என் மலர்
நீங்கள் தேடியது "Mumbai Police"
- மேம்பாலம் ஒன்றின் அருகில் சென்று கொண்டிருந்த பேருந்து பிரேக்-டவுன் ஆகி நின்றுவிட்டது.
- சம்பவ காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
சமூக வலைதளங்களில் காவல் துறை சார்பில் வெளியிடப்படும் பதிவுகள் மக்களுக்கு உதவியாகவும், எச்சரிக்கை விடுக்கும் வகையிலும், முக்கிய தகவல்களை வழங்குபவையாகவும் இருந்து வருகின்றன. சமயங்களில் காவல் துறை சார்பில் பகிரப்படும் பதிவுகள் பலரின் கவனத்தை ஈர்க்கும். அந்த வகையில், மும்பை போலீஸ் சார்பில் பகிரப்பட்டு இருக்கும் வீடியோ பேசுபொருளாகி இருக்கிறது.
மும்பை போலீஸ் சார்பில் டுவிட்டரில் பகிரப்பட்டுள்ள வீடியோவில், மாநகர பேருந்தை பொது மக்கள் ஒன்றிணைந்து தள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேம்பாலம் ஒன்றின் அருகில் சென்று கொண்டிருந்த போது மும்பை மாநகர பேருந்து பிரேக்-டவுன் ஆகி நடுவழியில் நின்றுவிட்டது. பின் அந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பேருந்தை தள்ளினர். இந்த சம்பவ காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்த வீடியோவினை பயனர் ஒருவர் தனது டுவிட்டர் அக்கவுண்டில் பதிவேற்றம் செய்திருக்கிறார். இதனை ரிடுவிட் செய்த மும்பை போலீஸ், "மும்பை கண நேர சம்பவங்கள் - Ctrl+S! மும்பையின் பலம் ஒவ்வொரு மும்பைவாசியின் கைகளில் உள்ளது. காக்கியில் உள்ள எங்களது நண்பர் இதனை பார்த்துள்ளார்," என்று பதிவிட்டுள்ளார்.
- இந்தியாவின் மிக நீண்ட பாலம் மற்றும் மிக நீண்ட கடல் பாலம் என்ற பெருமையை அடல் சேது பெற்றது.
- இந்தப் பாலத்தில் செல்லும் மக்கள் வாகனங்களை நிறுத்தி புகைப்படம், வீடியோ எடுத்தவண்ணம் உள்ளனர்.
மும்பை:
மும்பை-நவி மும்பை இடையே அமைக்கப்பட்டுள்ள அடல் சேது பாலம் சமீபத்தில் திறக்கப்பட்டது. இந்தப் பாலத்தை பிரதமர் மோடி திறந்துவைத்த சில நாட்களில் அப்பகுதி மக்களுக்கு சுற்றுலா பகுதியாக மாறியுள்ளது.
இந்தப் பாலம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அந்தப் பாலத்தில் பொதுமக்கள் செல்பி மற்றும் புகைப்படங்களை எடுப்பதற்காக தங்கள் வாகனங்களை நிறுத்துவதை போலீசார் கவனித்தனர். இதுதொடர்பாக பல புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. பொதுமக்களின் பிக்னிக் ஸ்பாட் ஆக மாறத்தொடங்கியதால் பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலை உருவானது.
இந்நிலையில், பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மும்பை போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அடல் சேது பாலம் நிச்சயமாக பார்த்து ரசிக்கும் அளவிற்கு மதிப்புமிக்கது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் வாகனங்களை பாலத்தில் நிறுத்துவதும், புகைப்படங்கள் எடுப்பதும் சட்டவிரோதமானது. பாலத்தில் வாகனங்களை நிறுத்தும் பயணிகளுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்படும் என தனது எக்ஸ் தளத்தில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளது. மேலும், 21.8 கி.மீ. நீளமுள்ள அடல் சேது பாலம் பிக்னிக் ஸ்பாட் அல்ல என்றும் அந்த புகைப்படத்தில் குறிப்பிட்டுள்ளது.
இருசக்கர வாகனங்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள், டிராக்டர்கள், மெதுவாக நகரும் வாகனங்கள் ஆகியவை இந்தப் பாலத்தில் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- கப்பலில் ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளையர்கள் இருப்பது தெரியவந்தது.
- கைது செய்யப்பட்டவர்கள் ஐ.என்.எஸ். கொல்கத்தா, ஐ.என்.எஸ். சுபத்ரா போர் கப்பல்களில் இந்தியா அழைத்து வரப்பட்டனர்.
