என் மலர்
நீங்கள் தேடியது "ஜிவி பிரகாஷ்"
- 1960-ம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
- இப்படத்தில் ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகுகிறது. இதனால் திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
1960-ம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், 'பராசக்தி' படம் இன்று உலகம் முழுவதும் வெளியாவதையொட்டி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நீண்ட காலத்துக்குப் பிறகு, நமது தாய்மொழியைப் போற்றியும் உயர்த்தியும் பேசும் ஒரு திரைப்படம்… தமிழ் மீது கொண்ட பேரன்புடன், உங்களுக்காக பராசக்தி — என் 100வது திரைப்படம் என்று கூறியுள்ளார்.
- AK-வுடன் மீண்டும் இணைந்தது மகிழ்ச்சி என ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
- இந்த ஆவணப்படம் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
நடிகர் அஜித்குமாரின் ரேசிங் மீதான ஆர்வம் மற்றும் பந்தயத்தில் அவர் செய்த சாதனைகளை குறித்த ஆவணப்படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில், மலேசியாவில் ரேஸர் அஜித்குமார் மற்றும் அவரது குழு, மிச்சலின் 12 H கார் பந்தயத்தில் பங்கேற்றது தொடர்பான ஆவணப்படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியாகி உள்ளது.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் இசையில் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. AK-வுடன் மீண்டும் இணைந்தது மகிழ்ச்சி என ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இந்த ஆவணப்படம் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
- அம்மாவிற்கு இறுதி சடங்கு பண்ணுவதற்கு உதவி பண்ணுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இது போன்ற மோசடி நபர்கள் இருப்பதால் உண்மையில் உதவி கேட்பவர்களுக்கும் சிக்கல் ஏற்படுகிறது.
தமிழ் திரை உலகில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் இருப்பவர் ஜி.வி.பிரகாஷ்குமார். இசையமைப்பாளர், நடிகர் என சினிமாவில் பிசியாக ஓடிக் கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ் யாரேனும் உதவி என்று கேட்டால் உடனடியாக தன்னால் முடிந்தளவு பண உதவி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில் ஒரு எக்ஸ்தள கணக்கில் இருந்து ஜி.வி.பிரகாசுக்கு உதவி கேட்டு பதிவு வந்துள்ளது. அந்த பதிவில் எங்களுக்கு சிறு வயதில் அப்பா தவறி விட்டார். அம்மா தான் வேலைக்கு போய் படிக்க வைத்து கொண்டிருந்தார். இப்போது அம்மாவும் இறந்து விட்டார். இறுதி சடங்கு நடத்துவதற்கு கூட பண வசதி இல்லை. இதனால் நானும் தங்கையும் என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறோம். அம்மாவிற்கு இறுதி சடங்கு பண்ணுவதற்கு உதவி பண்ணுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதைப் பார்த்த ஜி.வி.பிரகாஷ் பரிதாபப்பட்டு உதவி கேட்டவரின் நம்பரை வாங்கி ரூ.20,000 அனுப்பி உள்ளார். ஜி.வி.பிரகாஷ் அவர் செய்த பண உதவியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அதை பார்த்து பலரும் அந்த கணக்கிற்கு பணம் அனுப்பி இருக்கின்றனர்.
இந்த நிலையில் தனது அம்மா இறந்து விட்டதாக சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட பதிவு 3 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது. அந்த வீடியோ யூடியூப்பில் இருப்பதாகவும் ஜி.வி.பிரகாஷ் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் சோசியல் மீடியாவில் ஆதாரத்துடன் பதிவிட்டு வருகின்றனர். இது போன்ற மோசடி நபர்கள் இருப்பதால் உண்மையில் உதவி கேட்பவர்களுக்கும் சிக்கல் ஏற்படுகிறது.
- இது எனது 100வது படம். சிவகார்த்திகேயனின் 25வது படம் என ஜிவி பிரகாஷ் தெரிவித்தார்.
- பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் பாடியுள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடித்துள்ள படம், 'பராசக்தி'. இது சிவகார்த்திகேயனின் 25வது படம்.
ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரித்துள்ள இப்படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் ரிலீஸாக உள்ளது.
இதனிடையே இப்படத்தின் அடி அலையே, ரத்னமாலா பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடலான, நமக்கான காலம் பாடல் வெளியாகி உள்ளது. இப்பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதன் ஒருபகுதியாக, இன்று மாலை 5 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பராசக்தி படத்தின் #WorldOfParasakthi என்ற நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்றது. இதில் பராசக்தி படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களது அனுபவத்தை பகிர்ந்தனர்.
