search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Penalties"

    • வாழும் சூழலை மேம்படுத்த ப்யூகே உள்ளாட்சி பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது
    • இரண்டாம் முறையும் சுகாதாரக்கேடு நிலவினால் அபராதம் இரட்டிப்பாக்கப்படும்

    சீனாவின் தென்மேற்கில் உள்ளது சிசுவான் பிராந்தியம் (Sichuan Province). ஆசிய கண்டத்தின் நீளமான நதியான யாங் சே (Yangtze), சிச்சுவான் பிராந்தியம் வழியாக பயணிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    சிச்சுவான் பிராந்தியத்தின் தெற்கில் உள்ளது ப்யூகே (Puge) உள்ளாட்சி பகுதி. இப்பகுதியின் உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளனர்.

    இச்சட்டத்தின்படி பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பாத்திரங்களை துலக்காமல் வைத்திருந்தாலோ, படுக்கையை அலங்கோலமாக வைத்திருந்தாலோ, உணவு பண்டங்களை பயன்படுத்தும் போது சூழ்நிலை சுகாதாரமற்று இருந்தாலோ, அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு இனிமேல் அபராதம் விதிக்கப்படும்.

    பொது மற்றும் வசிப்பிட சுகாதாரத்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, "வாழும் சூழலை மேம்படுத்தும் தரமான வழிமுறைகள்" என ஒரு கொள்கையை ப்யூகே உள்ளாட்சி வகுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வந்துள்ளது.

    மேலும், இதன் ஒரு தொடர்ச்சியாக மக்களின் நடத்தையில் 14 வித அம்சங்களுக்கு கட்டுப்பாடுகளையும் இந்த அமைப்பு விதித்துள்ளது.

    இனிமேல், உள்ளாட்சி அதிகாரிகள் பொதுமக்களின் வீடுகளுக்கு திடீரென சோதனையிட வருவார்கள். அவ்வாறு வரும் போது வீடுகளில் ஒட்டடை, குப்பைகள், பறவைகள் மற்றும் விலங்குகளின் கழிவுகள் உள்ளிட்ட அசுத்தமான விஷயங்கள் ஏதேனும் கண்ணில் பட்டால் அந்த வீட்டினருக்கு அபராதம் விதிக்கப்படும்.

    ஒரு முறை அபராதம் விதிக்கப்பட்ட ஒரு வீட்டில் மறுமுறையும் இதே சூழ்நிலை நிலவினால் அபராத தொகை இரட்டிப்பாக்கப்படும்.

    "ஒரு விவசாயியின் வீட்டிற்கு வந்தால் அங்கு நிலவும் சுகாதார சூழ்நிலை பார்க்க சகிக்கும்படியாக இல்லை. கொசுக்கள், நாய்கள் சூழ்ந்திருக்க ஒரு அசுத்தமான சூழலே நிலவுகிறது. அபராதத்தால் மட்டுமே இதை தடுக்க முடியாது என நாங்கள் உணர்ந்திருக்கிறோம். ஆனால், அபராதம் மக்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும்" என இந்த அறிவிப்பு குறித்து உள்ளாட்சி அமைப்பின் துணைத்தலைவர் தெரிவித்துள்ளார்.

    உலகெங்கிலும் பலர், இந்த உத்தரவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • தாசில்தார் மதிவாணன் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமகிருஷ்ணன், ஆங்காடு தலைவர் கிரிஜா, நல்லூர் தலைவர் அமிர்தவல்லி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    சோழவரம் ஒன்றியத் திற்குட்பட்ட ஆங்காடு, சோழவரம், நல்லூர், பகுதி களில் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மழைக்காலங்களில் வழிந்தோடும் மழைநீர் கால்வாய் அடைப்புகளால் வெளியே செல்ல முடியாமல் சோழவரம் செங்காளம்மன் கோவில் நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கி வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும். மேலும் மழைநீர் தேங்கி நிற்பதால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டு வருவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

    இதைத்தொடர்ந்து பொன்னேரி தாசில்தார் மதிவாணன் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை வருவாய்த்துறை, வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி தலைவர்கள் ஆகியோருடன் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    அப்போது சோழவரம் பகுதியில் வீடுகளில் எடுக்கப்படும் கழிவு நீரை சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தினமும் 10-க்கும் மேற்பட்ட டிராக்டர்கள், லாரிகளில் வருவதால் வாகன ஓட்டிகளுக்கு துர்நாற்றம் வீசுவதாகவும் மழை நீரில் கழிவுநீர் கலந்து ஊருக்குள் செல்வதாகவும் சோழவரம் ஊராட்சி தலைவர் லட்சுமி முனிகிருஷ்ணன் புகார் தெரிவித்தார்.