செங்கடல் பகுதியில் பயணிக்கும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், மற்றொருபுறம் சோமாலியா கடல் பகுதியில் செல்லும் சரக்கு மற்றும் மீன்பிடி கப்பல்களை அந்த நாட்டின் கடற்கொள்ளையர்கள் கடத்தி செல்வது தொடர்கதையாகி உள்ளது. இப்படி தாக்குதலுக்கு மற்றும் கடத்தலுக்கு உள்ளாகும் கப்பல்களை மீட்க இந்திய கடற்படை பெரிதும் உதவி வருகிறது.
இந்நிலையில் சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடத்தப்பட்ட வங்காளதேச நாட்டுக்கு சொந்தமான 'எம்.வி.ருயென்' என்ற சரக்கு கப்பல் கடந்த 14-ந் தேதி சோமாலியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் பயணித்துக்கொண்டிருப்பது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அந்த கப்பலின் நடவடிக்கைகளை இந்திய போர்க்கப்பல் கண்காணித்தது. இதில் அந்த கப்பலில் ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளையர்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் பிற கப்பல்களை கடத்துவதற்கு கொள்ளையர்கள் அந்த கப்பலை பயன்படுத்தி வருவதும் தெரியவந்தது.
இதனையடுத்து, 15-ந் தேதி 'எம்.வி.ருயென்' சரக்கு கப்பல் இந்திய போர்க்கப்பலால் தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும் அதில் இருந்த கொள்ளையர்களை சரணடையுமாறு இந்திய கடற்படையினர் எச்சரித்தனர். அவர்கள் கேட்காமல் சரக்கு கப்பலில் இருந்து இந்திய போர்க்கப்பல் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
அதைத்தொடர்ந்து, சர்வதேச சட்டத்தின்படி தற்காப்புக்காகவும், கடற்கொள்ளையர்களை எதிர்ப்பதற்கும் இந்திய கடற்படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இந்திய விமானப்படையினரும் தாக்குதலில் கடற்படையினருக்கு உதவி செய்தனர். சுமாா் 40 மணி நேர சண்டைக்கு பிறகு சரக்கு கப்பலில் இருந்த 35 கடற்கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். கப்பலில் பிணைய கைதிகளாக பிடிக்கப்பட்டு இருந்த 17 சிப்பந்திகளும் மீட்கப்பட்டனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் ஐ.என்.எஸ். கொல்கத்தா, ஐ.என்.எஸ். சுபத்ரா போர் கப்பல்களில் இந்தியா அழைத்து வரப்பட்டனர். கடற்கொள்ளையர்கள் மும்பை அழைத்து வரப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் போலீசார் அவர்களை கைது செய்தனர்.
இதுகுறித்து கடற்படை வெளியிட்ட செய்திக்குறிப்பில், "ஐ.என்.எஸ். கொல்கத்தா போர் கப்பல், 35 கடற்கொள்ளையர்களுடன் மார்ச் 23-ந் தேதி (நேற்று) மும்பை வந்தது. அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக அவர்கள் உள்ளூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்" என கூறப்பட்டுள்ளது.
- கடலில் சீற்றம் அதிகமாக காணப்பட்டது.
- போலீசார் தங்களை பற்றி கவலைப்படாமல் கடலில் குதித்து, நீரில் மூழ்கிய ஸ்வாதியை மீட்டனர்.
மும்பையில் கடலில் மூழ்கிய பெண்ணை காப்பாற்றுவதற்காக 2 போலீஸ்காரர்கள் கடலில் குதித்து அந்த பெண்ணை மீட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மும்பை மரைன் டிரைவ் கடற்கரை பகுதியில் ஸ்வாதி என்ற பெண் நடந்து சென்ற போது அவரது கைப்பை கடலில் தவறி விழுந்துள்ளது. அதனை எடுக்க முயன்ற போது அவர் தண்ணீருக்குள் மூழ்கினார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீஸ்காரர்களான கிரண் தாக்கரே, அன்மோல் தஹிபேல் ஆகியோர் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர்.