இதில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் "இயக்குநர் சுதா கொங்கரா தான் எனக்கு முதல் தேசிய விருது வாங்கிக் கொடுத்தவர். அதனால் அவரது படம் என்றால் எனக்கு தனி மகிழ்ச்சி வந்துவிடுகிறது. ஏற்கனவே பல பீரியாடிக் படங்கள் செய்து விட்டேன். இது எனது 100வது படம். சிவகார்த்திகேயனின் 25வது படம். இந்த படத்தில் எனக்காக இசையமைப்பாளர்களும் பாடல்கள் பாடிக் கொடுத்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா மற்றும் ஷான் ரோல்டனுக்கு நன்றிகள். அதேபோல் இந்த படத்தில் ஒரு பாடல் பாடியுள்ள படத்தின் நாயகன் சிவகார்த்திகேயனுக்கும் நன்றி. அந்த பாடலும் விரைவில் வெளியாகும்" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து பேசிய சிவகார்த்திகேயன், "பராசக்தி' படம் அனைவரையும் கவரும் படமாக உருவாகியுள்ளது. வள்ளுவர் கோட்டத்தில் இப்படத்தின் விழா நடப்பது சிறப்பான அனுபவமாக உள்ளது" என்று தெரிவித்தார்.
- ஜிவி பிரகாஷ்-க்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார்.
- மரியா ராஜா இளஞ்செழியன் பிரதீப் ரங்கநாதனின் 'லவ் டுடே' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.
இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ்-ன் அடுத்த படத்தை அறிமுக இயக்குனரான மரியா ராஜா இளஞ்செழியன் இயக்குகிறார். அவர் பிரதீப் ரங்கநாதனின் 'லவ் டுடே' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.
இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ்-க்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார். மேலும் இந்த படத்தின் மூலம் 11 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு அப்பாஸ் கம்பேக் கொடுக்கிறார். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
மேலும் இப்படத்தை பியாண்ட் பிக்சர்ஸ் (Beyond Pictures) நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கு ஹேப்பி ராஜ் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் ஒரு ரொமாண்டிக் காமெடி படமாக இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

- பிரார்த்தனா நாதன் கதாநாயகியாக நடிக்கிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் முருகு இயக்கத்தில் பிரபல யூடியூபர் 'பைனலி' பாரத் நடிக்கும் படம் 'நிஞ்சா'. இப்படத்திற்கான தொடக்கவிழா நேற்று நடைபெற்றது. இப்படத்தை கே. எஸ். சினிஷ் மற்றும் எஸ். சாய் தேவானந்த் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்இசையமைக்கிறார். இப்படம் தொடர்பாக வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பார்க்கும்போது, இந்தப் படம் ஒரு செல்ல நாயை மையமாகக் கொண்ட ஒரு பொழுதுபோக்குப் படமாக உருவாக உள்ளதாக தெரிகிறது. பிரார்த்தனா நாதன் கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து மற்ற விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ‘AB4’ எனப்பெயரிடப்பட்டுள்ள படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
- கேஜிஎப் பட நடிகை ரவீனா தாண்டனின் மகள் ராஷா ததானி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
தமிழ் சினிமாவில் இரண்டு தேசிய விருதுகளை பெற்ற இளம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். இவர் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'பராசக்தி' படத்திற்கு இசையமைத்து உள்ளார்.
இந்த நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தெலுங்கு படத்தில் இசையமைக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அஜய் பூபதி இயக்கத்தில் கட்டமனேனி ஜெயகிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் 'AB4' எனப்பெயரிடப்பட்டுள்ள படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
கேஜிஎப் பட நடிகை ரவீனா தாண்டனின் மகள் ராஷா ததானி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். சந்தமாமா கதலு பிக்சர்ஸ் சார்பில் ஜெமினி கிரண் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் இதற்கு முன், தெலுங்கில் வருண் தேஜ் நடித்த மட்கா, ராபின்ஹுட் மற்றும் லக்கி பாஸ்கர் ஆகிய படங்களில் இசையமைத்துள்ளார். இப்படங்கள் இசைக்காக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் பவிஷ். இவர் தனுஷின் உறவினராவார். பவிஷ் அடுத்ததாக அறிமுக இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மகேஷ் ராஜேந்திரன் 'போகன்' மற்றும் 'பூமி' ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். இப்படத்தை தினேஷ் மற்றும் ஜி.தனஞ்ஜெயன் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் பெயரை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் நாளை 5 மணிக்கு அறிவிக்கிறார்.
காதல் கலந்த கமர்ஷியல் கதையாக உருவாகும் இப்படத்தில் நாகா துர்கா என்பவர் நாயகியாக அறிமுகமாகிறார். இதன் ஒளிப்பதிவாளராக பி.ஜி. முத்தையா, எடிட்டராக என்.பி.ஸ்ரீகாந்த், கலை இயக்குநராக மகேந்திரன் உள்ளிட்டோர் பணிபுரியவுள்ளனர். பவிஷ்– நாகா துர்கா ஆகியோருடன் முன்னணி நடிகர்கள் பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.
