search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Moisture"

    • கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு அரசு அறிவித்த நிவாரணம் போதுமானது அல்ல.
    • ஈரப்பதம் நிரந்தரமாக 22 சதவீதம் என மத்திய அரசு அறிவிக்க தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.

    தஞ்சாவூா்:

    தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தஞ்சாவூர் ஒன்றிய மாநாடு இன்று நடைபெற்றது. ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் ஜான் பீட்டர் தலைமை வகித்தார்.

    மாநாட்டினை தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் வீரமோகன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். வேலை அறிக்கையை ஒன்றிய செயலாளர் ராமலிங்கம் முன்வைத்தார்.

    இந்த மாநாட்டில், தற்போது பெய்த பருவம் தவறி பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு அரசு அறிவித்த நிவாரணம் போதுமானது அல்ல. எனவே ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் உயர்த்தி வழங்க வேண்டும்.

    நெல் கொள்முதலில் ஈரப்பதம் நிரந்தரமாக 22 சதவீதம் என மத்திய அரசு அறிவிக்க தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, விவசாய சங்க தேசிய குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், மாநில குழு உறுப்பினர் பாஸ்கர் , இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேவையா, மாநகர செயலாளர் பிரபாகரன் , ஒன்றிய செயலாளர் ஜார்ஜ்துரை, இந்திய தேசிய மாதர் சம்மேளன மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் விவசாய சங்க ஒன்றிய பொருளாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.

    • அறுவடைக்கு தயாரான பல ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்.
    • ஈரப்பதம் காயாததால் பல பகுதிகளில் அறுவடை பணி முற்றிலும் பாதிப்பு.

    பாபநாசம்:

    தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த வாரம் பெய்த கனமழையால் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகாவில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பல ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது.

    விவசாய நிலங்களில் இன்னும் ஈரப்பதம் காயாததால் பல பகுதிகளில் அறுவடை பணி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அறுவடை நடைபெறாததால் தற்போது வைக்கோல் கட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    இதனால் கால்நடை விவசாயிகளுக்கு வைக்கோல் கிடைக்காததால் கரும்பு சோகையை தங்களது மாடுகளுக்கு தீனியாக வழங்கி வருவதாக கால்நடை வளர்ப்பு விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    • சில இடங்களில் பாதாள சக்கடைக்காக சாலைகள் தோண்டப்பட்டுள்ளன.
    • ஈரப்பதம் அளவை தளர்த்தி உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் தஞ்சையில் நேற்று பகல் முழுவதும் வெயில் சுட்டெரித்தது.

    மாலையில் திடீரென குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. இரவு 7 மணிக்கு இடி- மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து 3 மணி நேரம் இடைவிடாது கனமழை கொட்டியது.

    பலத்த காற்றுடன் மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு இடையே ஊர்ந்து சென்றனர்.

    பலர் ஒதுக்குப்புறமான இடத்தில் நின்று கொண்டனர்.

    சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தஞ்சை சீனிவாசன் பிள்ளை சாலை ரவுண்டானாவில் உள்ள ரயில்வே கீழ் பாலத்தில் தண்ணீர் பெருமளவில் தேங்கி நின்றதால் அந்த வழியே கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். தஞ்சை நகரில் சில இடங்களில் பாதாள சக்கடைக்காக சாலைகள் தோண்டப்பட்டுள்ளன.

    அந்த இடங்களிலும் மழை நீர் தேங்கி நின்றது. தஞ்சை காந்திஜி சாலை, அண்ணா சாலை, பழைய பஸ் நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான இடம் போன்றவற்றில் புத்தாடைகள் விற்பனை செய்வதற்காக அமைக்கப்பட்டிருந்த தரைக்கடை வியாபாரம் கனமழையால் பாதிக்கப்பட்டது.

    தள்ளுவண்டி, தரைக்கடை மூலம் நடைபெற்ற வியாபாரமும் பாதிக்கப்பட்டது.

    தஞ்சை மாவட்டத்தில் தஞ்சையில் தான் அதிகபட்சமாக 73 மி.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது.

    இதேபோல் திருவையாறு, வல்லம், பூதலூர், ஒரத்தநாடு, நடுக்காவேரி, திருக்காட்டுப்பள்ளி, குருங்குளம், கும்பகோணம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்தது.

