search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kuruvai"

    • என்.எல்.சி. வாய்க்கால் வெட்டி மண்ணை போட்டு நெல்மணி முளைத்த வயல்களை சேதப்படுத்தியது.
    • குறுவை நேரடி மற்றும் நடவு பயிர்கள் 75 சதவீதம் அழிந்துவிட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதபுரத்தில் திமுக, மதிமுக, பா.ம.க. உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி 800-க்கும் மேற்பட்டவர்கள் அதிமுகவில் இணையும் விழா நடந்தது.

    அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் பி.வி. பாரதி, முன்னாள் எம்.எல்.ஏ., ம.சக்தி, ஒன்றிய செயலாளர்கள் ஏ.கே.சந்திரசேகரன், ரவிச்சந்திரன், நகர செயலாளர் வினோத் முன்னிலை வகித்தனர். விழாவில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கலந்து கொண்டு மாற்று கட்சியிலிருந்து விலகி வந்தவர்களை சால்வை அணிவித்து வரவேற்றார். மதிமுகவிலிருந்து அண்மையில் விலகி எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மார்கோனி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    விழாவில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:

    நீர் முறையாக வராததால் கடைமடைப் பகுதிகளில் குறுவைப் பயிர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேராததால் நேரிடை விதைப்பு மற்றும் நடவு செய்த குறுவை பயிர்கள் செத்து மடியும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் அரசு இதனை காக்க எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

    குறுவை நேரடி மற்றும் நடவு பயிர்கள் 75 சதவீதம் அழிந்துவிட்டது. மீதமுள்ள பயிர்களை காப்பாற்ற முறை வைக்காமல் பாசனத்திற்கு அரசு போதிய தண்ணீர் வழங்க வேண்டும்.

    என்.எல்.சி விவகாரத்தில் கதிர்கள் வந்த பயிர்கள் 10, 15 தினங்களில் அறுவடைக்கு தயாராக இருந்தது. என்எல்சி வாய்க்கால் வெட்டி மண்ணை போட்டு நெல்மணி முளைத்த வயல்களை சேதப்படுத்தியது. இதனால் பயிர்களை இழந்து விவசாயிகள் தவிக்கின்றனர். என்எல்சி நிறுவனம் அறுவடை முடியும் வரை பணியை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சில இடங்களில் பாதாள சக்கடைக்காக சாலைகள் தோண்டப்பட்டுள்ளன.
    • ஈரப்பதம் அளவை தளர்த்தி உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் தஞ்சையில் நேற்று பகல் முழுவதும் வெயில் சுட்டெரித்தது.

    மாலையில் திடீரென குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. இரவு 7 மணிக்கு இடி- மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து 3 மணி நேரம் இடைவிடாது கனமழை கொட்டியது.

    பலத்த காற்றுடன் மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு இடையே ஊர்ந்து சென்றனர்.

    பலர் ஒதுக்குப்புறமான இடத்தில் நின்று கொண்டனர்.

    சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தஞ்சை சீனிவாசன் பிள்ளை சாலை ரவுண்டானாவில் உள்ள ரயில்வே கீழ் பாலத்தில் தண்ணீர் பெருமளவில் தேங்கி நின்றதால் அந்த வழியே கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். தஞ்சை நகரில் சில இடங்களில் பாதாள சக்கடைக்காக சாலைகள் தோண்டப்பட்டுள்ளன.

    அந்த இடங்களிலும் மழை நீர் தேங்கி நின்றது. தஞ்சை காந்திஜி சாலை, அண்ணா சாலை, பழைய பஸ் நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான இடம் போன்றவற்றில் புத்தாடைகள் விற்பனை செய்வதற்காக அமைக்கப்பட்டிருந்த தரைக்கடை வியாபாரம் கனமழையால் பாதிக்கப்பட்டது.

    தள்ளுவண்டி, தரைக்கடை மூலம் நடைபெற்ற வியாபாரமும் பாதிக்கப்பட்டது.

    தஞ்சை மாவட்டத்தில் தஞ்சையில் தான் அதிகபட்சமாக 73 மி.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது.

    இதேபோல் திருவையாறு, வல்லம், பூதலூர், ஒரத்தநாடு, நடுக்காவேரி, திருக்காட்டுப்பள்ளி, குருங்குளம், கும்பகோணம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்தது.

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெரிய அளவில் மழை இன்றி காணப்பட்டதால் குறுவை இறுதி கட்ட அறுவடை பணிகள்‌ மும்முரமாக நடந்து வந்தன.

    தற்போது மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளதால் ஏற்கனவே அறுவடை செய்து விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த குறுவை நெல் நனைந்தது.

    சாலைகளில் தர்பை போட்டு மூடி வைக்கப்பட்டிருந்த நெல் மணிக்குள்ளும் மழைநீர் ஊடுருவி சென்றதால் ஈரப்பதமானது.

    இதே போல் அறுவடைக்காக காத்திருக்கும் குறுவை நெற்பயிர்களும் பாதிக்கப்பட்டது.

    தொடர்ந்து இன்னும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகள் மேலும் நனையும் அபாயம் உள்ளது என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

    ஈரப்பதம் அளவை தளர்த்தி உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை 9 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    தஞ்சாவூர்-73, வல்லம் -38, பாபநாசம் -29, மதுக்கூர் - 18, மஞ்சளாறு -9.20, அய்யம்பேட்டை-8, பூதலூர் -7.40, கும்பகோணம் -6.

    தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 228.20 மி.மீ. மலை அளவு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பூதலூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு இடி, மின்னல் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
    • குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு இல்லை என்பது விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு இடி, மின்னல் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளமாக ஓடியது. மழை தொடங்கியவுடன் மின்சாரம் தடைபட்டு பின் நீண்ட நேரம் கழித்து மின்சாரம் மீண்டும் வந்தது.

    இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதியடைந்தனர். நேற்று பெய்த மழை தற்போது நடவு செய்யப்பட்டுள்ள குறுவை பயிர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்றும் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள முன்பட்ட குறுவை பயிர்கள் பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கி ன்றனர்.

    கடந்த ஆண்டு மழையால் குறுவை அறுவடையின் போது விவசாயிகள் இழப்பை சந்தித்தனர். குறுவைக்கு காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படாததால் பேரிழப்பு ஏற்பட்டது. மத்திய அரசு காப்பீட்டு நிறுவனம் மாநில அரசின் பங்கு தொகையை உயர்த்தியது காப்பீடு செய்ய இயலாமல் போனதற்கு காரணம் என்று கூறப்பட்டது.ஒரு ஆண்டுக்கு மேலாக முடிவேதும் எடுக்காமல் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு இல்லை என்பது விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே, இனியும் காலம் தாழ்த்தாது டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர்களுக்கு காப்பீடு செய்வது குறித்து இறுதி முடிவை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்ட நிலையில் கல்லணையில் இருந்து காவிரியில் 9,006 கன அடி, வெண்ணாற்றில் 9001 கன அடி, கல்லணை கால்வாயில் 2804 கனஅடி, கொள்ளிடத்தில் 4494 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    ×