    இதையடுத்து தேசிய நெஞ்சாலையில் கழிவு நீரை கொட்டும் லாரி, டிராக்டர்களுக்கு அபராதம் விதிக்கவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு தாசில்தார் மதிவாணன் உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமகிருஷ்ணன், ஆங்காடு தலைவர் கிரிஜா, நல்லூர் தலைவர் அமிர்தவல்லி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நிறுவனங்கள் வாரியாக உள்ள புகார் குழு நாளைக்குள் விதிமுறைப்படி அமைக்க வேண்டும்.
    • பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2013 பிரிவு 26 இன் கீழ் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் பணியிடத்தில் பாலியல் வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் - 2013 குறித்து அரசு நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள், தனியார் நிறுவன ங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வணிக வளாகங்கள், பயிற்சி நிலைய ங்கள், கல்வி நிறுவனங்கள், பொழுதுபோக்கு இடங்கள், தொழி ற்சாலைகள், நிதி நிறுவனங்கள், விற்பனை கூடங்கள், மருத்துவமனைகள், விளையாட்டு பயிற்சி நிறுவனங்கள், விளையாட்டு அரங்கங்கள் ஆகிய நிறுவனங்களில் 10-க்கும் மேற்பட்ட ஆண், பெண் இரு பாலரும் பணிபுரியும் இடங்களில், மகளிர்களுக்கு ஏற்படும் பாலியல் தொடர்பான குற்றங்கள் தடுக்கவும், புகார் தெரிவிக்கவும் நிறுவனங்கள் வாரியாக உள்ளக புகார் குழு நாளைக்குள் விதிமுறைப்படி அமைத்திட வேண்டும்.

    பணிபுரியும் இடத்தில் மூத்த பெண் பணியாளரை தலைவராக நியமனம் செய்ய வேண்டும். இல்லாத பட்சத்தில் பணிபுரியும் அலுவலகம், பிறதுறைகள் , பிற கிளைகள் , பிற பணியிடங்களில் இருந்து நியமிக்கலாம்.

    பெண்கள் சார்ந்த பிரச்ச னைகளை முன்னெடுத்து அவற்றை களை ந்திட விருப்பம் உடையவர் (அல்லது) சமூக பணிகளில் அனுபவம் (அ) சட்ட அறிவு பெற்ற இரண்டு பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். பெண்களுக்கான சமூக பணியில் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவனம் /மகளிர் சங்கங்களை சார்ந்த அல்லது

    பாலியல் வன்கொடு மைகள் குறித்தவிழிப்பு ணர்வுடைய நபர்களில் ஒருவரை நியமிக்கப்பட வேண்டும். புகார் குழு அமைத்த நிறுவனங்கள் அதன் விவரத்தை வருகிற 28-ந் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண்.203, 3-வது தளம், புதிய மாவட்ட ஆட்சியரகம், தஞ்சாவூர் என்ற முகவரிக்கு தெரிவிக்க வேண்டும். இந்த புகார் குழு அமைக்காத நிறுவனத்திற்கு பணியிடத்தில் பாலியல் வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2013 பிரிவு 26 இன் கீழ் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பக்தர்களுக்கு பாதுகாப்பான உணவு வழங்க விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி உத்தரவிட்டார்.
    • 5 கடைகளுக்கு ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    விழுப்புரம்:

    மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு மாசி பெரு விழாவை முன்னிட்டு பக்தர்கள் அதிகளவு வருவார்கள். இதனை முன்னிட்டு பக்தர்களுக்கு பாதுகாப்பான உணவு வழங்க விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.சுகந்தன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பத்மநாபன், இளங்கோவன், கொளஞ்சி, அன்பு பழனி, ஸ்டாலின் ராஜரத்தினம், மோகன் ஆகியோர் கொண்ட குழுவினர் மேல்மலையனூர் பகுதியில் உள்ள 55 கடை களில் ஆய்வு செய்தனர்.

    ஆய்வில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு, லேபிள் விதிமீறல் காரணங்களுக்காக 5 கடைகளுக்கு ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஆய்வில் 90 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், 50 கிலோ அயோடின் சேர்க்கப்படாத உப்பு, 21 கிலோ சாப்பிடக் கூடாத பேரிச்சம்பழம், 1 கிலோ கலப்பட டீ தூள், 3 கிலோ அதிக செயற்கை நிறம் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்கள், ஆகியவை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும் தற்காலிக விழாக்காலக் கடைகளுக்கு உணவு பாதுகாப்பு தொடர்பான தேவையான விழிப்புணர்வுகள் ஏற்படுத்த ப்பட்டது. அப்போது வட்டார வளர்ச்சி அலுவலக மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள் உடனிருந்தனர்.

