என் மலர்
நீங்கள் தேடியது "car racing"
- 3 ஆம் இடம் பிடித்து, நம் தேசத்துக்கு பெருமை சேர்த்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது!
- இந்த வெற்றியின் மூலம், நம் பாரத நாடு மட்டுமன்றி, நம் தமிழ்நாட்டின் பெருமையையும் உலகறியச் செய்திருக்கிறார் அஜித் குமார் அவர்கள்!
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சர்வதேச அளவிலான கார் பந்தயங்களில் களமிறங்கி, பல வெற்றிகளை குவித்து வரும் நடிகர் அஜித் குமாரின் 'Ajith Kumar Racing Team' அணி, 2025 ஆம் ஆண்டிற்கான Creventic 24H European Endurance Championship தொடரில் ஒட்டுமொத்தமாக 3 ஆம் இடம் பிடித்து, நம் தேசத்துக்கு பெருமை சேர்த்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது!
இந்த வெற்றியின் மூலம், நம் பாரத நாடு மட்டுமன்றி, நம் தமிழ்நாட்டின் பெருமையையும் உலகறியச் செய்திருக்கிறார் அஜித் குமார் அவர்கள்!
மென்மேலும் அவரது அணி பல வெற்றிகளை குவிக்க எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! என கூறியுள்ளார்.
- அஜித்குமார் ரேஸிங் அணி ஆசிய லீ மான்ஸ் தொடரில் கலந்து கொள்ளவுள்ளது.
- இந்த தொடரில் அஜித்குமாருடன் இணைந்து நரேன் கார்த்திகேயன் கலந்துகொள்கிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .
கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.
அஜித்குமார் ரேஸிங் அணி ஆசிய லீ மான்ஸ் தொடரில் கலந்து கொள்ளவுள்ளது. இந்த தொடரில் அஜித்குமாருடன் இணைந்து நரேன் கார்த்திகேயன் கலந்துகொள்கிறார்
இந்நிலையில், இந்த கார் ரேஸ் தொடரில் பங்கேற்க உள்ள அஜித்குமாரின் புதிய அணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அணியில் நரேன் கார்த்திகேயன், அஜித் குமார் மற்றும் ஆதித்யா படேல் ஆகியோர் உள்ளனர்.
இது தொடர்பான புகைப்படங்களை அஜித்குமார் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
- அஜித்குமார் ரேஸிங் அணி ஆசிய லீ மான்ஸ் தொடரில் கலந்து கொள்ளவுள்ளது.
- இந்த தொடரில் அஜித்குமாருடன் இணைந்து நரேன் கார்த்திகேயன் கலந்துகொள்கிறார்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .
கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.
அஜித்குமார் ரேஸிங் அணி ஆசிய லீ மான்ஸ் தொடரில் கலந்து கொள்ளவுள்ளது. இந்த தொடரில் அஜித்குமாருடன் இணைந்து நரேன் கார்த்திகேயன் கலந்துகொள்கிறார்
இந்நிலையில், இந்த தொடரில் அஜித்குமார் LMP3 எனும் ரேஸிங் அணி பயன்படுத்தும் ரேஸ் காரை நரேன் கார்த்திகேயன் உடன் இணைந்து அஜித்குமார் அறிமுகம் செய்தார்.
இது தொடர்பான புகைப்படங்களை அஜித்குமார் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
- கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வருகிறார் அஜித்குமார்.
- 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை அஜித் உருவாக்கியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .
கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.
இந்நிலையில், அஜித்குமார் ரேஸிங் அணி ஆசிய லீ மான்ஸ் தொடரில் கலந்து கொள்ள போகிறது என்று அஜித்குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஆசிய லீ மான்ஸ் தொடரில் விரேஜ் அணியுடன் இணைந்து அஜித்குமார் ரேஸிங் அணி கலந்துகொள்கிறது. இந்த தொடரில் அஜித்குமாருடன் இணைந்து நரேன் கார்த்திகேயன் கலந்துகொள்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.
- சினிமாவில் இருந்து தாற்காலிகமாக விலகி கார் ரேஸில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
- நரேன் எங்களது அணியில் இணைவது உண்மையிலேயே பாக்கியம்.
