search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுக்கடை ஊழியரை தாக்கி கொலை மிரட்டல் - 2 வாலிபர்கள் கைது
    X

    மதுக்கடை ஊழியரை தாக்கி கொலை மிரட்டல் - 2 வாலிபர்கள் கைது

    வில்லியனூர் அருகே மதுக்கடை ஊழியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். மற்றொருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே அரியூர்பேட்- ஆனந்தபுரம் ரோட்டை சேர்ந்தவர் சிவா (வயது 37). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் மதுக்கடையில் பொறுப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று இவர் வேலை பார்க்கும் மதுக்கடைக்கு கண்டமங்கலம் அருகே நவமால்மருதூரை சேர்ந்த மைக்கேல் (வயது 31), ஜெயக்குமார் (30). மற்றும் சூர்யா ஆகியோர் மது குடிக்க வந்தனர். அவர்கள் மதுவாங்கி குடித்து விட்டு அதற்கான தொகையை கொடுக்க மறுத்தனர். இதனை சிவா தட்டிக் கேட்டார்.

    இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மைக்கேல், ஜெயக்குமார், சூர்யா ஆகிய 3 பேரும் சேர்ந்து சிவாவை சரமாரியாக தாக்கினர். மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றனர்.

    இதுகுறித்து சிவா வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்த குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மைக்கேல், ஜெயக்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். சூர்யாவை தொடர்ந்து தேடி வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×