search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "serial"

    • தமிழகத்தில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் தொடங்கியதும், கோடை மழை அவ்வபோது பெய்து வருகிறது.
    • இந்த நிலையில் நாளை முதல் மாக்கா புயல் உருவாகும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

    நாமக்கல்:

    தமிழகத்தில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் தொடங்கியதும், கோடை மழை அவ்வபோது பெய்து வருகிறது. மேலடுக்கு காற்று சுழற்சியால் பல்வேறு மாவட்டங்களில் இந்த மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் நாளை முதல் மாக்கா புயல் உருவாகும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

    இதனால் கடந்த 2 மாதங்களாக பொதுமக்களை வாட்டி வதைத்த வெப்பம் படிப்படியாக குறைந்து வந்தது. நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணிக்கு கோடை மழை தொடங்கியது. சுமார் 6 மணி வரை கனமழை பெய்தது. பின்னர் இரவு முழுவதும் லேசான அடை மழை தொடர்ந்து பெய்ததால், வெப்பநிலை முற்றிலம் மாறி குளிர் காற்று வீச தொடங்கியது

    இன்று அதிகாலை 5 மணி முதல் வானம் மப்பும் மந்தாரமும் ஆக இருந்து வருகிறது. லேசான அடைமழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இதனால் குளிரான சீதோஷ்னம் தொடர்ந்து நிலவி வருகிறது. பொதுமக்கள் கையில் குடையுடன் நடனமாடி வருகின்றனர். நேற்று மாலை பெய்த கனமழையால் நாமக்கல் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. பள்ளமான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. கோடை மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் நிலங்களில் கோடை உழவுப் பணிகளை தொடங்கியுள்ளனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் பதிவான மழை அளவு விபரம் வருமாறு-

    எருமப்பட்டி 3 மி.மீ., குமாரபாளையம் 5.40 மி.மீ., மங்களபுரம் 5.80 மி.மீ., மோகனூர் 8 மி.மீ., நாமக்கல் 28 மி.மீ., பரமத்தி வேலூர் 16 மி.மீ., புதுச்சத்திரம் 20 மி.மீ., ராசிபுரம் 22 மி.மீ., சேந்தமங்கலம் 7 மி.மீ., திருச்செங்கோடு 8 மி.மீ., நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் 33.5 மி.மீ., கொல்லிமலை செம்மேடு 5 மி.மீ.

    • சேலம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது.
    • சேலம் ஆகிய பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் கடும் குளிர் நிலவுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் வீரகனூர், ஏற்காடு, தலைவாசல், சேலம், ஓமலூர், தம்மம்பட்டி, சங்ககிரி, கெங்கவல்லி, எடப்பாடி, மேட்டூர் சேலம் ஆகிய பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் கடும் குளிர் நிலவுகிறது.

    சேலம் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஏற்காடு - 18, கெங்கவல்லி - 10, வீரகனூர் - 10, ஆணைமடுவு - 10, தம்மம்பட்டி - 7.2, எடப்பாடி- 6.6, ஆத்தூர் -4.8, ஓமலூர்- 4, கரிய கோவில் - 4, மேட்டூர் - 1.8, சங்ககிரி - 1.1, கடையாம்பட்டி - 1, சேலம்- 0.6 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 79.10 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    • நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே கார்கூடல்பட்டி ஊராட்சி யில் அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 2 லட்சம் பணத்தையும், ஒரு பவுன் தங்கச் செயின் ஆகியவற்றை கொள்ளை யடித்துச் சென்றனர்.
    • கைவரிசை காட்டிய மர்ம நபர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைப்பு

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே கார்கூடல்பட்டி ஊராட்சி யில் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கதவை வழக்கம்போல் பூசாரிகள் பூட்டி விட்டு சென்றனர். நேற்று காலை யில் கோவில் பூசாரி கோவிலை திறப்பதற்காக வந்துள்ளார். அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தையும், அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 2 லட்சம் பணத்தையும், ஒரு பவுன் தங்கச் செயின் ஆகியவற்றை கொள்ளை யடித்துச் சென்றனர். இந்த கொள்ளையர்கள் முகமூடி கொள்ளையர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

    சம்பவ இடத்திற்கு ஆயில்பட்டி போலீசார் மற்றும் பேளுக்குறிச்சி இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

    கொள்ளையர்களை கண்டுபிடிக்க ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை தனிப்படை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதே கோவிலில் ஏற்கனவே 2 தடவை இது போன்று கொள்ளை சம்பவம் நடந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    சில நாட்களுக்கு முன்பு ராசிபுரம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற அழியா இலங்கை அம்மன் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தொடர்ச்சியாக கோவில்களை குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பலை கூண்டோடு கைது செய்ய வேண்டும் என பகுதிக்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இன்று காலை 7 மணி அளவில் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. தொடர்ந்து மழை வேகமாக பெய்ய தொடங்கியது.
    • மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்ததால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வேலூர் நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், பாலப்பட்டி, மோகனூர், பரமத்தி, கபிலர்மலை, பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், கோப்பணம் பாளையம், இருக்கூர், சேளூர், பிலிக்கல்பாளையம், அ.குன்னத்தூர், வடகரையாத்தூர், கொத்தமங்கலம், குரும்பலம் மகாதேவி, ஜமீன் இளம் பள்ளி, சோழசிராமணி, சுள்ளி பாளையம், பெருங்குறிச்சி, மணியனூர், கந்தம்பாளையம் , வசந்தபுரம், தி.கவுண்டம்பாளையம், திடுமல், சிறுநல்லிக்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை 7 மணி அளவில் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.

    தொடர்ந்து மழை வேகமாக பெய்ய தொடங்கியது. இதன் காரணமாக சாலை ஓரங்களில் ஆங்காங்கே போடப்பட்டிருந்த பழக்கடைகள், பலகார கடைகள், டிபன் கடைகள், பூக்கடைகள், மண்பாண்டம் விற்பனை செய்யும் கடைகள் என பல்வேறு கடைக்காரர்கள், தள்ளுவண்டி கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்ததால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.

    கடந்த முறை பெய்த கனமழையின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால் பல்வேறு வகையான பயிர்கள் அழுகும் நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    இந்நிலையில் மழையின் காரணமாக சாலையின் இருபுறமும் உள்ள குழிகளில் மழைநீர் தேங்கி சேரும் சகதியுமாக உள்ளது.

    காலை முதலே மழை பெய்து வருவதால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் தெரிவித்து உள்ளார். 

    ×