அப்போது கடலில் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. எனினும் போலீசார் தங்களை பற்றி கவலைப்படாமல் கடலில் குதித்து, நீரில் மூழ்கிய ஸ்வாதியை மீட்டனர். பின்னர் ஸ்வாதியை மேல் சிகிச்சைக்காக மொபைல் வேன் மூலம் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஸ்வாதியை போலீசார் மீட்ட காட்சிகளை மும்பை போலீசார் தங்களது வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ 7.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 43 ஆயிரத்திற்கும் மேலான லைக்குகளையும் பெற்றுள்ளது. பயனர்கள் பலரும் மும்பை போலீசாரை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
- வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வீரர்கள் திறந்த பஸ்சில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
- கிரிக்கெட் வீரர்களைக் காண ரசிகர்கள் படையெடுத்ததால் மும்பை நகரமே ஸ்தம்பித்தது.
மும்பை:
டி20 உலகக் கோப்பை தொடரில் தோல்வியையே சந்திக்காமல் வீறுநடை போட்ட இந்திய அணி, கடந்த மாதம் 29-ம் தேதி நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்து சாம்பியன் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
டி20 உலகக் கோப்பையை 17 ஆண்டுக்கு பிறகு இந்திய அணி சொந்தமாக்கியதால் ஒட்டுமொத்த தேசமும் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தது.
இதற்கிடையே, வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று வீரர்கள் மும்பையில் திறந்த பஸ்சில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். கிரிக்கெட் வீரர்களைக் காண ரசிகர்கள் படையெடுத்ததால் மும்பை நகரமே ஸ்தம்பித்தது. வெற்றி பேரணி மரைன் டிரைவ் பகுதியில் இருந்து வான்கடே மைதானம் வரை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் மும்பை கடற்கரையில் 7 முக்கிய சாலைகள் மூடப்பட்டன. 10 இடங்களில் வாகன நிறுத்தத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
இரவு 7. 30 மணிக்கு வீரர்கள் திறந்த பஸ்சில் உலகக் கோப்பையுடன் பேரணியாக சென்றனர். பின் வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடந்தது.
இந்நிலையில், இந்த அணிவகுப்பு பேரணியை வெற்றிகரமாக நடத்த உதவி புரிந்த மும்பை போலீசுக்கு விராட் கோலி நன்றி தெரிவித்தார்.
இதுதொடர்பாக, கோலி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், மும்பை போலீசின் அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு ஆழ்ந்த மரியாதை மற்றும் மனமார்ந்த நன்றி. இந்தியாவின் வெற்றி அணிவகுப்பின் போது ஒரு அற்புதமான வேலை செய்ததற்காக மும்பை கமிஷனருக்கும் நன்றிகள். உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் சேவை மிகவும் பாராட்டப்படுகிறது. ஜெய் ஹிந்த் என பதிவிட்டுள்ளார்.
Deep respect and heartfelt thanks to all the officers and staff of @MumbaiPolice & @CPMumbaiPolice for doing a phenomenal job during Team India's Victory Parade. Your dedication and service is highly appreciated.?? Jai Hind !???
— Virat Kohli (@imVkohli) July 5, 2024
- பிரதமர் மோடியை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
- குறுஞ்செய்தி ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் இருந்து அனுப்பப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை போலீஸ் போக்குவரத்து பிரிவின் உதவி எண்ணிற்கு நேற்று வாட்ஸ்ஆப் மூலம் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.
அதில், 2 ஐ.எஸ்.ஐ. பயங்கரவாதிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், பிரதமர் மோடியை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதைதொடர்ந்து, போலீசார் உடனடியாக குறுஞ்செய்தி அனுப்பியவரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த குறுஞ்செய்தி ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் இருந்து அனுப்பப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட நபரை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் ராஜஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த குறுஞ்செய்தியை அனுப்பியவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம், அல்லது மதுபோதையில் இருந்து இருக்கலாம் என சந்தேகிப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
- தனது தாயின் மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் அவ்வாறு செய்ததாக அவர் வாக்குமூலம் கொடுத்ததாக போலீஸ் தெரிவித்தது.
- 19 கைரேகைகள் எதனுடனும் கைது செய்யப்பட்ட முகமதின் கைரேகை பொருந்தவில்லை என்று தெரியவந்துள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் தனது வீட்டில் வைத்து கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கத்தி குத்தில் காயமடைந்த சைஃப் அலி கான் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டார். அறுவை சிகிச்சை செய்து கொண்ட சைஃப் அலி கான் சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.

மறுபக்கம், சைஃப் அலி கானை கத்தியால் குத்தியவர் என்று முகமது ஷரிபுல் என்ற நபர் கைது செய்யப்பட்டார். அவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்று போலீசார் கூறினர். மேலும் தனது தாயின் மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் அவ்வாறு செய்ததாக அவர் வாக்குமூலம் கொடுத்ததாக போலீஸ் தெரிவித்தது.