    • கூடுதலாக ஆட்கள் ஏற்றி சென்றவர்களுக்கு ரூ.1000 அபராதம்.
    • மஞ்சள் கலரில் நம்பர் பிளேட்டுகளும், எழுத்துக்கள் கருப்பு கலரிலும் இருக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவுப்படி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா அறிவுறுத்தலின் பேரில் தஞ்சையில் இன்று போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் புதிய பஸ் நிலையம் முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அனைத்து மோட்டார் சைக்கிள்களையும் நிறுத்தி டிரைவிங் லைசன்ஸ், இன்சூரன்ஸ் சரியான முறையில் உள்ளதா ? மோட்டார் வாகன சட்டப்படி நம்பர் பிளேட் வடிவமைக்கப்பட்டுள்ளதா ? ஹெல்மெட் அணிந்துள்ளார்களா ? போன்றவை குறித்து சோதனை செய்தனர்.

    இதில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. லைசன்ஸ், இன்சூரன்ஸ் இல்லாதவர்களுக்கு ரூ.5000 அபராதமும், அதனை புதுப்பிக்காதவர்களுக்கு அபராதமும், மோட்டார் வாகன சட்ட விதிமுறைகள் படி நம்பர் பிளேட் வடிவமைக்காதவர்களுக்கு அதாவது நம்பர் பிளேட்டில் நம்பரை தவிர வாசகம் எழுதி இருத்தல், நம்பர் இல்லாமல் வெறும் வாசகம் மட்டும் எழுதி இருத்தல், வாகனத்தின் ஒரு பக்கத்தில் நம்பர் பிளேட் இல்லாமல் இருத்தல் போன்ற விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு ரூ.1000 மற்றும் இருசக்கர வாகனத்தில் இருவரை தவிர கூடுதலாக ஆட்கள் ஏற்றி சென்றவர்களுக்கு ரூ.1000 அபராதமும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

    இதேபோல் நகரின் பல்வேறு இடங்களிலும் அதிரடி வாகன சோதனை நடந்து வருகிறது.

    இது குறித்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் கூறும் போது:-

    மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி அனைத்து தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளும் வெள்ளை கலரில் இருக்க வேண்டும். அவற்றில் உள்ள எழுத்துக்கள் கருப்பு கலரில் இருக்க வேண்டும். வர்த்தக வாகனங்களில் மஞ்சள் கலரில் நம்பர் பிளேட்டுகளும், அவற்றில் உள்ள எழுத்துக்கள் கருப்பு கலரிலும் இருக்க வேண்டும். இவற்றில் முரண்பாடு இருந்தால் உடனுக்குடன் அபராதம் விதிக்கப்படுகிறது.

    இதேபோல் லைசன்ஸ், இன்சூரன்ஸ் இல்லாதவர்கள் மற்றும் அதனை புதுப்பிக்க தவறியவர்கள், ஹெல்மெட் இல்லாமல் வாகன ஓட்டுபவர்கள், காரில் சீட் பெல்ட் இல்லாமல் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு மோட்டார் வாகன சட்ட விதிமுறைகள் குறித்து எடுத்துக் கூறி வருகிறோம். முறையாக அந்த விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தி வருகிறோம்.

    நகரில் அனைவரும் வாகன சட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். தொடர்ந்து வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

    • விநியோகிப்பதும், போக்குவரத்து செய்வதும், விற்பதும் மற்றும் உபயோகிப்பதும் தடை செய்யப்பட்டு உள்ளன.
    • நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு ரூ.1000-ம், சிறு வணிக நிறுவனங்களுக்கு ரூ.100-ம் அபராதம் விதிக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் மீதான தடை அறிவிப்பு தமிழ்நாடு அரசால்
    வெளியிடப்பட்டு அதன்படி ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கோப்பைகள், அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள், நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், தெர்மாகோல் கோப்பைகள், உணவுப் பொருட்களை கட்ட
    பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர் பைகள் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் கொடிகள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவை தயாரிப்பதும், சேமித்து வைப்பதும், விநியோகிப்பதும், போக்குவரத்து செய்வதும், விற்பதும் மற்றும்உ பயோகிப்பதும் தடை செய்யப்பட்டு உள்ளன.

    சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் (தெற்கு மண்டலம்) பிளாஸ்டிக் தடையை கடுமையாக அமல்படுத்தவும், மீறுபவர் களுக்கு எதிராக அடிமட்ட அளவில் நடவடிக்கைகளை எடுக்கவும் அரசுக்கு தொடர்ந்து உத்தரவுகளை வழங்கி வருகின்றன.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ததை நிறைவேற்றும் வகையில் அதனை விற்பனை செய்யும் வணிக நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

    முதன்முறையாக வணிக நிறுவனங்களில் பயன்படுத்தினால் ரூ.25 ஆயிரமும், துணிக்கடைகளில் பயன்படுத்தினால்
    ரூ.10 ஆயிரமும், மளிகை கடைகள், மருந்து கடைகள், நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு ரூ.1000-ம், சிறு வணிக நிறுவனங்களுக்கு ரூ.100-ம் அபராதம் விதிக்கப்படும்.

