search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "characters"

    • குழந்தைகளின் நாக்கில் 3 முறை தேனை தொட்டு வைத்தனர்.
    • பிள்ளையார் சுழி எழுதி அதற்கு பின்பு தமிழ் உயிர் எழுத்துக்கள் எழுதப்பட்டன.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில்பி ரசித்தி பெற்ற சரஸ்வதி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவில் ஒட்டக்கூத்தரால் பாடல் பெற்ற ஆலயமாகும். ஒட்டக்கூத்தர் வாழ்ந்த ஊர் என்பதாலும் அவர் வழிபட்ட தலம் என்பதாலும் இந்த ஊருக்கு கூத்தனூர் என்று பெயர் பெற்றது.

    இந்தக் கோவிலில் சரஸ்வதி பூஜை விழா நேற்று கொண்டாடப்பட்டது.

    அதையொட்டி வெண்பட்டு ஆடை அணிந்து பக்தர்களுக்கு சரஸ்வதி அம்மன் அருள் பாலித்தார்.

    தொடர்ந்து பாத தரிசன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இன்று விஜயதமி யையொட்டி கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் சரஸ்வதி அம்மனுக்கு இன்று சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக அலங்காரங்கள் செய்யப்ப ட்டன.

    அதனைத் தொடர்ந்து தங்களது குழந்தைகளுடன் வந்த ஏராளமான பெற்றோர்கள் அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்திய பின்னர், நெல்மணிகளை பரப்பி அதில் தங்களது குழந்தைகளை தமிழ் உயிர் எழுத்தின் முதல் எழுத்தான அவை எழுதவைத்து வித்யாரம்பம் செய்து வைத்தனர்.

    முன்னதாக குழந்தைகளின் நாக்கில் மூன்று முறை தேனை தொட்டு வைத்த பின்பு அவர்கள் காதுகளில் மந்திரங்களை சொல்லி அதன் பின்னர் நெல்மணி களில் பிள்ளையார் சுழி எழுதி அதற்கு பின்பு தமிழ் உயிர் எழுத்துக்கள் எழுதப்பட்டன.

    இன்று பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்த்தால் கல்வியறிவு மேன்மையையும் என்பது ஐதீகம் அதன் அடிப்படையில் குழந்தைகள் உடன் பெற்றோர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர்.

    விஜயதசமி விழாவை ஒட்டி தமிழக முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து அம்மனை வழிபட்டனர்.

    கூட்ட நெரிசலை தவிர்க்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    • கூடுதலாக ஆட்கள் ஏற்றி சென்றவர்களுக்கு ரூ.1000 அபராதம்.
    • மஞ்சள் கலரில் நம்பர் பிளேட்டுகளும், எழுத்துக்கள் கருப்பு கலரிலும் இருக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவுப்படி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா அறிவுறுத்தலின் பேரில் தஞ்சையில் இன்று போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் புதிய பஸ் நிலையம் முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அனைத்து மோட்டார் சைக்கிள்களையும் நிறுத்தி டிரைவிங் லைசன்ஸ், இன்சூரன்ஸ் சரியான முறையில் உள்ளதா ? மோட்டார் வாகன சட்டப்படி நம்பர் பிளேட் வடிவமைக்கப்பட்டுள்ளதா ? ஹெல்மெட் அணிந்துள்ளார்களா ? போன்றவை குறித்து சோதனை செய்தனர்.

    இதில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. லைசன்ஸ், இன்சூரன்ஸ் இல்லாதவர்களுக்கு ரூ.5000 அபராதமும், அதனை புதுப்பிக்காதவர்களுக்கு அபராதமும், மோட்டார் வாகன சட்ட விதிமுறைகள் படி நம்பர் பிளேட் வடிவமைக்காதவர்களுக்கு அதாவது நம்பர் பிளேட்டில் நம்பரை தவிர வாசகம் எழுதி இருத்தல், நம்பர் இல்லாமல் வெறும் வாசகம் மட்டும் எழுதி இருத்தல், வாகனத்தின் ஒரு பக்கத்தில் நம்பர் பிளேட் இல்லாமல் இருத்தல் போன்ற விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு ரூ.1000 மற்றும் இருசக்கர வாகனத்தில் இருவரை தவிர கூடுதலாக ஆட்கள் ஏற்றி சென்றவர்களுக்கு ரூ.1000 அபராதமும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

    இதேபோல் நகரின் பல்வேறு இடங்களிலும் அதிரடி வாகன சோதனை நடந்து வருகிறது.

    இது குறித்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் கூறும் போது:-

    மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி அனைத்து தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளும் வெள்ளை கலரில் இருக்க வேண்டும். அவற்றில் உள்ள எழுத்துக்கள் கருப்பு கலரில் இருக்க வேண்டும். வர்த்தக வாகனங்களில் மஞ்சள் கலரில் நம்பர் பிளேட்டுகளும், அவற்றில் உள்ள எழுத்துக்கள் கருப்பு கலரிலும் இருக்க வேண்டும். இவற்றில் முரண்பாடு இருந்தால் உடனுக்குடன் அபராதம் விதிக்கப்படுகிறது.

    இதேபோல் லைசன்ஸ், இன்சூரன்ஸ் இல்லாதவர்கள் மற்றும் அதனை புதுப்பிக்க தவறியவர்கள், ஹெல்மெட் இல்லாமல் வாகன ஓட்டுபவர்கள், காரில் சீட் பெல்ட் இல்லாமல் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு மோட்டார் வாகன சட்ட விதிமுறைகள் குறித்து எடுத்துக் கூறி வருகிறோம். முறையாக அந்த விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தி வருகிறோம்.

    நகரில் அனைவரும் வாகன சட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். தொடர்ந்து வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

    அனுமன் சாதியை கண்டுபிடிக்க முயல்வது முட்டாள்தனமானது என சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. #ShivSena #Ramayana
    மும்பை:

    உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், அனுமன் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் என்று கூறினார். தொடர்ந்து அம்மாநில பா.ஜ.க.வினர் அனுமன் முஸ்லிம் என்றும், ஜாட் சமுதாயத்தை சேர்ந்தவர் என்றும், ஜெயின் சமூகத்தவர் என்றும் பலவாறு கூறிவருகின்றனர். இதற்கு பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவில் இதுபற்றி எழுதியிருப்பதாவது:-

    இந்த விவாதம் தேவையற்றது, அர்த்தமற்றது. உத்தரபிரதேச அரசு புதிய ராமாயணத்தை அதன் முக்கிய பாத்திரங்களுக்கு சாதி முத்திரையுடன் எழுத முயற்சிக்கிறது. அயோத்தியில் ராமர் கோவிலை இன்னும் கட்டவில்லை. ஆனால் விசுவாசம் மற்றும் பக்தியின் வடிவமான அனுமன் சாதி பற்றி பா.ஜனதா விவாதத்தை தொடங்கியுள்ளது. அனுமன் சாதியை கண்டுபிடிக்க முயல்வது முட்டாள்தனமானது. தங்களை இந்துக்களின் பாதுகாவலர் என்று கூறிக்கொள்பவர்கள் மவுனமாக இருக்கிறார்கள். முஸ்லிம்களோ, முற்போக்குவாதிகளோ இதை கூறினால் இந்துக்களின் பாதுகாவலர்கள் அமளியில் ஈடுபடுவார்கள்.

    இவ்வாறு அதில் எழுதப்பட்டுள்ளது. #ShivSena #Ramayana 
    ×