ஆனால் கைது செய்யப்பட்டவரின் தந்தை, சிசிடிவியில் இருப்பது தனது மகன் இல்லை என்றும் அவரை தவறாக இந்த வழக்கில் இணைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் சைஃப் அலி கான் வீட்டில் சேகரிக்கப்பட்ட 19 கைரேகைகள் எதனுடனும் கைது செய்யப்பட்ட முகமதின் கைரேகை பொருந்தவில்லை என்று தெரியவந்துள்ளது.
மாநில குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) வசம் இருந்த கைரேகையோடு தற்போது கைது செய்யப்பட்டவரின் கைரேகை ஒப்பிட்டு பார்க்கப்பட்ட நிலையில் எதனுடனும் அவரின் கை ரேகை பொருந்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கூடுதல் மாதிரிகளை மீண்டும் ஒருமுறை சோதனைக்கு அனுப்ப மும்பை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

- மும்பை போலீசார் என் வாழ்வை சிதைத்து விட்டனர் என்று ஆகாஷ் கனோஜியா குற்றம்சாட்டியுள்ளார்.
- நிச்சயிக்கப்பட்ட பெண்ணை சந்திப்பதற்காக மும்பையில் இருந்து பிளாஸ்பூர் சென்றுகொண்டிருந்த போது போலீஸ் கைதி செய்துள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான், ஜனவரி 16 அன்று மும்பை பாந்ராவில் உள்ள தனது வீட்டில் வைத்து கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கத்தி குத்தில் காயமடைந்த சைஃப் அலி கான் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டார். அறுவை சிகிச்சை செய்து கொண்ட சைஃப் அலி கான் சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.

சைஃப் அலி கானை கத்தியால் குத்தியவர் என்று சந்தேகத்தின்பேரில் முகமது ஷரிபுல் என்ற வங்கதேச நபரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக சிசிடிவி காட்சிகளில் உள்ள நபரின் முக தோற்றத்தை ஒத்திருத்த சிலரை சந்தேகத்தின் பேரில் மும்பை போலீசார் சிலரை கைது செய்து விசாரித்தனர்.
அந்த வகையில் மும்பையில் மேற்கு மண்டல ரெயில்வேதுறையின்கீழ் இயங்கும் சுற்றுலா நிறுவனத்தில் ஓட்டுநரான பணிபுரிந்த ஆகாஷ் கனோஜியா[31 வயது] என்ற நபர் சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் கழித்து மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். சில மணி நேர விசாரணைக்குப் பின் அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் இந்த ஒரு கைது ஆகாஷ் கனோஜியா வாழ்வையே புரட்டிப் போட்டுள்ளது.
மும்பை போலீசார் என் வாழ்வை சிதைத்து விட்டனர் என்று ஆகாஷ் கனோஜியா குற்றம்சாட்டியுள்ளார்.
டிவியில் எனது புகைப்படங்கள் வெளியானதால் என்னை வேலையில் இருந்து நீக்கிவிட்டார்கள், நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்றுவிட்டது. குடும்பமே அவமானத்தைச் சந்தித்துள்ளது. எனக்கு நீதி வேண்டும் என்று தெரிவித்துள்ளார். நிச்சயிக்கப்பட்ட பெண்ணை சந்திப்பதற்காக மும்பையில் இருந்து பிளாஸ்பூர் சென்றுகொண்டிருந்த போதுதான் போலீஸ் அவரை கைது செய்துள்ளது.

சிசிடிவியில் உள்ள நபருக்கு மீசை இல்லை என்றும் தனக்கு மீசை உள்ளது என்றும், அதை போலீஸ் கவனிக்கத் தவறியது என்றும் அவர் தெரிவித்துள்ளார். என்னை கைது செய்ததோடு மட்டுமல்லாமல், நான் தான் அவர்கள் சந்தேகப்படும் குற்றவாளி என்று ஊடகத்திடம் எனது புகைப்படத்தை போலீஸ் கொடுத்துள்ளது. இதை பார்த்த பெண் வீட்டார் திருமணத்தை ரத்து செய்துவிட்டனர் என்று ஆகாஷ் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
- மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
- இதில் அப்பாவி மக்கள், போலீசார், வெளிநாட்டினர் உள்பட பலரும் அடங்குவர்.
