search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளத்தூர் மோட்டார்ஸ் எலக்ட்ரிக் பைக் விற்பனை நிறுவனம் திறப்பு விழா
    X

    பள்ளத்தூர் மோட்டார்ஸ் எலக்ட்ரிக் பைக் விற்பனை நிறுவனம் திறப்பு விழா

    • பள்ளத்தூர் மோட்டார்ஸ் எலக்ட்ரிக் பைக் விற்பனை நிறுவனம் திறப்பு விழா நடந்தது.
    • மகரிஷி பள்ளி தாளாளர் அஜய் யுக்தேஷ் உள்பட தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி

    காரைக்குடி வ.உ.சி ரோடு செல்வி பெட்ரோல் பங்க் வளாகத்தில் பள்ளத்தூர் மோட்டார்ஸ் எல்.எல்.பி. எலக்ட்ரிக் பைக் நிறுவனம் தொடக்க விழா நடந்தது. நிர்வாகிகளான செல்வி குரூப் ஆப் கம்பெனி மாணிக்கம், விசாலம் சிட்பண்ட் இயக்குநர் அரு.உமாபதி வரவேற்றனர்.

    விசாலம் சிட்பண்ட் நிர்வாக இயக்குநா் அரு. விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். தொழிலதிபர் பி.எல்.படிக்காசு நிறுவனத்தை திறந்துவைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். முதல் வாகனத்தை தொழில் அதிபர் பெரியசாமி பெற்றுக்கொண்டார்.

    இதில் விசாலம் சிட் பண்ட் இயக்குநர் அரு. மீனாட்சி, தொழில் அதிபர் எம்.எம்.கணேசன், ஓ.பி. ஆர்.ராமையா, சன்னா ராமலிங்கம், எஸ்.கே.எம்.பெரியகருப்பன், கோவை ஒயிட் அண்டு கோ வெள்ளையன், தொழில் வணிகக்கழக தலைவர் சாமிதிராவிடமணி, பல் மருத்துவர் பிரபாகரன், பிரபு டெண்டல் இயக்குநர் டாக்டர் பிரபு, வக்கீல் கமல் தயாளன், மூன் ஸ்டார்

    சி.சி.டி. லட்சுமணன், எஸ்.எல்.பி பிரிண்டர்ஸ் சரவணன், மகரிஷி பள்ளி தாளாளர் அஜய் யுக்தேஷ் உள்பட தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×