பவன் கல்யாணை சந்திக்க 487 கிலோமீட்டர் சைக்கிளில் செல்லும் பெண்

ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. சைக்கிள் முன்பு பவன் கல்யாண் போஸ்டர், படங்கள், கட்சி கொடிகள் உள்ளன.
பவன் கல்யாணை சந்திக்க 487 கிலோமீட்டர் சைக்கிளில் செல்லும் பெண்
Published on

திருப்பதி:

ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. துணை முதல் மந்திரி பவன் கல்யாணின் தீவிர ரசிகரான இவர் அவருடைய கட்சியிலும் உறுப்பினராக உள்ளார்.'

இந்த நிலையில் பவன் கல்யாணை சந்திப்பதற்காக அவர் சைக்கிளில் செல்ல முடிவு செய்தார். கர்னூலில் இருந்து குண்டூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு 487 கிலோமீட்டர் தூரம் உள்ளது.

அங்கு சென்று பவன் கல்யாணை சந்திக்க சைக்கிள் பயணத்தை ராஜேஸ்வரி நேற்று தொடங்கினார். அவருடைய சைக்கிள் முன்பு பவன் கல்யாண் போஸ்டர், படங்கள், கட்சி கொடிகள் உள்ளன.

தனியாக சைக்கிள் பயணம் செல்லும் பெண்ணின் துணிச்சலை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். இது குறித்து ஜனசேனா கட்சி மகளிர் பிரிவு சார்பில் ராஜேஸ்வரி படத்துடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர்.

இதனை பார்த்த பவன் கல்யாண் சைக்கிள் பயணம் வரும் பெண்ணுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கட்சி தலைமையகத்துக்கு அந்த பெண் வரும்போது அவருக்கு மாலை அணிவித்து பிரமாண்ட வரவேற்பு அளிக்க வேண்டும்.

சைக்கிளில் பயணம் வரும் இடங்களில் கட்சி தொண்டர்கள் அவருக்கு வரவேற்பு அளித்து உதவி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com