மும்பை:
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடல் வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்தியதில் சுமார் 250-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள், போலீசார், வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதற்கிடையே, மும்பையில் இருந்து சுமார் 190 கி.மீ. தொலைவில் உள்ள அலிபாக், ஸ்ரீவர்தன் கடற்கரை பகுதியில் ஆள் இல்லாத மர்ம படகு ஒன்று நேற்று கரை ஒதுங்கியது. அதில் 3 ஏ.கே.-47 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் இருந்தன.
தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் படகை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர். இதில் அந்தப் படகு ஆஸ்திரேலியா நாட்டு பெண்ணுக்கு சொந்தமானது என்றும், கடந்த ஜூன் மாதம் விபத்தில் சிக்கியபோது நடுக்கடலில் கைவிடப்பட்ட நிலையில் தற்போது அது மும்பை அருகே கரை ஒதுங்கியதாகவும் தெரியவந்தது.
இந்நிலையில், மும்பை போக்குவரத்து போலீசாரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு பாகிஸ்தான் எண்ணில் இருந்து, 26/11 போன்ற பயங்கரவாத தாக்குதல் குறித்த எச்சரிக்கை குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் இந்தியாவில் 6 பேர் தாக்குதலை நிறைவேற்றுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மும்பை தீவிரவாத தடுப்புக் குழு, மும்பை போலீசார் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 4 வாலிபர்கள் முககவசம் அணிந்தபடி சங்கமேஸ்வரன் வீட்டுக்கு வந்தனர்.
- திருப்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயிலில் மும்பைக்கு தப்பி சென்றுள்ளனர்.
திருப்பூர் :
திருப்பூர் அவினாசி ரோடு ராயபண்டார வீதியை சேர்ந்தவர் சங்கமேஸ்வரன் (வயது 63). நிதி நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (57). இவர்களுக்கு 2 மகள்கள். மூத்த மகளுக்கு திருமணமாகி கணவருடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இளைய மகள் ஷிவானி (27), பெங்களூருவில் உள்ள கணினி நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். தற்போது பெற்றோருடன் திருப்பூரில் உள்ளார்.
கடந்த 25 வயது மதிக்கத்தக்க 4 வாலிபர்கள் முககவசம் அணிந்தபடி சங்கமேஸ்வரன் வீட்டுக்கு வந்தனர். பின்னர் சங்கமேஸ்வரன், ராஜேஸ்வரி, ஷிவானி ஆகியோரின் கை, கால்களை கட்டிப்போட்டு வீட்டில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து தப்பினர். இதில் 40 பவுன் நகை, ரூ.30 லட்சம் கொள்ளைபோனதாக கூறப்படுகிறது.
கைரேகை பதிவு செய்ததில் பழைய குற்றவாளியின் கைரேகையுடன் ஒத்து போனது. பிரபல கொள்ளையன் தனது கூட்டாளிகள் 3 பேருடன் இந்த கொள்ளை சம்பவததில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டது. திருப்பூரில் தங்கி இருந்து பிரிண்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தது தெரியவந்தது.
தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கொள்ளையன் மும்பைக்கு தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படையினர் மும்பையில் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். நிதி நிறுவன அதிபர் வீட்டில் கொள்ளையடித்ததும் நகை, பணத்ைத மூட்டை கட்டிக்கொண்டு சாவகாசமாக திருப்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயிலில் மும்பைக்கு தப்பி சென்றுள்ளனர். அவர்களை பிடிக்க தனிப்படையினர் தீவிரமாக களமிறங்கி உள்ளனர்.
ராஜஸ்தானை சேர்ந்த பயங்கர ரவுடியான லாரன்ஸ் பிஸ்னோயின் உதவியாளர் சம்பத் நெஹ்ராவை அரியானா மாநில சிறப்பு அதிரடி போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது, நடிகர் சல்மான்கானை கொலை செய்வதற்கு லாரன்ஸ் பிஸ்னோய் திட்டமிட்டு இருப்பது தெரியவந்தது.
இதற்காக லாரன்ஸ் பிஸ்னோயின் பிற கூட்டாளிகள் மும்பைக்கு சென்றிருக்கலாம் என கருதும் அரியானா போலீசார், இது தொடர்பாக மராட்டிய போலீசாரை எச்சரித்துள்ளனர். இதைத்தொடர்ந்து சல்மான்கானின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி அவரது வீடு மற்றும் படப்படிப்பு தளங்களில் ஆயுதம் ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் அவரது பாதுகாப்புக்காக சிறப்பு மெய்க்காப்பாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். #SalmanKhan #Tamilnews