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெரிய அளவில் மழை இன்றி காணப்பட்டதால் குறுவை இறுதி கட்ட அறுவடை பணிகள்‌ மும்முரமாக நடந்து வந்தன.

    தற்போது மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளதால் ஏற்கனவே அறுவடை செய்து விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த குறுவை நெல் நனைந்தது.

    சாலைகளில் தர்பை போட்டு மூடி வைக்கப்பட்டிருந்த நெல் மணிக்குள்ளும் மழைநீர் ஊடுருவி சென்றதால் ஈரப்பதமானது.

    இதே போல் அறுவடைக்காக காத்திருக்கும் குறுவை நெற்பயிர்களும் பாதிக்கப்பட்டது.

    தொடர்ந்து இன்னும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகள் மேலும் நனையும் அபாயம் உள்ளது என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

    ஈரப்பதம் அளவை தளர்த்தி உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை 9 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    தஞ்சாவூர்-73, வல்லம் -38, பாபநாசம் -29, மதுக்கூர் - 18, மஞ்சளாறு -9.20, அய்யம்பேட்டை-8, பூதலூர் -7.40, கும்பகோணம் -6.

    தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 228.20 மி.மீ. மலை அளவு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நெல்லின் ஈரப்பத அளவு 17.5 சதவீதமாக இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்க–ப்பட்டது.
    • நெல்லுக்கான‌ ஈரப்பத அளவை தளர்த்தி கொள்முதல் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பூதலூர்:

    தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு அதிக அளவாக 4.72 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ள–ப்பட்டிருந்தது.

    75 சதவீதம் குறுவை அறுவடை

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் கீழடுக்கு சுழற்சி என்று பல்வேறு சுழற்சி மழையினால் பாதிக்கப்பட்டு குறுவை அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகிறது. வேளாண்மை துறை கணக்கின்படி 75 சதவீதம் குறுவை அறுவடை நடைபெற்று முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.

    அறுவடை நடைபெறும் சமயங்களிலும் பருவம் தப்பிய மழையால் அறுவடை செய்த நெல் மழையில் நனைந்து விவசாயிகள் மிகுந்த துயரத்துக்கு உள்ளாகினர்.

    முன்கூட்டியே மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் ஆர்வத்துடன் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் பருவம் தவறி பெய்த மழையால் விளைந்த நெல் வீடு வந்து சேருமா என்று கவலையில் ஆழ்ந்தனர்.

    தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்டு செப்டம்பர் 1ம் தேதி முதலே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து கொள்முதல் பணிகளை தொடங்கினர்.

    கொள்முதல் மையங்களில் நெல்லின் ஈரப்பத அளவு 17.5 சதவீதமாக இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது.

    இதனால் அறுவடை செய்யப்பட்ட நெல்லை விவசாயிகள் வெயிலில் உலர வைத்து கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகினர்.

    அவ்வப்போது பெய்யும் மழையால் உலர வைக்க முடியாமல் விவசாயிகள் தவித்தனர்.

    இதனால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குறுவை நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

    இந்த கோரிக்கையை அடுத்து கடந்த 15ம் தேதியில் இருந்து மத்திய அரசு அனுப்பித்த 4 பேர் கொண்ட குழுவினர் நேரடியாக கள ஆய்வில் ஈடுபட்டனர்.

    கள ஆய்வின் முடிவுகள் மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி அதன் பின்னர் ஈரப்பத அளவு குறித்து தெரியவரும் என்ற நிலையில், அறுவடை செய்யப்பட்ட விவசாயிகள் நேற்று வரை தங்கள் நெல்லை கொண்டு வந்து சாலைகளில் கொட்டி அதிக அளவில் கூலியாட்களை வைத்து காயவைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான‌ ஈரப்பத அளவை தளர்த்தி கொள்முதல் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர் பார்க்கின்றனர்.

    இது ஒருபுறமிருக்க பல‌நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள், கொள்முதல் நிலைய பணியாளர்கள் கூடி கலந்து பேசி மாமுலான‌ முறையில்‌ கொள்முதல் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

    • 22 சதவீதமாக நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.
    • ஈரப்பதத்தை காரணம் காட்டி விவசாயிகள் திருப்பி அனுப்பப்படுவதால் மூட்டை ஒன்றுக்கு ரூ. 100 செலவு.

    நாகப்பட்டினம்:

    22 சதவீதமாக நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை அடுத்து நாகையில் இரண்டாவது நாளாக மத்திய குழுவினர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்னதர்.

