாசம் மாவட்டங்களை சேர்ந்த இந்த மாபியா கும்பல்கள் தமிழக - ஆந்திர எல்லை பகுதியை சேர்ந்த அரசியல்வாதிகள், போலீசாரின் துணையுடன் சூதாட்ட விடுதிகளை நடத்தி வருகிறார்கள். இதனால் பாதிப்புக்குள்ளான அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் என்னிடம் புகார் தெரிவித்தனர். தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கும் இந்த சூதாட்ட கிளப்புகளுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும். மீண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு சூதாட்ட கிளப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும். பெண்கள் நலனை கருத்தில் கொண்டு முதல்வர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆரணியில் காட்டன் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டபோது காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 3 பேரை கைது செய்தனர்.

    பெரியபாளையம்:

    ஆரணியில் காட்டன் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்ட போது காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சுப்ரமணி, சுதாகர், சேகர் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    • பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்.
    • வெவ்வேறு இடங்களில் நடந்த இந்த சம்பவத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே பணம் வைத்து சீட்டு விளையாடப்படுவதாக மேற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த சிலர் தப்பிவிட முயன்றனர். சுதாரித்துக் கொண்ட போலீசார் 5 பேரை மடக்கிப் பிடித்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில், தஞ்சை இ.பி. காலனியை சேர்ந்த செந்தில்நாதன் (வயது 35), கரந்தை குமார் (45), காயிதே மில்லத் நகர் கார்த்தி (32), பூக்கார விளார் ரோடு ராஜா (42), ஜெகன் (30) என்பதும், பணம் வைத்து சீட்டு விளையாடியதும் தெரியவந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில்நாதன் உள்பட 5 பேரையும் கைது செய்தனர்.

    இதேபோல் தஞ்சை ரெயிலடி அருகே பணம் வைத்து சீட்டு விளையாடிய விளார் ரோட்டை சேர்ந்த ரமேஷ் (40), கார்த்தி (40), எல்.ஐ.சி. காலனி சங்கர் (55), தெற்கு சக்கரசாமந்தம் மணிகண்டன் (40), முத்து (40) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    வெவ்வேறு இடங்களில் நடந்த இந்த சம்பவத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    • 3 சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.2 ஆயிரத்து 810 பறிமுதல்
    • பணம் வைத்து சூதாடிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் நேற்று மதியம் ரோந்து சென்றனர். அப்போது பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் ஒரு வீட்டில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த திருவள்ளுவர் தெருவை சேர்ந்த அருண்குமார்(வயது 35), வினோத்குமார்(34), வெங்கடேசபுரத்தை சேர்ந்த சத்ரியன்(25), நீல்ராஜ் என்ற நீலமேகம்(50), உதயசூரியன்(47) மதனகோபாலபுரத்தை சேர்ந்த ராஜ்(46), மேட்டு தெருவை சேர்ந்த ரமேஷ்(56) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.2 ஆயிரத்து 810 பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    தியாகதுருகத்தில் சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டாலின் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புக்குளம் டாஸ்மாக் பின்புறம் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார் விரைந்து சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் தியாகதுருகம் உதயமாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் (வயது 56), சேகர் (46) வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்த சசிகுமார் (41), காந்திநகர் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (35), தியாகதுருகத்தைச் சேர்ந்த கமல்கான் (50) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர்.

    • அங்கு பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
    • 6 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த ரூ.1,367 மற்றும் 5 செல்போன்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்..

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் நடந்து வரும் குற்றச் செயல்க ளை கட்டுப்படுத்த விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி விழுப்புரம் பகுதியில் பணம் வைத்து சூதாட்ட ங்கள் நடப்பதாக போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிற்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து உதவி சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.  ப்போது விழுப்புரம் தாலுக்கா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சிந்தாமணி கிராமம் மாந்தோப்பு அருகே சூதாடுவதாக போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்த விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் சத்யானந்தம், புனித வள்ளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    இதில் அங்கு பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சிந்தாமணி கிராமம் மெயின் ரோட்டை சேர்ந்த பாஸ்கரன் மகன் மதன் (வயது 23), அதே ஊரைச் சேர்ந்த கனகராஜ் மகன் அருண் (27), குமார் மகன் விக்னேஷ் (26), ராஜேந்திரன் மகன் ராமச்சந்திரன் (30), அய்யனார் மகன் வடிவேல் (29), கிருஷ்ணமூர்த்தி மகன் சங்கர் (47) என்பது தெரியவந்தது.   இதையடுத்து 6 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த ரூ.1,367 மற்றும் 5 செல்போன்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்.

    • பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் நாதேகவுண்டம்பாளையத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது அங்கே 7 பேர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. அவர்களை சுற்றி வளைத்து கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரொக்கம் ரூ.44 ஆயிரத்து 400 பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் நாதே கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ரங்கசாமி ( வயது 60), அதே ஊரைச் சேர்ந்த திருமூர்த்தி (39), மாயவன் (36 ), சரண்குமார் (19 ), துத்தாரி பாளையத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (50), கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த அரவிந்த்குமார் (26), கழுவேறி பாளையத்தை சேர்ந்த சிவா(29) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×