என் மலர்
நீங்கள் தேடியது "பேனா"
- முரளி கிருஷ்ணாவை குண்டூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
- ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்த போது அவரது பெருங்குடலில் பேனா இருப்பது தெரிய வந்தது.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் கோத்தபேட்டையை சேர்ந்தவர் சீனிவாச ராவ். இவரது மகன் முரளி கிருஷ்ணா (வயது 16).
இவர் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 9-ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது இவரது நண்பர்கள் பேனாவை விழுங்கினால் ரூ.50 தருவதாக பந்தயம் கட்டினர். அப்போது முரளி கிருஷ்ணா பேனாவை விழுங்கினார்.
அன்று முதல் முரளி கிருஷ்ணாவுக்கு வயிற்று வலி இருந்து வந்தது. இருப்பினும் தனக்கு வயிற்று வலி இருப்பது குறித்து பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி முரளி கிருஷ்ணாவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. அவரது நண்பர்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முரளி கிருஷ்ணா பேனாவை விழுங்கியதாக அவரது பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து முரளி கிருஷ்ணாவை குண்டூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்த போது அவரது பெருங்குடலில் பேனா இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து டாக்டர்கள் கவுண்டர் குழாய் மூலம் ரெட்ரோகிரேட் எண்டோஸ்கோபி முறையில் பெருங்குடலில் இருந்த பேனாவை அறுவை சிகிச்சையின்றி அகற்றினர். இதனால் மாணவரின் பெற்றோர் நிம்மதி அடைந்தனர்.
- 1,731 மாணவ, மாணவிகளுக்கு பாக்கெட் பாக்கெட்டாக பேனாவை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
- பச்சை மை பேனாவில் கையெழுத்து போடும் அளவிற்கு சிறந்த அரசு அதிகாரிகளாக திகழ வேண்டும் என்று பேசினார்.
ராஜபாளையம்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அவரின் பேனா ஆற்றிய பங்கை வலியுறுத்தும் நோக்கில் முகவூர் ஊராட்சி தி.மு.க. கிளை சார்பில் முகவூர் தெற்கு தெரு இந்துநாடார் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவி கள், ஆசிரியர்கள் உள்பட 1,731 பேருக்கு பாக்கெட் பாக்கெட்டாக பேனாக் களை எம்.எல்.ஏ தங்கப் பாண்டியன் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
கலைஞரின் வளர்ச்சிக்கும், முத்தமிழ் அறிஞர் என்ற பட்டத்திற்கும் சமூக நீதிக்கும் பெரிதும் உறுதுணையாக இருந்தது அவருடைய பேனா. அத்தகைய பேனாவை வைத்து தான் நமது முதல்-அமைச்சர் முதல் 5 திட்டத்திற்கு கையெழுத்திட்டார். மேலும் கல்வியில் சிறந்து விளங்கக்கூடிய முதன்மையான மாவட்டம் நமது விருதுநகர் மாவட்டம்.வாள் முனையைவிட வலிமையானது பேனா முனை. அதனை ஆக்கபூர்வமாக பயன்படுத்தி மாணவ-மாணவிகள் அனைவரும் கல்வியில் சிறந்து விளங்கி பச்சை மை பேனாவில் கையெழுத்து போடும் அளவிற்கு சிறந்த அரசு அதிகாரிகளாக திகழ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி செயலர் ஆதிநாராயணன், தலைவர் ராமசாமி, தலைமை ஆசிரியர் கண்ணன் ஊராட்சி மன்ற தலைவர் முத்துச்சாமி, கிளை செயலாளர் தொந்தி யப்பன், ஒன்றிய இளைஞரணி அமைப்பா ளர் சுரேஷ், துணை அமைப்பாளர் மாரிமுத்து, கருப்பசாமி சோலையப்பன் மலைக்கனி ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- போவாயன் தாலுகாவில் போடப்பட்ட சாலையின் தரம் குறித்து எம்.எல்.ஏ திடீர் ஆய்வு நடத்தினார்.
- அப்போது, தன்னிடம் இருந்த பேனாவால் சாலையை கீறிப் பார்த்தார்.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலத்தின் ஷாஜஹான்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் பா.ஜ.க.வை சேர்ந்த சேத்ராம். இவர் அங்குள்ள போவாயன் தாலுகாவில் போடப்பட்ட சாலையின் தரம் குறித்து திடீர் ஆய்வு நடத்தினார்.
அப்பகுதியில் சமீபத்தில் போடப்பட்டிருந்த தார்ச்சாலையினை ஆய்வு செய்தார். தன்னிடம் இருந்த பேனாவால் சாலையை கீறி எடுத்தார்.
லக்கிம்பூர் மாவட்டத்துடன் போவாயன் தாலுகாவை இணைக்கும் 17 கி.மீ தூரம் சாலை விரிவாக்கத் திட்டத்தில் இந்த சாலை அடங்கும். அவரது திடீர் ஆய்வின்போது ஜல்லிக்கு பதிலாக மண் பயன்படுத்தப்படுவதை கண்டுபிடித்தார்.
எம்.எல்.ஏ., பேனாவைப் பயன்படுத்தி சாலையின் மேற்பரப்பைத் துடைத்து, பயன்படுத்திய பொருட்களின் தரம் குறைந்ததைக் காட்டினார். இதுதொடர்பான புகைப்பட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
சாலை கட்டுமானத்தின் மோசமான தரம் குறித்து கடுமையாக சாடிய அவர், கட்டுமானப் பொருட்களில் குறிப்பிடத்தக்க குறைபாடுகளையும் கண்டறிந்தார். இதுதொடர்பாக அரசு உயர் அதிகாரிகளிடம் பேச உள்ளதாக கூறினார். இச்சம்பவம் பொதுப்பணித் துறைக்குள் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொதுப்பணித்துறை மந்திரி ஜிதின் பிரசாதாவின் சொந்த மாவட்டம் ஷாஜஹான்பூர் என்பது குறிப்பிடத்தக்கது.