    எனவே தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினையும் மற்றும் அபராதத்தையும் தவிர்த்து மாற்றுப் பொருட்களை பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்த பேரணியை, மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
    • ஹெல்மெட் அணிந்து, அபராதத்தை தவிர்க்க வேண்டும் என்றார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட காவல்துறை சார்பில், புதுச்சேரி மாநிலம் முழுவதும், ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தை ஓட்ட வேண்டும் என்று காவல்துறை சார்பில் அறிவுறுத்தி வரும் நிலையில், பலர் ஹெல்மெட்டை அணிவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.  காரைக்காலில் உள்ள போக்குவரத்து காவல்நிலையம் மற்றும் அனைத்து காவல்நிலைய போலீசார், தினசரி ஹெல்மெட் அணியாமல் செல்லும் 100-க்கு மேற்பட்டோரை பிடித்து தலா ரூ.1000 அபராதம் விதித்து வருகிறது. இந்நிலையில், காரை க்காலில் பொதுமக்கள் இருசக்கர வாகனம் ஓட்டும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காரைக்கால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வாயிலில் போலீசார் நேற்று மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

    இந்த பேரணியை, மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் ஹெல்மெட்டுடன் பங்கேற்றனர். இந்த பேரணி, காரைக்காலின் முக்கிய சாலைகள் வழியாக சென்று மீண்டும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வாயிலில் நிறைவு பெற்றது. பேரணியில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் பேசியதாவது:- சாலை விபத்துகளில் எற்படும் உயிர்பலி மற்றும் பெரும் காயங்களை தவிர்க்க, ஹெல்மெட் மிக அவசியம். அதனால், அனைத்து போலீசாரும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும். போலீசாரை பார்த்துதான் பொதுமக்களும் ஹெல்மெட் அணிவார்கள். முக்கியமாக, இருசக்கர வாகனம் ஓட்டும் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து, அபராதத்தை தவிர்க்க வேண்டும். என்றார்.

    • ஆம்புலன்சுக்கு வழிவிடவில்லை என்றால் ரூ. 10 ஆயிரம் அபராதம்.
    • புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்தன.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    பல்வேறு குற்றங்களுக்கான, விதி மீறல்களுக்கான அபராத தொகைகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி ஆம்புலன்சுக்கு வழிவிடவில்லை என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

    குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவருக்கும், அவருடன் பயணிப்பவருக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் என்பன உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமுறைகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி தஞ்சையில் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களுக்கு போலீசார் உடனுக்குடன் அபராதம் விதித்து வருகின்றனர்.

    தொடர்ந்து வாகன சோதனை நடந்து வருகிறது.

    • மதுரையில் ரூ.5.45 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
    • வாடிக்கையாளர்கள் சிலர் குற்றத்தை ஒப்புக்கொண்டு, ரூ.66 ஆயிரத்தை அபராதமாக செலுத்தினர்.

    மதுரை

    மதுரை மண்டல அமலாக்கப்பிரிவு மின்வாரிய செயற்பொறியாளர் பிரபாகரன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மண்டலத்தில் மின் திருட்டு நடப்பதாக புகார் வந்தது. மதுரை, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த மின்வாரிய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சம்பவ இடங்களில் சோதனை நடத்தினர்.

    விருதுநகர் மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட காரியாபட்டி, விருதுநகர், வத்திராயிருப்பு, வெம்பக்கோட்டை, மல்லாங்கிணறு, ஓ.மேட்டுப்பட்டி, கன்னிசேர்வைபட்டி ஆகிய பகுதிகளில், 8 இடங்களில் மின் திருட்டு கண்டறியப்பட்டது.

    மின் வாரியத்துக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வகையில், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களிடம் ரூ.4 லட்சத்து 79 ஆயிரத்து 764 அபராதம் வசூலிக்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் சிலர் குற்றத்தை ஒப்புக்கொண்டு, ரூ.66 ஆயிரத்தை அபராதமாக செலுத்தினர். அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    மதுரை மண்டலத்தில் மின் திருட்டில் ஈடுபட்ட வாடிக்கையாளர்களிடம் ஒட்டுமொத்தமாக ரூ.5 லட்சத்து 45 ஆயிரத்து 764 அபராதமாக வசூலிக்கப்பட்டது. மதுரை மண்டலத்தில் மின் திருட்டு தொடர்பாக தகவல் தெரிந்தால், மண்டல செயலாக்க பிரிவு பொறியாளர் செல்போன்: 94430-37508 நம்பரில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×