முன்னணி தமிழ் நடிகர் அஜித்குமார் திரைப்படங்களை தாண்டி கார் ரேஸிங்கிலும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகிறார்.
கடைசியாக வெளியான குட் பேட் அக்லி படத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து தாற்காலிகமாக விலகி கார் ரேஸில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
இவரின், அஜித்குமார் ரேஸிங் என்ற கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெறும் கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் பெற்றுள்ளது.
இந்த நிலையில், அஜித்குமார் ரேஸிங் கார் பந்தய நிறுவனத்தில் ஓட்டுநராக தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அஜித்குமார் ரேஸிங் எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நரேன் கார்த்திகேயனை அஜித்குமார் ரேஸிங்கிற்கு அழைப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.
நரேன் எங்களது அணியில் இணைவது உண்மையிலேயே பாக்கியம். அவருடன் இணைந்து பந்தயத்தில் ஈடுபடுவது கௌரவமானது. நரேனுடன் சேர்ந்து 'ஆசிய லீ மான்ஸ்' தொடர் நம் அனைவருக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்தது" என்று அஜித் குமார் அந்த பதிவில் தெரிவிட்டுள்ளார்.
நரேன், உலகளவில் ஃபார்முலா ஆசியா, சூப்பர் பிக்ஸ் கொரியா போன்ற பல கார் பந்தயங்களில் முதலிடம் பெற்று இந்தியாவின் கார் பந்தைய நட்சத்திரமாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- இத்தாலியில் நடைபெற்று வரும் GT4 யூரோபியன் சீரிஸ் கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.
- இந்நிலையில் ரேஸில் ஈடுப்பட்ட அஜித் குமாரின் கார் விபத்தில் சிக்கியது.
அஜித் குமார் தற்பொழுது குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து இத்தாலியில் நடைபெற்று வரும் GT4 யூரோபியன் சீரிஸ் கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் ரேஸில் ஈடுப்பட்ட அஜித் குமாரின் கார் விபத்தில் சிக்கியது. நல்வாய்ப்பாக காயமின்றி அவர் தப்பினார்.
வளைவில் வேகமாக திரும்பும்போது, சர்க்யூட்டின் நடுவில் பழுதாகி நின்றுகொண்டிருந்த கார் மீது அஜித்தின் கார் மோதியது. கார் மீது மோதாமல் இருக்க எவ்வளவோ முயன்றபோதும் கட்டுப்படுத்த முடியவில்லை.

சர்க்யூட்டில் சிதறிக் கிடந்த கார் பாகங்களை அகற்றிக் கொண்டிருந்த ஊழியர்களுடன் இணைந்து அஜித்குமாரும் இணைந்து வேகமாக பாகங்களை அப்புறப்படுத்தினார். விபத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏகே 64 படத்தில் நடிக்க இருக்கிறார்.
- துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அவரது அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது.
- சிறந்த பங்களிப்புக்காக அஜித்குமாருக்கு, மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்தது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித் குமார், சினிமாவை தொடர்ந்து கார் பந்தயத்திலும் கலக்கி வருகிறார்.
அதன்படி இந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அவரது அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது.
அதேவேளை கலைத்துறையில் ஆற்றி வரும் சிறந்த பங்களிப்புக்காக அஜித்குமாருக்கு, மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்தது.
இந்நிலையில், இத்தாலியில் நடைபெற்ற 12வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் அணிக்கு 3வது இடம் கிடைத்துள்ளது.
- டி.கியூ. மிட்ஜெட் கார்களை வேகமாக ஓட்டுவதில் ஆஷ்லியா திறமையானவர்
- கார் மோதி கொண்டதில் ஆஷ்லியா காரிலிருந்து தூக்கி வீசப்பட்டார்
அமெரிக்காவின் மத்தியமேற்கு பகுதியை சேர்ந்த மாநிலம் இண்டியானா. இதன் தலைநகரம் இண்டியானாபொலிஸ்.
இந்நகரை சேர்ந்தவர் ஆஷ்லியா ஆல்பர்ட்ஸன் (24). ஆஷ்லியா கார் பந்தயத்தில் பிரபலமானவர்.
