என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்கொணர்வு மனு"

    • செப்டம்பர் 10 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வந்தார்.
    • பாகிஸ்தானில் ஐக்கிய நாடுகள் சபையும் டான் மீடியாவும் காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டை ஏற்பாடு செய்தன.

    லடாக்கில் தனி மாநில அந்தஸ்து, 6வது அட்டவணையில் சேர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலநிலை ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார்.

    அவருக்கு ஆதரவாக தலைநகர் லேவில் கடந்த செப்டம்பர் 24 அன்று முழு அடைப்பு போராட்டத்தில் அதிகளவில் பங்கேற்ற இளைஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட வாங்சுக் அமைதிக்கு அழைப்பு விடுத்தார்.

    ஆனால் இந்த வன்முறையை தூண்டியதாக செப்டம்பர் 26 ஆம் தேதி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கீழ் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டு ராஜஸ்தானின் ஜோத்புர் சிறையில் அடைக்கப்பட்டார்.  

    இந்நிலையில் தனது கணவர் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஜே. அங்மோ உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

    தனது கணவர் கைது செய்யப்பட்டு ஒரு வாரமாகியும், அவரது உடல்நலம், நிலை மற்றும் அவர் தடுத்து வைக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து தனக்கு எந்த தகவலும் வழங்கப்படவில்லை என்று அங்கமோ தெரிவித்தார்.

    முன்னதாக சோனம் வாங்சுக்கின் விடுதலைக்காக ஜனாதிபதி திரௌபதி முர்முவின் உடனடி தலையீட்டை ஆங்மோ கோரினார்.

    லே போலீசார் சோனம் வாங்சுக்கின் பாகிஸ்தான் சென்றதை குறிப்பிட்டு, அவருக்கு பாகிஸ்தான் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டியது குறித்து விளக்கம் அளித்த அங்மோ, பிப்ரவரியில், பாகிஸ்தானில் ஐக்கிய நாடுகள் சபையும் டான் மீடியாவும் காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டை ஏற்பாடு செய்தன. அதில் சோனம் பங்கேற்றார். அதில் எந்தத் தவறும் இல்லை, அங்குகூட அவர் மேடையில் பிரதமர் மோடியின் 'மிஷன் லைஃப்' திட்டத்தை பாராட்டினார்" என்று தெரிவித்தார்.

    தனது கணவர் துரோகி என்று முத்திரை குத்தப்பட்டு, உளவு பார்த்ததாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்டதாக கூறிய ஆங்மோ, "குற்றச்சாட்டுகளை தெளிவுபடுத்தும் அனைத்து ஆவணங்களையும் சிபிஐ அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளோம், ஆனால் சோனமை அவதூறு செய்யவும், ஆறாவது அட்டவணை இயக்கத்தை பலவீனப்படுத்தவும் ஒரு இருட்டடிப்பு வேலை நடக்கிறது என்று தெரிவித்தார்.  

    • சாரங்கபாணி மகன் ஜெகவீரப்பாண்டியன் என்பவருக்கும் கடந்த 2016 ல் திருமணம் நடைபெற்றது.
    • புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    கடலூர்:

    விருத்தாச்சலம் தாலுக்கா நடியப்பட்டு கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகள் வனிதா என்பவருக்கும் பண்ருட்டி தாலுக்கா மேலிருப்பு கிராமம் சாரங்கபாணி மகன் ஜெகவீரப்பாண்டியன் என்பவருக்கும் கடந்த 2016 ல் திருமணம் நடைபெற்றது. அதன்பின்னர் 2 வருடம் வாழ்ந்த அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனது மனைவி வனிதாவினால் தனக்கும் தனது குடும்பத்தில் உடன் பிறந்த சகோதரர் சகோதரிகளுக்கும் பிரச்சனை அடிக்கடி வருவதை தவிர்க்க வேண்டி தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது மனுதாரர் வனிதா தனது கணவரை காணவில்லை என காடாம்புலியூர் போலீஸ் நிலையத்தில் கடந்த 23.01.2019 ல் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு காணாமல் போனவரை கண்டுபிடித்து வனிதாவிடம் ஒப்படைக்கப்பட்டது. பிறகு அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு வனிதா பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தி்ல் தனது கணவர் அவரது குடும்பத்துடன் சேர்ந்து வரதட்சணை கேட்டுதுன்புறுத்துவதாக போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அன்றைய தினமே வனிதாவின் கணவர் ஜெகவீரபா ண்டியன் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளி வந்தவர் நிபந்தனை ஜாமினின் பேரில் 30 நாட்கள் தினந்தோறும் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டுள்ளார். தற்போது 2022 ஆம் ஆண்டு மே மாதம் வெளிநாடு (கத்தார்) சென்று விட்டார்.

    இந்த தகவல் அவரது மனைவி வனிதாவிற்கு நன்குதெரியும் ஆனால் அவர் வெளிநாடு சென்றது பிடிக்காமல் அவரக்கு மன உளைச்சல் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் .மேற்படி வனிதா 23.11.2022 ந் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2019 ல் காடாம்புலியூர் காவல் நிலையத்தில் தனது கணவரை காணவில்லை என கொடுத்த புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தனது கணவர் உயிருடன் உள்ளாரா அல்லது உறவினர்களால் கொல்லப்பட்டாரா என ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இது சம்மந்தமாக காடாம்புலியூர் காவல் துறையினர் மேலிருப்பு கிராமம் சென்று ஜெகவீரபாண்டியனின் உறவினர்களிடம் விசாரணை செய்ததில் அவர் வெளிநாடு கத்தாரில் உள்ளதாகவும், அவருடன் வீடியோ காலில் பேசி அவருக்கும் அவரது மனைவிக்குமான பிரச்சனைக்கான காரணம் அறிந்து அவர் பேசிய வீடியோ வாக்குமூல பதிவினை பதிவு செய்யப்பட்டது. இந்த பதிவினை போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி அரசு தரப்பு வழக்கறிஞரிடம் சமர்ப்பித்த உடன் நீதிமன்றம் சார்பில் மேற்படி காணாமல் போன ஜெகவீரபாண்டியனிடம் வீடியோ காலில் பேசி உண்மை தன்மையை வெளிப்படுத்தினார். இதனை உயர் நீதிமன்ற நீதிபதி அவர்கள் உண்மையை புரிந்து கொண்டு மேற்படி மனுதாரர் மீது நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாலும் காவலர்களை அலைக்க ழித்ததாலும் உண்மைக்கு புறம்பான மனுவினை சுய லாபத்திற்க்காக பயன்படுத்தியதற்க்காக ரூ. 50,ஆயிரம்அபராதம் 4 வார காலத்திற்க்குள் கட்ட வேண்டும். அப்படி தவறு்ம் பட்சத்தில் சிறைதண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் மேலும் இந்த மனு வினை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். 

    • சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல்
    • போலீஸ் சூப்பிரண்டு யோகா மையத்துக்கு நேரில் சென்று ஆய்வு.

    கோவை:

    கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தனது 2 மகள்களை மீட்டுதருமாறு கூறி கோவையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற விஞ்ஞானி காமராஜ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.

    இந்த மனு மீதான விசாரணை நேற்று ஐகோர்ட்டில் நடந்தது. நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வழக்கு தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.

    மேலும் ஈஷா யோகா மையம் மீது எத்தனை குற்றவழக்குகள் உள்ளன? என்ற விவரங்களை போலீசார் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வருகிற 4-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

    ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் போலீசார் ஈஷா யோகா மையத்துக்கு இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    அவர்களுடன் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி அம்பிகாவும் சென்று விசாரணை நடத்தினார். விசாரணை அறிக்கை விவரங்களை போலீசார் ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர்.

    ×