search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொலை மிரட்டல்
    X
    கொலை மிரட்டல்

    கோர்ட்டில் சாட்சி சொல்ல வற்புறுத்தி பெண்ணுக்கு கொலை மிரட்டல்

    ராஜபாளையம் அருகே கோர்ட்டில் சாட்சி சொல்ல வற்புறுத்தி பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    விருதுநகர்

    ராஜபாளையம் அருகே செட்டியாப்பட்டியை சேர்ந்தவர் சுப்புலட்சுமி (வயது 57). இவரது பேத்தியுடன் அதே பகுதியை சேர்ந்த கங்காதரன் 
    (வயது 30) என்பவர் பழகியுள்ளார். பின்னர் இருவரும் காதலித்துள்ளனர். அப்போது கங்காதரன் சுப்புலட்சுமியின் பேத்தியுடன் உல்லாசமாக இருந்ததில் அவர் கர்ப்பிணி ஆகிவிட்டார்.

    இதுபற்றி கடந்த 2021-ம் ஆண்டு தளவாய்புரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் கங்காதரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

    இந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்த கங்காதரன் சுப்புலட்சுமியை சந்தித்து உங்களது பேத்தியை திருமணம் செய்து கொள்கிறேன். எனக்கு சாதகமாக நீங்கள் சாட்சி சொல்ல வேண்டும். இதற்கு உடன்பாடாவிட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். 

    இதுபற்றி சுப்புலட்சுமி தளவாய்புரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கங்காதரனை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×