தனது 10வது வயதிலிருந்தே கார் பந்தயத்தில் ஆர்வம் கொண்டிருந்த இவர் டி.கியூ. மிட்ஜெட் வகை கார்களை வேகமாக ஓட்டுவதில் திறமையானவர் என பெயர் பெற்றிருந்தார்.
இவர் ஜி.எம்.சி. டெரைன் கார் ஒன்றில் சக பயணியாக பயணம் செய்து கொண்டிருந்தார். அக்காரை இவரது 31-வயது நண்பர் ஜேக்கப் கெல்லி சாலையின் இடதுபுறமாக ஓட்டி கொண்டிருந்தார். அப்போது அவர்கள் அருகில் ஒரு கருப்பு நிற செவர்லே மலிபு காரை ஆஸ்டின் கூப்பர் (Austin Cooper) எனும் 22-வயது ஆண் வலதுபுறமாக வேகமாக ஓட்டி வந்தார்.
ஒருவரையொருவர் முந்தி செல்லும் நோக்கில் இரண்டு கார்களும் அருகருகே மிக வேகமாக சென்றதால், ஒருவர் மற்றொருவருக்கு வழி விட மறுத்து முன்னேறி கொண்டிருந்தனர்.
அப்போது மலிபு காரை ஓட்டியவர் திடீரென தனது பாதையிலிருந்து ஜி.எம்.சி. சென்ற பாதையின் குறுக்கே வந்தார். இதனை எதிர்பாராத கெல்லி, செயலிழந்தார். இதில் ஜி.எம்.சி. கார் சுழன்றது. இதன் விளைவாக இரண்டு கார்களும் மிக பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் ஆஷ்லியா காரிலிருந்து தூக்கி வீசப்பட்டார்.
உடனடியாக காவல்துறைக்கும், அவசர மருத்துவ சேவைக்கும் அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்து, அவர்கள் விரைந்து வந்து அனைவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். லூயிவில் பல்கலைகழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆஷ்லியா மற்றும் கெல்லிக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால், சிகிச்சை பலனின்றி ஆஷ்லியா உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். லேசான காயங்களுக்காக கெல்லிக்கு அங்கே சிகிச்சை அளிக்கப்பட்டது. மலிபுவை ஓட்டிய ஆஸ்டினுக்கும் அவருடன் பயணித்த ஒரு 18 வயதுக்குட்பட்ட நபருக்கும் லேசான காயங்களுக்காக ஷ்னெக் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். "ஆஷ்லியா உயிரிழந்தது குறித்து எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். இச்சம்பவம், உயிர் எவ்வளவு முக்கியமானது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. ஆஷ்லியா நினைவாக இனியாவது சாலைகளில் வாகனம் ஓட்டும் போது ஒருவரையொருவர் முந்தி செல்லும் வெறியை ஓட்டுனர்கள் குறைத்து கொள்ள வேண்டும்," என பிரபல கார் பந்தய வீரர் டோனி ஸ்டூவர்ட் தெரிவித்துள்ளார்.
- விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியதாக அறிவிக்கப்பட்டது.
- களத்தில் வைத்து வேகமாக ஓட்டிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார். இவர் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில், நடிகர் அஜித் குமார் துபாய் பந்தயகளத்தில் கார் ஓட்டிய காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி உள்ளது. கடந்த ஜூன் 21 ஆம் தேதி இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக தெரிகிறது. வீடியோவில் கார்களை உற்று நோக்கும் அஜித், பிறகு அதனை களத்தில் வைத்து வேகமாக ஓட்டிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
முதலில் பி.எம்.டபிள்யூ. காரை ஓட்டி மகிழ்ந்த அஜித்குமார் அடுத்ததாக ரேஸ் காரில் சீறிப்பாய்ந்தார். இதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு பி.எம்.டபிள்யூ. காரில் பந்தய களத்தை வலம்வந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வளர்ந்து வரும் மோட்டார்ஸ்போர்ட் ரசிகர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இந்திய ரேசிங் திருவிழா 2024 போட்டிகள் வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் நடைபெற உள்ளது.
இந்திய ரேசிங் திருவிழா 2024 போட்டிகள் வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த கார் பந்தய திருவிழா இந்தியன் ரேசிங் லீக் (ஐஆர்எல்) மற்றும் பார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் (எஃப் 4 ஐசி) ஆகிய இரண்டு சாம்பியன்ஷிப்களை உள்ளடக்கியதாகும்.
