தஞ்சையில், போலீசார் தீவிர வாகன சோதனை

ஆம்புலன்சுக்கு வழிவிடவில்லை என்றால் ரூ. 10 ஆயிரம் அபராதம்.புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்தன.
தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார்.
தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார்.
Published on

தஞ்சாவூர்:

தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

பல்வேறு குற்றங்களுக்கான, விதி மீறல்களுக்கான அபராத தொகைகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி ஆம்புலன்சுக்கு வழிவிடவில்லை என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவருக்கும், அவருடன் பயணிப்பவருக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் என்பன உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமுறைகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி தஞ்சையில் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களுக்கு போலீசார் உடனுக்குடன் அபராதம் விதித்து வருகின்றனர்.

தொடர்ந்து வாகன சோதனை நடந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com