- 45 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் வீராங்கனைகள் 19 விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர்.
- பெண்கள் அணி ஈரானுக்கு எதிரான இறுதியில் வென்று தங்கப்பதக்கத்தை வென்றது.
ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி 2025 (3வது பதிப்பு) தற்போது பஹ்ரைனில் (மனாமா) நடைபெற்று வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் வீராங்கனைகள் 19 விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர்.
இதில் இந்தியா கபடி போட்டியில் இரு தங்கங்களை வென்றுள்ளது: ஆண்கள் அணி ஈரானை 35-32 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றது. அதேபோல் பெண்கள் அணியும் ஈரானுக்கு எதிரான இறுதியில் வென்று தங்கப்பதக்கத்தை வென்றது.
இந்நிலையில், ஆசிய இளையோர் விளையாட்டு கபடியில் தங்கம் வென்ற கார்த்திகாவுக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஜெயில் படப்பிடிப்பின்போது கண்ணகி நகர் சகோதர சகோதரிகளின் அபாரமான விளையாட்டுத் திறனை கண்டு வியந்தேன். இன்று உலகமும் வியக்கிறது.
அன்புத் தங்கை கார்த்திகா நம் தேசத்தின் பெருமை. மென்மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
- இப்படத்தை அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்தார்.
நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த 'இட்லி கடை'. இப்படம் கடந்த 1-ந்தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் அளித்த ஆதரவு என்பது குறைவே.
இதனையடுத்து, 'இட்லி கடை' படத்தை தொடர்ந்து போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ளார். இது தனுஷின் 54-வது படமாகும். இதுவரை படத்திற்கு தலைப்பு எதுவும் வைக்கப்படாத நிலையில் D54 என்றே சொல்லப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே, இப்படத்தை அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேண் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், D54 பிளாக்பஸ்டர் படம் என்று இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிளாக்பஸ்டர் படம், எழுத்து மற்றும் ஆடியோ தொடர்ந்து வருகிறது. சமீபத்திய காலங்களில் தனது படைப்புகளில் மிகவும் நம்பிக்கைக்குரிய இயக்குனர் மற்றும் silent killer என்று கூறியுள்ளார்.
இதனால் D54 படம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- டீசல் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17-ம் தேதி வெளியாகியது.
- குழுவினரின் உழைப்பு பாராட்டுக்குரியது.
சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா நடிக்கும் `டீசல்'. பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண்.
துவக்கம் முதலே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண், சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் அதுல்யா உடன் நடிக்கும் `டீசல்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
டீசல் திரைப்படம் அக்டோபர் 17-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் டீசல் படம் சமூக அக்கறையோடு சொல்லப்பட்ட நல்லதொரு படம் என இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தள பதிவிட்டில் கூறியிருப்பதாவது:-
நேற்று டீசல் திரைப்படம் பார்த்தேன். சமூக அக்கறையோடு சொல்லப்பட்ட நல்லதொரு படம். குழுவினரின் உழைப்பு பாராட்டுக்குரியது என கூறினார்.
- செல்வராகவன் இயக்கத்தில், கதாநாயகனாகவும், இசையமைப்பாளராகவும் ஜி.வி.பிரகாஷ் நடித்து வருகிறார்.
- இந்த படம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கும்.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் என்ற அடையாளத்துடன் அறிமுகம் கதாநாயகனாக நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் ஜி.வி.பிரகாஷ். 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள ஜி.வி.பிரகாஷ் இரண்டு முறை தேசிய விருதை பெற்றுள்ளார்.
'சூரரைப் போற்று' மற்றும் வாத்தி படத்தில் பாடல்கள் அமைத்ததற்காக சிறந்த இசையமைப்பாளர் பிரிவில் தற்போது ஜி.வி.பிரகாஷ் தேசிய விருதை பெற்றுள்ளார்.
இதற்கிடையே, செல்வராகவன் இயக்கத்தில், கதாநாயகனாகவும், இசையமைப்பாளராகவும் ஜி.வி.பிரகாஷ் நடித்து வருகிறார். இப்படத்திற்கான பூஜை கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்று படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படம் தொடர்பான எவ்வித தகவலும் வெளியாகாமல் இருந்தன.

இந்த நிலையில், 'மெண்டல் மனதில்' படத்தின் 4-வது கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஜி.வி.பிரகாஷ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
'மெண்டல் மனதில்' படத்தின் 4-வது கட்ட படப்பிடிப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. புகழ்பெற்ற செல்வராகவன் சார் இயக்கத்தில்... இந்த குறிப்பிட்ட படத்திற்காக காத்திருங்கள். ஆயிரத்தில் ஒருவன் மற்றும் மயக்கம் என்ன ஆகிய படங்களுக்குப் பிறகு இந்த படம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.






