என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "match-fixing"

    • வாக்காளர் பட்டியலை இயந்திரத்தால் படிக்கக்கூடிய வடிவத்தில் வழங்க மாட்டார்கள்
    • வாக்காளர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது என்று தெரிவித்துள்ளது.

    வாக்குச்சாவடிகளில் பதிவு செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகளை, வாக்குப்பதிவு முடிந்த 45 நாட்களில் அழித்துவிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது.

    இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம் தேர்தல் தொடர்பான தரவுகளை வேண்டுமென்றே அழிக்க முயற்சிப்பதாக மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.

    ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில், "வாக்காளர் பட்டியல்? இயந்திரத்தால் படிக்கக்கூடிய வடிவத்தில் வழங்க மாட்டார்கள். சிசிடிவி காட்சிகள்? சட்டத்தை மாற்றி மறைத்துவிட்டார்கள்.

    தேர்தலின் புகைப்படம்-வீடியோ? இப்போது, 1 வருடத்தில் அல்ல, 45 நாட்களில் அழித்துவிடுவோம். யார் பதில் சொல்ல வேண்டுமோ அவர்களே ஆதாரங்களை அழிக்கிறார்கள். இது தெளிவாகிறது - மேட்ச் பிக்சிங் செய்யப்படுகிறது. மேலும் ஒரு சமரசம் செய்யப்பட்ட தேர்தல் ஜனநாயகத்திற்கு விஷம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், வாக்குச்சாவடிகளின் வெப்காஸ்டிங் காட்சிகளை பொதுவெளியில் வெளியிடுவது வாக்காளர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது என்று தெரிவித்துள்ளது.

    தேர்தல் ஆணைய அதிகாரிகள், இத்தகைய கோரிக்கைகள் வாக்காளர்களின் தனியுரிமை, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டங்கள் 1950 மற்றும் 1951 இன் கீழ் உள்ள சட்ட விதிகள், மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு நேர் முரணானது என்று தெரிவித்தனர்.

    காட்சிகளைப் பகிர்வது வாக்காளர்களை அடையாளம் காணவும், வாக்களிக்காதவர்களைக் கண்டறியவும் வழிவகுக்கும். இது சமூக விரோத சக்திகளால் வாக்காளர்கள் அழுத்தம், பாகுபாடு அல்லது அச்சுறுத்தலுக்கு ஆளாக நேரிடலாம்.

    ஒரு குறிப்பிட்ட பூத்தில் ஒரு அரசியல் கட்சிக்கு குறைவான வாக்குகள் கிடைத்திருந்தால், சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி யார் வாக்களித்தார்கள், யார் வாக்களிக்கவில்லை என்பதைக் கண்டறிந்து, அவர்களைக் குறிவைத்து துன்புறுத்துதல் அல்லது மிரட்டுதல் போன்றவற்றுக்கு வழிவகுக்கும் என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். 

    • வெறும் 5 மாதங்களுக்குப் பின் நடந்த சட்டமன்றத் தேர்தலில் இது 9.70 கோடியாக அதிரடியாக அதிகரித்தது.
    • மக்களவைத் தேர்தலில் 32% வெற்றி பெற்ற பாஜக, இந்த 85 தொகுதிகளின் அசாதாரண வாக்குப்பதிவால் சட்டமன்றத் தேர்தலில் 89% வெற்றி பெற்றது.

    கடந்த ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில், ஆளும் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆனால், இந்த தேர்தல் முடிவுகளில் பெரும் மோசடி நடந்திருப்பதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

    முன்னதாக நடந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் கூட்டணி அதிக வெற்றியை பெற்றது. ஆனால் சில மாதங்களுக்கு பின் நடந்த சட்டமன்றத் தேர்தலில் நிலைமை தலைகீழாக மாறியது. இதன் பின்னணியில் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு முக்கியத்துவம் பெற்றது. 

    இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் நீண்ட கட்டுரை எழுதியுள்ள ராகுல் காந்தி, "மேட்ச் பிக்சிங் மகாராஷ்டிரா" என்ற தலைப்பில் அடுக்கடுக்கான ஆதாரங்களை முன்வைத்துள்ளார்.

     ராகுல் காந்தி கட்டுரையின் சுருக்கம்:

    தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் குளறுபடி: தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் எதிர்க்கட்சித் தலைவரின் பரிந்துரையை நிராகரித்து, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் தங்கள் விருப்பப்படி ஆட்களை நியமித்தனர். இது நீதித்துறைத் தலைவரை நீக்கி முறைகேடு செய்ய வழிவகுத்தது.