    அப்போது தீபாவளி பண்டிகை நெருங்குவதால் உடனடியாக கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என நாகை மாவட்ட விவசாயிகள் மத்திய குழுவிடம் கோரிக்கை விடுத்தனர்.

    நேரடி நெல் கொள்முதல் நிலையம், அதிகாரிகள் ஆய்வுகுறுவை அறுவடை முடிந்த நிலையில் மழையால் நனைந்த நெல்லை கொள்முதல் செய்யமுடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தி இருந்தது.

    அதனை தொடர்ந்து நேற்றைய தினம் தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதனிடையே இரண்டாவது நாளாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள பட்டமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஒன்றிய அரசின் சேமிப்பு மற்றும் ஆய்வு தரக்கட்டுப்பாடு மைய துணை இயக்குநர், எம்.இசட்.கான் தலைமையிலான மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

    நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், நாகை மாலி எம்.எல்.ஏ, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். ஆய்வில், கொள்முதல் செய்ய வந்த விவசாயிகளிடம் மத்திய குழுவினர் குறைகளை கேட்டறிந்தனர்.

    தொடர்ந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மாதிரி நெல்லை சேகரித்த மத்திய குழுவினர் விவசாயிகளின் கோரிக்கை மனுக்களை பெற்று சென்றனர்.

    தீபாவளி பண்டிகை நெருங்குவதால் உடனடியாக தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.

    ஈரப்பதத்தை காரணம் காட்டி விவசாயிகள் திருப்பி அனுப்பப்படுவதால் மூட்டை ஒன்றுக்கு 100 ரூபாய் செலவு ஏற்படுவதாகவும்.

    ஈரப்பதத்தை காரணம் காட்டி கொள்முதல் தடைப்பட்டு நின்றால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் என்பதாக நினைக்காமல் அது நாட்டின் இழப்பு என கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய குழுவிடம் நாகை கடைமடை விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    தொடர்ந்து நாகை மாவட்டத்தில் வெண்மணி, வலிவலம், எட்டுக்குடி, உள்ளிட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

    • 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும்.
    • நெல்லில் இருந்து மாதிரிகளை சேகரித்து மத்திய குழுவினரால் ஆய்வு.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், திருப்பத்தூர், ஆலத்தம்பாடி ஆகிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நெல் ஈரப்பதம் குறித்து மத்திய உணவு கழக சேமிப்பு மற்றும் ஆய்வு தரக்கட்டுப்பாடு மைய துணை இயக்குனர் எம்.இசட்.கான்.

    இந்திய உணவு கழக தரக்கட்டுப்பாடு பிரிவு தொழில் நுட்ப அலுவலர் சி.யூனிஸ், உதவி பொது மேலாளர் குணால் குமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தரக்கட்டுப்பாடு முதுநிலை மண்டல மேலாளர் செந்தில் ஆகியோர் அடங்கிய மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வின்போது மாரிமுத்து எம்.எல்.ஏ உடனிருந்தார்.

    டெல்டா மாவட்டங்களில் தொடர் மழையால் நெல்லின் ஈரப்பதம் அதிகரித்துள்ளதை யொட்டி நெல் கொள்முதல் நிலையங்களில் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இதை தொடர்ந்து, 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி கேட்டு, மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதியது.

    இதையடுத்து, திருவாரூர் மாவட்டம் பூவானத்தம், முன்னவால்கோட்டை, செருமங்கலம், ஓவர்சேரி, திருப்பத்தூர், ஆலத்தம்பாடி ஆகிய நேரடி கொள்முதல் நிலையத்தில், விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்துள்ள நெல்லில் இருந்து மாதிரிகளை சேகரித்து மத்திய குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், திருத்துறைப்பூண்டி தாசில்தார் மலர்கொடி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன்,வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், விவசாயிகள் உடனிருந்தனர்.

    • நெல்மணிகள் கொள்முதல் நிலையங்களில் கொட்டி வைத்து காத்திருப்பதால் நனைந்து முளைக்க தொடங்கி இருக்கிறது.
    • நெல் ஒரு நாள் இருப்பிலிருக்கும் பட்சத்தில மழை பெய்தால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தால் ஈரப்பதம் கூடுதலாகும்.

    மன்னார்குடி:

    மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    காவிரி டெல்டாவில் 3 லட்சம் ஏக்கர் குறுவை விளை நிலங்கள் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது.

