search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ajith Kumar"

    • பொங்கல் பண்டிகைக்கு விடாமுயற்சி ரிலீஸ் ஆக இருந்தது.
    • இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "விடாமுயற்சி." நீண்ட காலமாக படமாக்கப்பட்டு வந்த விடாமுயற்சி திரைப்படம் அனைத்து பணிகளும் முடிவடைந்து, பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. எனினும், கடைசியில் இந்தப் படம் திட்டமிட்டப்படி ரிலீஸ் ஆகவில்லை.

    ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6.40 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. முந்தைய தகவல்களின் படி விடாமுயற்சி திரைப்படம் வருகிற 23-ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது.

    இது குறித்து தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. ரிலீஸ் தேதி தொடர்பான அறிவிப்பு, டிரெய்லரில் இடம்பெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொண்டுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • பொங்கல் பண்டிகைக்கு விடாமுயற்சி ரிலீஸ் ஆக இருந்தது.
    • இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "விடாமுயற்சி." இந்தப் படத்தில் அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொண்டுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தை வெளியிட முடியவில்லை என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.

     


    இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 'விடாமுயற்சி' திரைப்படம் வருகிற 23-ந்தேதி வெளியாக உள்ளதாகவும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6.40 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. விடாமுயற்சி திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் ஆக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி கலந்து கொண்டது.
    • இதில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியது.

    துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இவரது வெற்றிக்கு ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிலையில் 24H துபாய் கார் ரேஸில் வெற்றி பெற்ற நிலையில், நடிகர் அஜித் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், கார் ரேஸில் வெற்றி பெற உழைத்த எனது அணிக்கு நன்றி. ரசிகர்கள், குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என்று கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது.
    • அஜித் குமார் சக அணியினருடன் துள்ளி குதித்து வெற்றியை கொண்டாடினார்.

    துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    மேலும், மகிழ்ச்சியில் அஜித் குமார் சக அணியினருடன் துள்ளி குதித்து வெற்றியை கொண்டாடினார். இவரது வெற்றிக்கு ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்தனர். போட்டியில் வெற்றி பெற்றவுடன் செய்தியாளர்களிடம் அவர் கொடுத்த பேட்டி வெளியாகியுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது " விளையாட்டு உங்களை வெற்றி மற்றும் தோல்வியை எப்படி கையாள வேண்டும் என்பதை சொல்லிக்கொடுக்கும். நான் சிறந்த மனிதனாக முயற்சித்து கொண்டிருக்கிறேன். நான் என் தவறுகளை சரி செய்ய முயற்சித்து வருகிறேன். என்னுடைய ரசிகர்களுக்கு என்னுடைய வேண்டுக்கொள் என்னவென்றால்,படத்தை பாருங்கள் ஆனால் அஜித் வாழ்க மற்றும் விஜய் வாழ்க சொல்றதுனால நீங்க எப்போ வாழ போறீங்க. நீங்கள் என் மேல் காண்பிக்கும் அன்புக்கு நான் என்றும் கடமை பட்டுள்ளேன். என் ரசிகர்கள் அவர்களின் வாழ்க்கையில் வெற்றிகரமாக இருந்தால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன். வாழ்க்கை மிகவும் சிறியது. நம்முடைய கொள்ளு பேரன்கள் நம்மை நியாபகம் கூட வைத்திருக்க மாட்டார்கள். இந்த மொமண்டை கொண்டாடுங்கள் ' என கூறினார். இந்த வீடியோவை இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
    • அஜித் குமார் சக அணியினருடன் துள்ளி குதித்து வெற்றியை கொண்டாடினார்.

    துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    மேலும், மகிழ்ச்சியில் அஜித் குமார் சக அணியினருடன் துள்ளி குதித்து வெற்றியை கொண்டாடினார். இவரது வெற்றிக்கு ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில், ஆந்திர பிரதேச துணை முதலமைச்சர் பவன் கல்யாண் நடிகர் அஜித் குமார் மற்றும் அவரது ரேசிங் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "துபாய் 24H பந்தயத்தில் 991 பிரிவில் 3வது இடத்தைப் பிடித்து GT4 பிரிவில் "ஸ்பிரிட் ஆஃப் தி ரேஸ்" விருதை வென்ற திரு. அஜித் குமார் மற்றும் அஜித் குமார் ரேசிங் குழுவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.!"

    "பெரிய உறுதியுடன் சவால்களை சமாளித்து உலக அரங்கில் பாரத கொடியை உயரப் பறக்கவிட்டது உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் இன்னும் பல வெற்றிகள் கிடைக்க வாழ்த்துகிறேன்! ஜெய்ஹிந்த்," என குறிப்பிட்டுள்ளார். 

    • துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது.
    • மகிழ்ச்சியில் அஜித் குமார் சக அணியினருடன் துள்ளி குதித்து வெற்றியை கொண்டாடினார்.

    துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    மேலும், மகிழ்ச்சியில் அஜித் குமார் சக அணியினருடன் துள்ளி குதித்து வெற்றியை கொண்டாடினார். இவரது வெற்றிக்கு ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடிபழனிசாமி நடிகர் அஜித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    துபாயில் நடைபெற்ற 24H சீரிஸ் கார் பந்தயத்தில் 3-வது இடத்தைப் பிடித்துள்ள முன்னணி நடிகர், அன்புச் சகோதரர் அஜித்குமார் அவர்கள் தலைமையிலான அஜித் குமார் ரேசிங் அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

    மேலும் பல வெற்றிகளைக் குவித்து, நம் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் மென்மேலும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்.

    என கூறியுள்ளார்.

    • கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது.
    • அஜித் குமாரின் வெற்றிக்கு ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    மேலும், மகிழ்ச்சியில் அஜித் குமார் சக அணியினருடன் துள்ளி குதித்து வெற்றியை கொண்டாடினார். இவரது வெற்றிக்கு ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அஜித் குமாருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரஜினி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    என் அன்பான அஜித்குமாருக்கு வாழ்த்துகள். நீங்க சாதிச்சிட்டீங்க. கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார். லவ் யூ.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
    • அஜித் குமார் சக அணியினருடன் துள்ளி குதித்து வெற்றியை கொண்டாடினார்.

    துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    மேலும், மகிழ்ச்சியில் அஜித் குமார் சக அணியினருடன் துள்ளி குதித்து வெற்றியை கொண்டாடினார். இவரது வெற்றிக்கு ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், திரைத் துறையை சேர்ந்தவர்கள் நடிகர் அஜித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

    • இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
    • அஜித் குமார் சக அணியினருடன் துள்ளி குதித்து வெற்றியை கொண்டாடினார்.

    துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    மேலும், மகிழ்ச்சியில் அஜித் குமார் சக அணியினருடன் துள்ளி குதித்து வெற்றியை கொண்டாடினார். இவரது வெற்றிக்கு ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிகர் அஜித் குமார் மற்றும் அவரது ரேசிங் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "24H துபாய் 2025 இல் அஜித் குமார் மற்றும் அவரது குழுவினர் 991 பிரிவில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளனர் என்பதைக் கேள்விப்பட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்."

    "இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்காக அஜித் குமார் மற்றும் அவரது குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மதிப்புமிக்க பந்தய நிகழ்வில் நமது திராவிட மாடல் அரசாங்கத்தின் விளையாட்டுத் துறை லோகோவை காட்சிப்படுத்தியதற்காக அஜித் குமார் ரேசிங் அணிக்கு நன்றி கூறுகிறேன்."

    "நமது நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் இன்னும் பெருமை சேர்ப்பதில் அஜித் சார் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • துபாய் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி பங்கேற்றது.
    • கடைசி நேரத்தில் பந்தயத்தில் இருந்து அஜித் விலகினார்.

    துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    இந்த கார் பந்தயத்தில் பங்கேற்க தயாராகி வந்த நடிகர் அஜித் குமார் கடைசி நேரத்தில் பந்தயத்தில் இருந்து விலகிக் கொண்டார். எனினும், பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி பங்கேற்றது. தற்போது மூன்றாவது இடம்பிடித்துள்ள அஜித் குமார் ரேசிங் அணிக்கு அஜித் குமார் உரிமையாளராக மட்டுமே செயல்பட்டார்.



    கார் பந்தயத்தில் மூன்றாவது இடம்பிடித்த நடிகர் அஜித் குமார் ரேசிங் அணிக்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் அஜித் குமார் வெற்றியை கொண்டாடிய தருணங்களை வீடியோ மற்றும் புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

    • நடிகர் அஜித் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் 'விடாமுயற்சி'.
    • அஜித் கலந்துக்கொண்ட 24 எச் சீரிஸ் ரேஸ் துபாயில் நடைப்பெற்று வருகிறது.

    நடிகர் அஜித் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் 'விடாமுயற்சி'.

    அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் ஜனவரி 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

    அஜித் தற்பொழுது கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அதற்கான பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறார். நேற்று அவர் ரேசிங் செய்யும் வீடியோ மற்றும் ரேசிங் குறித்து அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது.

    அஜித் கலந்துக்கொண்ட 24 எச் சீரிஸ் ரேஸ் துபாயில் நடைப்பெற்று வருகிறது. இந்த ரேசில் அஜித் பங்கேற்க இருந்தது. ஆனால் சில சூழ்நிலை காரணமாக அந்த ரேசிங் போட்டியில் இருந்து ஓட்டுனராக விலகுவதாக இன்று மதியம் அறிக்கையை வெளியிட்டனர். தற்பொழுது அஜித் அவரின் ரசிகர்களுக்கு ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    அதில் அவர் கூறியதாவது " ரொம்ப சந்தோஷமா இருக்கு. நிறைய ரசிகர்கள் என்னைய பார்க்க வந்திருந்தாங்க. பார்க்க ரொம்ப எமோஷனாலா இருந்தது. நீங்க எல்லாரும் சந்தோஷமா ஆரோக்கியமா மன நிம்மதியோட வாழ கடவுள நான் வேண்டிக்கிறேன். குடும்பத்த பாருங்க, நேரத்தை வீணடிக்காதீங்க, நல்லா படிங்க, வேலைக்கு போறவங்க கடுமையா உழைச்சு வேலைப் பாருங்க. வொர்க் ஹார்ட், ப்ளே ஹார்ட். வெற்றி அடைந்தால் நல்ல விஷயம் தான். தோல்வி வந்தால் துவண்டு போய்விடாதீர்கள்.போட்டி மிகவும் முக்கியம், லவ் யூ ஆல். லவ் யூ ஆல் அன்கண்டிஷனலி. திரைத்துறையும் ரேசிங்கும் ஒன்று தான். இரண்டிலையும் அதற்கான உழைப்பை தந்தால் பலன் தானாக கிடைக்கும். தயவு செய்து சண்ட போடாதீங்க. நேரம் ரொம்ப குறைவாகத்தான் இருக்கிறது. சந்தோஷமா இருங்கள். உங்கள் குடும்பத்தை பார்த்துக் கொள்ளுங்கள்" என கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் அஜித் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் 'விடாமுயற்சி'.
    • அஜித் கலந்துக்கொண்ட 24 எச் சீரிஸ் ரேஸ் துபாயில் நடைப்பெற்று வருகிறது.