    போலி வாக்காளர்கள் அதிகரிப்பு: 2019-ல் 8.98 கோடியாக இருந்த வாக்காளர்கள், 2024 மக்களவைத் தேர்தலில் 9.29 கோடியாக உயர்ந்தனர். ஆனால்,  வெறும் 5 மாதங்களுக்குப் பின் நடந்த சட்டமன்றத் தேர்தலில் இது 9.70 கோடியாக அதிரடியாக அதிகரித்தது.

    மகாராஷ்டிராவின் மொத்த வயதுவந்தோர் மக்கள் தொகையே 9.54 கோடிதான் இருக்கும் நிலையில், இந்த 41 லட்சம் வாக்காளர் அதிகரிப்பு பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது.

    வாக்குப் பதிவில் வினோத மாற்றம்: மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த பின்னரும், 7.83% (சுமார் 76 லட்சம்) வாக்காளர்கள் வாக்களித்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இது முந்தைய தேர்தல்களை விட மிக மிக அதிகம். குறிப்பாக, 85 தொகுதிகளில் உள்ள 12,000 வாக்குச்சாவடிகளில் மட்டும், மாலை 5 மணிக்குப் பிறகு சராசரியாக 600க்கும் மேற்பட்டோர் வாக்களித்துள்ளனர். ஒரு வாக்குக்கு ஒரு நிமிடம் என்றாலும், 10 மணி நேரம் வாக்குப்பதிவு நடந்திருக்க வேண்டும்!

    பாஜக வெற்றிஅதிகரிப்பு: மக்களவைத் தேர்தலில் 32% வெற்றி பெற்ற பாஜக, இந்த 85 தொகுதிகளின் அசாதாரண வாக்குப்பதிவால் சட்டமன்றத் தேர்தலில் 89% வெற்றி பெற்று 149 இடங்களில் 132 இடங்களை வென்றது.

    ஆதாரங்களை அழிக்கும் முயற்சி: முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் புகார் அளித்த போதும், தேர்தல் ஆணையம் அமைதி காக்கிறது.

    மேலும், வாக்காளர் பட்டியல்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளை பொதுவெளியில் வெளியிடும் கோரிக்கையை நிராகரித்து, விதிகளைத் திருத்தி அணுகலைக் கட்டுப்படுத்தி, ஆதாரங்களை அழிப்பதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டுகிறார்.

    ராகுல் காந்தி தனது கட்டுரையில், "இது கிரிக்கெட்டில் நடக்கும் மேட்ச் பிக்சிங் போன்றது. இப்படிப்பட்ட முறைகேடுகள் ஜனநாயக நிறுவனங்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும்" என்று கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் மகாராஷ்டிர அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.  

    • கொழும்பு கிங்ஸ் அணிக்காக விளையாடிக் கொண்டிருந்த இருவருடன் சூதாட்டத்தில் ஈடுபடுவது குறித்து சச்சித்திர சேனநாயக்கா பேசியுள்ளார்.
    • சச்சித்திர சேனநாயக்கா 2023-ல் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    கொழும்பு:

    இலங்கையைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சித்திர சேனநாயக்கா. சுழற்பந்து வீச்சாளரான இவர் இலங்கையில் கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கிய லங்கா பிரீமியர் லீக் தொடரில் கொழும்பு கிங்ஸ் அணிக்காக விளையாடிக் கொண்டிருந்த இருவருடன் சூதாட்டத்தில் ஈடுபடுவது குறித்து பேசியுள்ளார்.

    அவர் துபாயில் இருந்து தொலைபேசி மூலம் சூதாட்டத்தில் ஈடுப்பட்டதாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இதற்காக அவர் 2023-ல் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    இந்நிலையில் சச்சித்ர, லங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டியின் போது சக வீரரை மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடுத்த முயன்றதாக இவர் மீது ஹம்பாந்தோட்டை உயர் நீதிமன்றம் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், மேட்ச் பிக்சிங்கிற்காக தேசிய அளவிலான கிரிக்கெட் வீரர் ஒருவர் மீது சுமத்தப்பட்ட முதல் குற்றச்சாட்டு இதுவாகும்.

