என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜேஸ்வரி"

    • ராஜேஸ்வரி உழைத்து பெற்றுள்ள இந்த வெற்றி மெச்சத்தக்கது.
    • மாணவி ராஜேஸ்வரி உயர்கல்வியிலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

    சேலத்தில் இருந்து சுமார் 65 கி.மீ. தூரத்தில் கல்வராயன் மலை அமைந்துள்ளது. இங்குள்ள கருமந்துறை பழங்குடி இனத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. அவர் பொறியில் பட்டப்படிப்பு படிக்க விரும்பினார். இதையடுத்து அவர் பெருந்துறையில் அரசு பயிற்சி மையத்தில் சேர்ந்து ஜே.இ.இ. நுழைவு தேர்வுக்கு பயிற்சி பெற்றார். இதில் மாணவி ராஜேஸ்வரி அகில இந்திய அளவில் 417-வது இடத்தை பிடித்தார்.

    இதையடுத்து அண்மையில் நடைபெற்ற கலந்தாய்வில் ராஜேஸ்வரி சென்னை ஐ.ஐ.டியில் சேர இடம் கிடைத்தது. கல்வராயன் மலை பகுதியில் இருந்து ஐ.ஐ.டியில் படிக்கும் முதல் பழங்குடியின மாணவி என்ற பெருமையை ராஜேஸ்வரி பெற்றுள்ளார். இவருக்கு பள்ளி ஆசிரியர்கள், கல்வியாளர்கள், ஊர்பொதுமக்கள் என பலரும் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

    இந்நிலையில் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாவட்டம் கல்வராயன்மலை அருகே வசித்து வரும் கருமந்துறை பழங்குடி இனத்தை சேர்ந்த செல்வி. ராஜேஸ்வரி,

    12ம் வகுப்பில் 521 மதிப்பெண்களும், ஜே.இ.இ. நுழைவு தேர்வில் இந்திய அளவில் 417-வது இடத்தையும் பிடித்து,

    ஐ.ஐ.டியில்-ல் இடம் கிடைத்துள்ள செய்தி கேட்டு மகிழ்வுற்றேன்.

    மாணவி ராஜேஸ்வரிக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகள்.

    தனது தந்தையாரை கடந்த 2024-ல் புற்றுநோயால் இழந்த நிலையிலும், ராஜேஸ்வரி உழைத்து பெற்றுள்ள இந்த வெற்றி மெச்சத்தக்கது. கல்வி ஒன்றே சமூக முன்னேற்றத்தின் வழி. மாணவி ராஜேஸ்வரி உயர்கல்வியிலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

    அவரது பொருளாதார நிலையைக் கருத்திற்கொண்டு, மாணவி ராஜேஸ்வரியின் கல்விச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்க வேண்டும் என முதல்வரை வலியுறுத்துகிறேன். இல்லையெனில், மாணவி ராஜேஸ்வரிக்கான படிப்பு செலவுகளை அதிமுக கட்சியே ஏற்கும்.

    • சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி மேட்டூர் துணை சுப்பிரண்டு அலுவ லகத்தில் ஆய்வு செய்தார்.
    • மேட்டூர் போலீஸ் பாய்ஸ் கிளப் உள்விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார்.

    மேட்டூர்:

    சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி மேட்டூர் துணை சுப்பிரண்டு அலுவ லகத்தில் ஆய்வு செய்தார்.

    மேட்டூர் துணை சுப்பி ரண்டு மரியமுத்து கட்டுப்பாட்டில் இருக்கும் மேச்சேரி போலீஸ் நிலையம், கருமலை கூடல் போலீஸ் நிலையம், மேட்டூர் போலீஸ் நிலையம், கொளத்தூர் போலீஸ் நிலையம், மற்றும் மேட்டூர் பெண்கள் போலீஸ் நிலை யம்,ஆகிய போலீஸ் நிலை யங்களில் உள்ள நிலுவை யில் உள்ள வழக்குகள், ஆவணங்கள் பற்றியும் ஆய்வு செய்தார்.மேட்டூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நிலவரங்களை பற்றி கேட்ட றிந்தார். மேலும் மேட்டூர் போலீஸ் பாய்ஸ் கிளப் உள்விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார்.

    பள்ளி மாணவ, மாணவி கள் சிலம்பம் சுற்றி சிறப்பாக வர வேற்றனர். பின்னர் பள்ளி குழந்தைகளுடன் கேரம்போர்ட் விளையாடி மகிழ்ச்சி அடைந்தார். பின்னர் மாணவ, மாணவி களுக்கு பரிசு வழங்கி னார். இந்த நிகழ்ச்சியில் மேட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

    • ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்தவர் ராஜேஸ்வரி.
    • சைக்கிள் முன்பு பவன் கல்யாண் போஸ்டர், படங்கள், கட்சி கொடிகள் உள்ளன.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. துணை முதல் மந்திரி பவன் கல்யாணின் தீவிர ரசிகரான இவர் அவருடைய கட்சியிலும் உறுப்பினராக உள்ளார்.'

    இந்த நிலையில் பவன் கல்யாணை சந்திப்பதற்காக அவர் சைக்கிளில் செல்ல முடிவு செய்தார். கர்னூலில் இருந்து குண்டூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு 487 கிலோமீட்டர் தூரம் உள்ளது.

    அங்கு சென்று பவன் கல்யாணை சந்திக்க சைக்கிள் பயணத்தை ராஜேஸ்வரி நேற்று தொடங்கினார். அவருடைய சைக்கிள் முன்பு பவன் கல்யாண் போஸ்டர், படங்கள், கட்சி கொடிகள் உள்ளன.

    தனியாக சைக்கிள் பயணம் செல்லும் பெண்ணின் துணிச்சலை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். இது குறித்து ஜனசேனா கட்சி மகளிர் பிரிவு சார்பில் ராஜேஸ்வரி படத்துடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர்.

    இதனை பார்த்த பவன் கல்யாண் சைக்கிள் பயணம் வரும் பெண்ணுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கட்சி தலைமையகத்துக்கு அந்த பெண் வரும்போது அவருக்கு மாலை அணிவித்து பிரமாண்ட வரவேற்பு அளிக்க வேண்டும்.

    சைக்கிளில் பயணம் வரும் இடங்களில் கட்சி தொண்டர்கள் அவருக்கு வரவேற்பு அளித்து உதவி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×