    நடிகர் அஜித் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் 'விடாமுயற்சி'.

    அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் ஜனவரி 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

    அஜித் தற்பொழுது கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அதற்கான பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறார். நேற்று அவர் ரேசிங் செய்யும் வீடியோ மற்றும் ரேசிங் குறித்து அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது. ரேசிங் பயிற்சியின் போது விபத்துக்குள்ளான வீடியோ மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

    அஜித் கலந்துக்கொண்ட 24 எச் சீரிஸ் ரேஸ் துபாயில் நடைப்பெற்று வருகிறது. இந்த ரேசில் அஜித் பங்கேற்க இருந்தது. இதற்கான பயிற்சியையும் கடந்த 1 மாத காலமாக அஜித் எடுத்து வந்தார். தற்பொழுது மேலும் சில அதிர்ச்சியூட்டும் அறிக்கையை அஜித் ரேசிங் தரப்பில் வெளியிட்டுள்ளது.

    அதில் அவர்கள் கூறியதாவது "

    கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு துபாய் 24H சீரிஸூக்கான கார் ரேஸ் பயிற்சியில் நடிகர் அஜித்குமார் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இதுபற்றி, அஜித்குமார் ரேசிங் குழு முழுமையாக மதிப்பீடு செய்துள்ளது.

    அணியின் உரிமையாளராகவும், அணியின் ஒருங்கிணைந்த பகுதியாகவும் உள்ள அஜித்குமார் இதில் உள்ள பலவிதமான சவால்களையும் கருத்தில் கொண்டு, அணியினரின் நலனை முன்னுரிமை படுத்தி இருக்கிறார். பலவித ஆலோசனைகளுக்குப் பிறகு பாதுகாப்பு குறித்தான மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளார்.

    பலகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, வரவிருக்கும் துபாய் 24H சீரிஸில், அஜித்குமார் ரேசிங்கிற்கு வாகனம் ஓட்டுவதில் இருந்து பின்வாங்குவது என்ற கடினமான ஆனால் தன்னலமற்ற முடிவை அஜித்குமார் எடுத்துள்ளார். தன்னுடைய தனிப்பட்ட விருப்பம் என்பதையும் தாண்டி அணியின் நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பை இது காட்டுகிறது. அஜித்தின் இத்தகைய ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் அணியினருக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது.

    மோட்டார் ஸ்போர்ட்டின் மீதான அபரிதமான ஆர்வம் கொண்ட அஜித்குமார் துபாய் 24H சீரிஸில் தொடர்ந்து பங்கேற்பார். போர்ஷே 992 கப் காரில் (நம்பர் 901) பாஸ் கோட்டனின் அஜித்குமார் ரேசிங்கின் உரிமையாளராக அஜித் உள்ளார். அதே நேரத்தில் போர்ஷேயில் ரஸூனின் கேமன் ஜிடி4 (நம்பர் 414) அஜித்குமார் ரேசிங்கிற்கு நிகழ்வில் போட்டியிடுகிறார்.

    அஜித்தின் இந்த முடிவை துபாய் 24H சீரிஸ் அமைப்பாளர்களால் பாராட்டியுள்ளனர். அஜித் அங்கு இருப்பது போட்டிக்கு கூடுதல் உற்சாகத்தையும் தருகிறது. தன்னுடைய இரு அணிகளுக்காகவும் அஜித் களத்தில் இருப்பது அங்கிருக்கும் ரசிகர்களையும் உற்சாகப்படுத்துவதாக அமைந்துள்ளது.

    மோட்டார் ஸ்போர்ட் தொடர்ந்து பிரபலமடைந்து வருவதால், அஜித்குமாரின் அர்ப்பணிப்பு ரசிகர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக மாறியுள்ளது. தான் ஏற்றிருக்கும் இந்த இரண்டு பொறுப்புகளையும் சரியாக செய்ய அவர் எடுத்திருக்கும் இந்த முடிவு ரசிகர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சி தரக்கூடியது என்பது உறுதி.

    டீம் அஜித்குமார் ரேசிங்." என அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    ×