இந்த போட்டியில் கொல்கத்தா ராயல் டைகர்ஸ் எனும் அணி அறிமுகமாகிறது. இந்த அணியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி வாங்கி உள்ளார். கொல்கத்தா ராயல் டைகர்ஸ் அணியுடன் ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, கோவா, கொச்சி, அகமதாபாத் என மொத்தம் 8 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன.
இந்திய பந்தய விழா, ரேசிங் புரமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் உருவாக்கியது. இந்தியாவின் வளர்ந்து வரும் மோட்டார்ஸ்போர்ட் ரசிகர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- சென்னை தீவுத்திடல், அண்ணா சாலையில் கார் பந்தயம் நடத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது.
- ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் அளவிற்கு ஒரு வீரரை கூட தமிழகத்தில் உருவாக்கவில்லை.
சென்னை:
F4 கார் பந்தயத்திற்கான டிக்கெட் விற்பனையை தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்.
சென்னையில் வரும் ஆகஸ்ட் 31, செம்டம்பர் 1 ஆகிய தேதிகளில் ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் என்ற பெயரில் இரவு கார் பந்தயம் நடைபெற உள்ளது. இதனை காண்பதற்காக டிக்கெட்களை Paytm இன்சைடரில் உரிய கட்டணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் அவசியம் தானா என்று நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து சீமான் கூறியவாதவது:-
சென்னை தீவுத்திடல், அண்ணா சாலையில் கார் பந்தயம் நடத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது. இருங்காட்டு கோட்டை, சோழவரத்தில் உள்ள பந்தயத்திடலில் நடத்தலாம். மக்கள் பயணிக்கும் சாலையை மறித்து யாரை மகிழ்விக்க இந்த கார் பந்தயம்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் அளவிற்கு ஒரு வீரரை கூட தமிழகத்தில் உருவாக்கவில்லை. பகட்டுக்காக, பொழுதுபோக்கிற்காக கார்பந்தயம் நடத்தும் முடிவை அரசு கைவிட வேண்டும்.
மாநிலத்தில் போராடி வரும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற நிதி இல்லை.
பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த மாநில அரசிடம் நிதி இல்லை. மின்சார வாரிய கடனை அடைக்க மின் கட்டணத்தை உயர்த்தும் சூழலில் கார் பந்தயம் தேவையா. மாதம் ரூ.1000 கொடுத்தால் தான் வாழ முடியும் என்ற வறுமை சூழலில் மக்களை வைத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கார் பந்தயம் நடத்தப்படுவதன் காரணமாக பொதுமக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.
- கார் பந்தயம் திட்டத்தை தி.மு.க. அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, வழிகாட்டி மதிப்பு உயர்வு, முத்திரைக் கட்டண உயர்வு, பதிவுக் கட்டண உயர்வு, வாகனக் கட்டண உயர்வு, கட்டிட அனுமதிக் கட்டண உயர்வு என பல்வேறு இன்னல்களுக்கு தமிழக மக்கள் ஆளாகியுள்ள நிலையில், சென்னையில் கார் பந்தயத்தை நடத்தப் போவதாக தி.மு.க. அரசு அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும்."
"தமிழ்நாட்டினுடைய கடன் 8 லட்சத்து 33 ஆயிரத்து 362 கோடி ரூபாயாகவும், நிதிப் பற்றாக்குறை 1 லட்சத்து 8 ஆயிரத்து 690 கோடி ரூபாயாகவும், வருவாய்ப் பற்றாக்குறை 49,279 கோடி ரூபாயாகவும் இருக்கின்ற நிலையில், இந்தக் கார் பந்தயத்தை நடத்த வேண்டியது அவசியம் தானா என்பதை தி.மு.க. அரசு எண்ணிப் பார்க்க வேண்டும்."
"சென்னையில் கார் பந்தயம் நடத்தப்படுவதன் காரணமாக பொதுமக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. எனவே, இந்தக் கார் பந்தயம் திட்டத்தை தி.மு.க. அரசு உடனடியாக கைவிட வேண்டுமென்று அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தி.மு.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்," என்று கூறி உள்ளார்.