    அக்டோபர் 15ஆம் தேதிக்குள் அறுவடையை முடித்து விற்பனை செய்து விட வேண்டும்.

    அதன் பிறகு வடகிழக்கு பருவமழை தீவிரமடையும். ஆனால் தமிழக அரசு காரிப் பருவ கொள்முதலை செப்டம்பர் 1ஆம் தேதியே தொடங்கியதால் ஈரப்பதம் காரணம் காட்டி கொள்முதல் தடைபட்டு வருகிறது.

    தற்போது பெய்து வரும் கோடை மழையும் நல்ல காய்ந்த நிலையில் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் கொள்முதல் நிலைய வாயில்களில் கொட்டி வைத்து காத்திருப்பதால் நனைந்து முளைக்க தொடங்கி இருக்கிறது.

    குறிப்பாக தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இதுவரையிலும் இல்லாத வகையில் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்கிறோம் எனும் பெயரால் 17 சதம் ஈரப்பதத்திற்கு கூடுதலாக இருக்கும் ஈரப்பதம் கொண்ட நெல்லை கொள்முதல் செய்தார்கள் என்று முன் அனுபவமின்றி தொழில்நுட்பத்தினை கருத்தில் கொள்ளாமல் திருவாரூர் அருகே ஊர்குடியில் கொள்முதல் பணியாளர்கள் இருவரை பணியிடை நீக்கம் செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.குறிப்பாக 15 சதத்திற்கு கீழே உலர்த்தப்பட்ட நெல் ஒரு நாள் இருப்பிலிருக்கும் பட்சத்தில மழை பெய்தால் ஏற்படும் பருவ நிலை மாற்றத்தால் ஈரப்பதம் கூடுதல் ஆவது என்பது இயற்கையானது.

    பாதுகாக்கப்பட்ட கிடங்குகளில் இருந்தாலும் கூட இந்த நிலை ஏற்படுவதை தவிர்க்க இயலாது.

    விரைவில் ஊழிய ர்களோடு விவசாயிகள் இணைந்து நாளை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

    • நெல்மணிகளின் தரம் மற்றும் ஈரப்பதத்தின் அளவினை கேட்டறிந்து ஆய்வு செய்தனர்.
    • லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் நெல்மணியை சேமிப்பு கிடங்குக்கு அனுப்ப உள்ள திட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் நடைப்பெற்று வரும் பணிகள் குறித்து தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனர்.

    மன்னாா்குடி எம்.எல்.ஏ டி.ஆா்.பி. ராஜா தலைமையில் எம்.எல்.ஏக்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அர்ச்சுணன், ஈஸ்வரன், ராமச்சந்திரன்,அருள், அன்பழகன், பாலசுப்ர மணியன், செல்லூர் ராஜு, ராஜ்குமார் , முகமது ஷாநவாஸ் உள்ளிட்ட 11 பேர் இந்த குழுவில் வந்தனர். வேதாரண்யம் தாலுகா ஆலங்குடியில் வேளாண் துறை சாா்பில் நடைபெற்று வரும் ட்ரோன் மூலமான பூச்சி மருந்து தெளிப்புப் பணியை பாா்வையிட்டனர்.

    தொடர்ந்து ஆசியாவி லேயே 2வது மிகப்பெரிய சேமிப்பு கிடங்கான கோவில்பத்து கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகா்பொ ருள் வாணிபக் கழக தானிய சேமிப்புக் கிடங்கில் ஆய்வு மேற்கொண்டார்.

    கஜா புயலின் போது சேதமடைந்த நெல் சேமிப்பு கிடங்கில்மேற்கொ ள்ளப்பட்ட சீரமைப்பு பணிகள் குறித்து, பார்வை யிட்டு இருப்பில் உள்ள நெல்மணிகளின் தரம் மற்றும் ஈரப்பதத்தின் அளவினை கேட்டறிந்து ஆய்வு செய்தனர்.

    மேலும் தற்போது ரூ.6 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ள தரைதள பணிகள் மற்றும் தானியங்கு முறையில் லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் நெல்மணியை சேமிப்பு கிடங்குக்கு அனுப்ப உள்ள திட்டப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தனர். தொடர்ந்து கோடியக்கரை, கோடியக்காடு வனவிலங்கு பகுதியில் ஆய்வு மேற்கொ ண்டனர்.

    ×