search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Paddy Grains"

    • குழந்தைகளின் நாக்கில் 3 முறை தேனை தொட்டு வைத்தனர்.
    • பிள்ளையார் சுழி எழுதி அதற்கு பின்பு தமிழ் உயிர் எழுத்துக்கள் எழுதப்பட்டன.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில்பி ரசித்தி பெற்ற சரஸ்வதி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவில் ஒட்டக்கூத்தரால் பாடல் பெற்ற ஆலயமாகும். ஒட்டக்கூத்தர் வாழ்ந்த ஊர் என்பதாலும் அவர் வழிபட்ட தலம் என்பதாலும் இந்த ஊருக்கு கூத்தனூர் என்று பெயர் பெற்றது.

    இந்தக் கோவிலில் சரஸ்வதி பூஜை விழா நேற்று கொண்டாடப்பட்டது.

    அதையொட்டி வெண்பட்டு ஆடை அணிந்து பக்தர்களுக்கு சரஸ்வதி அம்மன் அருள் பாலித்தார்.

    தொடர்ந்து பாத தரிசன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இன்று விஜயதமி யையொட்டி கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் சரஸ்வதி அம்மனுக்கு இன்று சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக அலங்காரங்கள் செய்யப்ப ட்டன.

    அதனைத் தொடர்ந்து தங்களது குழந்தைகளுடன் வந்த ஏராளமான பெற்றோர்கள் அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்திய பின்னர், நெல்மணிகளை பரப்பி அதில் தங்களது குழந்தைகளை தமிழ் உயிர் எழுத்தின் முதல் எழுத்தான அவை எழுதவைத்து வித்யாரம்பம் செய்து வைத்தனர்.

    முன்னதாக குழந்தைகளின் நாக்கில் மூன்று முறை தேனை தொட்டு வைத்த பின்பு அவர்கள் காதுகளில் மந்திரங்களை சொல்லி அதன் பின்னர் நெல்மணி களில் பிள்ளையார் சுழி எழுதி அதற்கு பின்பு தமிழ் உயிர் எழுத்துக்கள் எழுதப்பட்டன.

    இன்று பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்த்தால் கல்வியறிவு மேன்மையையும் என்பது ஐதீகம் அதன் அடிப்படையில் குழந்தைகள் உடன் பெற்றோர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர்.

    விஜயதசமி விழாவை ஒட்டி தமிழக முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து அம்மனை வழிபட்டனர்.

    கூட்ட நெரிசலை தவிர்க்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    • முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால் 5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
    • இரண்டு நாட்களாக மழை இன்று வெயில் அடிப்பதால் ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட ஈரமான நெல்மணிகள் சாலையில் கொட்டி காய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    இந்த ஆண்டு டெல்டா மாவட்ட சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12-க்கு முன்பாக மே மாதம் 24 ஆம் தேதியே திறக்கப்பட்டது.

    வழக்கமாக குறுவை சாகுபடி டெல்டா மாவட்டத்தில் 3 லட்சம் ஏக்கரில் செய்யப்படுவது வழக்கம் இந்த ஆண்டு முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால் 5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    தஞ்சை மாவட்டத்தில் வழக்கமாக ஒரு லட்சத்து 11 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 67 ஆயிரம் ஏக்கர் குருவை சாகுபடி செய்யப்பட்டது.

    இந்த ஆண்டு ஒரு லட்சத்து 82 ஆயிரம் ஏக்கரில் நடவு செய்யப்பட்டது. தற்போது வரை 1 லட்சம் ஏக்கரில் அறுவடை முடிவடைந்துள்ளது.

    மீதி அறுவடை பணிகள் நடந்து வருகிறது. ஆனால் கடந்த நான்கு நாட்களாக தஞ்சை மாவட்டத்தில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அறுவடை பணி பாதிக்கப்பட்டது.

    தற்போது இரண்டு நாட்களாக மழை இன்று வெயில் அடிப்பதால் ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட ஈரமான நெல்மணிகள் சாலையில் கொட்டி காய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    எப்போது வேண்டுமானாலும் மழை வரலாம் என்ற நிலை இருப்பதால் தார்ப்பாயுடன் உள்ளனர். கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.

    இதனால் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர். தேவையான அளவு உலர் கலம் எந்திரம் இல்லாத காரணத்தால் ஈரப்பதமான நெல்லை காய வைத்து வருகின்றனர்.

    தஞ்சை மாவட்டத்தில் பல இடங்களில் இந்த பணி மும்முரமாக நடந்து வருகிறது. மேலும் ஈரப்பத அளவை தளர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதற்கிடையே தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு சம்பா, தாளடி சாகுபடி 3 லட்சத்து 33 ஆயிரத்து 450 ஏக்கர் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது வரை சம்பா சாகுபடி 81 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    • நெல்மணிகள் கொள்முதல் நிலையங்களில் கொட்டி வைத்து காத்திருப்பதால் நனைந்து முளைக்க தொடங்கி இருக்கிறது.
    • நெல் ஒரு நாள் இருப்பிலிருக்கும் பட்சத்தில மழை பெய்தால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தால் ஈரப்பதம் கூடுதலாகும்.

    மன்னார்குடி:

    மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    காவிரி டெல்டாவில் 3 லட்சம் ஏக்கர் குறுவை விளை நிலங்கள் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது.

    அக்டோபர் 15ஆம் தேதிக்குள் அறுவடையை முடித்து விற்பனை செய்து விட வேண்டும்.

    அதன் பிறகு வடகிழக்கு பருவமழை தீவிரமடையும். ஆனால் தமிழக அரசு காரிப் பருவ கொள்முதலை செப்டம்பர் 1ஆம் தேதியே தொடங்கியதால் ஈரப்பதம் காரணம் காட்டி கொள்முதல் தடைபட்டு வருகிறது.

    தற்போது பெய்து வரும் கோடை மழையும் நல்ல காய்ந்த நிலையில் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் கொள்முதல் நிலைய வாயில்களில் கொட்டி வைத்து காத்திருப்பதால் நனைந்து முளைக்க தொடங்கி இருக்கிறது.

    குறிப்பாக தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இதுவரையிலும் இல்லாத வகையில் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்கிறோம் எனும் பெயரால் 17 சதம் ஈரப்பதத்திற்கு கூடுதலாக இருக்கும் ஈரப்பதம் கொண்ட நெல்லை கொள்முதல் செய்தார்கள் என்று முன் அனுபவமின்றி தொழில்நுட்பத்தினை கருத்தில் கொள்ளாமல் திருவாரூர் அருகே ஊர்குடியில் கொள்முதல் பணியாளர்கள் இருவரை பணியிடை நீக்கம் செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.குறிப்பாக 15 சதத்திற்கு கீழே உலர்த்தப்பட்ட நெல் ஒரு நாள் இருப்பிலிருக்கும் பட்சத்தில மழை பெய்தால் ஏற்படும் பருவ நிலை மாற்றத்தால் ஈரப்பதம் கூடுதல் ஆவது என்பது இயற்கையானது.

    பாதுகாக்கப்பட்ட கிடங்குகளில் இருந்தாலும் கூட இந்த நிலை ஏற்படுவதை தவிர்க்க இயலாது.

    விரைவில் ஊழிய ர்களோடு விவசாயிகள் இணைந்து நாளை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

    ×