    சச்சித்ர சேனநாயக் 2012 முதல் 2016 வரை இலங்கை அணிக்காக ஒரு டெஸ்ட், 49 ஒருநாள் மற்றும் 24 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் 2014-ம் ஆண்டு இலங்கை அணியுடன் டி20 உலகக் கோப்பையை வென்ற குழுவில் முக்கிய வீரராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • லங்கா பிரிமீயர் லீக் கிரிக்கெட்டின் போது சூதாட்டத்தில் (மேட்ச் பிக்சிங்) ஈடுபட 2 வீரர்களை அணுகியதாக குற்றம்சாட்டப்பட்டது.
    • இவர் இலங்கை அணிக்காக ஒரு டெஸ்ட், 49 ஒருநாள் மற்றும் 24 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

    கொழும்பு:

    இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான சசித்ரா செனநாயகே கடந்த 2020-ம் ஆண்டு லங்கா பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில் (மேட்ச் பிக்சிங்) ஈடுபட 2 வீரர்களை அணுகியதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த சூதாட்ட புகார் குறித்து விசாரித்த கொழும்பு தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு செனநாயகே 3 மாதத்துக்கு வெளிநாடு செல்ல தடை விதித்து உத்தரவிட்டது. இந்த நிலையில் செனநாயகே விளையாட்டு ஊழல் தடுப்பு புலனாய்வு பிரிவினர் முன்னிலையில் நேற்று காலை சரண் அடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    38 வயதான சசித்ரா செனநாயகே இலங்கை அணிக்காக ஒரு டெஸ்ட், 49 ஒருநாள் மற்றும் 24 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

    • முகமது ஷமியின் திருமண வாழ்க்கை சோகத்தில் முடிந்தது.
    • முகமது ஷமி மேட்ச் பிக்சிங் செய்யவில்லை என்று போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

    இந்திய அணியின் மிக முக்கிய பந்துவீச்சாளராக முகமது ஷமி திகழ்ந்து வருகிறார். ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தியர்களின் பட்டியலில் முகமது ஷமி முதலிடத்தில் உள்ளார்.

    ஒருநாள் உலகக்கோப்பையில் வெறும் 18 போட்டிகளில் மட்டுமே விளையாடி 55 விக்கெட்களை முகமது ஷமி வீழ்த்தியுள்ளார். ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் தற்போது 5 ஆவது இடத்தில் அவர் உள்ளார்.

    கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தி வரும் முகமது ஷமியின் திருமண வாழ்க்கை சோகத்தில் முடிந்தது.

    வரதட்சனை கேட்டு தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாகவும், குடும்ப தகராறில் தன்னை தாக்கியதாகவும் ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹான் புகார் கோரி விவாகரத்து கோரியிருந்தார். அப்போது பாகிஸ்தான் பெண்ணிடம் பணம் வாங்கி மேட்ச் பிக்சிங் செய்ததாக முகமது ஷமி மீது அவரது மனைவி குற்றம் சாட்டியிருந்தார்.

    ஆனால் முகமது ஷமி மேட்ச் பிக்சிங் செய்யவில்லை என்று போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. ஆனால் அந்த சமயத்தில் இந்த புகாரால் மன உளைச்சலுக்கு உள்ளான முகமது ஷமி தற்கொலைக்கு முயன்றதாக அவரின் நண்பர் உமேஷ் குமார் அதிர்ச்சி தகவல் ஒன்றை தற்போது தெரிவித்துள்ளார்.

    சுபங்கர் மிஸ்ராவுடன் பாட்காஸ்ட்டில் பேசிய போது இந்த தகவலை அவர் பகிர்ந்துள்ளார்.

    "அந்த சமயத்தில் முகமது ஷமி என்னுடன் என் வீட்டில் வசித்து வந்தார். அவர் மீது மேட்ச் பிக்சிங் புகாரை அவரது முன்னாள் மனைவி கூறிய போது அவர் உடைந்துவிட்டார். 'என்னால் எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ள முடியும், ஆனால் என் நாட்டிற்கு துரோகம் செய்கிறேன் என்ற குற்றசாட்டை பொறுத்துக்கொள்ள முடியாது' என்று அவர் கூறினார்.

    நாங்கள் வசித்த 19வது மாடியில், அதிகாலை 4 மணியளவில் முகமது ஷமி பால்கனியில் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நின்று கொண்டிருந்தார். அந்த இரவு ஷமியின் நீண்ட இரவாக இருந்தது. முகமது ஷமி மேட்ச் பிக்சிங் செய்யவில்லை என்று போலீசாரின் விசாரணை அறிக்கை வெளிவந்த பொது ஷமி மிகவும் சந்தோஷப்பட்டார். உலக கோப்பையை வேன்றபோது கூட ஷமி இவ்வளவு சந்தோசப்பட்டிருக்கமாட்டார்" என்று அவர் தெரிவித்தார்.

    • லோன்வாபோ சோட்சோபே ஒருகாலத்தில் உலகின் நம்பர் ஒன் ஒருநாள் பந்து வீச்சாளராக இருந்தவர்.
    • டி20 சேலஞ் தொடரில் மேட்ச் பிக்சிங் செய்ததாக இவர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் லோன்வாபோ சோட்சோபே, தமி சோல்கிலே மற்றும் எதி எம்பலாட்டி ஆகியோர் மேட்ச் பிக்சிங் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

    2015-16 ஆண்டு நடைபெற்ற டி20 சேலஞ் தொடரில் மேட்ச் பிக்சிங் செய்ததாக இவர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    கைது செய்யப்பட்ட லோன்வாபோ சோட்சோபே ஒருகாலத்தில் உலகின் நம்பர் ஒன் ஒருநாள் பந்து வீச்சாளராக இருந்தவர்.

    2016 மற்றும் 2017 க்கு இடையில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக தென்னாப்பிரிக்க அணியால் தடை விதிக்கப்பட்ட 7 வீரர்களில் இந்த மூவரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கிரிக்கெட் ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக கடந்த ஓராண்டில் ஐந்து கேப்டன்களை சூதாட்ட தரகர்கள் அணுகியதாக ஐசிசி அதிர்ச்சி தகவலை அளித்துள்ளது. #ICC
    கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் நடைபெறுவதை தடுக்க ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) ஊழல் தடுப்பு குழுவை அமைத்துள்ளது. இந்த குழு வீரர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறது. எவ்வளவுதான் விழிப்புணர்வுடன் இருந்தாலும் சூதாட்ட தரகர்கள் வீரர்களை அணுகி விடுகிறார்கள். சில வீரர்கள் பேராசைப்படுவதால் மேட்ச் பிக்சிங் மற்றும் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டு சிக்கி கொள்கிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டில் 5 கேப்டன்களை சூதாட்ட தரகர்கள் அணுகி உள்ளதாக ஐசிசி-யின் ஊழல் தடுப்பு பொது மேலாளர் அலெக்ஸ் மார்‌ஷல் பரபரப்பான தகவலை வெளியிட்டு உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    கடந்த ஒராண்டில் மட்டும் 5 சர்வதேச கேப்டன்களை சூதாட்ட தரகர்கள் (புக்கிகள்) அணுகியுள்ளனர். ஆனால் அந்த கேப்டன்களின் பெயர்களை இப்போதைக்கு நாங்கள் தெரிவிக்கமாட்டோம்.

    ஆசிய கோப்பை போட்டித் தொடரில் ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான முகமது ‌ஷேசாத்தை சூதாட்ட தரகர்கள் அணுகியுள்ளனர். ஆப்கானிஸ்தான் ப்ரிமீயர் ‘லீக்’ போட்டி சார்ஜாவில் அக்டோபர் மாதம் நடக்கிறது. இந்தப்போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்துமாறு அவரிடம் புக்கிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    இது தொடர்பான புகாரை ‌ஷசாத் எங்களிடம் தெரிவித்துள்ளார்.

    ஒருநாள் போட்டியைவிட 20 ஓவர் ஆட்டங்களில்தான் ஸ்பாட் பிக்சிங், மேட்ச் பிக்சிங் சூதாட்ட வாய்ப்புகள் அதிகம் ஏற்படுகிறது.



    20 ஓவர் போட்டிகளில் விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கு பஞ்சம் இல்லாததால் சூதாட்ட தரகர்கள் வீரர்களை அணுகுகின்றனர். தனியாக நடத்தப்படும் 20 ஓவர்கள் போட்டிகளில் சூதாட்டத்தை தடுப்பது எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.

    பெரும்பாலான சூதாட்ட தரகர்கள் இந்தியர்கள். அவர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். கடந்த ஒரு ஆண்டில் ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக 32 விசாரணை நடைபெற்றுள்ளது. இதில் 23 சம்பவங்களை வீரர்கள், நடுவர்கள் தெரிவித்தவையாகும். 8 சம்பவங்களில் வீரர்களின் செயல்பாடு சந்தேகத்தை அளித்துள்ளது. இதில் 4 முன்னாள் வீரர்களிடம் இன்று வரை விசாரணை நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அலெக்ஸ் மார்‌ஷல் கூறியுள்ளார்.
    ×